திருச்செந்தூர் செந்திலாண்டவர் மகிமைகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips

 திருச்செந்தூர் செந்திலாண்டவர் மகிமைகள்.... | Thiruchendur magimaigal

திருச்செந்தூர் போர் நடந்த இடம் ஆதலால், செந்திலாண்டவன் கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது. 
 
மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணிகலன்கள் அணிவிக்கப்படுகின்றன.
 திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு | Thiruchendur
மாமரமாக மாறிய சூரபத்மனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதில்லை.
 
இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு சாத்திக் கழித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.
 
மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
 
முருகனின் வாகனமான மயிலுக்கு பொரி படைக்கிறார்கள்.
 திருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! - Kungumam Tamil Weekly  Magazine
தவத்திரு ஆறுமுக சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு காசி சுவாமிகள் ஆகியோர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்துள்ளனர். கோயிலுக்கு தெற்கில் (சஷ்டி மேட்டுத் திடலுக்கு அருகில்) இவர்களது ஜீவ சமாதிகள் உள்ளன. 
 
வள்ளி சந்நிதிக்கு வலப்புறம் உள்ள தூண்களில் இவர்களின் சிலைகளைக் காணலாம். இவை மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ளன.
கி.பி. 1670-ஆம் ஆண்டில் காயாமொழி பகுதியை அரசாண்ட பஞ்சாதித்தன் என்ற அரசன் செந்திலாண்டவனுக்கு தேர் செய்து அர்ப்பணித்துள்ளான்.
 
'இங்கிருந்து நீவிர் அருள்பாலிக்கும் வரை கடலால் கோயிலுக்குத் தீங்கு நேராது!' என்பது வருண பகவானின் சத்திய வாக்கு. சுனாமி தமிழ்நாட்டைத் தாக்கியபோது திருச்செந்தூருக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என்பதே இதற்குச் சான்று.
 
பிரிட்டிஷ்- கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரி ஒருவர் 59 காசுகளுள்ள தங்கக் காசு மாலையை முருகனுக்கு அளித்துள்ளார். தவிர, 100 அமெரிக்கன் டாலர்களால் செய்யப்பெற்ற காசு மாலையும் இங்கு உள்ளது. சிறப்பு நாட்களில் மட்டுமே இந்த ஆபரணங்களை முருகனுக்கு அணிவிக்கிறார்கள்.
 
ஸ்ரீசண்முகரின் உயரத்துக்கு ஏற்ற வைர வேல் ஒன்று இங்குள்ளது. இது 100 பவுன் தங்கம், 40 காரட் வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. நடுவில் பெரிய பச்சைக் கல் கொண்டது. கி.பி.1917-ல் கொத்தமங்கல் சி. ராம்ஜி குடும்பத்தாரால் அர்ப்பணிக்கப்பட்டது.
 
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தால் ஆன அரிய பொருட்கள் உள்ளன. இறைவனுக்கு அமுது படைக்கும்போது கீழே விழும் பருக்கைகளை எடுக்க தங்க ஊசி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது குடத்துக்குள் இடப்படும் பொருட்களுள் தங்க மீன்களும், தங்கத் தாமரைப் பூக்களும் இடம்பெறுகின்றன. பூஜை முடிந்ததும் தங்கச் சாமரம் கொண்டு கவரி வீசுவர். 
 
மாசித் திருவிழாவின் 8-ஆம் நாளன்று ஸ்ரீசண்முகருக்கு அபிஷேகிக்கும்போது தங்கப் பிடியுடன் கூடிய காண்டாமிருகக் கொம்பின் வழியாக நீர் ஊற்றுகிறார்கள். இவை தவிர தங்க ஆமை ஒன்றும், கும்பாபிஷேகத்தின்போது தலைமைப் பட்டர் அணிந்துகொள்ள நவரத்தின மோதிரங்களும் உள்ளன.
 
இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.
 
திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, 'செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!' என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ''சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!'' என்றார் சாஸ்திரியார்.
 
பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். 
 
ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது🙏🙏🙏

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and flower 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

வியர்த்தொழுகும் முருகனின் அதிசய கோவில் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips

No photo description available.

திருமணம் நடைபெறும் நாளில் வியர்த்தொழுகும் முருகன் சிலை ! 
 May be an image of temple and text
பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கும். அதில் பல  அபூர்வமான விஷயங்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கும். 
 
அதேபோல தான் நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் திருக்கோவிலிலும் பல ஆச்சரியமான தகவல் உள்ளது. 
 May be an image of temple
🌟 இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். 
 
பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.
 No photo description available.
🌟 இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. 
 
🌟 சூரனை சம்ஹhரம் செய்த முருகனுக்கு சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அனைத்து சிவாலயங்களிலும் இந்த தெய்வீக திருமணம் நடைபெறும்.
 
🌟 இதேபோல், நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள நவநீதேஸ்வரர் கோவிலும் திருமணம் நடைபெறும். 
 
🌟 இந்த கோவிலில்தான் முருகனின் சிலை வியர்க்கிறது. திருமணம் நடைபெறும் நாளில் முருகன் சிலை வியர்ப்பதை காண முடிகிறது.
 
🌟 சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய் பெருகும் காட்சியை இன்றளவும் காணமுடிகிறது.



 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏



பிறப்பும், இறப்பும் ஒரே தேதியில் எல்லோருக்கும் .....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு

பிறந்த தேதியை பிறந்த நாள் என்றும், இறந்த தேதியை நினைவு தினம் என்று தானே சொல்ல வேண்டும்.

தேவருக்கு மட்டும் என்ன அவருடைய இறந்த நாளை மட்டும் குரு பூஜை என பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து தந்தையார் போல் நினைத்து மொட்டையடித்து அவர் சமூகத்தினர் பசும்பொன் ஊரில்  கொண்டாடுகின்றார்களே!!
தேவரின சிறப்பு செய்திகள் - "பசும்பொன் தேவரை பின்பற்றும் மக்கள் மீது  காமராஜர் அடக்குமுறை ஏவி விட்டார்" பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ...
அத்தனை பெரிய தலைவரா என்றால்.. குருபூஜை என்றால் என்ன என *தெரியாதவர்களுக்காக..

குரு பூஜை: பிறப்பும், இறப்பும் ஒரே தேதியில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கோடியில் ஒருவருக்கு மட்டுமே அப்படியான பாக்கியம் கிடைக்கும்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
அப்படியான பாக்கியம் பெற்றவர் தான் தெய்வீக திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்.

பிறந்த தேதியில் இறந்தவர்களுக்கு மட்டுமே குரு பூஜை நடத்துவது வழக்கம்..

அவர்கள் அடக்கம் செய்யபட்ட இடத்தை சித்தர் பீடம் என சொல்வார்கள். பிரம்மச்சாரியாக இருந்து மறைந்த சித்தர் பீடத்திற்கு சக்தி அதிகம்.
Vanakkam sivagangai - “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு”  கட்டுரை பதிவை காணலாம். தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் இருந்த  ...
தேவர் திருமகனும் விவேகானந்தர், காமராசர், வாஜ்பாய், அப்துல்கலாம் போன்ற பெருமகன்களை போல்  பிரம்மச்சாரி என்பது அனைவரும் அறிந்ததே.

பிறந்த நாள் தியதி வரும் நாளில் இறப்பு கிடைப்பது கோடியில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம்.. அப்படியான தினத்தில் இறப்பவர்களை அனைவரையும் போல்  படுத்திருப்பது போன்ற நிலையில் அடக்கம் செய்ய மாட்டார்கள்..
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் | Muthuramalinga Thevar Pirantha  Oor
இருப்புக்குழி எனப்படும் 4 × 6 அளவில் சவக்குழி தோண்டி இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் அடக்கம் செய்வார்கள்.அவர்களின் சமாதி மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குருபூஜை அன்று மகேஷ்வர பூஜை செய்து வழிபடுவார்கள்.

இவ்வகையான இருப்புக்குழி சடங்கு சாங்கியங்களை செய்ய ஆன்மீக பெரியவர்களால் மட்டுமே முடியும்.

தேவர் மறைந்த பின் இருப்பு குழியில் அமர வைத்து ஈமக்கிரியை காரியங்களை செய்த போது தேவரின் தலை கவிழ்ந்து இருந்ததாம்.

இறுதி ஈமக்கிரியை காரியங்களை செய்த வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் "கம்பீரமாக தலை நிமிர்ந்து  இரும் தேவரே" என தேவரின் கன்னத்தில் தட்டி நிமிர்த்து வைத்த பின் தேவரின் தலை கவிழவே இல்லையாம்..  
MUTHURAMALINGA @ DEVAR | God of mukkulathor | valangai jaiveer | Flickr
தேவர் மறைந்த போது அவர் வளர்த்த மயில்கள் அத்தனையும் அவரோடு இறந்து போனதும் யதேச்சையான நிகழ்வுகள் அல்ல..

யார் இந்த தேவர்?

தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்த மகான்..

வெள்ளையனுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் "பிச்சை கேட்டு பெறுவதில்லை சுதந்திரம்" போராடி பெறுவது தான் சுதந்திரம்!  என்ற தீர எண்ணத்தோடு சுபாஷ் சந்திர போஸை குருவாக கொண்டு விடுதலை  போராட்டத்தில் தீரத்தோடு பங்கேற்றவர்.

மதுரை மீனாட்சியம்மனை இழிவாக பேசிய பொடிடப்பா நொண்ணா துரை தேவர் இருக்கும் வரை மதுரைபக்கம் வராமல் பம்மி இருந்தது தேவர் பெருமகனின் கம்பீரத்திற்கு சாட்சி..
மீண்டும் பிறந்து வர மட்டாரா? பசும்பொன் தேவர் கோவில்களை மீட்டெடுக்க  மாட்டாரா? அண்ணாமலை. – oredesam
தனது ஜமீன் ஆளுமைக்கு உட்பட்ட முப்பத்திரண்டு  கிராமங்களில் உள்ள தனக்கு சொந்தமான 1832 ஏக்கர் 63 சென்ட் நஞ்செய் நிலங்களை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இலவசமாக வழங்கிய தேவரின் கருணையை ஜாதிய தலைவராக உருவகபடுத்தியது நச்சு அரசியல்.

உங்களுடைய கம்பீரமான முறுக்கு மீசை தனி அழகு.. அதற்காகவே உங்களை காதலிக்க தோன்றுகிறது என தன்னை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி வேடிக்கையாக சொன்னதற்காக, தனது மீசையால் ஒரு பெண்ணின் மனம் சலனபட்டதற்காக வாழ் நாள் முழுவதும் மீசை வைக்காமல்  கண்ணியமான பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்தவர் தேவர் மகான்..
TNPSC notes: முத்துராமலிங்கத் தேவர்
ஆஷ் துரையை சுட்டு கொன்ற வீர வாஞ்சி நாத அய்யரின் மனைவிக்கு வாஞ்சியின் நினைவு நாளில் வருடம் முழுவதும் செலவுக்கு தேவையான பணத்தையும் புடவைகளையும் கொடுத்து அந்த வீர பெண்மணியின் காலில் விழுந்து ஆசிகள் பெற்று வந்த தெய்வீக செம்மல் தேவர் திருமகன்.

பிரதமராக பதவியேற்றதும் தன்னிடம் விரும்பி கை குலுக்க வந்த மாமா நேருவின் முகத்துக்கு நேராக என் தலைவன் நேதாஜியை காட்டி கொடுத்த உன்னோடு கை குலுக்க விரும்ப வில்லை. என கம்பீரத்தோடு சொன்னவர் தேவர் பெருமகன்.
பசும்பொன் தேவர் சுதந்திரப்... - Andal P Chokkalingam | Facebook
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இம் மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் 20,075. சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் கழித்த நாட்கள் 4,000. தம் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை சிறையில் கழித்த தியாகச் செம்மல் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

 நிகழ் கால சூழ்ச்சி அரசியலில்* கண்ணியமான ஆன்மீக வாழ்வு மற்றும் அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வை வாழ்ந்த தேவர் நிஜமாகவே தெய்வீக பிறவி தான்..
தீவிர தேசியவாதி முத்துராமலிங்கத் தேவர் - Mediyaan
நாட்டின் விடுதலைக்கும் நாட்டின் நலனுக்கும் இறையாண்மைக்கும் பாடுபட்ட மண்ணின் மைந்தர்களான பாட்டிற்கொரு பாரதியை பிராமண ஜாதிய தலைவராகவும்...

காமராஜரை நாடார் சங்க  தலைவராகவும், பசும்பொன் முத்துராமலிங்கனாரை தேவர் ஜாதி தலைவராகவும்..

இரட்டை மலை சீனிவாசனாரை பறையர் ஜாதிய தலைவராகவும்,  கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரை பிள்ளைமார் ஜாதிய  தலைவராகவும்...


தமிழ் பூர்வீக குடிகளிடையே போலி ஜாதி துவேஷத்தை  ஊட்டி ஒருவருக்கொருவர் இணைந்து விடாமல் மோத வைத்து பிரித்து ஆளும் அரசியலை மக்கள் அனைவரும் தேவர் ஜெயந்தி எனும் இந்த நன்னாளில்உணரட்டும்.
 🚩ஜெய்ஹிந்த்🚩
Muthuramalinga Devar News in Tamil | Latest Muthuramalinga Devar Tamil News  Updates, Videos, Photos - Oneindia Tamil
##சுதந்திர போராட்ட வீரர் தெய்வத்திருமகனார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின், குருபூஜை நாள் (பிறந்த. மறைந்த)

வழக்கம் போல், மாலையில் வீடு திரும்பிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அவரது கார் டிரைவரை அழைத்து,
அவரிடம் ஒரு தொகையை கொடுத்து
தம்பி... இந்த பணத்தில், விலை உயர்ந்த நல்ல புடவை ஒன்றை எடுத்துக் கொள். தட்டில் வைக்க பழங்களும் வாங்கிக் கொள். நாளை காலை சீக்கிரம் வா,
நாம் ஒருவரை பார்க்க வேண்டும். இப்போது நீ கிளம்பலாம்...' என்றவாரே வீட்டிற்குள் சென்று விட்டார்.

டிரைவருக்கோ ஒரே குழப்பம்.
தேவரோ பிரம்மச்சாரி. பிற பெண்களை மதிப்பவர். அவர் யாருக்கு, அதுவும் விலை உயர்ந்த புடவை வாங்குகிறார் என குழம்பியபடியே, கடைக்கு சென்று, நல்ல விலையில் ஒரு புடவையும், பழங்களையும் வாங்கிக் கொண்டு, மறுநாள் அதிகாலையில், தேவரை பார்க்க வந்து விட்டார்.

தயாராக இருந்த தேவர், 'வந்து விட்டாயா...' எனக் கூறி, காரில் ஏறிக்கொண்டார்.
கார் புறப்பட்டது. யாருக்கு இந்த புடவை என குழம்பியபடியே, காரோட்டினார், டிரைவர். ஒரு குறுகிய சந்தை அடையாளம் காட்டி, காரை நிறுத்தி இறங்கினார், தேவர்.
டிரைவரும் இறங்கி, தாம்பாளத்தில் அந்த புடவையையும், பழங்களையும் வைத்து சுமந்தபடி, அந்த குறுகலான தெருவில்,
பல சந்துகளை கடந்து, இறுதியில் ஓர் சிறிய வீட்டிற்கு சென்றனர்.
Pasumpon Muthuramalinga Thevar,பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு இப்படி  ஒரு கதையா; யாரும் அறியாத உண்மைகள் இதோ! - interesting information about  pasumpon muthuramalinga thevar ...
அங்கு, 40 வயது மதிக்கதக்க விதவை பெண்மணி, தேவரை கண்டதும், வணங்கி வரவேற்றார். குட்டையான வாசலில் தலையை குனிந்து, வீட்டினுள் நுழைந்தார், தேவர். வெளியே நின்றிருந்தார், டிரைவர்.

அப்பெண்மணியிடம் நலம் விசாரித்து, பின், குடிப்பதற்கு நீர் கேட்டார், தேவர்.
அப்பெண்மணி உள்ளே சென்றதும், ஜிப்பாவில் இருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து, அந்த புடவையின் நடுவே மறைவாக வைத்தார். பெண்மணி கொணர்ந்த நீரை வாங்கி அருந்திய பின், தான் கொண்டு போன புடவை, பழத் தட்டை கொடுத்து அவரது காலில், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார், தேவர்.
கோல்வால்கரை வணங்குவது முத்துராமலிங்கத் தேவரா ?| ஹெச்.ராஜா பத...
இதை வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த டிரைவர்,
கலங்கிப் போனார். மேலும், உள்ளே என்ன நடக்கிறது என கேட்க, தன் காதை கூர்மையாக்கிக் கொண்டார். 'அம்மா... நான் கிளம்புகிறேன். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்கள். ஓடோடி வந்து உதவ காத்திருக்கிறேன்...' என, கண்ணீர் மல்க கூறினார், தேவர்.

புன்னகையோடு, 'போதும். நீங்கள் செய்வதே என் தேவைக்கு அதிகமானதாகவே உள்ளது. உங்களை மறவேன்...' என்று அப்பெண்மணி கூற, கண்ணீரை துடைத்தபடி,
டிரைவரை திரும்பி பார்க்காது, விறுவிறுவென வேகமாக நடந்து வந்து காரில் ஏறிக்கொண்டார். காரை ஓட்ட துவங்கினார், டிரைவர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு
சிறிது நேரத்திற்கு பின், 'அய்யா, உங்களிடம் ஒரு கேள்வி... யார் அந்த பெண்மணி... நீங்கள் ஏன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தீர்கள்... எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு...' என்றார், டிரைவர்..

சற்று நேரம் மவுனமாக இருந்தவ தேவர், 'அவள் என் தாய்... என் தாய்க்கும் மேலானவள். மண வாழ்வு கண்ட சில நாட்களிலேயே தன் இளம் வயது கணவனை இந்திய சுதந்திரத்திற்காக விட்டுக் கொடுத்தவள்.
நள்ளிரவில், மணியாச்சி புகைவண்டி நிலையத்தில், வ.உ.சி.,க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததற்காக, வெகுண்டெழுந்து, கவர்னர் ஆஷ்ஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதய்யரின் மனைவி அவள்.
'தேசத்திற்காக தன்னையே கொடுத்த, என் தந்தையான வாஞ்சியின் மனைவி, எனக்கு தாயன்றோ... அவளை வணங்குதல் தவறோ...'
என, கலங்கியபடியே கூறினார்;
டிரைவரின் கண்களிலும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.
தேசியம் வளர்த்த பசும்பொன் தேவர் - Mediyaan
(வாரமலரில் படித்தது...)

வீரத்தில் மட்டும் அல்ல பாசத்திலும் தேவரய்யா புகழ் வானளாவியது....

இன்று ஆஷ்துரையை கொண்டாடி, வாஞ்சிநாதரை தூற்றும் கும்பல்களை புறந்தள்ளிவேண்டியதும்,
தேவர் பெருமகனாரை போற்றுபவர்களின்  கடமையாக வேண்டும்....
🙏🏾
🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹