மனித வரலாறு - 6 மூத்தக் குடி தமிழ்க்குடி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:03 | Best Blogger Tips
Picture

                    மூத்தக் குடி தமிழ்க்குடி!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” இவை, பழம்பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம். ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிறுவியிருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ ஆய்வு மையத்தினர். உலக அளவில் விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்து அங்கீகாரம் தருவதில் ‘நேச்சர்’ என்ற சர்வதேச ஆங்கில விஞ்ஞான இதழ் முதன்மையானது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியைப் பாராட்டி தனது அட்டைப்பட கட்டுரையாக ‘நேச்சர்’ பத்திரிகை வெளியிட்டிருப்பது இதுதான் முதன்முறை. இதுவே, இந்த ஆராய்ச்சியின் மகத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கி றது என உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஹைதராபாத் ஆய்வு மையத்தினர். இது நமது தொன்மையின் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள உதவுகிறது என்றால்... இதைவிட இன்னொரு மகிழ்ச்சித் தகவல், இந்த ஆய்வை மேற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எட்டிய விஞ்ஞானிகள் குழுவில் மிக முக்கியமானவரான கே.தங்கராஜ், ஒரு தமிழர் என்பதுதான். “65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதனைப் பற்றிய ஆராய்ச்சியை 14 வருடங்கள் இடைவிடாது நடத்தி முடித்து இந்த முடிவை எட்டி இருக்கிறோம். பொதுவாகவே மனித குழுக்கள்... மொழிக் கூறுகளின் அடிப்படையில் டிராவிடியன், இந்தோ- ஐரோப்பியன், ஆஸ்ட்ரோ--ஏஷியாடிக், திபெத்தோ-பர்மன் என்ற பெரும்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். இது தவிர, அந்தமான் மொழியினர், மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு பகுதிகளை, சமூக ரீதியிலான குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 மனிதக் குழுக்களை இந்த ஆராய்ச்சிக்காக சாம்பிள் எடுத்துக் கொண்டோம். அதாவது இந்தக் குழுக்களில் இருந்து 132 தனிநபர்கள், அவர்களின் ஒரு லட்சம் டி.என்.ஏ. ஒரு மூலக்கூறு வேறுபாடு (எஸ்.என்.பி.)மாதிரிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினோம். இந்த மனிதக் குழுக்களில் ஓங்கே, கிரேட் அந்தமானிஸ் உட்பட ஆதிவாசி இனக் குழுவினர் மற்றும் நிகோபாரில் வசிக்கும் மனிதக் குழுவினரை ஆராயும்போது, பல வியக்கத்தக்கத் தகவல்கள் கிடைத்தன. இதே போன்ற ஆராய்ச்சியை நாம் 2005-ல் செய்தபோது, அது உலகின் முக்கியமான அறிவியல் இதழான ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்தது. அதன் நீட்சிதான் இந்த ஆய்வு.பொதுவாக மனித இனம் இன்றைய ஆப்ரிக்கா கண்டப் பகுதிகளில்தான் முதலில் உருவானது என்பதே இன்றுவரை ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆப்ரிக்கக் கண்டத்தில் உருவான மனித இனம், உலகம் முழுவதும் எப்படி நகர்ந்துவந்தது என்பதுதான் முக்கியக் கேள்வி. ஆப்ரிக்காவிலிருந்து கடல்வழியாக நகர்தல், நில வழியாக நகர்தல் ஆகிய இரு வழிகளில்தான் ஆதிமனிதர்கள் மற்ற கண்டங்களுக்கு வந்திருக்க முடியும் என இருவேறு கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில்தான் எங்களுடைய ஆராய்ச்சி... அந்தமானிய ஆதிவாசிகள்தான் முதன்முதலில் ஆப்ரிக்காவிலிருந்து சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்குக் கடற்கரை வழியே, வெளியேறிய முதல் மக்கள் குழு என்ற மகத்தான உண்மையை பறைசாற்றியது.
                                      இந்த அந்தமானிய ஆதிவாசிகளுக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மற்ற மக்கள் இனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?, இந்திய மண்ணில் மட்டும் வேறு எங்கும் இல்லாத 4,635 மனிதக் குழுக்கள் எப்படி உருவாயிற்று? என்பதை ஆராயத்தான் தற்போது, வெவ்வேறு மனிதக் குழுக்களை பரிசோதனை செய்தோம்.
பொதுவாகவே நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். உயரம், குள்ளம், பருமன், ஒல்லி இதுபோன்ற வெளியில் தெரியும் மாற்றங்களைப்போல, வெளியே தெரியாத நுண்ணிய மாற்றங்கள் டி.என்.ஏ.-வுக்குள் நடந்து கொண்டே இருக்கும். இதை மரபணு வேற்றுமை (ஜெனிடிக் வேரியேஷன்) என்பார்கள். அந்த வகையில் மனிதக் குழுக்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தியபோது... வட இந்தியர்களும் ஐரோப்பியர்களும் மரபியல் ரீதியாக சுமார் 30-70% வரை ஒத்துப் போனார்கள். ஆனால், தென்னிந்தியர்கள் உலகின் எந்தப் பகுதியில் உள்ள மரபியலோடும் ஒத்திருக்கவில்லை. அதே நேரம்... அந்தமான் பழங்குடி மக்களின் மரபியல் கூறுகள், தென்னிந்திய தொன்மை மக்களின் மரபியல் கூறுகளோடு சில வகையில் ஒத்துப் போகின்றன. ஆக... ஆப்ரிக்காவில் இருந்து அந்தமான் பகுதிக்கு வந்த ஆதிகால மனிதர்கள் முதலில் தென்னிந்தியாவில்தான் குடியேறினார்கள். இதனைத் தொடர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள்) வேறு ஒரு குழுவினர் வட இந்தியாவில் குடியேறியிருக்கலாம். காலப்-போக்கில் தென்னிந்தியாவில் முதலில் குடியேறியவர்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக பிரிந்து வடக்கு நோக்கியும், வட இந்தியாவில் குடியேறியவர்கள் தெற்கு நோக்கியும் நகர்ந்திருக்கக் கூடும். இப்படி உருவான குழுக்கள் ஒரு காலகட்டத்தில் கலந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தமான் பழங்குடியின மக்களின் மரபியல் கூறுகள், உலகின் வேறு எந்தப் பகுதி மனிதக் குழுக்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. ஆக, அவர்கள் 65 ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்தே இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒரு சில வகையில் மட்டும் வேறுபட்டாலும் தென்னிந்திய தொன்மை மக்கள் வேறு யாரோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள்தான் இந்தியத் துணை கண்டப் பகுதியின் மூத்த குடிகள் முதல் குடிகள் என்பதைக் கண்டறிந்தோம்” என்றவரிடம், “சிந்து சமவெளி நாகரிகம்தான் முதல் நாகரிகம் என்ற ஆய்வு முடிவுகளுக்கு இது முரணாகத் தோன்றுகிறதே..?” என நாம் கேட்க... “இது தேவையில்லாத குழப்பம். நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, ப்ரி-ஹிஸ்டாரிக் அதாவது வரலாற்று காலத்துக்கு முந்தையது. நீங்கள் கேட்கும் நாகரிகம் சில ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படுவது. உதாரணத்துக்கு கிராமங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சென்னை மாநகருக்குக் குடியேறி நகர்ப்புற கட்டமைப்பை ஏற்படுத்தவில்லையா? அதுபோல, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பின்னாட்களில் கட்டமைத்திருக்கலாம். மேலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் வெவ்வேறு மனிதக் குழுக்களின் ஜீன்கள், குரோமோசோம்கள் பற்றி நுண்ணிய முடிவுகள் பல கிடைத்துள்ளன. இது பல நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும்” எனச் சொல்லி முடித்தார் ‘தமிழ் மரபு’க்கு மகுடம் சூட்டியிருக்கும் விஞ்ஞானி கே. தங்கராஜ்.
                              ஆதி மனிதன் பிற கண்டங்களுக்கு பரவியது எப்போது, எப்படி? ஆதிமனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினான் என்பது அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயம். ஆனால், அந்த ஆதிமனிதன் பிற கண்டங்களுக்கு முதன்முதலில் பரவியது எவ்வாறு, எப்போது என்பதில்தான் சர்ச்சை. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் முதலில் சென்றது நிலவழியிலா, கடல்வழியிலா என்ற கேள்விக்கு இந்திய விஞ்ஞானிகள் கடல்வழிதான் என்ற பதிலை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது, சுமார் 70,000 ஆண்டுகள் முன்பாக, மனித இனத்தவர், ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று, பிறகு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தை இவர்கள் அடைந்தார்கள் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தற்போது அந்தமான் தீவுகளில் வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த முடிவை உறுதிசெய்திருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இந்த முடிவை எட்ட, இந்த அந்தமான் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள், அதாவது, இதே காலகட்டத்தில் ஆசியக்கண்டத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மரபணுக்கள் அடைந்த மாற்றங்களை விட, அந்தமான் தீவுக்கூட்டத்தில் தனித்தே வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்கள் குறைந்த அளவு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பது இங்கே முக்கியம். எனவேதான் இவர்களின் மரபணுக்கள் – அவற்றில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமசோம் பகுதிகள், பிறகு மிட்டோகோண்ட்ரியா என்று அழைக்கப்படும் மரபணுத் தொடர் மைய மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறார்கள், இந்திய விஞ்ஞானிகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவை ஒரு யூகமாக எட்டியவர்கள், ஹைதராபாதில் இயங்கிவரும் இந்திய மூலக்கூற்று உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள். அப்போதே, இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராக இயங்கிவருகிற தங்கராஜ் அவர்களைத் தமிழோசை செவ்வி கண்டிருந்தது. இப்போது மேலதிக ஆராய்ச்சியின் மூலம் இந்த முடிவு உறுதியாகியிருக்கிறது, அது மட்டுமல்ல, இங்கே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வின்சன்ட் மக்காலே என்ற விஞ்ஞானியும் தம்முடைய ஆராய்ச்சியின் மூலம் இதைப்போன்ற ஒரு முடிவை எட்டியிருக்கிறார். அவர் ஆய்வு செய்தது, ஆஸ்திரேலியா, மலேசியாவில் உள்ள பழங்குடியினர் பற்றி.
                     ஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?          பொதுவாக மனிதர்கள்தான் வனவிலங்குகளைவேட்டையாடிக் கொன்றார்கள்என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்தகுரங்குமனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டான் என்பதை நிருபித்துள்ளார் லீ. ருபர்ஜர்  என்ற ஜோகன்னஸ் பர்க் பல்கலைகழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங்குழந்தை எனப்படும் மனித முதாதையரின் தொல்படிவுகள் 1924 இல்கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்தமனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடைப்பெற்றது வந்தது.  ஒருபுலியோ, ஈட்டிபேன்ற கூர்மையான பற்களைஉடைய பூனைபோன்ற விலங்கோத்தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் யோசித்து வந்தனர். ஆனால் ஆதிமனிதனை புலிஅடித்து கொல்லவில்லை ஒரு பெரிய   பறவைத்தான் வேட்டையாடிக் கொன்றது என்று புத்தாண்டுகளுக்கு முன்பு லீபெர்ஜர், தமது சகஆராய்ச்சியாளர் ரோன்கிளர்க்குடன் சேர்ந்து நிருபித்தார். ஆதிமனிதனின் புதைப்படிவுகள் கிடைத்தஇடத்தில் இருந்துசிறியகுரங்குகளின் புதைபடிவுகளில்இருந்து அவை பறவையால்தான் கொல்லப்பட்டனஎன்பது நிருபிக்கப்பட்டது.  ஆகவே குரங்குபோன்றுஇருந்த ஆதிமனிதனும்பறவையால்தான் கொல்லப்பட்டிருக்கவெண்டும் என்றவாதத்தைஅவர்கள்முன்வைத்தனர். ஆனால்பறவைதாக்கித்தான்ஆதிமனிதன் இறந்தான் என்பதை அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிருபிக்க முடியாமல் இருந்தது. ஜந்து மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆபிரிக்காவில் காணப்படும் கழுகுகள் ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்து பாட்டும் ஓஹேயோ அரசின் கட்டிரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார்.  கழுகுகள் மேலே இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து தங்களது கூரிய கால் விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ததில் கண்துளைகளுக்கு பின்னால் ஓரே மாதிரியான துளைகளும்,வெட்டுக்களும் தெரிந்தன. இரதப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக் காயம் ஏற்படும் சேதம் தெரிந்தது.ஆகவே ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது. சுகன்யாதரம்-10 
                                             குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால் பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது என்கிறார்கள். 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கலம் கொண்ட செல் உருவாகியதாகவும், 2 பில்லியன் ஆண்டுக்கு முதல் சிக்கலான செல்லமைப்பைக் கொண்ட செல்( கலம்) உருவாகியது என்றும், பின்னர் 1 பில்லியன் ஆண்டிற்கு முன்னர் பல கலங்கள் கொண்ட செல் உருவாகி , பின்னர் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில மிருகங்கள் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முறையே :
இற்றைக்கு 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரபோடாக்களும்

550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கலான வடிவம் கொண்ட சில மிருகங்களும்
500 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் மீன்களும், சூரிய ஒளியை கொண்டு சக்தியை தயாரிக்கும் உயிரினங்களும் உருவாகின.
475 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில தாவர வகைகள் உருவாகின.
360 மில்லியன் ஆண்டிற்கு முன்னர் அமீபியா போன்ற பிராணிகள்( உதாரணம் தவளை) போன்ற உயிரினம் உருவாகியது300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஊர்வனவும்
200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பாலூட்டிகளும்
150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பறவைகளும்
65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சில வகை டைனசார்களும்
2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஜீனஸ் ஹோமோ என்ற மனிதரை ஒத்த இனமும் தோன்றியது.
200 ஆயிரம் வருடத்திற்கு முன்னரே தற்போது காணப்படும் மனிதனை ஒத்த மனிதன் தோன்றினான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் ஜீனஸ் ஹோமோ எனப்படும் இனம் மனிதரைப் போலக் காட்சியளிப்பதாக அதன் எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் என்பவற்றை பார்க்கும் போது தெரிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ரோலோபோதனிக் என்ற இனமும் உருவாகியது, அதுவும் மனிதர்களைப் போலவே காட்சியளித்தது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளது. இதனிடையே பராந்தரோப்ஸ் எனப்படும் மற்றும் ஒரு மனித இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் வெவ்வேறு காலப் பகுதியில் உருவாகி இருந்தாலும் சில ஆண்டுகளில் அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இறுதியாக மனிதன் தோன்றி இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
                                  குறிப்பாக கென்யா, ஆபிரிக்கா, ஜோர்ஜியா, ஜாவா தீவுகள், சீனா, இந்தியா போன்ற இடங்களிலேயே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான ஜீனோ ஹோமோ இனம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் தாடை பெரிதாகவும் மண்டை ஓடு பின்புறம் நீளமாகவும், காணப்படுகிறது. ஆசியக் கண்டத்தில் தோன்றிய இனத்தில் மண்டை ஓடு சிறியதாகவும் உயரம் குறைவானதாகவும், சில குளிர் பிரதேசங்களில் தோன்றிய ஜீனோ ஹோமோக்கள் பொதுவான ஒரு அமைப்பையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
பிற்காலத்தில் இவற்றின் கலவையே தற்போது உள்ள நவீன மனித இனமாகும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நவீன மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் வாழ்ந்ததாகவும் அவை பல பொருட்களை உபயோகிக்க கற்றுக்கொண்டதையும் ஆய்வாளர்களும் அகழ்வாரய்ச்சி செய்பர்களும் தற்போது நிரூபித்துள்ளனர். ஆதி காலத்தில் உள்ள மனிதனின் கைகள் நீளமாக இருந்ததையும் பின்னர் அது குறுகியதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி இருப்பதால் அதைப் பார்க்க கண்கள் உருவாகியிருக்கின்றன, ஒலி என்று ஒன்று இருப்பதால் அதைக் கேட்க காதுகள் உருவாகியிருக்கின்றன. கைகள் நீளமாக இருக்கவேண்டியது அவசியம் இல்லை என்றால் பரிணாம வளர்ச்சியின் போது அவை குட்டையாகிவிடுகின்றன என்று, எல்லாவற்றையும் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகள் அதன் தலையில் கட்டி விடுகிறார்கள், ஒருபடி மேலே போய் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்றால் அதற்கு சிலர் இயற்கையையே காரணம் என்று கூறுகிறார்கள், அதாவது சூரிய ஒளி ஒரு பொருள் மீது பட்டுத் தெறித்து அது எமது கண்களை அடைந்து விழித்திரையில் தலைகீழாகத்தான் விம்பமாகத் தோன்றுகிறது, இருப்பினும் அதனை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகள் சரியான, நேரான பக்கமாக காட்டுகிறது. இது கூட பரிணாம வளர்ச்சிக்குத் தெரியுமா இல்லை இயற்கை இதை அறியுமா? என்ன ஒரு வேடிக்கையான் விடயம். 

பழங்குடிகள்.

Picture

                     பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ அல்லது பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில், வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் அதைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டும் தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும், கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணம் பற்றிய பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டின் நகர, கிராம வாழ்விற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தங்கள் உரிமைகளைப் பொறுத்த விழிப்புணர்வு அற்றவர்களாகவும், அதே நேரத்தில் அரசு நிர்வாகத்திற்கோ அல்லது... எந்த தீங்கும் இழைக்காமல் வாழ்ந்துவருபவர்கள் பழங்குடியின மக்கள். நமது நாட்டின் நகர, கிராம வாழ்விற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தங்கள் உரிமைகளைப் பொறுத்த விழிப்புணர்வு அற்றவர்களாகவும், அதே நேரத்தில் அரசு நிர்வாகத்திற்கோ அல்லது தங்களோடு தொடர்பற்ற எவருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியின மக்கள். சட்டத்தால் பட்டியல் பழங்குடியினர் என்று குறிப்பிடப்படும் இம்மக்கள்தான் நமது நாட்டின் மொத்த மக்கட் தொகையில் 8 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், இவர்கள் அதிகமாக வாழும் 187 மாவட்டங்களில்தான் நமது நாட்டின் 68 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. தங்களின் வாழ்விடமாக, உலகமாகத் திகழும் வனப்பகுதியை அதன் வளம் குன்றாமல் காத்து வருபவர்கள் இம்மக்கள். அவர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த காட்டை அழிப்பதிலும், இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலும் மட்டுமே இந்த முக்கூட்டணி நின்றுவிடவில்லை, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியது, அவர்களின் அந்தரங்க வாழ்க்கையிலும் அத்துமீறியது. இப்படி ஓரிரு வனப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, சுதந்திர இந்தியாவின் வனப் பகுதிகள் அனைத்திலும் இந்த திட்டமிட்டச் சுரண்டல் தங்கு தடையின்றி நடந்துவந்தது. அதே நேரத்தில் _ பிரதமரே குறிப்பிட்டுள்ளது போல - அரசுகள் தீட்டிய சமூக, பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை. ஒரு பக்கத்தில் சமூக, பொருளாதார வாழ்விலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்களுடை உரிமைகளுக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் அற்ற நிலையில், பாதுகாக்க வேண்டியவர்களே தொழில் நிறுவனங்களுடனும், ஊழல் அரசியல்வாதிகளுடனும் இணைந்து ஒடுக்க முற்பட்ட நிலையில், இயற்கையாக எழும் எதிர்ப்புணர்வு அவர்களை ஒரு கொள்கை ரீதியான ஆயுதப் பாதுகாப்பை ஏற்க தூண்டியது. ஒரு முன்னேறிய மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலேயே, வனப் பகுதிகளும், பழங்குடியினரும் அத்துமீறல்களுக்கு ஆட்படும்போது, ஒரிசா, பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் போன்ற இடங்களில் எப்படிப்பட்ட ஒடுக்குமுறை இத்தனை ஆண்டுக் காலமாக அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்தியாவில் 427 பழங்குடிகள் உள்ளன.
வட அமெரிக்கப் பழங்குடிகள்
அப்பாச்சிஎன்பவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர். இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் அலாஸ்கா மற்றும் மேற்கு கனடாவில் பேசப்படும் அதபஸ்கான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. தற்காலத்தில் அப்பாச்சி என விளிக்கப்படுபவர்கள் தொடர்புள்ள நவயோ இன மக்களை உள்ளடக்கியவர்கள் அல்லர். இருப்பினும் இந்த இரு இனக்குழுக்களிடையே பலமான பண்பாடு மற்றும் மொழி வகையிலான பிணைப்பு உள்ளது. சிலநேரங்களில் இவ்விரு இனமக்களையும் கூட்டாக அப்பாச்சியர் என விளிக்கின்றனர். இந்த இன மக்கள் துவக்கத்தில் கிழக்கு அரிசோனா,வடமேற்கு மெக்சிக்கோ,நியூ மெக்சிகோ,டெக்சாஸ் மற்றும் தெற்கு பெரும் புல்வெளி பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.
அலூட் (Aleuts) எனப்படுவோர் ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் தம்மை உனாங்கா என்றும் உனாங்கன் என்றும் அழைக்கின்றனர்.அலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.
சூனி (zuni) எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிவப்பிந்தியப் பழங்குடியினர்.அரிசோனா மாநிலத்தின் எல்லையில் உள்ள வடமேற்கு நியூ மெக்சிகோவில் வாழ்கின்றனர். இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12,000 ஆகும்.அனசாசி (Anasasi) பழங்குடியினரின் வம்சாவழியினரான இவர்கள் சூனி மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள். அத்துடன் சூனி சமயத்தையும் பேணுகின்றனர்.இவர்கள் சுமார் 1300 வருடங்களாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

அமெரிக்க இனக்குழுக்கள்.

Picture

                       
அமெரிக்க இனக்குழுக்கள் ஆப்பலாச்சிக்கோலா பழங்குடி,  கிறீக் இனக்குழுவினரோடு உறவுடையவர்களாக இருந்த ஒரு தொல்குடி அமெரிக்கப் பழங்குடி ஆகும். இவர்களைப் பல்லச்சக்கோலா எனவும் அழைப்பதுண்டு. அவர்கள் ஹிச்சித்தி மொழிக்கு இனமான முஸ்கோஜிய மொழிகளுள் ஒன்றைப் பேசினார்கள். இவர்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றோரமாக வாழ்ந்தனர்.1706 ஆம் ஆண்டளவில் சில ஆப்பலாச்சிக்கோலா மக்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதியில் இருந்து தென் கரோலினா குடியிருப்புக்கு அண்மையில் உள்ள சாவன்னா ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். 1706 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சாவன்னா ஆற்றுப் பகுதி ஆப்பலாச்சிக்கோலாக்கள் 80 பேர் சாவன்னா ஆற்றிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் குடியேறியிருந்தனர். ஜான் பார்ண்வெல் என்பவர் 1715 இல் கூடிய திருத்தமான கணக்கெடுப்பொன்றைச் செய்தார். இது சாவன்னா ஆற்று ஆப்பாலாச்சிக்கோலாக்கள் இரண்டு ஊர்களில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவற்றில், 64 ஆண்கள், 71 பெண்கள், 42 சிறுவர்கள், 37 சிறுமிகள் உட்பட 214 பேர் வாழ்ந்ததாகத் தெரிகிறது.1715 ஆம் ஆண்டின் யமாசிப் போரில் இவர்களும் தென் கரோலினா மீதான தாக்குதலில் பங்கேற்றனர். பின்னாளில் இப்போரில் தப்பியவர்கள், மீண்டும், சட்டகூச்சி ஆறு, ஃபிளிண்ட் ஆறு ஆகியவை சந்திக்கும் இடத்திற்கு அருகில், ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதிக்கு வந்தனர்.1833 இலும், 1834 இலும் செய்துகொள்ளப்பட்ட இரண்டு இந்தியர் அகற்றல் சட்ட ஒப்பந்தக்களுக்கு அமைய இவர்கள் இன்றைய ஒக்லஹோமாவுக்கு இடம்பெயர்ந்தனர். ஆப்பலாச்சிக்கோலா ஆறு, புளோரிடாவில் உள்ள ஆப்பலாச்சிக்கோலா நகரம் என்பன இவர்களுடைய பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர்கள் ஆகும்.
                       சிக்காசோ ஐக்கிய அமெரிக்காவில் வாழும் தொல்குடி அமெரிக்க இனக்குழுவினர் ஆவர்.இவர்கள் முன்னர் அலபாமாவின்,ஹண்ட்ஸ்வில் பகுதிக்கு மேற்கில் மிசிசிப்பி, தென்னசிப் பகுதிகளில் அமைந்திருந்த தென்னசி ஆற்றோரம் வாழ்ந்து வந்தனர்.ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இவர்கள் அங்கிருந்து கிழக்காகச் சென்று, மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். சிக்சோக்கள், முதல் ஐரோப்பியர் வருகையில் இருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவுக்குத் துரத்தப்படும் வரை வடகிழக்கு மிசிசிப்பியில் வாழ்ந்து வந்ததாகவே எல்லா வரலாற்றுப் பதிவுகளும் குறிப்பிடுகின்றன.இவர்கள்,சிக்காசோ மொழி போன்ற ஒரு மொழியைப் பேசும் சொக்ட்டோக்களுக்கு உறவுடையவர்கள்.இவ்விரு மொழிகளும் சேர்ந்து முஸ்கோஜிய மொழிகளின் மேற்குக் குழுவை உருவாக்குகின்றன.சிக்காசோக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர்.இப்பிரிவுகள், இம்ப்சக்தயா, இஞ்சுத்வாலிப்பா என்பனவாகும்.இந்தியர் அகற்றல் சட்டத்தின் அடிப்படையில் ஒக்லஹோமாவுக்கு அகற்றப்பட்ட ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் இக் குழுவினரும் அடங்குவர்.இவ்வினக்குழுவினர் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களுள் 13 ஆவது பெரிய பழங்குடியாகும்.
                             ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம், ஐக்கிய அமெரிக்கா, ஒக்லஹோமா ஆகியவற்றின் அரசுகளுடன் சிறப்புத் தொடர்புகளைப் பேணிவருகின்ற ஒரு இறைமையுள்ள தேசம் ஆகும். இங்கே சுமார் 250,000 மக்கள் வாழ்கின்றனர். சொக்ட்டோ தேசத்தின் தலைமையகம் ஒக்லஹோமாவின் துரந்த் நகரில் அமைந்துள்ளது. ஒக்லஹோமாவின் துஷ்கஹோமாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கவுன்சில் ஹவுஸ் இன்று சொக்ட்டோ அருங்காட்சியகத்தையும், நீதித்துறையின் நீதிமன்றத் தொகுதியையும் கொண்டுள்ளது. சொக்ட்டோ தேசம், ஒக்லஹோமா சொக்ட்டோக்கள் எனப்படும் தொல்குடி அமெரிக்கர்களின் இன்றைய தாயகமாக உள்ளது. இவர்கள் 1831 க்கும் 1838 க்கும் இடையில் அவர்களில் மூலத் தாயகப் பகுதிகளிலிருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவின் இப்பகுதிக்கு அகற்றப்பட்டனர். இங்கே அவர்கள், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் என்ற பெயரில் ஒழுங்குபடுத்தப்பட்டனர். இவ் வெளியேற்றம் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 1903 ஆம் ஆண்டில் 300 சொக்ட்டோக்கள் ஒக்லஹோமா சொக்ட்டோ தேசத்துக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் சுமார் 11,020 சதுரமைல் (28,500 கிமீ2) பரப்பளவு கொண்டது. இதில், தென்கிழக்கு ஒக்லஹோமாவிலுள்ள 10 1/2 கவுண்டிகள் அடங்கியுள்ளன. இவை அட்டோக்கா கவுண்டி, பிரையன் கவுண்டி, சொக்ட்டோ கவுண்டி, கோல் கவுண்டி, ஹஸ்கெல் கவுண்டி, ஹியூகெஸ் கவுண்டியின் அரைப்பகுதி, லாட்டிமெர் கவுண்டி, லே புளோர் கவுண்டி, மக்கர்ட்டன் கவுண்டி, பிட்ஸ்பர்க் கவுண்டி, புஷ்மத்தாஹா கவுண்டி என்பனவாகும். இத் தேசத்தின் பழங்குடித் தலைமையகம், ஒக்லஹோமாவின் தூரந்த்தில், மூன்று மாடிக் கட்டிடங்களையும், ஒரு தளக் கட்டிடங்களையும் கொண்ட ஒரு கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ளது. சொக்ட்டோ பழங்குடி, சொக்ட்டோ தேச அரசியலமைப்பினால், ஆளப்படுகின்றது. இந்த அரசியலமைப்பு, 1984 ஜூன் 9 ஆம் தேதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அரசியலமைப்பின் கீழ், அரசின் நிறைவேற்றுப் பிரிவு, சட்டவாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு என்னும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சொக்ட்டோப் பழங்குடிகளின் தலைவர் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மக்களால் தெரிந்தெடுக்கப்படுகிறார். இவர் பழங்குடிப் பேரவையின் (Tribal Council) வாக்களிக்கும் உரிமையுள்ள ஒரு உறுப்பினர் அல்ல. பழங்குடியின் சட்டவாக்க அதிகாரம் 12 உறுப்பினரைக் கொண்ட பழங்குடிப் பேரவையிடம் உள்ளது. இந்தப் பேரவை உறுப்பினர்கள் சொக்ட்டோ மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
                                  செமினோலேஎன்பது, தொடக்கத்தில், புளோரிடாவிலும், தற்போது புளோரிடாவிலும், ஒக்லஹோமாவிலும் வாழும் தொல்குடி அமெரிக்க மக்களைக் குறிக்கும். செமினோலே தேசிய இனம் 18 ஆம் நூற்றாண்டளவில் உருவானது. இது, பல இனக்குழுக்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஜோர்ஜியா, மிஸ்சிசிப்பி, அலபாமா ஆகிய இடங்களைச் சேர்ந்த தொல்குடி அமெரிக்கர், முக்கியமாகக் கிறீக் தேசிய இனம்; தென் கரோலினா, ஜோர்ஜியா ஆகிய பகுதிகளில் அடிமைத் தளையில் இருந்து தப்பிய ஆபிரிக்க அமெரிக்கர் என்போர் இவ்வினத்தாருள் அடங்குவர். ஒக்லஹோமாத் தேசிய இனத்தவர் உட்பட ஏறத்தாழ 3,000 செமினோலேக்கள் மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் பக்கம் துரத்தப்பட்டபோது, பல புதிய உறுப்பினர்களையும் அவர்கள் வழியில் இணைத்துக் கொண்டனர். சுமார் 300 - 500 செமினோலேக்கள், புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் பகுதியில் தங்கி இடப்பெயர்வுக்கு எதிராகப் போராடிவந்தனர். இப் போரில் சுமார் 1,500 வரையான அமெரிக்கப் படையினர் இறந்து போனதாகச் சொல்லப்படுகின்றது. செமினோலேக்கள் என்றும் ஐக்கிய அமெரிக்க அரசிடம் சரணடையவில்லை. இதனால் புளோரிடாவின் செமினோலேக்கள் தங்களை அடங்கா மக்கள் (Unconquered People) எனக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். புளோரிடா செமினோலேக்கள் மட்டுமே ஐக்கிய அமெரிக்க அரசுடன் முறையான ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளாத அமெரிக்க இந்தியப் பழங்குடியாகும். இன்று அவர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீது தன்னாதிக்கம் உண்டு. அவர்களுடைய பொருளாதாரம், புகையிலை வணிகம், சுற்றுலா, சூதாட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. புளோரிடாவை எசுப்பானியர்கள் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த தொல்குடியினர் பலர் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். பிரித்தானியர், 1763 ஆம் ஆண்டில் புளோரிடாவைக் கைப்பற்றியபோது, தப்பிய சிலரையும் எசுப்பானியர் கியூபாவுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில், கீழ் கிறீக் தேசிய இன மக்கள், மேல் கிறீக் மக்களின் மேலாதிக்கத்தில் இருந்து தப்பிக் கொள்வதற்காக புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அங்கு ஏற்கெனவே இருந்த தொல்குடிகளுடன் கலந்தனர். அங்கிருந்த தொல்குடிகளுள், யமாசிப் போரில் அகதிகளாக இடம்பெயர்ந்த யூச்சி, யமாசி போன்ற பிற குடிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் செமினோலேக்கள் என அழைக்கப்பட்டனர். செமினோலே எனும் சொல், ஓடியவர்கள் எனப்பொருள் தரும் எசுப்பானிய மொழிச் சொல்லிலிருந்து வந்த, கிறீக் மொழிச் சொல்லான சிமானோ-லி என்பதிலிருந்து உருவானது. செமினோலேக்கள் ஒரு கலப்பு இனத்தவராவர். ஜார்ஜியாவிலிருந்து வந்த கீழ் கிறீக் இனத்தவர், மிக்காசுக்கி மொழி பேசும் முஸ்கோஜிகள், தப்பிய ஆபிரிக்க அமெரிக்க அடிமைகள், குறைந்த அளவில் பிற அமெரிக்க இந்தியப் பழங்குடி இனத்தவர் மற்றும் ஐரோப்பியர் என்போர் இக் கலவையில் அடங்குவர். இணைந்த செமினோலேக்கள் இரண்டு மொழிகளைப் பேசினர். அவை தொல்குடி அமெரிக்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பு மொழிகளான கிறீக், மிக்காசுக்கி என்பனவாகும். மொழி அடிப்படையில் மட்டுமே தற்கால புளோரிடாவின் மிக்கோசுக்கி பழங்குடிகள் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
                              செரோக்கீ (Cherokee) எனப்படுவோர் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவாகும். 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்கு வந்தபோது, இவர்கள் இன்றைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1830களில் இவர்களுட் பெரும்பாலானவர்கள், வலுக்கட்டாயமாக ஓசார்க் சமவெளிக்கு மேற்குப்புறமாக இடம் பெயர்க்கப்பட்டனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனப்படும் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். 2000 ஆவது ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அமெரிக்காவில் வாழும், 563 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுள் அதிகமானவர்கள் இவர்களே.
                              கண்ணீர்த் தடங்கள்  1838 ஆம் ஆண்டில், செரோக்கீ இனத்தவரை, அவர்களுடைய தாயகமான ஜோர்ஜியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியப் பகுதி என அன்று அழைக்கப்பட்ட ஒக்லகோமாவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வே கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிகழ்வின்போது 5,000 வரையான செரோக்கீகள் இறந்து போனதாகச் சொல்லப்படுகிறது. செரோக்கீ மொழியில் இது, நுன்னா டவுல் இசுன்யி எனப்படுகின்றது. இதன் பொருள் "அவர்கள் அழுத தடம்" என்பதாகும். அமெரிக்க இந்தியர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர். செமினோலே இனத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இம் முயற்சியை எதிர்த்துக் கரந்தடி (Guerrilla) முறையில் போரிட்டனர். ஓராண்டு காலம் வரை அமெரிக்க அரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து வந்தனர் எனினும், அவர்களது அன்புக்கு உரியவனும், துணிவுள்ளவனுமான தலைவன் ஒசியோலாவின் இழப்பினால் தோற்றனர். கண்ணீர்த் தடங்கள் என்பது, பிற இந்தியக் குழுக்கள் தொடர்பிலான பலவந்தமான இடப்பெயர்வு நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு. இச் சொற்றொடர்ப் பயன்பாடு 1831 ஆம் ஆண்டில் சொக்டாவ் இனத்தவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது உருவானது.
                            சொக்ட்டோ (Choctaw) எனப்படுவோர், தொடக்கத்தில், மிசிசிப்பி, அலபாமா, லூசியானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்க இனக்குழு ஆகும். இவர்கள் பேசும் மொழி முஸ்கோஜிய மொழிக்குழுவைச் சேர்ந்தது. இவர்கள், மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த மிசிசிப்பிப் பண்பாட்டின் ஒரு பகுதியினர் ஆவர். எசுப்பானியப் பயணிகள் இவர்களை முதன்முதலாகக் கண்டதாக நம்பப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இவர்களுக்கு அயலவர்களாக இருந்த ஐரோப்பிய அமெரிக்கக் குடியேற்றக்காரரின் பண்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை இவர்கள் பின்பற்றி வந்தனர். இதனால் அக்காலத்தில் சொக்ட்டோக்கள், ஐரோப்பிய அமெரிக்கர்களால், ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் ஒரு பழங்குடியாகக் கொள்ளப்பட்டனர். தெற்குப் பகுதியிலும் சில் சொக்ட்டோக் குழுக்கள் இருந்தாலும், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசமும், மிசிசிப்பி சொக்ட்டோ இந்தியக் குழுவுமே முதன்மையான சொக்ட்டோ சமூகங்கள் ஆகும். ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன், சொக்ட்டோக்களில் வெளியேற்றத்தை இந்தியர் அகற்றல் செயற்பாடுகளுக்கு ஒரு மாதிரியாகக் கொண்டார். முதலாவது கண்ணீர்த் தடங்கள் பயணத்தை மேற்கொண்டவர்கள் சொக்ட்டோக்களே ஆவர். 1831 ஆம் ஆண்டில், ஆடும் முயல் வெளி ஒப்பந்தம் (Treaty of Dancing Rabbit Creek) எனப்படும், சொக்டோக்களை வெளியேற்றும் ஒப்பந்தத்தின்படி, ஒக்லஹோமாவுக்குச் சென்றவர்கள் போக, புதிதாக உருவான மிசிசிப்பி மாநிலத்திலேயே சில சொக்ட்டோக்கள் தங்கிவிட்டனர். இவர்களே முதன்முதலாக ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை பெற்ற முக்கியமான ஐரோப்பியர் அல்லாத இனத்தவர் ஆவர். பெரிய ஐரிஷ் பஞ்சம் (1845–1849), ஏற்பட்ட காலத்தில் அவர்களுக்குத் தாராளமாக மனிதாபிமான உதவிகளைச் செய்தது தொடர்பாகவும் இவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் ஒக்லஹோமாவிலும், மிசிசிப்பியிலும் இருந்த சொக்ட்டோக்கள் பெரும்பாலும் கூட்டமைப்புக்கே ஆதரவாக இருந்தனர்.
                                சோஷோன் (Shoshone) எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளாவர். இவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு சோஷோன்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக வாழ்கிறார்கள். இவர்களில் வடக்கு சோஷோன்கள் கிழக்கு இடாகோ, மேற்கு வயோமிங், மற்றும் வட-கிழக்கு யூட்டா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். கிழக்கு சோஷோன்கள் வயோமிங், வடக்கு கொலராடோ, மொன்டானா ஆகிய மாநிலங்களில் வசித்து வந்தார்கள். 1750ம் ஆண்டளவில் ஏனைய பழங்குடிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இவர்கள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்தார்கள். மேற்கு சோஷோன்கள் நடு இடாகோ, வடமேற்கு யூட்டா, நடு நெவாடா மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். இக்குழுவினர் பனாமிண்ட் (Panamint) என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு சோஷோன்களின் இடாகோ குழுவினர் டுக்குவாடுக்கா (Tukuaduka), அதாவது ஆடு தின்னிகள் எனவும், நெவாடா/யூட்டாக் குழுக்கள் கோசியூட் (Gosiute) அல்லது டோய் டிக்கூட்டா எனவும் அழைக்கப்படுகின்றனர். 1845 இல் வடக்கு மற்றும் மேற்கு சோஷோன்களின் மொத்தத் தொகை கிடட்த்தட்ட 4,500 ஆக இருந்தது. 1937 இல் 3,650 வட சோஷோன்களும் 1,201 மேற்கு சோஷோன்களும் கணக்கெடுக்கப்பட்டார்கள். 1860 இல் இடாகோ மாநிலத்தில் ஆங்கிலக் குடியேற்றவாசிகளுடன் இடம்பெற்ற மோதலில் (பெயார் ஆற்றுப் படுகொலைகள்) பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் 1876 இல் அவர்களது பரம்பரை எதிரிகளான லக்கோட்ட மற்றும் செயன் ஆகிய பழங்குடிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டார்கள். 1878 இல் பானொக் பழங்குடிகளுடன் இடம்பெற்ற சமரில் போரிட்டனர். 1982 இல் மேற்கு சோஷோன்கள் தமது விடுதலையை அறிவித்து மேற்கு சோஷோன் தேசிய கவுன்சில் என்ற பெயரில் தனிக் கடவுச்சீட்டையும் வெளியிட்டார்கள்.
                                ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர், தொல்குடி அமெரிக்கத் தேசிய இனங்களான செரோக்கீ, சிக்காசோ, சொக்ட்டோ, கிறீக், செமினோலே ஆகிய ஐந்து பழங்குடிகளை ஒருங்கே குறிக்கிறது. அக்காலத்தில் ஐரோப்பியக் குடியேற்றக்காரரின் பழக்க வழக்கங்களை இவர்கள் பின்பற்றியதாலும், தமது அயலவருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்ததாலும் இவர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டனர். அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கு, குறிப்பாகப் பிற்காலத்து ஒக்லஹோமாவுக்கு இடம் பெயர்க்கப்படும் முன், இவர்கள் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். இன்று பல அமெரிக்க இந்தியர்கள், சிறப்பாக மேற்படி ஐந்து இனங்கள் தவிர்ந்த ஏனையோர் ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர் இனவாதத் தன்மை கொண்டது என எண்ணுகின்றனர். குறிப்பிட்ட ஐந்து பழங்குடியினருக்கு இவ்வாறு பெயரிடுவதன் மூலம் ஏனைய பழங்குடியினர் நாகரிகம் அற்றவர்கள் என்னும் தொனி தெளிவாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது மட்டுமன்றி மேற்படி ஐந்து பழங்குடிகளும் தங்கள் சொந்தப் பண்பாட்டைக் கைக்கொண்டிருக்கும் வரை நாகரிகம் அற்றவர்களாக இருந்தார்கள் என்றும், ஐரோப்பியப் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னரே நாகரிகம் அடைந்தார்கள் என்றும் இப்பெயர் சொல்கிறது. இப் பழங்குடிகள், தமது தாயகப் பகுதிகளான மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பக்கமிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். இந்த இடப்பெயர்வுகள், மத்திய அரசின் சட்டவாக்கங்களின் துணையுடன், பல பத்தாண்டுகளாக நடைபெற்று, இம்மக்கள், அன்று இந்தியப் பகுதி என அழைக்கப்பட்ட, இன்றைய ஒக்லஹோமாவின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இவற்றுள் மிகவும் மோசமான இடப்பெயர்வு 1838 ஆம் ஆண்டின் கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனப்பட்ட இடப்பெயர்வு ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், இந்த ஐந்து பழங்குடிகளும், பிரிந்து போரிட்டனர். சொக்ட்டோ, சிக்காசோ என்னும் இரண்டு பழங்குடிகளும் கூட்டமைப்பின் பக்கம் நின்றனர். கிறீக், செமினோலே, செரோக்கி பழங்குடிகள் தங்களுக்குள் பிரிந்து ஒரு பிரிவினர் ஐக்கிய அமெரிக்காவின் பக்கமும் மற்றப் பிரிவினர் கூட்டமைப்பையும் ஆதரித்து நின்றனர்.                                                          

இதர இனக்குழுக்கள்.

Picture

                             கிறீக் இனக்குழு (Creek) என்பது தொடக்கத்தில் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்த தொல்குடி அமெரிக்க இனத்தைக் குறிக்கும். இவர்கள் தங்கள் இனத்தை முஸ்கோஜி (Muscogee) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இவர்கள் தற்காலத்தில் ஒக்லஹோமா, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா ஆகிய ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் ம்விஸ்கோக்கே (Mvskoke) அல்லது கிறீக் மொழி, முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தின் கீறீக் துணைப் பிரிவைச் சேர்ந்தது. செமினோலேக்கள் இவர்களுக்கு நெருங்கிய இனத்தவராவர். அவர்களும் கிறீக் பிரிவு மொழியொன்றையே பேசுகின்றனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனக் குறிப்பிடப்படும் பழங்குடிகளுள் கிறீக் இனத்தவரும் அடங்குவர்.
வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த கிறீக் மக்கள், மண்மேடு கட்டிகள் என வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படும், தென்னசி ஆற்றோரம் அமைந்திருந்தமிசிசிப்பிப் பண்பாட்டு மக்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நாகரிகம் இன்றைய தென்னசி (Tennessee), அலபாமா, தென் ஜார்ஜியாவில் உள்ள உத்தினாகிக்கா (Utinahica) ஆகிய இடங்களில் பரந்து இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு தனிப் பழங்குடி என்பதிலும், பல குழுக்கள் இணைந்த ஒரு தொகுதியாக, ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்த தன்னாட்சித் தன்மை கொண்ட ஊர்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வூர்கள், இன்றைய தென்னசி, ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தன. இம்மக்களுள், பல இனத்தவரும், ஹிச்சித்தி, அலபாமா, கௌஷாத்தா போன்ற பல தனித்துவமான மொழிகளைப் பேசுவோரும் இருந்தனர்.
                            ஒக்முல்கீ ஆற்றங்கரையோரம் வாழ்ந்த இவ்வினத்தவரை கிறீக் இந்தியர்கள் எனத் தென் கரோலினாவில் இருந்து வந்த பிரித்தானிய வணிகர்கள் அழைத்தனர். இது வே தொடர்ந்து அப் பகுதியில் எல்லா ஆற்றங்கரையோர மக்களையும் குறிக்கும் பெயர் ஆயிற்று. இம்மக்களிடையே கீழ் நகரத்தார் மேல் நகரத்தார் என்ற பிரிவுகள் ஏற்படத் தொடங்கின. ஜார்ஜியா எல்லையோரப் பகுதியில் சட்டகூச்சி ஆறு, ஒக்மல்கி ஆறு, ஃபிளிட் ஆறு ஆகியவற்றின் கரைகளில் அமைந்த நகரங்கள் கீழ் நகரங்களாகவும், அலபாமா ஆற்றுப் பள்ளத்தாக்கு நகரங்கள் மேல் நகரங்கள் ஆகவும் இருந்தன. கீழ் நகரங்களுள், கொவேத்தா, குசேத்தா, மேல் செகாவ், ஹிச்சித்தி, ஓக்கோனி, ஒக்மல்கீ, அப்பலாச்சி, யமாசி, ஒக்புஸ்கி, சவோக்லி, தமாலி ஆகிய நகரங்கள் அடங்கியிருந்தன. துக்காபச்சி, அபிக்கா, குசா, இத்தாவா, ஹோத்லிவாகி, ஹிலிபி, இயுஃபோலா, வாக்கோகை, அத்தாசி, அலிபாமு, கோஷாத்தா, துஸ்கேஜீ ஆகிய நகரங்கள் மேல் நகரங்கள் ஆகும் கொவேத்தா, குசேத்தா ஆகிய இரு நகரங்களுமே கிறீக் தேசிய இனத்தாரின் முக்கிய நகரங்களாக இன்றுவரை உள்ளன. மரபு வழியாக குசேத்தா, கொவேத்தா குழுக்களே கிறீக் தேசிய இனத்தின் உறுப்பினராகக் கருதப்பட்டனர். அமெரிக்கப் புரட்சியின்போது, மிசிசிப்பி ஆறு, லூசியான ஆறு ஆகியவற்றுக்குக் கிழக்கே இருந்த பல தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களைப் போலவே கிறீக் இனத்தவரும், எப்பகுதியை ஆதரிப்பது என்பதில் பிரிந்து இருந்தனர். கீழ் கிறீக்குகள் நடுநிலை வகிக்க, மேல் கிறீக்குகள் பிரித்தானியருக்கு ஆதரவாக அமெரிக்கருடன் போரிட்டனர். 1783 ஆம் ஆண்டில், போர் முடிவடைந்த பின்னர், பிரித்தானியர் கிறீக் நிலங்களை புதிய ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்ததை அறிந்தனர். ஜார்ஜியா மாநிலம் கிறீக் நிலப் பகுதிகளுக்குள் விரிவடையத் தொடங்கியது. கிறீக் அரசியல் தலைவனான அலெக்சாண்டர் மக்கில்லிவ்ரே (Alexander McGillivray) இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பரந்த தொல்குடியினரின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்தார். அத்துமீறும் ஜார்ஜியர்களுடன் போரிட புளோரிடாவில் இருந்த எசுப்பானியரிடம் இருந்து ஆயுதங்களும் அவருக்குக் கிடைத்தன. தனித்தனியாக அமெரிக்காவுக்குத் தங்கள் நிலங்களை விற்ற ஊர்த் தலைவர்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததுடன், கிறீக் அதிகாரத்தை மையப்படுத்தவும், கிறீக் தேசிய உணர்வை உருவாக்கவும், மக்கில்லிவ்ரே உழைத்தார். 1790 இல் செய்துகொள்ளப்பட்ட நியூ யார்க் ஒப்பந்தத்தின் மூலம், எஞ்சிய பகுதியில் கிறீக் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற நிபந்தனையுடன், கிறீக் நிலங்களின் குறிப்பிடத்தக்க அளவு பகுதியை ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க மக்கில்லிவ்ரே உடன்பட்டார். ஆனால் மக்கில்லிவ்ரே 1793 ஆம் ஆண்டில் இறக்கவே, ஜார்ஜியர்கள், கிறீக் நிலப் பகுதிகளுக்குள் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தனர்.
கனேடிய இனக்குழுக்கள்
                          எஸ்கிமோக்கள் எனப்படுவோர் வடதுருவப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். எஸ்கிமோ என்றால் அவர்கள் மொழியில் இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள் என்று பொருள். இவர்களில் இனூயிட் (Inuit) எனப்படுவோர் வடக்கு அலாஸ்கா, வட கனடா, கிறீன்லாந்து வரை காணப்படுகின்றனர். யூப்பிக் (Yupic) எனப்படுவோர் மேற்கு அலாஸ்காவிலும் சைபீரியாவின் வடகிழக்கு முனையிலும் வாழ்கின்றனர். இவர்களை விட அலாஸ்காவின் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் உனாங்கா எனப்படும் அலூட் மக்கள் மூன்றாவது வகையான எஸ்கிமோக்கள்.எஸ்கிமோக்கள் குள்ளமாகவும், குட்டையான கால்களையும் உடையவர்கள். குளிர்காலத்தில் இவர்கள் இக்லூ என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளினால் ஆன வீடுகளில் வசிக்கின்றனர். கோடைகாலத்தில் மிருகங்களின் தோலால் ஆன கூடாரங்களில் வாழ்கின்றனர்.எஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செவ்விந்தியர்களின் மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு பச்சை இறைச்சியை தின்பவர்கள் என்பது பொருள்.எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது.அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம். அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான். பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம். குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.

ஆஸ்திரேலிய பழங்குடிகள்.

Picture

                                   ஆஸ்திரேலிய பழங்குடிகள்(Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் நீரிணைத் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.
ஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.
                          திருடப்பட்ட தலைமுறைகள்(Stolen Generations) எனப்படுவது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெசு நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் அப்போதைய அரசுகளின் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய கிட்டத்தட்ட 1869 முதல் (அதிகாரபூர்வமாக) 1969 வரையான காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் தலைமுறைகளை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயராகும். பெப்ரவரி 13, 2008இல் கெவின் ரட் தலைமையிலான ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்தது. கெவின் ரட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் சார்பாக அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பழங்குடிகள் தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்டனர். 1788இல் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளாக ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி, இப்பழங்குடிகளைக் கட்டாயமாக துப்பாக்கி முனையில் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றினார்கள். இந்நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கானவர்கள் வேட்டையாடப்பட்டனர். 1910 முதல் 1969 வரையில் கிட்டத்தட்ட 100,000 வரையிலான சிறுவர்கள் காவற்துறையினராலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய தம் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். மனித உரிமைவாதிகள், மற்றும் பழங்குடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல்களின் பலனாக, "வீட்டுக்குக் கொண்டு வாருங்கள்" (Bringing them Home) என்ற விசாரணை, "ஆஸ்திரேலிய மனித உரிமை மற்றும் சம உரிமை ஆணை"யின் தலைவர் சேர் ரொனால்ட் வில்சன், மற்றும் பழங்குடியினரின் பொதுநல உரிமை ஆணையாளர் மிக் டொட்சன் ஆகியோரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவர்கள் தமது விசாரணைகளில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து மொத்தம் 535 பழங்குடியனரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சுமார் 600ற்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். இவ்விசாரணையின் அறிக்கை 700 பக்கங்களில் மே 26, 1997 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆவணத்தில் வழங்கப்பட்ட 54 பரிந்துரைகளில் முக்கிய மூன்று பரிந்துரைகளாவன: அவுஸ்திரேலிய பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு முறைமையை ஏற்படுத்தல். பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல். அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல். இந்த ஆவணம் வழங்கப்பட்ட காலத்தில் ஜோன் ஹவார்ட் தலைமையிலான பழமைவாத ஆஸ்திரேலிய லிபரல் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தது. ஜோன் ஹவார்ட் இவ்வாறு பொது மன்னிப்புக் கேட்பதினால் இத்தலைமுறையினருக்கு பெரும் நட்டஈடு வழங்கப்பட வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் பொது மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். ஆனாலும் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வட மாநிலம் ஆகியவை அவற்றிற்குரிய மாநில நாடாளுமன்றங்களில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டன. டிசம்பர் 11, 2007 இல் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கெவின் ரட் தலைமையிலான தொழிற் கட்சி அரசு திருடப்பட்ட தலைமுறையினரிடம் தமது முறையான மன்னிப்பைக் கோரும் என அறிவித்தது. மன்னிப்பு வாசகங்களில் இடம்பெறக்கூடிய செய்திகளை பழங்குடித் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.இம்மன்னிப்பு வாசகங்களின் மூலம் நட்டஈடு வழங்கல் தவிர்க்கப்பட்டுள்ளது என கெவின் ரட் உறுதியளித்தார். பெப்ரவரி 13, 2008 இல் பழங்குடியின மக்களுக்கு துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ள அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் என்பவற்றிற்காக அனைத்துப் பழங்குடியின மக்களிடமும் பிரதமர் கெவின் ரட் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.
                                மாபோ எதிர் குயின்ஸ்லாந்து(Mabo v Queensland) என்பது ஆஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் 1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும். இப்புகழ் பெற்ற தீர்ப்பை அடுத்து 1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் - எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டு, தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த (native title) ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின் மறி தீவுகளைச் சேர்ந்த மீரியாம் பழங்குடிகளான எடி மாபோ மற்றும் டேவிட் பாசி, ஜேம்ஸ் ரைஸ் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
                               ஈயோராஅல்லது லோரா அல்லது லியோரா என்பது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களில் ஒரு குடியின் பெயர். தாங்கள் பழங்குடிகள் என்பதை அவர்கள் தங்கள் மொழியில் கூரி என்று அழைப்பர். இம்மக்கள் இன்று சிட்னி மாநகரில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருந்து ஜனவரி 1788 இல் சுமார் 1300 குற்றவாளிகளும் அவர்களுடைய காப்பாளர்களும் கப்பலில் வந்து இறங்கிய பொழுது, இந்த ஈயோரா மக்களில் 1500 பேர் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் வந்திறங்கியோர்கள் கொண்டு வந்த வைசூரி அல்லது பெரியம்மை போன்ற நோயாலும், பிற காரணங்களினாலும், சுமார் 19ஆம் நூற்றாண்டுக்குள் இவ்வினம் முற்றிலுமாக அற்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. ஈயோரா இன மக்களின் மொழியில் இருந்து இன்று ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வழங்கும் சொற்களில் சில: டிங்கோ நாய் (dingo), வூமெரா ஈட்டி (woomera), வாலபி (wallaby), வாம்பட்டு என்னும் பேரெலிவகை (wombat), வரட்டாச் செடி (waratah), பழுப்பு நிற மோபோக்கு ஆந்தை boobook (owl), கங்காருவிற்கும் வாலபியிற்கும் இடைப்பட்ட அளவுடைய வால்லரு என்னும் விலங்கு (wallaroo) ஆகியன.
                                பென்னெலாங்கு அவர்கள் பென்னெலாங்கு என்னும் பெயருடைய ஈயோரா இனத்தில் இருந்த ஒருவரர் ஆங்கிலேயர்களுக்கும் ஈயோரா இன மக்களுக்கும் இடையே தொடர்பாளராக இருந்துள்ளார். இவருடைய படம் இணைக்கப்பட்டுள்ளது. இவர் மே 24, 1793 இல் இங்கிலாந்து அரசர் 3ஆம் ஜோர்ஜை (King George III) சந்தித்து இருக்கிறார்.
                               மெரியாம் மக்கள்(Meriam people) எனப்படுவோர் ஆஸ்திரேலியாவின் வடமுனையில் அமைந்துள்ள டொரெஸ் நீரிணைத் தீவுகளின் கிழக்குத் தீவுகளில் ஒன்றான மெர் எனப்படும் மறி தீவில் வாழும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் ஆவர்.மெரியாம் மக்கள் 1992 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து பெரிதும் பேசப்பட்டனர். எடி மாபோ என்பவர் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு எதிராக இவ்வழக்கைத் தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இத்தீர்ப்பை அடுத்து ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் அவர்களுக்கே உரியது என அங்கீகரிக்கப்பட்டது.மெரியாம் மக்கள் பொதுவாக தோட்டக் கலையையே தமது தொழிலாகக் கொண்டிருந்தாலும், அனைத்து மெரியாம் மக்களும் கடல் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். தீவுகளில் 60 கிமீகள் வடக்கேயும் மேற்கேயும் மீன்பிடித் தொழிலை தமது உரிமைகளாக வைத்திருக்கின்றனர்.
                               
 டொரெசு நீரிணை தீவினர்(Torres Strait Islanders) என்பவர்கள் ஆசுதிரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் டொரெசு நீரிணைத் தீவுகளில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் ஆவர். இவர்கள் மரபியல் மற்றும் கலாச்சார ரீதியில் பப்புவா நியூ கினியின் மெலனீசியா மக்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இவ்வினத்தவர் ஆசுதிரேலியாவின் இனசுத்திகரிப்பு முறையினால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஆவர். இவ்வினத்தவரும் மற்றும் பல ஆசுதிரேலிய பழங்குடி மக்களும் திருடப்பட்ட தலைமுறைகள் என்று அழைக்கப்படுவர்.
                                துருகானினிஅல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர் (Truganini அல்லது Trugernanner, 1812 - மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் ஆவார். திராவிட இனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவரது இனம் கிபி 1800 வாக்கில் அந்நாட்டில் குடியேறத்தொடங்கிய ஆங்கிலேயர்களால் அழியத்தொடங்கியது. மிருகங்களை போல துப்பாக்கி முனையில் இவர்களை வேட்டையாடிய ஆங்கிலேயர்கள், அதற்கு 'கறுப்பனை பிடித்தல்' (Black Catching) என்றும் பெயர் வைத்தனர். இவ்வாறான கொடூரங்களால் சுமார் 5000 வரை இருந்த இவர்களது எண்ணிக்கை 1830 ஆம் ஆண்டு 75-ஆக குறைந்தது. இவர்களில் கடைசியாக மிஞ்சியது துருகானினி மட்டுமே. இவரும் 1876-ம் ஆண்டு சிறையிலேயே இறந்தார். இவரோடு தாஸ்மேனிய பழங்குடி இனம் முழுமையாக அழிந்தது.
                            
தாஸ்மேனிய பழங்குடிகள் இந்திய-திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இங்கு வந்து குடியேரியவர்கள். அதன் பிறகு சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா, தாஸ்மேனிய ஆகியவற்றை இணைத்த நிலமானது கடல் நீரில் மூழ்கிவிட்டது. இதன் பிறகு மற்ற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், நாகரீக வளர்ச்சி பெறாதவர்களாக வளர்ந்தனர். விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்க்காப்பு போன்ற எதையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் கடைசி பரம்பரையிலேயே துருகானினி வந்தார். இதன் பிறகு சுமார் 1800 வாக்கில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனிய நாட்டில் வந்து குடியேறினார்கள். தாஸ்மேனியாவை ஒரு வெள்ளை மக்களின் தேசமாக மாற்ற எண்ணிய இவர்கள், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொல்லத்துவங்கினர். இதன் பிறகு கி.பி 1828-ம் ஆண்டு அங்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜோர்ஜ் ஆர்தர் என்பவன்., பழங்குடி மக்களை கொல்வதை சட்டமாக்கினான். இதன் படி ஆண், பெண்களை கொல்பவர்களுக்கு 3 இங்கிலாந்து பவுண்டும், குழந்தைகளை அடிமைப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு ஒரு இங்கிலாந்து பவுண்டும் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டது. 'கறுப்பனை பிடித்தல்' (Black catching) என்ற இந்த சட்டத்திற்குப் பிறகு அநேகமாக அனைத்து வெள்ளையர்களும் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் நுழைந்தனர். கண்ணில் பயத்துடன் குடும்பம் குடும்பமாக தப்பியோடிய பழங்குடிகளை, மிருகங்களைப் போல வேட்டையாடினர். எந்த விதமான தற்காப்பு கலைகளையும் அறிந்திராத இவர்கள், வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு மொத்த மொத்தமாக பலியாகினர். இதன் காரன்மாக 1800 வாக்கில் சுமார் 5000 வரை இருந்த இவர்களின் மக்கள் தொகை, முப்பதே ஆண்டுகளில் வெறும் 75-ஆக சுருங்கியது. அடிமையாக இருந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இதற்குள் எழுந்த உலக எதிர்ப்பின் காரணமாக எஞ்சிய 72 ஆண்களும் 3 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் துருகானினியும் ஒருவர். இவர்களும் சரியான முறையில் உணவும், தண்ணீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக 1869-ல் துருகானினியுடன் சேர்த்து இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே மிஞ்சினர். இது வெளியுலகிற்குத் தெரிந்தவுடன் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் இவர்களை பரிசோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். மேலும் இதற்குள் இறந்த அந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலையும் கூறுபோட்டனர். இதையெல்லாம் கண்ட துருகானினி தான் இறந்த பிறகு தனது உடலை இவ்வாறு கூறுபோட வேண்டாம் எனவும், தங்கள் வழக்கப்படி கடலில் புதைத்து விடும் படியும் கேட்டுக்கொண்டார். இதன் பிறகு 1876-ல் உடல் நலிந்த நிலையில் துருகானினி மரணமடைந்தார். துருகானினி இறந்தப்பின் அவரின் கோரிக்கையை நிராகரித்த வெள்ளையர் அரசாங்கம் அவரை காட்டின் ஒரு மூலையில் புதைத்தது. பின்பும் இவரின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்த வெள்ளையர் அரசு, தாஸ்மேனிய தேசிய அருங்காட்சியகத்தில் 'தாஸ்மேனிய கடைசி பழங்குடிப்பென்' என்ற பெயரில் காட்சிக்காக வைத்தனர். இதை உலக மக்கள் எதிர்த்த நிலையில் துருகானினியின் எலும்புக்கூட்டை அருங்காட்சியகத்தின் மற்றொரு அறையில் வைத்துப் பூட்டினர். இதன் பிறகு துருகானினி இறந்து சரியாக ஒரு நூற்றாண்டு ஆகிய பின்னர் 1976-ம் ஆண்டு தாஸ்மேனியாவில் திரண்ட துருகானினியின் ஆதரவாளர்கள், அருங்காட்சியகத்தின் காவலை மீறி உள்ளே நுழைந்து துருகானினியின் எலும்புக்கூட்டை மீட்டனர். பின் இதனை சகல மரியாதைகளுடன் தகனம் செய்த இவர்கள், சாம்பலை அவரின் ஆசைப்படியே கடலில் கரைத்தனர்.

இலங்கையின் ஆதிவாசிகள்.

Picture

                         இலங்கையின் ஆதிவாசிகள் எனப்படுவோர் வேடர்கள் அல்லது காட்டு வாசிகள் ஆவர்.
வெத்தா (சிங்களம்: "වැද්දා") என்பது வேடன் என்னும் பொருள் குறிக்கும் சிங்கள மொழிச் சொல். எனினும் சிறப்பாக, இலங்கையின் காட்டுப் பகுதிகளில் இன்னமும் சிறு தொகையினராக வசித்துவரும் இனத்தவரைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுகின்றது. தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களே. வெளியார் இவர்களை வேடர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) எனவே குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் பேசுகின்றார்கள். இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்களே இயக்கர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.
                                 இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர்.
ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம். இவர்கள் ஆரம்பத்தில் என்ன மொழியைப் பேசினார்கள் என்பது தெரியவில்லை. இன்று இவர்கள் தாங்கள் வாழும் புகுதிகளில் வழங்கும் பெரும்பான்மை மொழிகளான சிங்களம் அல்லது தமிழைப் பேசிவருகிறார்கள். மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள்.

இந்தியப் பழங்குடிகள்.

Picture

                                     ஒன்கே மக்கள் (Onge) எனப்படுவோர் அந்தமான் தீவுகளில் வசிக்கும் அந்தமான் மக்களின் ஒரு குறிப்பிட்ட பழங்குடிகள் ஆவர். இவர்கள் "நெகிரிட்டோக்கள்" எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக சிறிய அந்தமான் தீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுத் திடல்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் ரட்லண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமான் தீவின் தென்முனையின் பகுதிகளிலும் சில கூடாரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடியே தமது உணவைத் தேடுகின்றனர்.
ஓன்கே மக்கள் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. கிபி 672 முதல் 1901 காலப்பகுதி வரை அந்தமானில் இடம்பெற்று வந்த குடியேற்றங்கள் காரணமாக ஒன்கே மக்களின் தொகை கணிசமான அளவு குறைந்து வந்தது. தற்போதுள்ள மக்கள் சிறிய அந்தமான் தீவில் இரண்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியின மக்களுடனான தொடர்பு, மற்றும் உணவுப் பழக்க வழக்க மாற்றங்களே இவர்களின் மக்கள்தொகைக் குறைப்பிற்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன. 1901 இல் இவர்களின் தொகை 672 ஆகவும், 1911 இல் 631 ஆகவும் 1921 இல் 346 ஆகவும்; 1931 இல் 250 ஆகவும், 1951 இல் (இந்திய விடுதலைக்கு கிட்டவாக) 150 ஆகவும் இருந்தது. தற்போது (2008 இல்) இவர்களின் தொகை ஆக 100 மட்டுமே உள்ளது. டிசம்பர் 2008 இல் நச்சு திரவத்தை அருந்தியதால் இவ்வினத்தின் 8 ஆண்கள் இறந்தனர். ஆல்ககோல் என நினைத்து மெத்தனால் என்ற நச்சுத் திரவத்தை அருந்தியதால் இவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 15 ஒன்கே இனத்தவர் இந்நிகழ்வில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2009 இல் நான்கு ஒன்கே இனப் பெண்கள் மீளத் திருமணம் செய்ய சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டனர். இவ்வினத்தில் பெண்கள் மீளத்திருமணம் புரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                                 போடோ மக்கள்(Bodos) எனப்படுவோர் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். 1991 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 1.2 மில்லியன் போடோ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 53. விழுக்காடு ஆகும். அசாம் மாநிலத்தின் உதால்குரி, கொக்ராஜார் ஆகிய நகரங்களில் இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தியாவின் ஷெடியூல் வகுப்பினரில் போடோக்கள் 8வது இடத்தை (1971) வகிக்கின்றனர். இவர்கள் போடோ மொழியைப் பேசுகின்றனர். போடோக்கள் போடோ-கச்சாரி என்ற இனக்குழுக்களின் 18 பிரிவுகளில் ஒன்று என 19ம் நூற்றாண்டில் முதன் முதலாக வகைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதியிலும், நேபாளத்திலும் போடோக்கள் வாழ்கின்றனர். பிரம்மபுத்ரா ஆற்றுக் கரைகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர்ர் போடோக்கள் ஆவர். போடோக்கள் முன்னைய காலங்களில் தம்முடைய மூதாதையோரயே வழிபட்டு வந்தனர். இதற்கு "பாத்தூயிசம்" என்று பெயர். அண்மைக்காலங்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். 1980களின் இறுதிப் பகுதியில் இருந்து போடோக்கள் தமக்கு சுயாட்சி வழங்கக்கோரி உபேந்திரா நாத் பிரம்மா தலைமையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர் இப்போது போடோக்களின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். போடோக்களின் தனித்துவம், பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பேண நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து இவர்களுக்கு "போடோலாந்து பிராந்தியக் கவுன்சில்" என்ற தனியான நிர்வாக அலகு தற்போதைய கொக்ராஜார் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. சுயாட்சிக்கான போராட்டங்கள் "அனைத்து போடோ மாணவர் அமைப்பு" மூலமாகவும், "போடோ விடுதலைப் புலிகள்" (Bodo Liberation Tigers, BLT) என்ற ஆயுத அமைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களைவிட "போரோ பாதுகாப்பு படை", போடோலாந்து தேசிய மக்களாட்சி முன்னணி, போன்றவை ஆயுதம் தாங்கி தற்போதும் போராடி வருகின்றன. 2006 அசாம் மாநில தேர்தல்களில் போடோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திஸ்பூரில் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தனர்.
                                    போண்டாஅல்லது போண்டோ மக்கள் என்பவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மல்க்காங்கிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். இப்பகுதி, ஒரிசா, சட்டீசுகர்கு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் சேரும் இடத்தில் உள்ளது. இவர்களில் இன்று ஏறத்தாழ 5000 பேர்கள்தான் இருக்கின்றனர் (1991 கணக்கெடுப்பின் படி). இவர்கள் முண்டா என்னும் ஆசுத்திரேலிய-ஆசிய குடும்பத்து மொழி பேசும் மக்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இம்மக்கள் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட (scheduled tribe) இனங்களில் ஓரினமாக பதிவு செய்ய்ப்பட்டுள்ளனர். இவர்கள் ரேமோ (Remo) என்றும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் பேசும் போண்டா மொழியில் ரேமோ என்றால் மக்கள் என்று பொருள். இவர்களுக்கு வழங்கும் பிற பெயர்கள் போண்டோ, போண்டோ பொரா'சா (Bondo Poraja). இவ்வினத்தவர் ஓரளவுக்கு ஆடை அணிகலன்கள் அணிகின்றனர். இவ்வின மக்களின் பெண்கள் தங்கள் கழுத்தில் மிகவும் தடிப்பான வெள்ளி வளையங்களை அணிகின்றனர். காதிலும், மூக்கிலும் பல இடங்களில் தோடு, வளையங்கள் அணிகின்றனர். சிறு குழந்தைகளும் மூக்கணிகள் அணிகின்றனர். போண்டா இன மக்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இம்மக்கள் தங்கள் தலை முடியில் விளக்கெண்ணெய் தேய்த்துக்கொள்கிறார்கள். இவ் இனப் பெண்கள் தங்களைவிட 10-15 அகவை (வயது) குறைந்த ஆண்களை மணந்து கொள்கின்றனர். திருமணம் செய்துகொள்ளும் பொழுது பெண்ணுக்கு 20-25 அகவையும் ஆணுக்கு ஏறத்தாழ 10 அகவையும் இருக்கும். இவர்கள், அருகில் உள்ள ஊர்ப்புற சந்தைகளில் பண்டமாற்று முறையில் ("பின்னிமோய் புரோத்தா, 'binnimoy protha')பொருள்களைப் பரிமாறுகிறார்கள். இம்மக்கள் தாங்கள் வாழிடங்களில் சென்று கண்பது எளிதல்ல என்று சிலர் கருதவதால், ஞாயிற்றுக் கிழமை சந்தைகளில் காண்பதே பெரும்பாலும் நிகழ்வதாகும்

தமிழகப் பழங்குடிகள்.

Picture

                             தமிழகப் பழங்குடிகள்தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர், தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளை பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர்.
பழங்குடி பெயர் வாழும் பகுதி மொழி அரநாடன் கோவை, ஆனைமலை மலையாளக் கிளை மொழி அலுகுறும்பர் நீலகிரி கன்னடக் கலப்பு மொழி இருளர் கோவை, சேலம், காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம் இருள மொழி தமிழ் கிளைமொழி ஊராளி நீலகிரி (சத்தியமங்கலம்) மலையாளம் கலந்த தமிழ் எருக்கலா காஞ்சிபுரம், செங்கல்பட்டு தமிழின் கிளை மொழி. மலையாளம் கலப்பு எரவல்லன் கோவை (மலைப்பகுதி) ? கசபர் நீலகிரி, கூடலூர்,உதகமண்டலம் கசபர் மொழி, கன்னடம் தமிழ் கலப்பு காணிக்காரர் கன்னியாகுமரி மலையாளம் தமிழ் மொழி காடர் கோயம்புத்தூர், ஆனைமலை,திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூர் கன்னடக் கலப்பு மொழி குறும்பர் நீலகிரி கன்னடக் கலப்பு மொழி குடிமலைக்குடி தமிழக-கர்நாடக எல்லை மலைகள் துளு மொழி குறிச்சான் தருமபுரி கன்னடக் கிளை மொழி பணியர் நீலகிரி, பாலக்காடு, கண்ணனூர், வயநாடு மலையாளக் கிளை மொழி பழியர் பழனி மலைக்குன்றுகள், சிறுமலை, இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் தமிழ் மொழி புலையர் பழனி மலைக் குன்றுகள், ஆனைமலை, மதுரை மாவட்டம் தமிழ் மொழி மலமலசர் ஆனைமலைப் பகுதிகள் தமிழ், தமிழின் கிளைமொழி மலையாளி சேர்வராயன் மலை, கொல்லி மலை, சவ்வாது, ஏலகிரி, பச்சை மலைக் குன்றுகள் தமிழ், மொழி முதுவர் ஆனைமலை, ஏலமலை, ஏலமலையை ஒட்டியுள்ள கேரளப் பகுதிகள் தமிழின் கிளை மொழி தோடர் நீலகிரி தோடா மொழி படுகர் நீலகிரி கன்னடக் கிளை மொழி
                                             தமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும். தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று. தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும். (தி ஹிண்டு, 2005) 
                                         கோத்தர்என்போர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி இன மக்கள். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் நீக்ரிடாய்ட் இனத்தைச் சேர்ந்தோர் ஆவர். இவர்கள் தாங்கள் வாழுமிடத்தைக் கோகால் என்றழைக்கின்றனர். வீட்டை அவர் மொழியில் பய் என்றழைப்பர். தாம் வாழும் தெருக்களை கேரி என்றழைப்பர். உணவுக்கு கேப்பையை விரும்பி உண்கின்றனர். இராகிப் பிட்டு இவர்கள் விரும்பும் முக்கிய உணவு. எருமைக் கறியையும் விரும்பி உண்பர். கருமார்த் தொழில் (இரும்புக் கருவிகள் செய்தல்), மட்பாண்டம் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்கள். கோத்தர் பேசும் மொழி கோத்த மொழி எனப்படுகிறது. இது தென் திராவிட மொழிப்பிரிவைச் சேர்ந்தது. இம்மொழி வரிவடிவம் அற்றது. கோத்தர் இறந்தோரை எரிக்கும் வழக்கம் கொண்டவர். இறந்த அன்று பச்தாவ் (பச்சைச் சாவு) என்றும் ஓராண்டு கழித்து வர்ல்தாவ் (காய்ந்த சாவு) என்றும் இரு சடங்குகள் நடத்துவர்.
                                          காடர் என்போர் தமிழ் நாட்டில் உள்ள பழங்குடிகளில் ஓரின மக்கள். இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை, பரம்பிக்குளம் கங்கடவு பெரும்பாறை போன்ற இடங்களிலும், மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் மொழி கன்னட மொழி கலப்புள்ளது.
                                         தோடர்கள்தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம் மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர். இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள். தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர். தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர். தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார். இவர்கள் முற்காலத்தில் பல்கணவ முறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.
                                        
 படுகர்(Badagas அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். நீலகிரியில் வாழும் 18 இன மக்களில் ஒரு இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாததாகும். இவர்கள் விஜய நகர பேரரசின் காலத்தின்போது மைசூர் நிலப் பகுதிகளில் இருந்து நீலகிரிக்குப் இடமபெயர்ந்தார்கள் எனப்படுகிறது. நீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன.
                                          கசவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இம்மக்கள் தடித்த உதடும் சுருண்ட மயிரும், கருத்த நிறமும் கொண்டவர்கள். இவர்கள் தாம் வாழும் குடிசையைச் சேரி என்று அழைப்பர். இக்குடிசைகள் மூங்கில், கம்பு ஆகியவற்றைக் கொண்டு புல்லால் வேயப்பட்டு இருக்கும். இவர்தம் மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது.
திருமணம் பெரும்பாலும் பெரியவர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது. மணமுறிவு, மறுமணம் ஆகியன வழக்கில் உள்ளன.
                                          காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோட்டில் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது. இவ்வின மக்கள் குட்டையான உருவமும் சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும் இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத் தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்கள் இவர்கள் எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர்.
                                      பணியர்தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டாரத்திலும், கேரளத்தில் பாலக்காடு, கண்ணனூர், வயநாடு ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். கருத்த நிறமும் சுருண்ட மயிரும் தடித்த உதடும் கொண்ட இம்மக்கள் நீக்ராயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடும் உழைப்பாளிகளான இம்மக்களில் பெரும்பாலானோர் உழவு வேலை செய்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் குடிசையைச் சாலை எனவும் பல குடிசைகள் கொண்ட ஊரினை பாடி எனவும் அழைக்கின்றனர். பாடியின் தலைவன் கூட்டன் எனப்படுவான். இவர்கள் ஒரு காலத்தில் மரம் வெட்டியும் யானை பிடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆவி உலகக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்களது கோவில் தெய்யபிறை எனப்படுகிறது. இம்மக்கள் பேசும் மொழி மலையாளத்தின் கிளைமொழியாகும். இறந்த மக்களைப் புதைப்பது இவர்கள் வழக்கம்.
                                        பெட்ட குறும்பர்தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் வாழும் பழங்குடி இனத்தோர். இவ்வினத்தார் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்ப் பகுதியில் வாழ்கின்றனர். பெட்ட எனின் இவர்தம் மொழியில் மலை என்று பொருள். இவர்கள் குறுமன், குறும்பன், குறுபன் முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். இம்மக்கள் தாம் வாழுமிடத்தை பாடி என்று அழைக்கின்றனர். இவர்களது குடிசைகள் மூங்கிலால் கட்டப்பட்டு இருக்கும். குடிசைகட்கு நடுவில் பெரிய குடிசையொன்றும் இருக்கும். இதற்கு வெளியில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். முதுமலை, தெப்பக்காடு பகுதிகளில் வாழும் பெட்ட குறும்பர்கள் யானைகளைப் பழக்குவதில் தேர்ந்தவர்கள். தேன் எடுப்பதும் மீன் பிடிப்பதும் இவர்தம் தொழில். நெருப்பு மூட்டி அதனைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். பெட்ட குறும்பர் பேசும் மொழி பெட்ட குறும்பர் எனப்படுகிறது. இது தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தனித் திராவிட மொழியாகும். பேராசியர் எமனோ, கமில் சுவலபில் ஆகியோரும் தத்தம் நூல்களில் இக்கருத்தையே குறிப்பிட்டுள்ளனர். பெட்டக் குறும்பர் இன மக்களிடையே மொத்தம் 16 பெயர்கள் தாம் உண்டு. அவை மாண்பன், மாறன், பொம்மன் முதலான எட்டு ஆண் பெயர்களும் மாண்பி, மாரி, பொம்மி முதலான எட்டு பெண் பெயர்களும் ஆகும். இறந்தோரை இவ்வின மக்கள் புதைக்கின்றனர். ஆண், பெண் இருபாலரும் இறந்தவர்களைக் கொண்டு செல்கையில் இடுகாட்டுக்குச் செல்வர். இறந்தவரின் வீட்டார் பின்னர் வேறு இடத்தில் குடியேறுவர்.
                                         மலமலசர் என்போர் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலைப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆவர். இப்பகுதியில் மலமலசரைப் போன்று பதிமலசர் என்னும் இனத்தாரும் வாழ்கின்றனர். மலமலசர் மலைகளிலும் பதிமலசர் மலை அடிவாரத்திலும் வாழ்கின்றனர். மலமலசர் தாம் வாழுமிடத்தைப் பாடி என்றழைப்பர். இவர்கள் காட்டுக் கடவுளரை வழிபடுகின்றனர். நாட்டுத்தெய்வங்களைக் கும்பிடுவதில்லை. ஆசுத்திரேலிய இனத்தைச் சேர்ந்த இம்மக்கள் தடித்த உதடும் கருமையான மயிரும் குட்டையான உருவமும் கொண்டவர்கள். மலமலசர்க்கு தாடி அடர்த்தியாக வளர்வதில்லை. இவர்தம் பேச்சில் தாடி என்பதற்கு தனியான சொல்லை இல்லை. மீசையை மேல் மீசை என்றும் தாடியை கீழ் மீசை என்றும் அழைக்கின்றனர். இவர்கள் யாரும் அணுக இயலாதவாறு காட்டினுள்ளே குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். இவர்கள் பேசுவது தமிழின் கிளை மொழியாகும். இறந்தோரைப் புதைத்தல் இவ்வின மக்களின் வழக்கம்.




Via (சித்தர்கள்) angelinmery