மனித உடலில் உள்ள குடல்வால் உறுப்பு பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:28 | Best Blogger Tips



மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் பை போன்று இருக்கும்,
குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ இயலும் எனவே இது மனிதனின் உடலில் இருக்கும் ஒரு தேவையற்ற உறுப்பாக இதுவரை கருதப்பட்டது, ஆனால் தற்போது குடல்வால் மனிதனுக்கு பல மறைமுக நன்மைகளை செய்வதாக தெரியவருகிறது

மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உண்டு . இவற்றில் நன்மை செய்யும் பேக்டிரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பேக்டிரியாக்கள் என இரண்டு உண்டு.

நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைகிறது, மனித உடலுக்கு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பேக்டிரியாக்களை செழிக்க செய்வது கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குவதற்கு சமம்.
இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பேக்டிரியாக்கள் உயிர் படலங்களாக குடல்வாளை ஆக்கிரமித்து கொண்டு தீமைசெய்யும் பாக்டீரியாக்களை தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்க படுகிறத
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல், பேதி போன்ற நோய்களின் பொது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டி மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்கு தேவையான நன்மை தரும் பேக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.
குடல்வால் ஆட்டுக்குதாடியை போல ஒரு அநாவசிய-உறுப்பு அல்ல. பழங்காலத்தில் காடுகளில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழ்ந்த நம்முடையமூதாதையர்களுக்கு இந்த குடல்வால் ஒரு-பாதுகாப்பு சாதனமாக இருந்தது என்பதே உண்மை.

மனித உடலில் உள்ள குடல்வால் உறுப்பு பற்றிய தகவல்கள்:-

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் பை போன்று இருக்கும்,
குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ இயலும் எனவே இது மனிதனின் உடலில் இருக்கும் ஒரு தேவையற்ற உறுப்பாக இதுவரை கருதப்பட்டது, ஆனால் தற்போது குடல்வால் மனிதனுக்கு பல மறைமுக நன்மைகளை செய்வதாக தெரியவருகிறது

மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உண்டு . இவற்றில் நன்மை செய்யும் பேக்டிரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பேக்டிரியாக்கள் என இரண்டு உண்டு.

நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைகிறது, மனித உடலுக்கு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பேக்டிரியாக்களை செழிக்க செய்வது கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குவதற்கு சமம்.
இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பேக்டிரியாக்கள் உயிர் படலங்களாக குடல்வாளை ஆக்கிரமித்து கொண்டு தீமைசெய்யும் பாக்டீரியாக்களை தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்க படுகிறத
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல், பேதி போன்ற நோய்களின் பொது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டி மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்கு தேவையான நன்மை தரும் பேக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.
குடல்வால் ஆட்டுக்குதாடியை போல ஒரு அநாவசிய-உறுப்பு அல்ல. பழங்காலத்தில் காடுகளில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழ்ந்த நம்முடையமூதாதையர்களுக்கு இந்த குடல்வால் ஒரு-பாதுகாப்பு சாதனமாக இருந்தது என்பதே உண்மை. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Thanks to : Karthikeyan Mathan