எந்த சாதிக்காரனாக இருந்தாலும். . . . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:33 | Best Blogger Tips
Image result for எந்த சாதிக்காரனாக
நீஙகள் எந்த சாதிக்காரனாக இருந்தாலும்.....சரி உலக குல தெய்வம் சிவபெருமான்தான்ய்யா"...
பறையர்...
பறை = இசைக்கருவி.
இசை = நாதம். நாதமையமானவன் சிவபெருமான். பறை நாதத்தை விரும்புபவன் தான் சிவபெருமான். பறை நாதத்தை விரும்பும் ஈசனுக்கு அடியவர் தான் "பறையர்".
ஐயர்...
ஐயன் = உயர்ந்தவன்.
எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் ஈசன். எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈசனுக்கு அடியவர் தான் ஐயர்.
வன்னியர்...
வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்டவர் ஈசன். வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் வன்னியர்.
செட்டியார்...
கொழுந்து விட்டு எரியும் சோதியை போன்ற சென்நிற (சிவந்த நிறம்) மேனியை கொண்டவன் சிவபெருமான். சென்நிற மேனி உடைய ஈசனுக்கு அடியவர் தான் சென்நியர். சென்நியர் என்ற பெயரே காலப்போக்கில் செட்டியார் என்றானது.
செம்படவர்.
செழிப்பான வாழ்வை தந்தருள்பவர் தான் ஈசன். செழிப்பான வாழ்வை தந்தருளும் ஈசனுக்கு அடியவர் தான் செம்படவர்.
குயவர்...
அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைப்பவர் தான் ஈசன். அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் குயவர்.
வெள்ளாளர்...
வெற்றியை தன்வசம் வைத்திருப்பவர் தான் ஈசன். வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் ஈசனுக்கு பிள்ளையான அடியவர் தான் வெள்ளாளர்.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.
கிருஷ்ண மோகன் 8526223399
முதலியார்...
தோற்றத்திற்கு வித்தானவர் சிவபெருமான். எல்லாவற்றிற்கும் முதலான சிவபெருமானுக்கு அடியவர் தான் முதலியார்.
கோனார்...
கோமகனார் என போற்றப்படுபவர்.
கோ - கோவில்,பசு காப்பவர்.
வேதியர்...
வேதத்தை தந்தருளியவர் ஈசன். வேதத்தை தந்தருளிய சிவபெருமானுக்கு அடியவர் தான் வேதியர்.
நாயக்கர்...
எச்செயலுக்கும் நாயகமாக திகழ்பவர் சிவபெருமான். அத்தகைய நாயகனுக்கு அடியவர்தான் நாயக்கர்.
நாடார்...
தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவன். தென்னாட்டை தன்நாடாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் நாடார்.
தேவர்...
தேவையை தீர்த்து வைப்பவர் தான் தேவன். அத்தகைய தேவன் தான் சிவபெருமான். தேவையை தீர்த்து வைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் தேவர்.
கள்ளர்...
அடியவர் உள்ளத்தை கவரும் கள்வர் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானுக்கு அடியவர் தான் கள்ளர்.
பத்தர்...
பத்திநெறி அறிவிப்பவர் சிவபெருமான். பத்திநெறி அறிவிக்கும் ஈசனுக்கு அன்பர் தான் பத்தர்.
அப்படியாக........ நீ எக்குலத்தவனாக இருந்தாலும், குலத்திற்கேற்பதோர் நலமிக கொடுப்பது நமச்சிவாயவே. உன் குல தெய்வம் சிவபெருமான்தான் என்பதை மறந்து வாழ்வது மறு பிறவிக்கு வித்தாகும்.
சிவபெருமான்தான் எம் குலதெய்வம். சிவபெருமான்தான் எம் குலம் காக்கும் தெய்வம். 
சிவபெருமான்தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து, சிவபெருமானை வணங்கி வாழ்வதே வாழ்க்கை. அத்தகைய வாழ்வே வழிபாடு.
நற்செயல் உன் வாழ்தலே இனிய வழிபாடு. நமச்சிவாய.
அடுத்த பிறவில் இதே சாதியில்தான் பிறப்போமா?...உத்திரவாதம் உள்ளதா?.
சண்டை,சச்சரவுகளை விடுத்து இறைவனை போற்றி அன்புடன் வாழ்வோம்.
சாதி இறைவனுக்கு சேவை செய்ய உருவாக்கப் பட்டதே தவிர...
தலை விரித்து ஆட அல்ல.
இறையே அறம்.
சில சாதிகள் விடுபட்டிருக்கும்.
குறிப்பு தந்தால் சேர்க்கப்படும்.
மனம் இருந்தால் பகிரலாமே...
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.
கிருஷ்ண மோகன் 8526223399
மனிதர்களாகிய நாம் எத்துணை நாணயமாக.நோ்மையக ஒழுங்காக நடந்தாலும் வாழ்க்கைகையில் இன்ப துன்பங்கள் வந்தே தீருகின்றன. ஆனால் நாணயம் கெட்டவன்ஒழுக்கம் இல்லாதவன் மரியாதை தெரியாதவனெல்லாம் உற்சாகமாகவும் வசதியாகவும் வாழ்கின்றான் அதுவும்நீண்ட காலம் வாழ்கின்றானே என்ற கேள்வியுடன் கூடிய மயக்கம் வரும். நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லையே எனக்குஏன் இந்த கஷ்டம் .நான் தினமும் கோவிலுக்குப் போகிறேனே என்னை ஏன் ஆண்டவன் சோதிக்கின்றான் இப்படி பலவேறுஆதங்களை நாம் சுமந்துகொண்டு வாழ்கின்றோம்...ஆண்டவன் தன்னிடம்அதிகம் நெருங்குகிறவா்களையே பக்தி உண்மைமையான துதானா என சோதி்க்க இவ்வாறுசெய்வார் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்ளலாம்...எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தால் நீண்ட காலம் தீமையானோர் நிம்மதியுடன் வாழ மாட்டார்கள். அதே நேரம் அவா்களுக்கு வரும் மிகக் கொடியதண்டனை நல்லோருக்கு வராது..எப்போது இத்தகைய தீயோருக்கு தண்டனை கிடைக்குமஅந்த தீர்ப்பு ஆண்டவனிடமிருந்து எப்போது கிடைக்கும் என்ற கேள்வி கேட்கக்கூடாது..எந்தநேரத்தில் தண்டனை அளிக்கப்படவேண்டும் என்பதெல்லாம் இறைவனின் கட்டளைக்குட்பட்டது. கடைசி அடிசரியான மரணஅடியாகத்தான் இருக்கும்...தீயோர்கள் எவரும் நிம்மதியாக இறந்து அவா்களுடைய குடும்பம் நிம்மதியாக வாழ்ந்த வரலாறே கிடையாது.. எனவே வாழும் நாளில்நோ்மை.ஒழுக்கத்தையே கடைப்பிடித்து வாழ தொடங்கினால் கஷ்டங்கள் நம்மை கண்டு பயந்து விலகியோடும். நாம் இப்புவியில் வாழ்ந்து முடிந்து போகும் நேரம் நிம்மதியுடன் இறைதிருவடி சேருவோம்..இன்றைய நற்சிந்தனைகளின் வழிநடப்போம்.......
ஒனறே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

 நன்றி இணையம்