மனித வரலாறு - 4 கண்டங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:49 | Best Blogger Tips
Picture

                     
கண்டம் (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். பூமி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
கண்டங்கள்.
 
1.ஆப்பிரிக்க-யூரேசியா(Afro-Eurasia, Afrasia அல்லது Eurafrasia) என்பது யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இரு கண்டங்கள் இணைந்த ஒரு கண்டத்தைக் குறிக்கும் சொல்லாகும். இணைந்த இக்கண்டத்தின் மொத்த நிலப்பகுதியும் 5.7 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது உலகின் மொத்த மக்காள்தொகையில் 85 விழுக்காடு ஆகும். பொதுவாக, ஆப்பிரிக்க யூரேசியா என்ற இக்கண்டம் ஆப்பிரிக்காவையும் யூரேசியாவையும் சூயஸ் கால்வாய் வழியே பிரிக்கிறது. யூரேசியா என்பது மேலும் ஐரோப்பா, மற்றும் ஆசியா எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

                                      வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக ஆப்பிரிக்க-யூரேசியா என்பது யூரேசியா-வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் சகாரா ஆப்பிரிக்கா என்றவாறும் பிரிக்கப்படுகிறது.
பழைய உலகம் (Old World) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் இவற்றின் நிலப்பகுதிகளை சாராத அவற்றைச் சூழவுள்ள தீவுகளை உள்ளடக்கியதாகும். நிலவியல் ரீதியாக, ஆப்பிரிக்கா ஐரோப்பாவுடம் மோதுகைக்குள்ளாகும் போது ஆப்பிரிக்க-யூரேசியா ஒரு பெருங்கண்டமாக (supercontinent) உருவாகும். இந்நிகழ்வு ஸ்பெயினின் தென்முனை ஆப்பிரிக்காவை அடையும் போது, அதாவது இன்னும் 600,000 ஆண்டுகளில் நிகழக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இடம்பெறும் போது, மத்தியதரைக் கடல் அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து பிரிந்து விடும். இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா முற்றாக ஐரோப்பாவுடன் மோதி, மத்தியதரையை முற்றாக மூடி புதிய மலைத்தொடர்களை உருவாக்கும்.
                                                 யூரேசியா
என்பது சுமார் 53, 990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. யூரேசியா என்னும் இந்தக் கருத்துரு மிகப் பழையது எனினும் இதன் எல்லைகள் தெளிவானவை அல்ல. யூரேசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆபிரிக்கா-யூரேசியாவின் ஒரு பகுதியாகும்.
யூரேசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69% ஆன 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும். துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய ஜாரெட் டயமண்ட் (Jared Diamond) என்பார், உலக வரலாற்றில் யூரேசியாவின் மேலாதிக்கம், அதன் கிழக்கு-மேற்கு விரிவு, காலநிலை வலயங்கள், வீட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இப் பகுதியின் தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார். வரலாற்றுக் காலகட்டங்களில் யூரேசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பட்டுப் பாதை விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான மரபியல், பண்பாட்டு, மொழியியல் தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய யூரேசிய வரலாறு என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன. யூரேசியா சுமார் 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த சைபீரியா, கசாக்ஸ்தானியா, பால்டிக்கா என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது யூரமெரிக்கா எனப்படுகின்றது.
 
2.ஆசியா கண்டம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். இது யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். உலகின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் இக்கண்டத்திலேயே இருக்கின்றனர். 
கோண்டுவானா (Gondwana, ɡɒndˈwɑːnə)), என்பது வரலாற்றுரீதியாக பெருங்கண்டத்தின் தெற்குப் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட பெயர். 570 - 510 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்டம் நிலவியல் ரீதியாக மூடத் தொடங்கியது. இதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு கோண்டுவானாக்கள் இணைந்தன. 180 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற ஒரு நிலம் இரண்டாகப் பிரிந்த போது கோண்டுவானாவும் லோரேசியாவில் இருந்து பிரிந்தது. லோரேசியா என்ற வடக்கு-அரைப்பகுதியின் கண்டம் மேலும் வடக்கே நகர்ந்தபோது கோண்டுவானா தெற்கே நகர ஆரம்பித்தது. கோண்டுவானா இன்றைய ஆப்பிரிக்கா, கடகத் திருப்பத்திற்கு தெற்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்க்டிக்கா, மடகஸ்கார், அரேபியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்ததுச் சென்று பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்திருந்தது. ஆனால் இமயமலை தொடர் அன்று கடலுக்குள் முழ்கி இருந்தது. ஒரு காலத்தில் புவியில் நிலப்பகுதி 7 கண்டங்களாக இருந்ததாக தெரிகிறது. அவை ஒன்றில் இருந்து ஒன்று தனித்து இருந்தால் தீவுகள் எனப்பட்டன. அவை பெருநிலப் பகுதிகள் என்பதால் தீபம் என்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு தீவும் தாவரத்தால் நிறைந்து ஒரு மாபெரும் சோலை போல் தோன்றியது. இதனால் பொழில் எனப்பட்டது. இதனாலேயே இந்திய நிலப்பகுதி நாவந்தீவு என்றும், நாவலந் தண் பொழில் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்திதல் இந்தியாவுடன் இணைநதிருந்து இந்தியப் பெருங்கடலில் முழ்கிப் போன பெருநிலப்பகுதியை பழந்தமிழ் நூல்களும், இக்கால தமிழ் அறிஞர்களும் குமரிக்காடு அல்லது கமரிக் கண்டம் அல்லது பழம்பாண்டிநாடு என்று குறிப்பிடுகின்றனர். அதனை லெமுரியா கண்டம் என்றும், கோண்டுவானா என்றும்;, மேலை நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர்களின் தோற்றத்திற்குரிய முலத்தாயகத்தை - கடலுள் சிறிதளவு முழ்காதிருந்த மிகப் பரந்த கண்டத்தை அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டர்கள் எனலாம்.
                       லெமுரியா கண்டத்தில் நிலைப்பேற்றை இக்கால ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அதை உயிர்களின் தோற்றத்திற்குரிய இடமாக ஊகம் செய்கின்றனர். அவ்விடம் தென்னிந்தியாவின் நிலப்பகுதியை ஒட்டி கடலில் இருந்தது. இவ்வாறு கூறுவதில் இருந்தும், அதனுள் அழிந்த நாகரீகம் பற்றியும் கொண்டிருந்த நம்பிக்கை வரலாற்று நிகழ்வை ஒட்டியதே அன்றி கற்பனை அன்று என உறுதியாகக் கூற முடிகின்றது. லெமுரியாவின் நிலைப்பேற்றை பல்துறை ஆய்வாளர்களும் தத்தம் ஆய்வு முடிவுகளைக் கண்டு உறுதிபடுத்துகின்றனர். உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்போ, தோன்றும் காலத்திலோ கோண்டுவானா கண்டம் சிதைவுறத் தொடங்கியது என்கின்றனர். மனிதனுக்கு முன்னோடியான குரங்கு மனிதன் தோன்றிய காலத்தில் லெமுரியா அழிவு எய்த தொடங்கியது என்கின்றனர். ஒரு தலைசிறந்த நாகரீகமே குமரி கண்டத்தில் முழ்கிவிட்டது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. உயிர்களின் தோற்றம்,வளர்ச்சி, நாகரீகத் தொடக்கம் ஆகியன ஒரு கண்டத்தில் இருந்து தொடங்குவதை ஆய்வாளர்களின் கூற்றுக்கள் தெளிவாக உணர்த்துகின்றன. கடலுள் முழ்கிய கண்டத்தில் இன்றைய நாககரீகத்திற்கு இணையான நாகரீகம் செழித்திருந்தது என்று இசுக்காட்டு எலியட்டு, கார்வே போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர் வகைகள் பெருகுவதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிகைளை நிலநடுக்கோட்டுப் பகுதி சிறப்பாக பெற்றுள்ளது. உயிர் திரளில் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும் நடுக்கோடடுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் 5;அடி உயரத்தில் வளர்வது அரிதாக இருக்கின்றது. தென்னிந்தியா போன்ற நடுக்கோட்டுப்பகுதியில் 100, 120, அடி உயரமுள்ள மரங்கள் உள்ளன. இதனைக் கூட தமிழர் ; புல் ; என்றே அழைக்கின்றனர். அறிவியலாளர் முடிவின்படி தென்னிந்தியா, இலங்கை என்பன பெரும்பாலும் கருங்கல் பாங்காகவே இருக்கின்றன. இவற்றில் உள்ள பாறைகள் தீவண்ணப்பாறை வகையைச் சேர்ந்தவை. இதுவே முதலில் கோதிக்கிற நெருப்புக் குழம்பாக இருந்து பின் இறுகிய பாறையாகி இருக்கும் எனவே இதில் இருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலம் தொட்டே., தென்இந்தியா நிலப்பகுதியாகவே இருந்தது என்பது தெளிவாகின்றது. இதற்கு நேர்மாறாக வட இந்தியா, இமயமலைப் பகுதி மற்றும் பிற ஆசிய பகுதிகள் ஆகியவற்றில் இருக்கும் மண், பாறைகளில் இயல்பை பார்த்தால் அவை மிகவும் பிற்பட்டவை என்பதை அறியலாம்.
                        வடஇந்திய பகுதிகளின் நிலத்தில் எத்தகைய ஆழத்திலும் கருங்கல் நிலத்தைக்காண முடியாது. ஏனெனில் அப்பகுதி முழுமையும் உண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளாக சிந்து, கங்கை ஆறுகள் அடித்துக் கொணர்ந்த வண்டல் மண்ணால் ஏற்பட்டதே ஆகும். இதில் இருந்து சற்று பழைமையான இமயமலை, உலக வரலாற்றின் மிகப் பிந்தைய நாள் வரையில் கடலுள் அமிழ்ந்தே இருந்தது. அதில் இன்றும் காணப்படும் கடல் சிப்பிகளும், நண்டு முதலான கடல் உயிர்களின் எலும்புக்கூடுகளும், சுவடுகளும் இந்த உண்மைக்கு சான்றாக இருக்கின்றன.
மேலும், வடஇந்திய பகுதிகளில் உள்ள நில நடுக்குகளில் செடி, கொடிவகை உயிரினங்களின் சுவடுகள் காணப்படுகிறது. அவையும் மிகப் பழைய உயிர்வகைகளாக இல்லை. இவற்றுக்கு மாறாக, தென்னிந்தியாவில் உள்ள பாறைகளின் அடிப்பகுதிகளில் உயிர் வகைக்கே இடமில்லாத கருங்கல் அல்லது நெருப்பு வண்ணக்கல் காணப்படுகிறது. அதன் மேற்பகுதிகளில் மிகப்பழைய செடி, கொடிகளின் வளர்ச்சி முறைப்படி காணப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டமும், இந்தியாவும் பெரிதும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியாகண்டம் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்திருக்க வேண்டும். கிழக்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியா கண்டம், ஆஸ்திரேலியா வலை ஒரு காலத்தில் பரந்து இருந்திருக்க வேண்டும், பசிபிக் தீவுகள் வட அமெரிக்காவவின் கலிபோர்னியா பகுதியுடன் ஒற்றுமை உடையவையாக இருப்பதால் அதனை வெமு:ரியா ஒரு வகையில் உள்ளடக்கி இருந்தது என்பவை விளங்கும். லெமுரியா கண்டத்தில் முலமாக பெர்மியன், மயோசின் காலங்களில் இந்தியாவுடன் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டிருந்தது. பலயோசாயிக் காலங்களில் ஆஸ்திரேலியாவுடன் அது இணைக்கப்பட்டிருந்தது என்று கருதப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள சீசெல்சு, மடக்காசுக்கர், மொரீசியசு வரைக்கும் இலச்சத்தீவுகள், மாலத்தீவு, சாகோசுத்தீவுகள், சாயாதேமுல்லா, ஆதசுக்கரைஆகியவை உள்பட பல பவழத்தீவுகளும், மணல் மேடுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் சீசெல்சைச் சுற்றி நெடுந்தொலைவு கடல் 30 அல்லது 40 பாகம் ஆழத்திற்கு மேல் இல்லை என்றும், அதன் அடியிலுள்ள நிலம் தட்டையான, அகன்ற மணல் மேடே என்றும் டார்வின் குறிப்பிடுகின்றார்.
 
3.ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
 
அமெரிக்காக்கள்(Americas, அல்லது அமெரிக்கா),எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், இது ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர். உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர். கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கியது. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கியது. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது.அமெரிக்க கண்டங்களில் ரோமானிய மொழிகளை பேசும் பகுதி இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்படும். பொதுவாக எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கீசம் பேசும் நாடுகள் இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்பட்டன. மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் கரிபியக் கடலில் கியூபா, டொமினிக்கன் குடியரசு ஆகிய தீவு நாடுகளும் அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ பொதுநலவாயமும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ளன.
 
ஒருநிலக் கொள்கைஅல்லது ஒருதரைக் கொள்கை என்பது ஏறத்தாழ 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும், தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருபெரு நிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததெனக் கொள்ளும் கொள்கை ஆகும். இந்த ஒருபெரும் தரைநிலத்தைச் சூழ்ந்து ஒரேயொரு மாபெரும் கடல் மட்டும்தான் இருந்தது. எனவே அன்றைய நில உருண்டையில், ஒரேயொரு தரைநிலமும், ஒரேயொரு பெருங்கடலும்தான் இருந்தது என்று இக் கொள்கை கூறுகின்றது. மண் நிலம் எல்லாம் என்னும் பொருள் பட கிரேக்க மொழியின் Παγγαία (பான் 'கையா, pangaea) என்னும் சொல்லை இம்மாபெரும் ஒரு கண்டத்துக்கு ஆல்ஃவிரட் வேகனர் (Alfred Wegener) என்னும் ஜெர்மன் நாட்டுக்காரர் 1920களில் இட்டார். இந்த ஒருநிலத்தைத் தமிழில் முழுமண் என்று அழைக்கப்படும். இந்த முழுமண்ணைச் சூழ்ந்திருந்த மாபெரும் ஒருபெருங்கடலுக்கு முழுக்கடல் அல்லது முழுஆழி (Panthalassa) என்று பெயர். முழுமண்ணானது பிறைநிலா வடிவில் அமைந்திருந்தது. இக்கருத்தினைப் படத்தில் காணலாம். பின்னர் நில உருண்டையின் புற ஓடுகள் பிரிந்து பல்வேறு கண்டகளாக ஆனதை கருத்துருவாக  காணலாம்.  
4.வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரீபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000. 
5.தென் அமெரிக்கா ஒரு கண்டம். இக்கண்டத்தின் மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. இது உலகின் தென்பாதி உருண்டைப் பகுதியில் அமைந்த கண்டமாகும். ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இத்தென் அமெரிக்காவுமே நிலவுருண்டையின் தென் பாதியில் அமைந்த பெரு நிலப்பகுதிகள். இப்படி நில உருண்டையின் தென்பாதிப் பகுதியில் இத்தென் அமெரிக்காவுக்கு நேர் பின்னுள்ள இன்னொரு நாடு அவுஸ்திரேலியா ஆகும். தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது. இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்கள் வசிகிறார்கள் (1991ன் கணக்குப் படி). இக் கண்டத்திலே மிகப்பெரும்பாலோர் இலத்தீன் மொழிவழி தோன்றிய ஸ்பானிய மொழி பேசுவதால், இத் தென் அமெரிக்காவை. இலத்தீனிய அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. பிரேசில் நாட்டில் போர்ச்சுகீசிய மொழி பேசப்படுகிறது.
 
அண்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
6.ஐரோப்பா கண்டம் யுரேஷியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களை காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. ஐரோப்பா உலனின் ஏழு கண்டங்களில் பரப்பளவில் 10,180,000 ச.கி;மீகள் இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வாடிகன் சிட்டி மிக சிறிய நாடாகும். இதன் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்). மக்கள் தொகை பரவலில் ஆசியா ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது. 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக உள்ளது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துகல் உலகின் முக்கியமான கடல்வழி பாதைகளை கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போல பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரொப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாக பல நாடுகளை பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக அவற்றின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்த பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகள் ஆதிக்க சக்திகளாக வளர்ந்தன. 1991 ல் சொவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருகாக்கப்பட்டு ஆதிக்க சக்தியாக வளர்ந்து வருகிறது.
 
ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பட்தற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.. ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன.
 
7.ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, கண்டம் என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன. கிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன. நியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும்.

கற்பனைக் கண்டங்கள்.

Picture
               இலெமூரியா லிமோரியாக் கண்டம் (lemuria) என்று நீங்கள் இணையத்தளங்களில் தேடிப்பார்ப்பீர்களானால், பல சுவாரசியமான விடயங்கள் வெளிவரும். அதாவது ஆணும் பென்ணும் ஒன்றாகக் கலந்த உருவமுடைய, கடல் வாழ் இனமாக மனிதன் முதலில் தோன்றியதாகவும், பின்னர் அந்த கடல்வாழ் பிராணி, தரையை அடைய பல மில்லியன் ஆண்டுகள் ஆனதாகவும் கூறப்படுகிறது, முதலை, நண்டு, போல கடலிலும் தரையிலும் வாழ கற்றுக் கொண்ட சில பிராணிகளில் நாமும் ஒருவகை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பின்னர் பரிணாம வளர்ச்சி காரணமாக இந்தப் பிராணிகள், கடலைவிட தரையிலேயே கூடுதலாக வாழக் கற்றுக் கொண்டன. இதன் காரணமாக இதன் இனப் பெருக்கம் வாழ்க்கை முறை என்பன தரையிலேயே தொடர ஆரம்பித்தன.அதென்ன ஆணும் பெண்ணும் கலந்த உயிரினம் என்று கேட்கிறீர்களா, ஆம் அப்படிப்பட்ட ஒரு உயிரினம் இந்த உலகில் மிச்சம் உண்டு. ஆபிரிக்க காடுகளில் வாழும் ஒரு வகை நாக்குளிப் பூச்சிகள் ஆணும் பெண்ணும் உள்ளடக்கியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது, இனப் பெருக்கத்திற்கு ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ நாடவேண்டியது இல்லை, அதுவாகவே கருத்தரிக்கிறது. இவ்வாறு அடையாளம் காணப்படாத ஆண் பெண் இருபாலும் கலந்த உயிரினம் வேறு சிலவும் இந்த உலகில் இருக்கலாம். பரிணாம வளர்ச்சி என்பதுடன் இயைவாக்கம் அடைவது என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று, அது இந்த பூமியில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதாவது இலங்கையில் நிற்கும் ஒரு ஆட்டை அல்லது மாட்டை , ஐரோப்பாவிற்கு கொண்டுவந்தால், அது இங்கிருக்கும் குளிருக்கு ஏற்றவாறு தன்னை இயைவாக்கம் அடையச் செய்யும், அது சில ஆண்டுகள் ஆகலாம் அல்லது, அது ஈன்றெடுக்கும் பிள்ளைகளாக இருக்கலாம், ஒரு வகையில் இயைவாக்கம் அடைந்தே தீரும் அதுவே ஆச்சரியம். அதாவது மாட்டின் தோல் கூடுதலான கொழுப்பைச் சேர்த்து , தோலின் மொத்தத்தை அதிகரித்தல், மற்றையது தோலில் கூடுதலான ரோமங்களை ஹர்மோன்கள் உருவாக்கும். இந்த ரோமங்கள் கூடுதலாக வளர்ந்தால் குளிரை தாங்கும் சக்தி இயற்கையாகவே உருவாகும்... இதுவே இயைபாக்கம் அடைவது. அதாவது ஒன்றை உள்வாங்கிக் கொள்வது எனலாம்.
                        லிமோரியாக் கண்டத்தின் வரைபடத்தை நாம் உற்றுநோக்கினால், அது இந்தியா, இலங்கை அவுஸ்திரேலியா அடங்கலாக பரந்து விரிந்து இருந்த ஒரு பாரிய கண்டம். அதில் இலங்கைக்கும் மாலை தீவிற்கும் இடையில், பெரு ஆறு, குமரி ஆறு, மூதாறு என்று பல ஆறுகள் ஓடியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது, அதாவது தற்போது கடலில் மூழ்கியிருக்கும் பரப்புகளில் ஒரு காலத்தில் அவை கடலுக்கு மேல் மட்டத்தில் இருந்த வேளை அங்கு ஆறுகள் கூட ஓடியுள்ளன. தற்போது மாலை தீவு என்றழைக்கப்படும் பகுதி ஒரு காலத்தில் ஓலை நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது லிமோரியாக் கண்டம் என்ற ஒன்று இந்தப் பூமியில் இருந்து பின்னர் அழிந்து போனது என்பதற்குச் சான்றாக உள்ளது இலங்கைத் தீவு, மாலை தீவு, மற்றும் மடகஸ்கார் தீவுகள் ஆகும். இவை கடலுக்கு நடுவில் இன்னமும் காணப்படுவதே அதன் கடைசி இருப்பின் ஆதாரமாகும். பல நூறு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பாரிய நில நடுக்கம் காரணமாக, லிமோரியாக் கண்டம் துண்டுகளாக உடைந்தது, என்றும் அப்போது ஏற்பட்ட சுனாமியால் பல பகுதிகள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது, அதில் மிக மிக உயரமாக, இலங்கை, மடகஸ்கார் மற்றும் மாலை தீவு போன்ற பகுதிகளே மிஞ்சி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது லிமோரியாக் கண்டத்தில் அதி உயர் மட்டத்தில் இருந்த இடங்களே தற்போது மிஞ்சி இருக்கும் சில நாடுகள். அதற்கு நல்ல எடுத்துக் காட்டு, மாலை தீவுகள். சுமார் 2,000 தீவுகள் இங்கு உள்ளது. அங்கு சென்று கடலுக்கு அடியே சுழியோடினால், மாலை தீவின் அடித்தளம் தெரியும். அங்கு பார்த்தால் மாலை தீவு ஒரு செங்குத்தான மலை என்பதைக் கண் கூடாககாணலாம், அதாவது கடலில் குச்சிகளை நட்டுவைத்தது போல இருக்கும்.
                      லிமோரியாக் கண்டத்தில் தோன்றிய மனிதன் போன்ற உருவமைப்புக் கொண்ட பிராணிகள் ஒளிரும் தன்மை உடையவை எனக் கூறப்படுகிறது, கடல் வாழ் பிராணிகள் சில தாமாகவே பலவண்ண ஒளிக்கதிர்களை தோற்றுவிக்கக் கூடியவை, உதாரணமாக ஜெல்லி மீன்கள். அதே போல பல விதமான நிறங்களுடன் கூடிய ஒளிக்கீற்றைத் தோற்றுவிக்கக் கூடிய, ஒரு பிராணியாக மனிதன் இருந்திருக்கவேண்டும் எனவும், கடலுக்கு அடியில் காணப்படும் சில கிறிஸ்டல்களை அவர்கள் வெளிச்சத்திற்கு பாவித்து வந்ததாகவும் ஊகங்கள் இருக்கின்றன. இதனாலேயே தற்போதும் மனிதன் உருவாகுவது பன்னீர் குடம் என்று அழைக்கப்படும் ஒரு திரவத்தில் தான். தாயின் கருப்பையில் காணப்படும் இந்த திரவ பலூனுக்குள் தான் இன்றுவரை மனிதன் உருவாகிறான். இவ்வாறு சில கண்டங்கள் அல்லது பாரிய நிலப்பரப்புக்கள் , நீரில் மூழ்கியதற்கு இந்து மதத்திலும் ஒரு சாட்சி இருக்கிறது, பகவத் கீதையிலும் சரி, மகாபாரத்த்திலும் சரி கண்ணன் ஆண்டுவந்த மதுரா என்னும் நகரம் கண்ணபிரான் இறந்ததும் கடலில் மூழ்கியதாக வரலாறு சொல்கிறது, அதாவது தான் ஆண்ட மதுரா நகரம் தான் இறந்ததும் நீரில் மூழ்கிவிடும் என கண்ணபிரான் சொல்கிறார், ஆகவே அங்கிருக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு காயப்பட்டு உயிர் பிரியும் நிலையில் உள்ள கண்ணபிரான் சொல்வதாக பாரதத்தில் சொல்லப்படுகிறது 19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலபரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப் பட்டது.
                20ம் நூ. முன்னேயே அது கைவிடப் பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார்.
இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.பிலிப் ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.
 
 ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர்.இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அச்சமயம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீகச் சக்திகள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர்.அஃது போலவே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அறியலாளர்கள்(விஞ்ஞானிகள்) இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர்.அதாவது அமெரிக்க ஆசியக் கண்டங்கள் சிலவற்றிலும் இலெமூர் இனங்கள் காணப்படுவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற இலெமூரிய புனைக்கோள் கைவிடப் பட்டது. புதிய கடலாய்வுகள் இந்துமாக்கடலில் செய்யப் பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்துமாக்கடலில் இருந்த நிலப்பாகம் நீர்க்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகின்றது. பலராலும் கைவிடப்பட்ட இலெமூரியாக் கூற்றானது நிலச் சரிவுகள் மற்றும் கண்ட அசைவுகள் போன்ற பல காரணங்களைக் கூறி இக்கண்டத்தின் தோற்றமானது மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் Book of Dzyan என்னும் புத்தகத்தினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார்.ஹெர்மப்ரோடைட் (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் மிகவும் பலம் வாய்ந்தனவாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வினமானது இன்றைய ஜந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக சக்திகளைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில லெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுஜீவிகள் அல்லாத லெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அப்புத்தகத்தின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த புத்திஜீவிகள் கலிபோர்னியாவில் உள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே
1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜ ஆம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து ஆரம்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(Bridge to Freedom, Summit Lighthouse, Church Universal and Triumphant, Temple of the Presence, and Hearts Center).
குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்கள் கூறுகின்றன.அஃது போலவே அழிவிற்குட்பட்ட கண்டமான இலெமூரியாவும் குமரிக்கண்டத்துடன் ஒப்பிட்டுக்கூற்றுகள் பல உள்ளன.

                          அட்லாண்டிஸ்
(Atlantis, கிரேக்கத்தில்: Ἀτλαντὶς νῆσος அட்லஸ் தீவு) என்பது வரலாற்று புகழ்மிக்க தீவாகும். இது முதன் முதலாக கிரேக்க தக்துவ ஞானி பிலாட்டோவின் டிமாயேஸ் மற்றும் கிரைடியஸ் உரையாடலில் குறிப்பிடப்படுள்ளது.

 
பிலாட்டோவின் கூற்றுபடி அட்லாண்டிஸ் கடற்படையாக இருந்தது. இது பில்லர் ஆப் ஹெர்குலெசுக்கு முன்பாக அமைந்திருந்தது. மேற்கத்திய ஐரோப்பாவின் பல பகுதிகளையும் ஆப்பிரிக்காவையும் இது கைப்பற்றியது. இந்த சம்பவம் நடந்தகாலம் சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்னதாக கவிஞர் மற்றும் சட்டமியக்குபவரான சோலன் வாழ்ந்த காலம் அல்லது தோராயமாக கிமு 9600 ஆக இருக்கலாம். அட்லாண்டிஸ் ஏதென்ஸ்சை படையெடுத்து தோற்றுபோனது. இதனால் ஏற்பட்ட "இடையூறின் காரணமாக ஒரே பகல் மற்றும் இரவில் எதிர்பாராமல்" அட்லாண்டிஸ் கடலில் மூழ்கிபோய்விட்டது. பிலாட்டோவின் கதை அல்லது கணக்கு, எந்த அளவிற்கு பழைய பாரம்பரியங்களுடன் ஒத்துப்போகிறது அறிஞர்களுக்குள் சர்ச்சை இருந்து வருகிறது. பிலாட்டோ தன் கருத்துகளை பழைய சம்பவங்களான எரிமலை வெடிப்பு அல்லது கிரேக்கர்கள் டிராய் நகரத்திற்கு எதிராக தொடுத்த போர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கூறுகிறார் என்று சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள். மற்றவர்கள், கிமு 373ல்  நிகழ்ந்த பழமையான கிரேக்க நகரமான ஹெலாய்க்கின் அழிவு அல்லது கிமு 415 முதல் 413 வரையில், பெரிய தீவான சிசிலியுடன் ஏதென்ஸ் போரிட்டு தோற்றுப்போன சம்பவம் போன்றவற்றின் வாயிலாக அவர் கூறியிருக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர். பழங்காலம் முழுவதிலும் அட்லாண்டிஸ் உண்மையாக இருந்திருக்க முடியுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த கருத்து வழக்கமாக மறுக்கப்பட்டும், சில நேரங்களில் பிற எழுத்தாளர்களால் ஏளனமும் செய்யப்பட்டது. "இந்த நவீன காலத்தில் உள்ள மக்கள் தான் அட்லாண்டிஸ் கதையை உண்மையென்று நம்புகிறார்கள். ஆனால் பழங்காலத்தில் இது போன்று இல்லை" என்று ஆலென் கேமரூன் கூறினார். இடைக்காலத்தில் இதை பற்றி மிகவும் குறைந்த அளவு தெரிந்திருந்தது. ஆனால் நவீன காலத்தின் ஆரம்பங்களில் மனிதநேய ஆர்வலர்கள் அட்லாண்டிஸைத் திரும்பவும் கண்டறிந்தனர். பிலாட்டோவின் எழுத்துகள் பிரான்சிஸ் பெக்கனை போன்ற பல மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் கற்பனை திறன்களை ஊக்குவித்தது. இந்த பிரான்சிஸ் பெக்கனின் புத்தகமான "நியு அட்லாண்டிஸ்", பிலாட்டோவின் கருத்துகளைப் போன்றே அமைந்திருந்தது. இன்றைய இலக்கியமான அறிவியல் கட்டுகதைகள் தொடங்கி நகைச்சுவை புத்தகங்கள், படங்கள் வரை அட்லாண்டிசின் தாக்கம் உள்ளது. இதன் பெயர் சரித்திரத்தில் தொலைந்து போன நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் சொல்லாக அமைந்துள்ளது.
கிமு 360ல் பிலாட்டோவால் எழுதப்பட்ட டிமாயேஸ் மற்றும் கிரைடியஸ் உரையடலில் அட்லாண்டிஸ் இருப்பதற்கான ஆரம்பகால ஆதாரங்கள் உள்ளன. பிலாட்டோ சில அறியப்படாத காரணங்களுக்காக கிரைடியஸ் உரையாடலை நிறைவு செய்யவில்லை; எனினும் அறிஞர் பென்ஜமின் ஜொவெட் மற்றவர்களுடன் சேர்ந்து, பிலாட்டோ ஹெர்மொகிரெட்ஸ்சை என்ற தலைப்புக்கொண்ட மூன்றாவது உரையாடலை எழுத திட்டமிடுவதாக வாதிட்டனர். பிலாட்டோ, உலகம் மற்றும் மனுகுலத்தின் தோற்றத்தை டிமாயேஸில் விவரித்துவிட்டு, கிரைடியஸில் உருவகமாக பூரணமான சமுதாயம் என்றெண்ணப்படும் பண்டைய ஏதென்ஸ் மற்றும் எதிரியான அட்லாண்டிஸுக்கு எதிராக வெற்றிகரமாக தற்பாதுகாப்பு செய்ததைப் பற்றி விவரித்துவிட்டு, ஹெர்மொகிரேடஸில் பெர்ஷியர்களுடனான அவர்களுடைய சச்சரவின்போது கிரேக்க நாகரிகத்திற்கான செயற்திட்டத்தைப் பற்றி விளக்குவதை மையப்பொருளாகக் கொண்டிருப்பாரென்று ஜான் வி. லூகாஸ் அனுமானிக்கிறார்.
அட்லாண்டிஸ்சைடிமாயேஸ் உரையாடலில், அவர் அறிமுகம் செய்து வைத்தார்:
அந்த இரண்டு உரையாடல்களிலும் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகளான கிரைடியஸ், ஹெர்மொகிரெட்ஸ், தத்துவ ஞானி சாக்ரடிஸ் மற்றும் லார்சியை சேர்ந்த டிமாயேஸ் ஆகிய நான்கு காதாபாத்திரங்களில், கிரைடியஸ் மாத்திரம் அட்லாண்டிஸ்சை பற்றி பேசுவார். அதே நேரத்தில் இந்த கதாபாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்துள்ளதால் பிலாட்டோவின் இந்த உரையாடல்கள் அவரின் கண்டுபிடிப்பாக இருக்கலாம். முரண்பாடான நிலையை விவாதிப்பதற்காக, சாக்ரட்டிக் உரையாடல்களை, பிலாட்டோ தன்னுடைய வேலைகளில் மிகவும் அதிகமாக பயன்படுத்தியுள்ளர். டிமாயேஸ் , ஓர் உரையாடல் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது. அதை தொடர்ந்து, படைப்புகள், உலகத்தின் கட்டமைப்பு மற்றும் பண்டைய நாகரிகம் ஆகியவற்றைக் குறித்து கூறப்படுகிறது. அறிமுகத்தின் போது, பிலாட்டோவின் ரிபப்லிக்கில் விவரித்தவாறே சாக்ரட்டீஸ் ஒரு மிகவும் சரியான சமூகத்தைக் குறித்து பிரமிப்படைகிறார். (ஏறக்குறைய கிமு 380), இது போன்ற ஒரு சமூகத்தைக் குறித்து விளக்கும் ஒரு கதை, ஏதாவது ஒன்று, நினைவு கூற முடியுமா என்று அவரும் அவருடைய விருந்தினர்களும் வியக்கிறார்கள்.கிரைடியஸ் வரலாறு சார்ந்த கட்டுக்கதை ஒன்றை இதற்கு சிறந்த உவமையாக கூறுகிறார். அதை தொடர்ந்து அட்லாண்டிஸை கிரைடியஸ் உரையாடலில் பதிவு செய்யப்பட்டது போல அட்லாண்டிஸை விவரிக்கிறார். அவருடைய கருத்துப்படி, புராதன ஏதென்ஸ் நகர் ஒரு “சரியான சமூகத்தின்” பிரதிநிதித்துவமாகவும் அதற்கு நேர்மறையாக அட்லாண்டிஸும் இருந்தது. ரிபப்லிக்கில் விவரிக்கப்படும் “சரியான” என்ற விளக்கத்திற்கு நேர் எதிராக அட்லாண்டிஸ் இருந்தது. 6ம் நூற்றாண்டு கி.மு.வில் ஏதனிய சட்ட மாமேதை சோலன் எகிப்து நகருக்கு வருகை தந்ததில் இருந்து, ஏதன்ஸ் மற்றும் அட்லாண்டிஸ் பற்றிய தன்னுடைய கருத்துகள் உருவானது என கிரைடியாஸ் கூறுகிறார். எகிப்தில், சோலன் சயாஸின் பாதிரியார் ஒருவரை சந்தித்தார், அவர் எகிப்து ஹியரோக்ளிஃப்ஸில் பாபிரியில் பதிவு செய்யப்பட்ட புராதன ஏதென்ஸ் மற்றும் அட்லாண்டிஸ் பற்றிய வரலாற்றை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.
 
ப்ளூடார்க்கின் படி, “சோலன், பாதிரியார்களில் மிகவும் படித்தவர்களான ஹீலியோபோலிஸின் செனோஃபிஸ் மற்றும் சயிட் சோன்சிஸ் ஆகியோரை சந்தித்தார்; தான் எழுதி வைப்பதற்கு 5 நூற்றாண்டுகள் முந்தைய நிகழ்வுகளை ப்ளூடார்க் கூறுகிறார். கிரைடியாஸின் படி, ஒவ்வொரு கடவுளுக்கும் சொந்தமானவை நிறைய இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழைய ஹெலனிக் கடவுளர்கள் நிலத்தை பகிர்ந்தனர்; மிகச் சரியாக, மற்றும் தனக்கு பிடித்ததைப் போலவே போஸிடானுக்கு அட்லாண்டிஸ் தீவு வழங்கப்பட்டது. புராதன லிபியா மற்றும் ஆசியா மைனர் ஆகியவற்றை சேர்த்து கிடைப்பதை விட அந்த தீவு பெரியதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு ஒரு பூகம்பத்தால் அது சுருங்கி வெறும் மண் மேடானது. இதனால் பெருங்கடலில் அனைத்து பகுதிக்கும் செல்லக் கூடிய வகையில் இது உதவியது. எகிப்தியர்கள், பிலாட்டோ, அட்லாண்டிஸ் வட பகுதிகளில் மற்றும் கடற்கரையை ஒட்டி பெரும்பாலும் மலைகளைக் கொண்டிருப்பதாகவும், தெற்கு பகுதியில் பெரிய வட்ட வடிவமான வயல் வெளி இருந்ததாகவும் கூறுகின்றனர். மேலும், "இந்த வயல்வெளி ஒரு திசையில் மூன்று ஆயிரம் ஸ்டேடியா தூரமும் [சுமார் 555 கிமீ; 345 மைல்], மைய நிலத்தில் இரண்டு ஆயிரம் ஸ்டேடியாவும் [சுமார் 370 கிமீ; 230 மைல்] இருந்தது." அனைத்து பக்கங்களில் குட்டையாக இருக்கக் கூடிய மலை ஒன்று கடலிலிருந்து ஐம்பது ஸ்டேடியா [9கிமீ; 6மைல்] தூரத்தில் இருந்தது....அனைத்து பக்கங்களையும் சேர்த்து மொத்த மைய தீவும் 5 ஸ்டேட்கள் பரப்பளவில் [சுமார் 0.92 கிமீ; 0.57மைல்] இருந்தது. 
பிலாட்டோவின் புராணக் கதைப்படி, ஈவினர் மற்றும் ல்யூசிப்பே ஆகியோரின் மகளான க்ளியேடோ மீது போஸிடான் காதல் வயப்பட்டான். இவர்களுக்கு 5 ஜோடி ஆண் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்களில் மூத்தவனான அட்லஸ் சரியான முறையில், முழு தீவிற்கும் பெருங்கடலுக்கும் (அவனை கௌரவப்படுத்தும் வகையில் அட்லாண்டிக் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது) ராஜாவாக்கப்பட்டான். மேலும் அவன் பிறந்த மலை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களும் பரிசாக அளிக்கப்பட்டது. அட்லஸின் ஒட்டிப் பிறந்த உடன்பிறந்தவரான கேடீரஸ் அல்லது கிரேக்க மொழியில் யூமிலஸ் என்பவருக்கு ஹெர்குலஸ் தூண் வரையிலான தீவின் எல்லைகள் அளிக்கப்பட்டது. "மற்ற நான்கு ஜோடி இரட்டையர்களான –
 
ஆம்ஃபிரெஸ் மற்றும் ஈவாமோன்,
நெசியஸ் மற்றும் அடோக்தோன்,
இலாசிபஸ் மற்றும் மெஸ்டோர்
அசேயஸ் மற்றும் டயாப்ரபஸ்
 
ஆகியோருக்கும் “பல மனிதர்களை ஆளும் ஆட்சியும்” பெரிய ஆட்சி நிலமும் அளிக்கப்பட்டது. போஸிடான், மலையைக் குடைந்து தனது காதலுக்காக ஒரு மாளிகையை உருவாக்கினான் மற்றும் அதிகரிக்கக் கூடிய அகலமுடைய மூன்று வட்டவடிவமான அகழிகளை வைத்து சுற்றிவளைத்தான். ஒவ்வொன்றும் ஒன்று முதல் மூன்று ஸ்டேடியா வரை இருக்கக்கூடியதாகவும், அவற்றை பிரிக்க ஒரே அளவுடைய காலி இடங்களும் இருந்தன. அட்லாண்டியர்கள் பின்னர் மலையின் வடப்பகுதியை நோக்கி பாலங்கள் அமைத்து தீவின் மற்ற பகுதிகளுக்கு செல்ல வழி செய்தனர். கடலுக்கு ஒரு பெரிய கால்வாய் அமைத்தனர் மற்றும் பாலங்களின் பக்கங்களில் பாறைகளைக் குடைந்து மலையை சுற்றி நகரத்துக்கு கப்பல்கள் செல்லும் வகையில் சுரங்கங்கள் அமைத்தனர்; அகழிகளின் பாறை சுவற்றை குடைந்து கப்பற் தளங்களை உருவாக்கினர். நகரத்தின் ஒவ்வொரு நுழைவாயிலும் கதவுகள் மற்றும் கோபுரங்கள் அமைத்து பாதுகாக்கப்பட்டது மற்றும் நகரத்தின் ஒவ்வொரு வளைவையும் ஒரு பெரிய சுவர் சூழ்ந்து நின்றது. சுவர்கள் அகழிககளில் இருந்து எடுத்துவரப்பட்ட சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு பாறைகளால் கட்டப்பட்டது. அவை பித்தளை, தகரம் மற்றும் அரிய உலோகமான ஒரிகேல்கம் ஆகியவற்றால் முறையே மூடப்பட்டது.
 
கிரைடியாஸின் கூற்றுப்படி, அவரது வாழ்நாளில், 9000 வருடங்களுக்கு முன், கிப்ரால்டர் ஸ்ட்ரைடில் ஹெர்குலஸ் தூணின் வெளியே உள்ளவர்களுக்கும் அவற்றின் உள்ளே வசித்தவர்களுக்கும் போர் ஏற்பட்டது. அட்லாண்டியர்கள் எகிப்து வரையிலான ஹெர்குலஸ் தூண்களுக்கு உட்பட்டு இருக்கும் லிபியாவின் பகுதிகளையும், டிரெனியா வரையிலான ஐரோப்பிய கண்டத்தையும் கைப்பற்றி அங்கு இருந்த மக்களை அடிமைகளாக்கினர். அட்லாண்டியன் சாம்ராஜ்யத்துக்கு எதிராக அதனை எதிர்ப்பவர்களின் கூட்டமைப்பை ஏத்தனியர்கள் வழி நடத்தினர். இந்த கூட்டமைப்பு உடைந்து, சாம்ராஜ்யத்திற்கு எதிராக அது மட்டும் நிலையாகி கைப்பற்றப்பட்ட நிலங்களை மீட்டது. பிலாட்டோவின் டிமாயேஸ் மற்றும் கிரைடியாஸ் தவிர அட்லாண்டிஸ் பற்றிய வேறு எந்த புராதன பதிவுகளும் இல்லை, ஆகையால் அட்லாண்டிஸ் பற்றிய மற்ற ஒவ்வொரு பதிவுக்கும் ஏதோ ஒரு வகையில் பிலாட்டோவை சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. சில புராதன எழுத்தாளர்கள் அட்லாண்டிஸ் கற்பனை என்றும் மற்றவர்கள் அது நிஜம் என்றும் கருதினர். இந்த கதை வரலாற்று உண்மை என்று கருதக்கூடியவர்களில் ஒரு உதாரணமாக பிலாட்டோவின் மாணவரான செனோக்ரேடிஸின் மாணவரான தத்துவ மேதை க்ரேண்டர், அதிகமாக சுட்டிக்காட்டப்படுகிறார். அவரது படைப்பான, பிலாட்டோவின் டிமாயேஸ் பற்றிய வர்ணனை தொலைந்துவிட்டது. ஆனால் ப்ரோக்லஸ் எனும் ஐந்தாம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர் அதைப் பற்றிக் கூறியுள்ளார். கேள்விக்குட்பட்டுள்ள பத்தி, க்ரேண்டர் நிச்சயமாக எகிப்துக்கு சென்று பாதிரியார்களோடு பேச்சு நடத்தி, ஹீரோக்ளிஃப்ஸ்களைப் பார்த்து கதையை உறுதி செய்தார் அல்லது எகிப்தின் மற்ற பார்வையாளர்களிடமிருந்து அதைப் பற்றி அறிந்து கொண்டார் என்ற இரண்டு கோணங்களில் நவீன இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 ப்ரோக்லஸ் எழுதியது அடுத்த வரி இது போல பொதுவாக மொழி பெயர்க்கப்படுகிறது - க்ரேண்டர் கூடுதலாக சொல்வது, இது எகிப்தின் தீர்க்கதரிசிகளால் உறுதி செய்யப்படுகிறது, அவர்கள் இந்த விவரங்கள் [பிலாட்டோவால் கூறப்பட்டவை] தூண்களில் எழுதப்பட்டு இன்னும் பாதுகாக்கப்படுகிறது என்று உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் அசலில், வாக்கியம் க்ரேண்டர் எனத் தொடங்கவில்லை. ஆனால் “அவன்” என்ற வார்த்தையில் தொடங்குகிறது மற்றும் இது கிரேண்டரைக் குறிக்கிறதா அல்லது பிலாட்டோவை குறிக்கிறதா என்பது இன்னும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. அட்லேண்டிஸ் கற்பனை என்றும் அது வரலாறு என்றும் கூறும் இரு தரப்பினரும் அந்த வார்த்தை க்ரேண்டர் என்று தான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர். ஆலன் கேமரூன் அது பிலாட்டோ என்று தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வாதிடுகிறார் மற்றும் ப்ரோக்லஸ் எழுதும் போது பலர் இதை வரலாறு என்றும், பலர் இது கற்பனை என்றும் கருதினாலும் ஏத்தனியர்கள் பற்றிய இந்த மொத்த கருத்துகள், வெறும் கற்பனையும் இல்லை, பெருமைப்படுத்தப்படாத வரலாறும் இல்லை, என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்… "இதில் க்ரேண்டரின் கருத்து ஒரு சொந்த கருத்து மட்டும் தான், வேறு எதுவும் இல்லை என்று எடுத்துக்கொள்கிறார். முதலில் அவர் ஆணித்தரமாகக் கூறி விட்டு பின் அதனை ஒத்துக்கொள்ளப்பட முடியாத இரண்டு கோணங்களில் ஒன்றாக இது கூறப்படுகிறது என மறுக்கிறார்." கேமரூன் மீண்டும் கூறும் போது “அவன்” பிலாட்டோ அல்லது “க்ரேண்டர்” இருவரில் யாரைக் குறித்தாலும், ஓட்டோ மக்கின் வாக்கியங்களான “க்ரேண்டர் சயாஸுக்கு வந்து அங்கு நீத் கோவிலில் அட்லாண்டிஸின் வரலாறு எழுதப்பட்ட ஹீரோக்ளிஃப்ஸால் மொத்தமாக மூடப்பட்டு இருந்த சுவடியைப் பார்த்தார்” என்பதற்கு ஆதாரம் அளிக்கவில்லை. அவருக்காக பல அறிஞர்கள் அவற்றை மொழிப்பெயர்த்தனர் மற்றும் அவர்களது கருத்துகள் அட்லாண்டிஸைப் பற்றிய பிலாட்டோவின் கருத்துகளை முழுமையாக ஒத்துள்ளது என உறுதி அளிக்கிறார்… அல்லது ஜே.வி.லூயிஸின் கருத்துப்படி க்ரேண்டர் “ஒரு சிறப்பு சோதனையாளரை” எகிப்துக்கு அனுப்பினார் மற்றும் அவர் பிலாட்டோவின் சொந்த கருத்துகளையே குறிக்கிறார்.
 
 ப்ரோக்லஸின் டிமாயேஸ் பற்றிய வர்ணனையில் உள்ள இன்னொரு பத்தியில் அட்லாண்டிஸின் புவியியல் விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. “கடலின் வெளிப்புறத்தில் உள்ள பொருட்களை சோதனை செய்த சில எழுத்தாளர்களின் கூற்றுப்படி அது போன்ற இயல்பும் அளவும் உடைய ஒரு தீவு ஒரு காலத்தில் இருந்ததது. அவர்களை பொறுத்த வரை, அவர்களின் காலத்தில் அந்த கடலில் பெரிசிஃபோனுக்கு புனிதமாகக் கருதப்பட்ட ஏழு தீவுகள் இருந்தன மற்றும் மிகப்பெரிய அளவில் மேலும் மூன்று தீவுகளும் இருந்தன. இவற்றில் ஒன்று ப்ளூடோவுக்கு புனிதமானதாகவும், மற்றொன்று அமோனுக்கும் மற்றும் மற்ற ஒன்று பொசிடோன் வரை தங்களுக்குள்ளாகவே இருந்தது. இதன் பரப்பளவு 1000 ஸ்டேடியாவாக இருந்தது [200 கிமீ]; அவர்கள் கூடுதலாகக் கூறுவதாவது - இதில் வாழ்ந்தவர்கள், அங்கு உண்மையாக இருந்த அளவிடப்பட முடியாத அளவுக்கு பெரியதாக இருந்த, அட்லாண்டிக் கடலில் உள்ள மற்ற தீவுகளை ஆண்டனர். அதே போல போசீடானுக்கு புனிதமாக இருந்த அட்லாண்டிஸில் இருந்த மூதாதையர்கள் பற்றிய ஞாபகங்களைப் பாதுகாத்து வந்தனர். இந்த விவரங்களை மார்சிலஸ் தனது ஏதியோபிகாவில் எழுதியுள்ளார்". மார்செலஸ் அடையாளம் காணப்படாமலேயே உள்ளார்.
அட்லாண்டிஸ் இருந்ததாக நம்பும் மற்ற புராதன வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தத்துவ அறிஞர்கள் ஸ்ட்ரேபோ மற்றும் போசிடோனியஸ் ஆவார்கள். பிலாட்டோவின் கருத்துகளை கிண்டல் செய்யும் வண்ணம் அதைப் போலவே உள்ள மற்ற கருத்துகள்: டிமாயேஸ் மற்றும் கிரைடியாஸுக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரலாற்று ஆர்வலர்கள் கியோஸின் தியோபோம்பஸ் பெருங்கடலைத் தாண்டி உள்ள மெரோபிஸ் என அழைக்கப்படும் ஒரு இடத்தைப் பற்றி எழுதியுள்ளார். இந்த விவரம் அவரது பெரிய படைப்பான ஃபிலிப்பிகா என்பதன் 8வது புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. இதில் டியோனிசஸின் நண்பனான சிலினஸ் மற்றும் கிங் மிடாஸ் ஆகியோரிடையே நடந்த பேச்சு வார்த்தையும் இடம் பெற்றது. சிலினஸ் மெரோபிட்ஸ் என்பவர்கள் சாதாரண அளவை விட இரண்டு மடங்கு வளரக்கூடியவர்கள் என விவரித்து, அவர்கள் மெரோபிஸ் என்ற தீவில் இரண்டு நகரங்களில் இருந்தனர் என்றும் கூறுகிறார் (காஸ்?): யூசிபெஸ் (Εὐσεβής“பயஸ் டவுன்”) மற்றும் மாசிமோஸ் (Μάχιμος“சண்டையிடும் டவுன்”). பத்து மில்லியன் வீரர்கள் பெருங்கடலைக் கடந்து ஹைபர்போரியாவை கைப்பற்ற சென்றனர் ஆனால் ஹைபர்போரியர்கள் பூமியிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிந்தவுடன் தங்கள் எண்ணத்தை கைவிட்டனர் என்றும் அவர் கூறுகிறார். பிலாட்டோவின் கருத்துகளை பொய்யாக்கும் நோக்கோடு, சிலீனியஸ் கதை பற்றிய இந்த மற்றும் மற்ற விவரங்கள் போலியானவை அல்லது அதிகப்படுத்திக் கூறுவது என்றும் ஹைண்ஸ்–கந்தர் நெசர்லாத் வாதாடுகிறார். பிலாட்டோவின் அட்லாண்டிஸ் பற்றிய கருத்துகளை சார்ந்து, ஸோடிகஸ் என்ற நியோபிளாடோனிஸ்ட், 3ம் நூற்றாண்டு கிபியின் தத்துவ அறிஞர், ஒரு பெரிய பாடலை எழுதினார் முதல் நூற்றாண்டு பிசியில் எழுதிக் கொண்டிருந்த வரலாற்று அறிஞர் டிமேஜன்ஸின் தொலைந்து போன எழுத்தை ஆதாரமாகக் கொண்டு 4ம் நூற்றாண்டு கிபி வரலாற்று அறிஞர் அமியானஸ் மார்சிலீனஸ், தூரத்தில் உள்ள தீவுகளில் இருந்து கால் நகரத்தில் வசிப்பவர்கள் இங்கு வந்து தங்கினார்கள் என்று கால் நகரின் ட்ரூட்ஸ் கூறினார்கள் என எழுதுகிறார். சிலர் அமியான்ஸின் சான்று, அட்லாண்டிஸ் கடலுக்குள் மூழ்கிய போது அதில் வசித்தவர்கள் மேற்கு ஐரோப்பாவிற்கு சென்று விட்டனர் எனக் கூறுவதாகக் கருதினர்;
ஆனால் அமியான்ஸின் கூறுவது என்னவெனில் “ ரையினைத் (ரெஸ் ஜெச்டே 15.9) தாண்டி உள்ள நிலங்கள் மற்றும் தீவுகளில் இருந்தும் மற்றவர்கள் இடம் பெயர்ந்தனர் மற்றும் மக்கள் தொகையின் ஒரு பகுதியினர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்று டிராசிடே (ட்ரூட்ஸ்) நினைவு கூறுகின்றனர்”. இதிலிருந்து தெரிவது, இடம் பெயர்ந்தவர்கள் அட்லாண்டிக் கடலில் இருப்பதாக யூகிக்கப்படும் இடத்திலிருந்து தென்மேற்குக்கு வந்தவர்கள் அல்ல மாறாக காலுக்கு வடக்கிலிருந்து (பிரிட்டன், நெதர்லாந்து அல்லது ஜெர்மணி) வந்தவர்கள். மாறாக, சமுத்திரத்தின் ஓரத்தில் வாழ்ந்த செல்ட்ஸ், சமுத்திரத்திலிருந்து எழும்புவது போல் தோன்றிய இரட்டைத் தெய்வங்களை (டியாஸ்காரி) வணங்கியதாக அறிவிக்கப்படுகிறது.
கிபி 1378/79 தேதியிடப்பட்ட கணிப்பு வானியல் பற்றிய ஒரு எபிரேய ஆய்வுக்கட்டுரையில் தீர்க்க ரேகைக்கான பூஜ்ஜியப் புள்ளிகளை நிர்ணயிப்பதைப் பற்றிய ஒரு விளக்கவுரையில் அட்லாண்டிஸ் புராணம், குறிப்பிடப்பட்டிருக்கிறது:
 
 ஃபிரான்சிஸ் பேகனின் 1627ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரையான தி நியூ அட்லாண்டிஸ்என்பதில் அவர் பென்சலேம் என்று அழைக்கும் ஒரு யுடோபியன் சமூகம் அமெரிக்காவின் மேற்குக் கரைக்கு அப்பால் இருந்ததாக விவரிக்கிறார். அந்த வர்ணனையில் வரும் ஒரு கதாபாத்திரம் பிலாட்டோவுக்கு ஒத்த அட்லாண்டிஸின் வரலாறை கொடுத்து, அட்லாண்டிஸ் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறுகிறது. பேகன் என்பது வடக்கு அல்லது தெற்கு அமெரிக்காவை குறிக்கிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. 1728ஆம் ஆண்டில் ஐசாக் நியூட்டனின் தி க்ரோனோலோஜி ஆஃப் த ஏன்ஷியன்ட் கிங்டம்ஸ் அமெண்டட் அட்லாண்டிஸுடன் உள்ள கற்பனையான பல தொடர்பை ஆராய்கிறது. 19ம் நூற்றாண்டின் நடுவில் மற்றும் முடிவில், அட்லாண்டிஸ் ஏதாவது வகையில் மயான் மற்றும் ஆஸ்டெக் கலாச்சாரத்துக்கு தொடர்புடையது என சார்லஸ் எடீன் ப்ராசியர் த போர்போர்க் தொடங்கி எட்வர்ட் ஹெர்பர்ட் தாம்ப்ஸோனாந்த் அகஸ்டஸ் லே ப்ளாண்ஜியான் உள்ளிட்ட பிரபலமான மீசோ அமேரிக்கன் அறிஞர்கள் கூறுகின்றனர். 1882ஆம் ஆண்டில் இக்னாசியஸ் எல். டோனெலியின் Atlantis: the Antediluvian World வெளியீடு அட்லாண்டிஸ் பற்றிய மிக அதிகமான ஆர்வத்தை தூண்டியது. டோனெலி பிலாட்டோவின் அட்லாண்டிஸ் பற்றிய கருத்துகளை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, அனைத்து அறியப்பட்ட புராதன கலாச்சாரங்கள் உயரிய நியோலிதிக் கலாச்சாரத்தில் இருந்து வந்தவை என்பதை உணர்த்த முயற்சித்தார்.
19ம் நூற்றாண்டில், அட்லாண்டிஸின் சிறந்த இயல்பு மூ மற்றும் லெமூரியா போன்ற தொலைந்த கண்டங்கள் குறித்த கதைகளோடு இணைக்கப்பட்டது. தி சீக்ரட் டாக்ட்ரினில் ஹெலீனா ப்ளாவாட்ஸ்கி அட்லாண்டியர்கள் கலாச்சார கதாநாயகர்கள் (அவர்களை பிரதானமாக இராணுவ அபாயமாக விவரித்த பிலாட்டோவிற்கு எதிர்மறையாக) என்றும் அவர்கள் “ஆரிய இனத்தால்" பின்பற்றப்பட்ட நான்காவது “வேர் இனம்” என்று எழுதுகிறார். அட்லாண்டிஸின் கலாச்சாரம் 1,000,000 மற்றும் 900,000 ஆண்டுகளுக்கு இடையே உச்சத்தை அடைந்தது ஆனால் அங்கு வசிப்பவர்களின் மாயாஜால சக்திகளின் அபாயகரமான உபயோகத்தால் மூண்ட உள்சண்டைகளால் தானாகவே அழிந்தது என்றும் தியோசோஃபிஸ்ட்கள் நம்புகிறார்கள். இதே போல அட்லாண்டிஸின் கலாச்சார வளர்ச்சி குறித்து ருடோல்ஃப் ஸ்டைனரும் எழுதினார்.1923ஆம் ஆண்டில் எட்கார் கேய்ஸ் அட்லாண்டிஸ் பற்றி முதலில் குறிப்பிட்டார் [24]மற்றும் அது முதலில் அஸோரசில் இருந்து பஹாமாஸ் வரையிலான கண்டம் போன்ற அளவுடைய பகுதியாக இருந்தது என்றும் ஒரு மர்மமான சக்தி உடைய கிரிஸ்டலினால் இயங்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் கொண்ட அதிகப்படியாக வளர்ச்சி பெற்ற கலாச்சாரமாக இருந்தது என்றும் கூறுகிறார். அவர் அட்லாண்டிஸின் சில பகுதிகள் 1968 அல்லது 1969ல் வெளியே வரும் என்றும் யூகித்தார். பஹாமாஸில் உள்ள வடக்கு பிமினி தீவுகளுக்கு அப்பால் பெரிய நீண்ட சதுர வடிவிலான கற்களின் புதையுண்ட கல் அமைப்பான பிமினி சாலை, தொலைந்த கலாச்சாரத்தின் ஆதாரமாக ராபர்ட் ஃபெரோ மற்றும் மைக்கேல் க்ரம்லீயால் கருதப்படுகிறது.
 
ஹீரோடோடஸின் படி (சுமார் 430 பி சி), ஃபேரோ நீகோவின் கட்டளைப்படி ஒரு ஃபிணீசியன் பயணம் ஆப்பிரிக்காவை சுற்றி வந்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் தெற்கு நோக்கி பயணித்து மற்றும் அட்லாண்டிக்கில் வடக்கில் பயணித்து, ஹெர்குலஸின் தூண்கள் வழியாக மத்தியத்தரைக் கடலுக்குள் மறுமுறை நுழைந்தது. அவரின் வடமேற்கு ஆப்பிரிக்கா பற்றிய விவரிப்பு, தற்போது ஹெர்குலஸ் தூண்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக சுட்டிக்காட்டியது என்பதை தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. ஆயினும், ஈரோடோஸ்தெனஸுக்கு முன்பாக ஸ்ட்ரைட் ஆஃப் சிஸிலியில் அவை இருந்தது என்ற நம்பிக்கை சில அட்லாண்டிஸ் பற்றிய கட்டுரைகளில் கூறப்படுகிறது.





Via (சித்தர்கள்) angelinm