தக்காளியின் நன்மைகள்........

மணக்கால் அய்யம்பேட்டை | 3:49 PM | Best Blogger Tips


தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.
இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு


இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:47 PM | Best Blogger Tips

இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது.

அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர். சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.

பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது. மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ? நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி... கடவுள் ஒன்றுதான் ! இந்து மதம் ஒரு சனாதன தர்மம், சமதர்ம சமுதாயத்தையே அது சிருஷ்டித்தது என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம்.

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...




Via FB மெய்ப்பொருள்

ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 உணவுகள். !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:46 PM | Best Blogger Tips
நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது.

தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள்.

இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்


தானியங்கள் மற்றும் நட்ஸ்
தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன

கடல் சிப்பி

நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.

செர்ரி

செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

மீன்கள்

மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

தக்காளி

தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

முட்டைகள்

முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.

மாட்டுக்கறி

கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.

தயிர்

தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது

சாக்லெட்

அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

காபி

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 8 மருந்துகள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:44 PM | Best Blogger Tips



குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல் என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை கொடுக்கின்றோம்.

குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால், குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன. அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும்.

பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிடித்துக் கொள்ளும். ஆனால் 6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும் இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால், மருந்துகளானது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல், குழந்தைக்கு மருந்தானது திறம்பட செயல்படவில்லை என்று சிலர் அளவுக்கு மீறி மருந்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

இப்போது குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாத 8 வகையான மருந்துகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, குழந்தைகளுக்கு அவற்றை கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

ஆஸ்பிரின் (Aspirin)

மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் கலந்த மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரினால், குழந்தைகளின் சிறுநீரகமும், மூளையும் பாதிப்படையும். எனவே மருந்து கடைகளில் வாங்கும் அனைத்து மருந்துகளிலும் ஆஸ்பிரின் இருக்காது என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எப்போதும் மருந்து வாங்கும் முன், முதலில் அதன் லேபிளை நன்கு படித்து பின்னரே வாங்க வேண்டும். மேலும் சாலிசிலிக் அல்லது அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்ற பெயரைக் கண்டால், அதுவும் ஆஸ்பிரினையே குறிக்கும். காய்ச்சல் என்றால், 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாராசெட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபெனைக் (ibuprofen) கொடுக்கலாம்.

இருமல் மற்றும் சளி மருந்துகள்

குழந்தை மருத்துவத்தின் அமெரிக்க அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் குழந்தை மருத்துவர்கள், கண்டிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கமாட்டார்கள். ஏனெனில் அவை சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில்லை. சில நேரம் அதிக அளவில் கொடுப்பதால், அது ஆபத்தை கூட விளைவிக்கும். அதிலும் தூக்க கலக்கம், வயிற்று வலி, சொறி, அதிகமான இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே சளி மற்றும் இருமல் மருந்து கொடுப்பதால் தான், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

குமட்டலை தடுக்கும் மருந்துகள்

மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது. பொதுவாக குமட்டல் வந்தால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே குமட்டல் ஏற்படும் போது, அதனை தடுக்க மருந்துகள் அவசியம் இல்லை. சாதாரணமாக இருந்தாலே, அவை குணமாகிவிடும். அதை விட்டு, மருந்துகளை கொடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை குழந்தை வாந்தி எடுத்தால், அவர்களுக்கு தேவையான அளவு நீராகாரம் கொடுத்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம். கைமீறிப் போனால், மருத்துவரை அணுகுவது நல்லது.

பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்

பெரியவர்கள் சாப்பிடும் மருந்துகளை சிறிதளவு கூட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளை விட, கைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகள் சற்று அடர்ந்த நிலையில் இருப்பதால், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வேறொரு குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

மற்ற குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, உங்கள் குழந்தைக்கு கொடுத்தாலும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

காலாவதியான மருந்துகள்

காலாவதியான மருந்துகளை உடனடியாக மருந்து பெட்டியில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும். மேலும் நிறம் மாறிய மருந்துகளையும் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் காலாவதியான மருந்துகளின் திறன் செயலிழந்திருக்கும். மேலும் அது உயிருக்கே பெரும் ஆபத்தையும் விளைவிக்கும்.

கூடுதலான அசிடமினோஃபென்

காய்ச்சல் மற்றும் உடம்பு வலியை குறைக்கும் மருந்துகள் பலவற்றிலும் அசிடமினோஃபென் (acetaminophen) கலக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதனை பற்றி சரியான அறிவு இல்லையென்றால், உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள்

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள் அல்லது மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுடைய தொண்டை குழியை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குழந்தை திடமான உணவை உண்ண ஆரம்பித்து விட்டால், அவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்க நினைப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் மாத்திரைகளை பொடியாக்கி, அவற்றை குழந்தைகளின் உணவில் கலந்து கொடுக்கலாமா என்று மருத்துவரிடம் கேட்டு பின்னரே கொடுக்க வேண்டும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:43 PM | Best Blogger Tips

நம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவை. அதிலும் மிக முக்கியமானதென்றால், கண்டிப்பாக கண்களாகத் தான் இருக்க முடியும். ஒருவரை வர்ணிக்கும் போதும், ஓவியம் வரையும் போதும் கூட கண்களிலிருந்து தான் ஆரம்பிப்போம். அப்படிப்பட்ட கண்களை பாதுகாக்க நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால் குழந்தைகளுக்கு? பெற்றோர்கள் தானே பாதுகாக்க வேண்டும்.

குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்த கண்களில் அறுவை சிகிச்சை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு பல இயற்கை வழிமுறைகளும் இருக்கிறது என்பது தான் உண்மை. இயற்கை வழிமுறைகள் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் மிகவும் பதுகாப்பானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும். மேலும் செயற்கை முறைகளை கையாளுவதை விட, இயற்கை முறை தான் பல நாட்களுக்கு நீடித்து நிலைக்கும். இப்போது குழந்தையின் கண் பார்வையை வளப்படுத்தும் சில வழிகளை பார்ப்போம்.

தரமுள்ள கருப்புக் கண்ணாடி

வெயிலில் இருந்து குழந்தையின் கண்களை பாதுகாக்க கருப்புக் கண்ணாடியை அணியச் செய்யுங்கள். அவை குழந்தையின் கண் பார்வையை மேம்படுத்த பயன்படும். குழந்தைகள் வெயிலில் அதிக நேரம் இருக்கும் போது, சூரியனில் இருந்து வெளிவரும் புற-ஊதாக் கதிர்வீச்சு கண் பார்வைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தரமுள்ள கருப்புக் கண்ணாடியை வெளியே செல்லும் போது குழந்தைகள் போட்டுக் கொள்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காற்று அதிகமாக இருக்கும் காலத்திலும் கண்ணாடியை போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். இதனால் தூசியை போல் கண்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்களிலிருந்து கண்களை பாதுகாக்கலாம்.

கண்களுக்கு பயிற்சி

குழந்தைகளுடன் சேர்ந்து சில கண் பயிற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருங்கள். இந்த பயிற்சிகள் கண் பார்வையை மேம்படுத்தும்.

கண்களை கழுவவும்

குழந்தைகள் காலை எழுந்தவுடன், அவர்களின் வாயை கொப்பளிக்கச் செய்து கண்களை மூடச் சொல்லவும். பின் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கண்களின் மேல் தண்ணீரை கொண்டு நன்றாக கழுவச் செய்யவும். முக்கியமாக கண்களை கழுவ பயன்படுத்தும் தண்ணீர் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

தூக்கம்

நீண்ட நேரம் இரவில் விழித்திருப்பது கண்களுக்கு நல்லதல்ல. ஒருவேளை குழந்தை நீண்ட நேரம் விழித்திருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கப் தண்ணீர் குடிக்கும் படி செய்ய வேண்டும்.

மலங்கழித்தல்

மலச்சிக்கல் கண் பார்வையை குறைக்கும். அத்துடன் மன அழுத்தம், கவலை, கோபம், ஆர்வம் போன்றவைகளும் கண் பார்வையை பாதிக்கும். அதனால் தினமும் குழந்தையை 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வையுங்கள்.

உணவு முறை

தினமும் குழந்தைக்கு பச்சை வேர்க்கோசு மற்றும் காரட் சாறு கொடுங்கள். இதனுடன் சேர்த்து பாலில் ஊற வைத்த பாதாம், ஏலக்காய் பொடி கலந்த பால், பழங்கள், பச்சை காய்கறிகள், போன்றவைகளையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். கண்களின் சத்துக்கும், திறனுக்கும் காரணமாக விளங்குவது வைட்டமின் ஏ. அதனால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ உள்ள உணவுகளை சாப்பிட கொடு்க்கவும்.

விளையாட்டில் ஈடுபடுத்தவும்

குழந்தைகள் மணிக்கணக்கில் தொலைக்காட்சி/கணினி முன் அமர்ந்திருக்கிறார்களா? ஆம் என்றால் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட போவது உறுதி. இந்த செயல்கள் யாவும் கண்களை ஓய்வெடுக்கச் செய்யாது. உடம்பில் உள்ள மற்றப் பகுதிகளை போல, ஒரே இலக்கில் 10-15 நொடி வரை கண் பார்வையை செலுத்தினால், கண்களுக்கு அயர்ச்சி ஏற்படும். இந்த அழுத்தம் சிறிது காலம் கழித்து கிட்டப்பார்வை, சிதறல் பார்வை போன்ற பிரச்சனையாக வளர்ந்து நிற்கும். அதனால் அதிக நேரம் கணினி அல்லது தொலைகாட்சி முன் அமர்வதை விட, வெளியில் சென்று விளையாட குழந்தையை அறிவுறுத்தவும்.

காய்கறி மற்றும் பழங்கள்

கல்லீரலில் அதிக அளவு நச்சுத்தன்மை இருந்தால், கண் பார்வை மங்கும். இன்றைய நவீன வாழ்க்கை முறை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகமாக ஜங்க் உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள். அதனை தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண செய்யவும்.

சிரிப்பு

வாய் விட்டு சிரிப்பதால் சந்தோஷத்திற்குரிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். அதனால் உடம்பில் உள்ள தசைகள் அனைத்தும் அமைதி பெரும். இது கண்களின் தசைகளையும் சேர்த்ததே. அதனால் குழந்தை எந்நேரமும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

தினமும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:35 PM | Best Blogger Tips

இன்றைய அவசர உலகில் உடலுக்கு நிறைய பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அனைவரும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தவிர, மற்ற உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் அந்த பிரச்சனைகளை தவிர்க்க பலரும் டயட்டை பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகமாக உள்ளது என்று டயட்டை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு டயட்டை மேற்கொண்டால் மட்டும் போதாது, டயட்டில் என்ன உணவுகளை சேர்க்கிறோம் என்பது தான் முக்கியம். அவ்வாறு தினமும் மேற்கொள்ளும் டயட்டில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சேர்க்க வேண்டுமென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அத்தகைய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவற்றை தினமும் உணவில் சேர்த்தால், அவை வயிற்றை நிறைத்து, உடலை சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை

கீரையில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால், தினமும் தவறாமல் சாப்பிடுவது நல்லது. அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே மதிய வேளையில் இநத் கீரையை வேக வைத்து, கடைந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

எலுமிச்சை

தினமும் குறைந்தது ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, உடல் எடையும் குறையும்.

பூண்டு

பூண்டு இதய நோயாளிகளுக்கு மட்டும் நல்லதல்ல, இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான சல்பர், சருமத்திற்கும் மிகவும் நல்லது.

ஆலிவ் ஆயில்

சமையலில் மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த எண்ணெய் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் பழங்களில் சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறப்பானவை. ஆகவே டயட்டில் இருக்கும் போது, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பப்பளிமாஸ், எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நன்கு சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆகவே டயட்டில் சேர்த்துக் கொண்டால், எலும்புகள் நன்கு வலுவோடும், உடல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் பீட்டா-குளுக்கான் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. மேலும் ஓட்ஸ் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும். மேலும் டயட்டில் இருப்பவர்கள், இதனை தினமும் சேர்த்து வந்தால், செரிமானப் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

பருப்புகள்

இந்த சூப்பர் உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருளும், கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், இதனை தினமும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வும் கிடைக்கும்.

க்ரீன் டீ

இந்த டீயில் உடலை சுத்தப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டால், உடல் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையானது கட்டுப்பாட்டுடனும் வலுவோடும் இருக்கும்.
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

சுவாமி பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:06 PM | Best Blogger Tips
சுவாமி பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.

* கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.

* கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.

* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கு
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.

* கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.

* கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.

* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கு
ம்.
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

சுகப்பிரசவம் ஆக இதை ஜெபிக்கவும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:44 PM | Best Blogger Tips

மாங்கல்ய தோஷம் என்பது....

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 PM | Best Blogger Tips

மாங்கல்ய தோஷம் என்பது..,
-------------------------------------
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்பொழுது நட்சத்திர பொருத்தம் மட்டும் முக்கியம் கிடையாது.அதைவிட மிக முக்கியமானது ஜாதக கட்டத்தை இணைத்து பார்ப்பதுதான்.கட்டப்பொருத்தம் சரியாக இருந்தால்தான் இல்லறவாழ்வு இனிமையாக அமையும்.

ஜாதக கட்டத்தில் ஆணுக்கு 8-மிடத்தையும்,பெண்ணுக்கு 7,8-மிடங்களையும் பார்க்க வேண்டும்.லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும்.ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும்.

பெண் ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்கிரன்,சனி,சூரியன்,ராகு,கேது பொன்ற கிரகங்கள் இருந்தால் களத்திர தோசத்தையும்,8-மிடத்தில் ராகு,கேது,சனி,சூரியன்,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்தால் மாங்கல்ய தோசத்தையும் கொடுக்கும்.7,8 மிடம் பலமாக இருந்தாலும்,சுப கிரகமான குரு பார்த்தாலும் தோச நிவத்தியாகும்.

வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.

எந்த கிரகத்தால் மாங்கல்ய தோசமும்,களத்திர தோசமும் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்தால் போதும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்பொழுது நட்சத்திர பொருத்தம் மட்டும் முக்கியம் கிடையாது.அதைவிட மிக முக்கியமானது ஜாதக கட்டத்தை இணைத்து பார்ப்பதுதான்.கட்டப்பொருத்தம் சரியாக இருந்தால்தான் இல்லறவாழ்வு இனிமையாக அமையும்.

ஜாதக கட்டத்தில் ஆணுக்கு 8-மிடத்தையும்,பெண்ணுக்கு 7,8-மிடங்களையும் பார்க்க வேண்டும்.லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும்.ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும்.

பெண் ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்கிரன்,சனி,சூரியன்,ராகு,கேத
ு பொன்ற கிரகங்கள் இருந்தால் களத்திர தோசத்தையும்,8-மிடத்தில் ராகு,கேது,சனி,சூரியன்,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்தால் மாங்கல்ய தோசத்தையும் கொடுக்கும்.7,8 மிடம் பலமாக இருந்தாலும்,சுப கிரகமான குரு பார்த்தாலும் தோச நிவத்தியாகும்.

வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.

எந்த கிரகத்தால் மாங்கல்ய தோசமும்,களத்திர தோசமும் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்தால் போதும்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

மூலிகை மருந்துகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:10 PM | Best Blogger Tips
சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

மேலும் தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.


Via FB தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:10 PM | Best Blogger Tips
பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது,
முடி வளர்ச்சிக்கு நல்லது
அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது,
முடி வளர்ச்சிக்கு நல்லது
 
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
 

பழமொழிகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:12 PM | Best Blogger Tips


அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.

அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.

அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.

அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!

அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.

அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.

அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.

அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.

அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.

அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.

அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.

அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.

அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.

அதிக ஓய்வு அதிக வேதனை.

அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?

அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.

அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.

அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.

அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.

அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.

அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

அன்பாக பேசுபவருக்கு அந்நியர் இல்லை.

அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.

அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.

அரசனும் அன்னைக்கு மகனே.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.


 Via FB   Karthikeyan Mathan

இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:11 PM | Best Blogger Tips
இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி நிகழ்ந்த தினம் இன்று !
இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி!
-----------------------------------------------------------------

17 -ஆண்டுகளாக ஆங்கிலேயரை குலை நடுங்க வைத்த திப்பு தன் 39-வது வயதிலேயே உயிர் தியாகியாகி வீரமரணம் அடைந்தது ஒரு வரலாற்று சோகமாகும். காவிரியே கண்ணீர் சிந்தும் கனத்த நினைவுகளோடு திப்பு சுல்தானின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் சுதந்திர எரிமலையின் தீ சுவாலைகள் மட்டும் அடங்கவில்லை.

ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.

ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். திப்பு என்றால் புலி என்று அர்த்தம். ஆம்! சிங்கமும், புலியும் பிறந்த பரம்பரையில் வந்தவர்கள் சீறுவதும், பாய்ந்து தாக்குவதும் இயல்புதானே!

நாடு கடத்தல்!
---------------------
திப்பு கொல்லப்பட்ட பிறகு, அவரது பிள்ளைகள் மைசூரிலிருந்து வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அங்கேயே இருந்தால் பரம்பரை போர் தொடரும் என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால் வேலூர் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இக்கோட்டை கி.பி 1295-ல் கட்டப்பட்டது. திப்புவின் பிள்ளைகளை சிறை வைப்பதாக இருந்தாலும் கூட கோட்டையில்தான் அவர்களை சிறையிட முடிந்தது! சிறை அவர்களுக்கு அரண்மனையாய் இருந்தது.

திப்புவின் ஆட்சிக்காலம் போரிலும், போருக்கு பிந்தைய நிவாரண பணிகளிலும், அடுத்த கட்ட போருக்கான ஆயத்தப் பணிகளிலுமே கழிந்தன. இடையிடையே தன் அருமை மனைவியோடு கழித்த பேரின்ப பொழுதுகளும் உண்டு. அதன் சாட்சியாக 12 ஆண் பிள்ளைகள், 8 பெண் பிள்ளைகள் அவரது வாரிசுகளாக வாழ்ந்தனர். இவர்களில் பலர் அரச வாழ்க்கையை துறந்து, அரசியல் கைதிகளாக வேலூரில் சிறையிடப்பட்டார்கள். திப்புவின் அமைச்சரவை சகாக்கள் 24 பேர், அவர்களை சார்ந்த அலுவலர்கள், உதவியாளர்கள், தளபதிகள், உறவினர்கள் என பெரும் கூட்டமே சிறைவைக்கப் பட்டது.

கனவுக் கோட்டை
---------------------------

திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதரை மைசூரின் ஆட்சியாளராக நியமிக்க ஆங்கிலயர்களிடம் சிலர் பேசினார்கள். நெருப்பை தங்கள் தலையில் சுமக்க அவர்கள் தயாரில்லை. ஆயினும், அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்ட திப்புவின் பிள்ளைகளுக்கு ஆறுதல் தரும் பொருட்டு மாதந்தோறும் மான்யம் வழங்கப்பட்டது.

இதன் நோக்கம் புரட்சிகர சிந்தனைகள் வரக்கூடாது என்பதே. ஆனால் அமைதியாய் ஒரு புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது. திப்புவின் வாரிசுகள், அமைச்சர்கள், தளபதிகள், உதவியாளர்கள் உறவினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கோட்டையில் சிறையிலிருந்த போது, மைசூரிலிருந்து வேலூருக்கு ஏராளமானோர் குடிபெயர்ந்தனர்.

இந்த மக்களின் இடம் பெயர்வு குறித்து ஆங்கிலேயர்கள் பெரிதாக கவலைப்படவில்லை! இவர்கள் வேலூரிலும் அதனை சுற்றியும் வாழத் தொடங்கினர். இதுதான் பின்னாளில் பெரும் புரட்சிக்கு உதவியாக இருந்தது.

ராணுவ குழப்பம்
-------------------------

திப்பு கொல்லப்பட்ட ஏழாண்டுகள் அமைதியாக நகர்ந்தது. தென்னிந்தியாவையும், கிழக்கிந்தி யாவையும் ஏறத்தாழ வசப்படுத்திவிட்ட ஆங்கிலேயர்கள், வட இந்தியாவையும், மேற்கிந்தியாவையும் தங்கள் முழுமையான ஆளுகைக்குள் கொண்டு வர கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ராணுவம் இரு பிரிவுகளாக இருந்தது. ஒரு பிரிவில் ஆங்கிலேயர்கள் மட்டுமிருந்தனர். மற்றொரு பிரிவில் இந்தியர்கள் இருந்தனர். இதில் மலையாள முஸ்லிம்களும், தெலுங்கர்களும், குறைவான எண்ணிக்கையில் தமிழர்களும் இருந்தனர்.

ஆயிரம் பேர் கொண்ட இந்திய படைக்கு ஒரு ஆங்கிலேயரே தளபதியாக இருப்பார். இந்திய வீரர்கள் எவ்வளவு தான் தியாகம் செய்தாலும் பெரிய பதவிகளுக்கு வரமுடியாது. நல்ல சம்பளத்தை பெற முடியாது. இது படையினரிடையே அதிருப்தியை வளர்த்தது. இது தவிர ராணுவத்தில் புதிய விதிகளும், கட்டுப்பாடுகளும் புகுத்தப்பட்டன. இந்துக்கள் திருநீறு பூசக்கூடாது என்றும், கடுக்கண்கள் அணியக் கூடாது என்றும், முஸ்லிம்கள் தாடி வைக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது.

மத உணர்வுகளில் ஆழமான நம்பிக்கைக் கொண்ட இந்திய வீரர்கள் கொந்தளித்தனர். மேலும் மார்பில் சிலுவை போன்ற ஒரு பொருளை அணிய வேண்டுமென்றும், ஐரோப்பியர் அணிவதைப் போன்ற தொப்பிகளை போட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த புதிய கட்டளைகளை இந்திய வீரர்கள் அநேகமானோர் ஏற்க மறுத்தனர். மீறினால், சிறையிலடைப்போம் என்று ஆங்கிலேயர்கள் மிரட்டினர். இதனால் கோபமுற்ற ஒரு இந்திய வீரர், மேஜர் போஸ் என்ற அதிகாரியை தனது துப்பாக்கியால் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆனது.

வீர ஊர் வேலூர்
-----------------------
1806- ஏப்ரல், மே மாதங்களில் வேலூரி லிருந்த இந்திய வீரர்களுக்கு ஐரோப்பிய மாதிரி தொப்பிகள் வரவழைக்கப்பட்டு அனைவரும் அணியும் படி கட்டாயப்படுத்தப்பட் டனர். இவையனைத்தையும் சிறையிலிருந்த திப்புவின் வாரிசுகள் கவனித்துக் கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய சிப்பாய்கள், தொப்பிகளை அணிய மாட்டோம் என்று கூறி, தலையில் கைக்குட்டைகளை கட்டிக் கொண்டு கலகம் செய்தனர். பலர் கைது செய்யப் பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றவர்கள் அன்று மாலை ஆயுதங்களை எடுக்க மறுத்தனர். எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தாதீர்கள் என்று இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கலகத்துக்கு காரணமான ஒரு இந்து வீரருக்கும், ஒரு முஸ்லிம் வீரருக்கும் தலா 900 கசையடிகள் வழங்கப்பட்டது. மேலும் 19 பேருக்கு தலா 500 கசையடிகள் வழங்கப்பட்டது. புரட்சியின் முதல் கட்டமாக நடைபெறும் சம்பவங்களை கவனித்துக் கொண்டிருந்த திப்புவின் வாரிசுகளும், அவர்களை சார்ந்த போர் நிபுணர்களும் இதை ஒருமுகப்படுத்தும் வேலைகளை தொடங்கினர்.

1806- ஜுன் 17 அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை தொடங்குவது பற்றி யோசிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜுலை மாதம் ஒத்திவைப்பதாக முடிவு செய்து வேலைகள் தொடங்கப்பட்டன. திப்புவின் மகன்களில் மூன்றாவது மகன் மொகைதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் இப்புரட்சியில் நேரடியாக பங்கேற்றனர். மூத்தவர் பத்தே ஹைதர் தலைமை வகித்தார். வேலூரில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, சிறையிலிருந்து விடுதலையாவது அவர்களது முதல் திட்டமாக இருந்தது. அடுத்து வெளியிலிருந்து ராணுவ உதவிகளை பெற்று மீண்டும் மைசூரில் ஆட்சியை நிறுவுவது அவர்களது இலக்காக இருந்தது.

அதற்கேற்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. புரட்சியின் போது, கோட்டைக்கு வெளியே வாழும் மக்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவர்களை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டது. கோட்டைக்குள் எழுந்திருக்கும் பரபரப்புகளை மோப்பம் பிடித்து, ஆங்கிலேயர்கள் உஷாராகிவிடக் கூடாது என்பதற்காக மற்றொரு திட்டமும் வகுக்கப்பட்டது.

திப்பு சுல்தானின் பிள்ளைகளுக்கு ஆங்கிலேயர்கள் திருமணம் செய்யும் அனுமதியை வழங்கியிருந்தார்கள். அதன்படி பலர் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது அந்த அனுமதி புரட்சிக்கும் பயன்பட்டது.திப்புவின் ஏழாவது மகள் நூருன்னிஸா பேகத்திற்கு 1806- ஜுலை 10 அன்று திருமணம் என திப்பு மகன்கள் அறிவித்தனர். அதையட்டி அரச முறைப்படி திருமணம் நடைபெற வேண்டுமென்பதால், இதை ஆங்கிலேயர்களிடம் முறைப்படி தெரிவித்து சில கெடுபிடிகளை தளர்த்திக் கொண்டனர். சீர் எடுப்பது, சடங்குகள் நடப்பது என்ற போர்வையில் தூதுச் செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகள் குறைந்தன. மிக ராஜதந்திரமாக காய்கள் நகர்த்தப் பட்டன. ஆங்கிலேய அதிகாரிகள் சிறைக்குள் ரோந்து வருவதும் குறைந்ததால், எல்லாம் வசதியாய் அமைந்தது. இந்திய வீரர்கள் மட்டுமே வலம்வந்து, ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தென் தமிழகத்தின் பாளையக்காரர்களும், மராட்டியர்களும் தங்கள் தூதுவர்களை வேலூர் கோட்டைக்கு அனுப்பி புரட்சி குறித்தும், அடுத்து இணைந்து பணியாற்றுவது குறித்தும் தகவல் பரிமாறிக் கொண்டனர். புரட்சி குறித்து பிரெஞ்சுகாரர்களுக்கும் ரகசிய தகவல் அனுப்பி உதவி கோரப்பட்டது.

பக்கீர்களின் பெரும் பிரச்சாரம்
---------------------------------------------

வெளியே மக்களை திரட்டவும், புரட்சியின் நம்பிக்கைகளை ஊட்டவும் திட்டம் தீட்டப்பட்டது. ஏழ்மை நிலையிலிருந்த இஸ்லாமிய அறிவு கொண்ட பலர் திரட்டப்பட்டு, அவர்களுக்கு; அரசியல் வகுப்பு எடுக்கப்பட்டது. இவர்களுக்கு பிரச்சார நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு களத்துக்கு அனுப்பப்பட்டனர். பள்ளிவாசல்கள், திருமண இடங்கள், மக்கள் கூடுமிடங்களில் இவர்கள் பாடல்களை பாடியும், புரட்சிகர உரை நிகழ்த்தியும் மக்களை தயார் படுத்தினார்கள். இவர்கள் ஃபக்கீர்கள் என அழைக்கப்பட்டனர்.

வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பக்கீர்களின் பிரச்சார யுத்தம் அனல் கக்கியது. இது படையினரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

வெடித்தது புரட்சி
-------------------------

1806- ஜுலை 9 அன்று வேலூர் கோட்டை பரபரப்பாக இருந்தது. நாளை திப்புவின் மகளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற நினைப்பில் ஆங்கிலேயர்கள் அலட்சியமாக இருந்தனர். முதல் நாள் திருமண சிறப்பு விருந்து நடைபெற்றது.

வேலூர் புரட்சியின் தளபதிகளில் ஒருவரான ஜமேதார் ஷேக்காஸீம் என்பவர் கோட்டையின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனக்கு நம்பகமான படை வீரர்களை முக்கிய இடங்களில் அமர்த்தினார். வழக்கத்திற்கு மாறாக, திருமண ஏற்பாடுகளை காரணம் காட்டி கூடுதல் வீரர்கள் கோட்டையில் தங்கினர். கோட்டையில் இருக்கும் பள்ளிவாசலில் உறுதி மொழியை பலர் எடுத்தனர். அந்த பள்ளிவாசல் வேலூர் புரட்சிக்கு களமாக இருந்தது. இப்போது தொழுகை மறுக்கப்படும் அதே பள்ளிவாசல் தான் அப்போதும் இன்னொரு புரட்சிக்காக காத்திருக்கிறது. அடுத்த நாள் ஜுலை 10 விடிகாலையில் அனைவரும் புரட்சிக்கு தயாரானார்கள்.அனைவரும் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபடுவது போல் நடித்தனர்.

அந்த நேரத்தில் புரட்சி குறித்து விபரம் அறியாதவர்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டும் நோக்கில், புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய வீரர்களை கொல்கிறார்கள் என செய்தி பரப்பினர். இது ஏற்கெனவே போடப்பட்ட தந்திரத் திட்டங்களில் ஒன்றாகும். அது நன்றாகவே வேலை செய்தது. கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டனர். புரட்சி வெடித்தது. இறைவன் மிகப்பெரியவன் என்ற முழக்கம் கோட்டையை அதிரச் செய்தது. உறங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும், தளபதிகளும், வீரர்களும் நிலை குலைந்தனர். பலர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.

புரட்சியில் 14- ஆங்கிலேய அதிகாரிகள் உட்பட சுமார் 191- ஆங்கிலேயர்கள் கொல்லப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்களும் உண்டு. ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அதே நேரம் வேலூர் கோட்டைக்குள் இருந்த ஆங்கிலேய பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப் பட்டார்கள். புரட்சியாளர்கள் கண்ணியமாக நடந்து கொண்டனர்.

வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்புவின் புலி கொடி ஏற்றப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து வரலாறு திரும்பியது. ஆனால் நீடிக்கவில்லை!

திசை மாறிய புரட்சி
-----------------------------

வேலூர் கோட்டையை வசப்படுத்திய புரட்சி யாளர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உற் சாகத்திலும், கட்டுப்பாட்டை இழந்தனர். கோட்டைக் குள்ளிருந்த ஆங்கிலேயர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தினர். கோட்டைக்கு வெளியேயிருந்த பொதுமக்களும் உள்ளே வந்தனர். புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல், கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களை கட்டுப்படுத்த திப்புவின் பிள்ளைகள் தவறிவிட்டனர்.

அதற்குள் வேலூரிலிருந்து 16- கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஆற்காட்டிலிருந்து, புரட்சியை ஒடுக்க ஆங்கிலேயப் படை விரைந்து வந்தது. இலக்குகளை மறந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புரட்சியாளர்களை அடக்க மிக எளிதாக, இன்னொரு வாசல் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர்.
உள்ளே நுழைந்த ஆங்கிலேயப் படைகள் புரட்சி யாளர்களை தேடி, தேடி கொன்றது. எட்டு மணி நேரத்தில் வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீட்டனர். ஒரே நாளில் வேலூர் புரட்சி ஒடுக்கப்பட்டது.

திப்புவின் வாரிசுகளுக்கு பாதுகாப்பாக இருந்த புரட்சியாளர்கள் கோட்டையின் மதில் சுவரில் நிற்கவைத்து, பீரங்கிகளால் தூள், தூளாக்கப் பட்டனர். கோட்டையில் ஏற்றப்பட்ட திப்புவின் கொடி இறக்கப் பட்டு, மீண்டும் ஆங்கிலேயர் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை தொடங்கியது
--------------------------------------

வேலூர் புரட்சிக்கான காரணங்களை ஆராய, புரட்சி முடிந்த இரண்டு நாள் கழித்து, ஜுலை 12, 1806 அன்று விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை ஆகஸ்ட் 9, 1806-ல் சமர்பிக்கப்பட்டது. ஆங்கிலேயப் படையிலிருந்த இந்திய வீரர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டதுதான், புரட்சிக்கான மூலக்காரணம் என்றும், அதை திப்புவின் வாரிசுகள் புரட்சியாக மாற்றினார்கள் என்றும் விசாரணை அறிக்கை கூறியது.

புரட்சியில் ஈடுபட்ட முன்னணி வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. புரட்சியை அடக்கிய வீரர்களுக்கு சலுகைகளும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

மீண்டும் நாடுகடத்தல்
---------------------------------

திப்புவின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளும், மானியமும் குறைக்கப்பட்டது. அவர் களை தென்னிந்தியாவில் எங்கு வைத்திருந்தாலும் அது ஆபத்து என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், திப்புவின் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் வங்காளத்துக்கு நாடு கடத்தினர். அவர்களை சார்ந்த படையினர் மற்றும் ஆதரவாளர்களை திருநெல்வேலி உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு அனுப்பி, அங்கேயே தங்கவைத்து, அவர்களின் தொடர்புகளை சிதறடித்தனர்.

ஜனவரி 20, 1807 அன்று வேலூரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு திப்புவின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கொல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர். திப்புவின் அரச குடும்பத்து பெண்களில் விருப்பமுள்ளவர்கள் மைசூரிலும் மற்றவர்கள் வேலூரிலும் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

கொல்கத்தாவில் தங்க வைக்கப்பட்டவர்கள் காலப் போக்கில் அங்கேயே உயிர்துறந்து அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் வறுமையிலும் புறக்கணிப்பிலும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.
17 -ஆண்டுகளாக ஆங்கிலேயரை குலை நடுங்க வைத்த திப்பு தன் 39-வது வயதிலேயே உயிர் தியாகியாகி வீரமரணம் அடைந்தது ஒரு வரலாற்று சோகமாகும். காவிரியே கண்ணீர் சிந்தும் கனத்த நினைவுகளோடு திப்பு சுல்தானின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் சுதந்திர எரிமலையின் தீ சுவாலைகள் மட்டும் அடங்கவில்லை.

ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.

ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். திப்பு என்றால் புலி என்று அர்த்தம். ஆம்! சிங்கமும், புலியும் பிறந்த பரம்பரையில் வந்தவர்கள் சீறுவதும், பாய்ந்து தாக்குவதும் இயல்புதானே!

நாடு கடத்தல்!
---------------------
திப்பு கொல்லப்பட்ட பிறகு, அவரது பிள்ளைகள் மைசூரிலிருந்து வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அங்கேயே இருந்தால் பரம்பரை போர் தொடரும் என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால் வேலூர் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இக்கோட்டை கி.பி 1295-ல் கட்டப்பட்டது. திப்புவின் பிள்ளைகளை சிறை வைப்பதாக இருந்தாலும் கூட கோட்டையில்தான் அவர்களை சிறையிட முடிந்தது! சிறை அவர்களுக்கு அரண்மனையாய் இருந்தது.

திப்புவின் ஆட்சிக்காலம் போரிலும், போருக்கு பிந்தைய நிவாரண பணிகளிலும், அடுத்த கட்ட போருக்கான ஆயத்தப் பணிகளிலுமே கழிந்தன. இடையிடையே தன் அருமை மனைவியோடு கழித்த பேரின்ப பொழுதுகளும் உண்டு. அதன் சாட்சியாக 12 ஆண் பிள்ளைகள், 8 பெண் பிள்ளைகள் அவரது வாரிசுகளாக வாழ்ந்தனர். இவர்களில் பலர் அரச வாழ்க்கையை துறந்து, அரசியல் கைதிகளாக வேலூரில் சிறையிடப்பட்டார்கள். திப்புவின் அமைச்சரவை சகாக்கள் 24 பேர், அவர்களை சார்ந்த அலுவலர்கள், உதவியாளர்கள், தளபதிகள், உறவினர்கள் என பெரும் கூட்டமே சிறைவைக்கப் பட்டது.

கனவுக் கோட்டை
---------------------------

திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதரை மைசூரின் ஆட்சியாளராக நியமிக்க ஆங்கிலயர்களிடம் சிலர் பேசினார்கள். நெருப்பை தங்கள் தலையில் சுமக்க அவர்கள் தயாரில்லை. ஆயினும், அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்ட திப்புவின் பிள்ளைகளுக்கு ஆறுதல் தரும் பொருட்டு மாதந்தோறும் மான்யம் வழங்கப்பட்டது.

இதன் நோக்கம் புரட்சிகர சிந்தனைகள் வரக்கூடாது என்பதே. ஆனால் அமைதியாய் ஒரு புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது. திப்புவின் வாரிசுகள், அமைச்சர்கள், தளபதிகள், உதவியாளர்கள் உறவினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கோட்டையில் சிறையிலிருந்த போது, மைசூரிலிருந்து வேலூருக்கு ஏராளமானோர் குடிபெயர்ந்தனர்.

இந்த மக்களின் இடம் பெயர்வு குறித்து ஆங்கிலேயர்கள் பெரிதாக கவலைப்படவில்லை! இவர்கள் வேலூரிலும் அதனை சுற்றியும் வாழத் தொடங்கினர். இதுதான் பின்னாளில் பெரும் புரட்சிக்கு உதவியாக இருந்தது.

ராணுவ குழப்பம்
-------------------------

திப்பு கொல்லப்பட்ட ஏழாண்டுகள் அமைதியாக நகர்ந்தது. தென்னிந்தியாவையும், கிழக்கிந்தி யாவையும் ஏறத்தாழ வசப்படுத்திவிட்ட ஆங்கிலேயர்கள், வட இந்தியாவையும், மேற்கிந்தியாவையும் தங்கள் முழுமையான ஆளுகைக்குள் கொண்டு வர கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ராணுவம் இரு பிரிவுகளாக இருந்தது. ஒரு பிரிவில் ஆங்கிலேயர்கள் மட்டுமிருந்தனர். மற்றொரு பிரிவில் இந்தியர்கள் இருந்தனர். இதில் மலையாள முஸ்லிம்களும், தெலுங்கர்களும், குறைவான எண்ணிக்கையில் தமிழர்களும் இருந்தனர்.

ஆயிரம் பேர் கொண்ட இந்திய படைக்கு ஒரு ஆங்கிலேயரே தளபதியாக இருப்பார். இந்திய வீரர்கள் எவ்வளவு தான் தியாகம் செய்தாலும் பெரிய பதவிகளுக்கு வரமுடியாது. நல்ல சம்பளத்தை பெற முடியாது. இது படையினரிடையே அதிருப்தியை வளர்த்தது. இது தவிர ராணுவத்தில் புதிய விதிகளும், கட்டுப்பாடுகளும் புகுத்தப்பட்டன. இந்துக்கள் திருநீறு பூசக்கூடாது என்றும், கடுக்கண்கள் அணியக் கூடாது என்றும், முஸ்லிம்கள் தாடி வைக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது.

மத உணர்வுகளில் ஆழமான நம்பிக்கைக் கொண்ட இந்திய வீரர்கள் கொந்தளித்தனர். மேலும் மார்பில் சிலுவை போன்ற ஒரு பொருளை அணிய வேண்டுமென்றும், ஐரோப்பியர் அணிவதைப் போன்ற தொப்பிகளை போட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த புதிய கட்டளைகளை இந்திய வீரர்கள் அநேகமானோர் ஏற்க மறுத்தனர். மீறினால், சிறையிலடைப்போம் என்று ஆங்கிலேயர்கள் மிரட்டினர். இதனால் கோபமுற்ற ஒரு இந்திய வீரர், மேஜர் போஸ் என்ற அதிகாரியை தனது துப்பாக்கியால் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆனது.

வீர ஊர் வேலூர்
-----------------------
1806- ஏப்ரல், மே மாதங்களில் வேலூரி லிருந்த இந்திய வீரர்களுக்கு ஐரோப்பிய மாதிரி தொப்பிகள் வரவழைக்கப்பட்டு அனைவரும் அணியும் படி கட்டாயப்படுத்தப்பட் டனர். இவையனைத்தையும் சிறையிலிருந்த திப்புவின் வாரிசுகள் கவனித்துக் கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய சிப்பாய்கள், தொப்பிகளை அணிய மாட்டோம் என்று கூறி, தலையில் கைக்குட்டைகளை கட்டிக் கொண்டு கலகம் செய்தனர். பலர் கைது செய்யப் பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றவர்கள் அன்று மாலை ஆயுதங்களை எடுக்க மறுத்தனர். எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தாதீர்கள் என்று இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கலகத்துக்கு காரணமான ஒரு இந்து வீரருக்கும், ஒரு முஸ்லிம் வீரருக்கும் தலா 900 கசையடிகள் வழங்கப்பட்டது. மேலும் 19 பேருக்கு தலா 500 கசையடிகள் வழங்கப்பட்டது. புரட்சியின் முதல் கட்டமாக நடைபெறும் சம்பவங்களை கவனித்துக் கொண்டிருந்த திப்புவின் வாரிசுகளும், அவர்களை சார்ந்த போர் நிபுணர்களும் இதை ஒருமுகப்படுத்தும் வேலைகளை தொடங்கினர்.

1806- ஜுன் 17 அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை தொடங்குவது பற்றி யோசிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜுலை மாதம் ஒத்திவைப்பதாக முடிவு செய்து வேலைகள் தொடங்கப்பட்டன. திப்புவின் மகன்களில் மூன்றாவது மகன் மொகைதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் இப்புரட்சியில் நேரடியாக பங்கேற்றனர். மூத்தவர் பத்தே ஹைதர் தலைமை வகித்தார். வேலூரில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, சிறையிலிருந்து விடுதலையாவது அவர்களது முதல் திட்டமாக இருந்தது. அடுத்து வெளியிலிருந்து ராணுவ உதவிகளை பெற்று மீண்டும் மைசூரில் ஆட்சியை நிறுவுவது அவர்களது இலக்காக இருந்தது.

அதற்கேற்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. புரட்சியின் போது, கோட்டைக்கு வெளியே வாழும் மக்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவர்களை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டது. கோட்டைக்குள் எழுந்திருக்கும் பரபரப்புகளை மோப்பம் பிடித்து, ஆங்கிலேயர்கள் உஷாராகிவிடக் கூடாது என்பதற்காக மற்றொரு திட்டமும் வகுக்கப்பட்டது.

திப்பு சுல்தானின் பிள்ளைகளுக்கு ஆங்கிலேயர்கள் திருமணம் செய்யும் அனுமதியை வழங்கியிருந்தார்கள். அதன்படி பலர் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது அந்த அனுமதி புரட்சிக்கும் பயன்பட்டது.திப்புவின் ஏழாவது மகள் நூருன்னிஸா பேகத்திற்கு 1806- ஜுலை 10 அன்று திருமணம் என திப்பு மகன்கள் அறிவித்தனர். அதையட்டி அரச முறைப்படி திருமணம் நடைபெற வேண்டுமென்பதால், இதை ஆங்கிலேயர்களிடம் முறைப்படி தெரிவித்து சில கெடுபிடிகளை தளர்த்திக் கொண்டனர். சீர் எடுப்பது, சடங்குகள் நடப்பது என்ற போர்வையில் தூதுச் செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகள் குறைந்தன. மிக ராஜதந்திரமாக காய்கள் நகர்த்தப் பட்டன. ஆங்கிலேய அதிகாரிகள் சிறைக்குள் ரோந்து வருவதும் குறைந்ததால், எல்லாம் வசதியாய் அமைந்தது. இந்திய வீரர்கள் மட்டுமே வலம்வந்து, ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தென் தமிழகத்தின் பாளையக்காரர்களும், மராட்டியர்களும் தங்கள் தூதுவர்களை வேலூர் கோட்டைக்கு அனுப்பி புரட்சி குறித்தும், அடுத்து இணைந்து பணியாற்றுவது குறித்தும் தகவல் பரிமாறிக் கொண்டனர். புரட்சி குறித்து பிரெஞ்சுகாரர்களுக்கும் ரகசிய தகவல் அனுப்பி உதவி கோரப்பட்டது.

பக்கீர்களின் பெரும் பிரச்சாரம்
---------------------------------------------

வெளியே மக்களை திரட்டவும், புரட்சியின் நம்பிக்கைகளை ஊட்டவும் திட்டம் தீட்டப்பட்டது. ஏழ்மை நிலையிலிருந்த இஸ்லாமிய அறிவு கொண்ட பலர் திரட்டப்பட்டு, அவர்களுக்கு; அரசியல் வகுப்பு எடுக்கப்பட்டது. இவர்களுக்கு பிரச்சார நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு களத்துக்கு அனுப்பப்பட்டனர். பள்ளிவாசல்கள், திருமண இடங்கள், மக்கள் கூடுமிடங்களில் இவர்கள் பாடல்களை பாடியும், புரட்சிகர உரை நிகழ்த்தியும் மக்களை தயார் படுத்தினார்கள். இவர்கள் ஃபக்கீர்கள் என அழைக்கப்பட்டனர்.

வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பக்கீர்களின் பிரச்சார யுத்தம் அனல் கக்கியது. இது படையினரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

வெடித்தது புரட்சி
-------------------------

1806- ஜுலை 9 அன்று வேலூர் கோட்டை பரபரப்பாக இருந்தது. நாளை திப்புவின் மகளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற நினைப்பில் ஆங்கிலேயர்கள் அலட்சியமாக இருந்தனர். முதல் நாள் திருமண சிறப்பு விருந்து நடைபெற்றது.

வேலூர் புரட்சியின் தளபதிகளில் ஒருவரான ஜமேதார் ஷேக்காஸீம் என்பவர் கோட்டையின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனக்கு நம்பகமான படை வீரர்களை முக்கிய இடங்களில் அமர்த்தினார். வழக்கத்திற்கு மாறாக, திருமண ஏற்பாடுகளை காரணம் காட்டி கூடுதல் வீரர்கள் கோட்டையில் தங்கினர். கோட்டையில் இருக்கும் பள்ளிவாசலில் உறுதி மொழியை பலர் எடுத்தனர். அந்த பள்ளிவாசல் வேலூர் புரட்சிக்கு களமாக இருந்தது. இப்போது தொழுகை மறுக்கப்படும் அதே பள்ளிவாசல் தான் அப்போதும் இன்னொரு புரட்சிக்காக காத்திருக்கிறது. அடுத்த நாள் ஜுலை 10 விடிகாலையில் அனைவரும் புரட்சிக்கு தயாரானார்கள்.அனைவரும் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபடுவது போல் நடித்தனர்.

அந்த நேரத்தில் புரட்சி குறித்து விபரம் அறியாதவர்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டும் நோக்கில், புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய வீரர்களை கொல்கிறார்கள் என செய்தி பரப்பினர். இது ஏற்கெனவே போடப்பட்ட தந்திரத் திட்டங்களில் ஒன்றாகும். அது நன்றாகவே வேலை செய்தது. கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டனர். புரட்சி வெடித்தது. இறைவன் மிகப்பெரியவன் என்ற முழக்கம் கோட்டையை அதிரச் செய்தது. உறங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும், தளபதிகளும், வீரர்களும் நிலை குலைந்தனர். பலர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.

புரட்சியில் 14- ஆங்கிலேய அதிகாரிகள் உட்பட சுமார் 191- ஆங்கிலேயர்கள் கொல்லப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்களும் உண்டு. ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அதே நேரம் வேலூர் கோட்டைக்குள் இருந்த ஆங்கிலேய பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப் பட்டார்கள். புரட்சியாளர்கள் கண்ணியமாக நடந்து கொண்டனர்.

வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்புவின் புலி கொடி ஏற்றப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து வரலாறு திரும்பியது. ஆனால் நீடிக்கவில்லை!

திசை மாறிய புரட்சி
-----------------------------

வேலூர் கோட்டையை வசப்படுத்திய புரட்சி யாளர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உற் சாகத்திலும், கட்டுப்பாட்டை இழந்தனர். கோட்டைக் குள்ளிருந்த ஆங்கிலேயர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தினர். கோட்டைக்கு வெளியேயிருந்த பொதுமக்களும் உள்ளே வந்தனர். புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல், கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களை கட்டுப்படுத்த திப்புவின் பிள்ளைகள் தவறிவிட்டனர்.

அதற்குள் வேலூரிலிருந்து 16- கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஆற்காட்டிலிருந்து, புரட்சியை ஒடுக்க ஆங்கிலேயப் படை விரைந்து வந்தது. இலக்குகளை மறந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புரட்சியாளர்களை அடக்க மிக எளிதாக, இன்னொரு வாசல் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர்.
உள்ளே நுழைந்த ஆங்கிலேயப் படைகள் புரட்சி யாளர்களை தேடி, தேடி கொன்றது. எட்டு மணி நேரத்தில் வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீட்டனர். ஒரே நாளில் வேலூர் புரட்சி ஒடுக்கப்பட்டது.

திப்புவின் வாரிசுகளுக்கு பாதுகாப்பாக இருந்த புரட்சியாளர்கள் கோட்டையின் மதில் சுவரில் நிற்கவைத்து, பீரங்கிகளால் தூள், தூளாக்கப் பட்டனர். கோட்டையில் ஏற்றப்பட்ட திப்புவின் கொடி இறக்கப் பட்டு, மீண்டும் ஆங்கிலேயர் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை தொடங்கியது
--------------------------------------

வேலூர் புரட்சிக்கான காரணங்களை ஆராய, புரட்சி முடிந்த இரண்டு நாள் கழித்து, ஜுலை 12, 1806 அன்று விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை ஆகஸ்ட் 9, 1806-ல் சமர்பிக்கப்பட்டது. ஆங்கிலேயப் படையிலிருந்த இந்திய வீரர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டதுதான், புரட்சிக்கான மூலக்காரணம் என்றும், அதை திப்புவின் வாரிசுகள் புரட்சியாக மாற்றினார்கள் என்றும் விசாரணை அறிக்கை கூறியது.

புரட்சியில் ஈடுபட்ட முன்னணி வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. புரட்சியை அடக்கிய வீரர்களுக்கு சலுகைகளும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

மீண்டும் நாடுகடத்தல்
---------------------------------

திப்புவின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளும், மானியமும் குறைக்கப்பட்டது. அவர் களை தென்னிந்தியாவில் எங்கு வைத்திருந்தாலும் அது ஆபத்து என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், திப்புவின் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் வங்காளத்துக்கு நாடு கடத்தினர். அவர்களை சார்ந்த படையினர் மற்றும் ஆதரவாளர்களை திருநெல்வேலி உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு அனுப்பி, அங்கேயே தங்கவைத்து, அவர்களின் தொடர்புகளை சிதறடித்தனர்.

ஜனவரி 20, 1807 அன்று வேலூரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு திப்புவின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கொல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர். திப்புவின் அரச குடும்பத்து பெண்களில் விருப்பமுள்ளவர்கள் மைசூரிலும் மற்றவர்கள் வேலூரிலும் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

கொல்கத்தாவில் தங்க வைக்கப்பட்டவர்கள் காலப் போக்கில் அங்கேயே உயிர்துறந்து அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் வறுமையிலும் புறக்கணிப்பிலும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.
Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

இரத்தக் கொதிப்பு பற்றிய சில யோசனைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:11 PM | Best Blogger Tips
* இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.

* சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்து விட்டுப் பழக வேண்டும். இரத்தக் கொதிப்பு இரத்தக் குழாய்களையும் இருதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் இரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.

* தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். இரத்த ஓட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது பெரிதும் துணை செய்யும்.

* அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் இரத்தக் கொதிப்பை அதிகம் ஆக்கும். மன வேலைகளில் ஈடுபடும் பொழுது இரண்டு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிஷமாவது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் அறையிலாவது சற்று நடமாடினால் போதும். உடலுழைப்பின் பொழுது, உணவு வேளைக்குப் பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

* மலம் தினசரி கழிய வேண்டும். மலச்சிக்கல் அதிகம் ஆகிவிட்டால், இரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது. இரண்டு தடவையாவது தினசரி மலம் கழிய வேண்டும். ஆறு தடவை ஜலபாதை செய்ய வேண்டும். நன்றாக வேர்வையும் வர வேண்டும்.

* உடலில் ஆல்கலைன் சத்து அதிகம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இது இழையங்களைத் தூய்மைப் படுத்துவதோடு, இளஞ் செல்லுகளை வளர்த்துப் புத்துயிர் கொடுக்கிறது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் இவை எல்லாம் நல்ல காரச் சத்துள்ள உணவுகள்.

* இறைச்சி சாப்பிடக் கூடாது. இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம், கொலஸ்ட்ரால் என்ற வழவழப்பான ஒரு பொருள் இரத்த நாடிகளைத் தடிக்கச் செய்வதே. இந்தக் கொலஸ்ட்ரால் இறைச்சியில் அதிகம் உண்டு. ஆகவே, இறைச்சிக்குப் பதிலாக பால், பாலாடை, அவரை, பட்டாணி, பீன்ஸ், கொட்டைகள், முழுத் தானியங்கள் உபயோகிக்க வேண்டும்.

* இரத்தக் கொதிப்பை வெள்ளைப் பூண்டினால் குறையுங்கள். இதனால் இரத்தக் கொதிப்பு விரைவில் தணிகிறது. பதார்த்தங்களுக்கு ருசி கொடுக்கவும், சூப் வகைகளுக்கும் வெள்ளைப்பூண்டு உபயோகமாகிறது. அரைப் பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.

* மனக்கிளர்ச்சி கூடாது. கோபம், பொறாமை, பகை, கவலை இவை எல்லாம் மூளைக் கோளங்களைப் பாதிப்பதோடல்லாமல், இரத்தக் கொதிப்பையும் அதிகமாக்குகிறது. எப்பொழுதும் மன அமைதி பெற்று, சந்தோஷமாயிருங்கள்.

 Via FB   Karthikeyan Mathan

உணவைக் குறைத்து உடலை அழகாக்க..!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:10 PM | Best Blogger Tips
உணவைக் குறைத்து உடலை அழகாக்க..!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 

பால தண்டாயுதபாணி ...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:03 PM | Best Blogger Tips
பால தண்டாயுதபாணி ... 

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம்.  கிடைப்பது மிக புண்ணியம். தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.
இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது.  விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும்.  முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர்.  பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.  ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள்  போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும்.  இது போகரின் கை வண்ணம்.

அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார்.  இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது.  அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது.  ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல்.  இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம். தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.
இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.
 
Via FB சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
 

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:03 PM | Best Blogger Tips
தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட் ..

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை 
தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..

பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .. 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
சாம்பிளுக்கு சில படங்கள்.

பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?

தோல் வறண்டு போகும் 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் 
அரிப்பு வரும் ..
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
சாம்பிளுக்க்கு மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்க்கும் 

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள் 

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை
தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..

பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
சாம்பிளுக்கு சில படங்கள்.

பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?

தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
அரிப்பு வரும் ..
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
சாம்பிளுக்க்கு மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்க்கும்

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.
 
Via Fb ஆரோக்கியமான வாழ்வு