*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:27 | Best Blogger Tips

Image result for *குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்* ------------------- ------------------Image result for *குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்* ------------------- ------------------
*
உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*
*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்*
*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில் குளிக்க கூடாது.*
*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*
*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*
*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*
*எதற்கு இப்படி?*
*
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*
*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*
*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*
*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.*
*எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*
வியக்கவைக்கிறதா... !*
*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*
*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*
*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*
*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*
*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது, குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேற, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*
*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*
*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*
*குளித்தல் = குளிர்வித்தல்*
*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*
*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*
இதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக் கிடைக்கும்.
நன்றி