இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.

ஒரு கட்டுமான எஞ்சினியர்…
13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…
.
ஒரு முக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்..
.
ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்கவில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை…
.
இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…
.
ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து,
மேலே இருந்து,கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார்,
அதை எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
.
ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
.
அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு… கொத்தனார் மும்முரமாக இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை இழந்து
ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு,
மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும் அப்படித்தான்….
மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...
இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...
அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...
ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.
.
புரிந்து கொள்ளுங்கள்..
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏




🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷

பெருந்தலைவர் காமராசர்.
💓❤️💓❤️💓❤️💓❤️💓
இந்தப் பெருந்தலைவன்
பிறந்தபோது
வானத்தில் துருவ நட்சத்திரம்
எதுவும் தென்படவில்லை.
ஒரு தேவதூதன்
தோன்றியதாய்
தேவர்கள் பூமாரி எதுவும்
பொழியவில்லை.
ஒரு ஓலைக்குடிசையில்
ஏழை வீட்டில்
எங்கள் நாளைய தலைவன்
அவதரித்தான்.
கருப்பை நிறமாய்
உடுத்திக்கொண்டு
அடிமை இருட்டை விரட்ட
அவன் பிறந்தான்.
காந்திய வழியை
ஏற்றுக்கொண்டு
கதராடையில் கடவுளாய்
தினம் நடந்தான்.
எளிமை நேர்மை
அணு அளவும் குறையா
அரசியல் தூய்மை.
வறுமை நெருப்பில்
வாடிய போதும்
வளைந்து கொடுக்கா
வணங்கா முடியின் வாய்மை.![]()
பெருந்தலைவர் என்ற
பெயரைச் சொன்னால்
உலகம் வியக்கும்
ஒப்பற்ற தலைமை.![]()
பதவி நூறு தேடி வந்தும்
பல்லிளித்து ஓடவில்லை.
பகைவர்களிடம் பணிந்து சென்று
பல்லக்கும் சுமக்கவில்லை.
தனி மனித ஒழுக்கத்தின்
புனிதாக வலம் வந்தார்.
எதிரிகளும் போற்றுகின்ற
எடுத்துக்காட்டாய் அவர் நின்றார்.
ஆடு மாடு மேய்த்த கூட்டம்
ஆனா...
ஆவன்னாவைப் படிக்கவே,
கால்நடையாய்த் திரிந்த மக்கள்
எழுதுகோலைப் பிடிக்கவே
தேடித் தேடி மக்களிடம்
தெருத்தெருவாய் நடந்திட்டார்.
ஓடிச்சென்று கையேந்தி
அறிவை வளர்க்கும்
வழிகண்டார்.
ஊர்கள்தோரும் பாடசாலை
உருவாக்கியது கல்விச்சாலை.
தடைகள் நூறு வந்தபோதும்
அதைத் தகர்த்தெறிந்தது
தற்குறியின் மூளை.
அறிவுப் பசியைத் தீர்த்து வைக்க
ஆலயமாய்ப் பள்ளிகள்.
இருந்தும்
வயிற்றுப் பசியைக் காட்டிக்காட்டி
வர மறுத்தன பிள்ளைகள்.
மெத்தப் படித்த மேதையெல்லாம்
புத்தகம் மட்டுமே போதுமென்றார்.
இந்த
படிக்காத பாமரனோ
வயிற்றுச் சோறு போடவேண்டுமென்றார்.
புழுதி மைந்தன் புத்தியில்
உதித்த புதிய திட்டமே.
வறுமை நோயை விரட்டவந்த
மதிய உணவுத் திட்டமே.
பசித்து வந்த வயிறு எல்லாம்
புசித்து மகிழ்ந்து உண்டது.
நிஜத்தில் வந்து நிற்கின்ற
கடவுள் என்றே சொன்னது.
அஃறிணையாய் இருந்த கூட்டம்
அகரம் படித்துச் சென்றது.
அறிவினிலே சிறகு விரித்துச்
சிகரம் தாண்டி வென்றது.
பொதுவாழ்வில் இவர் போல
ஒருவர் எவரும் இல்லையே.
இரண்டு வேட்டி சட்டை தவிர வேறு
சொத்து சேர்க்கவில்லையே.![]()
தனக்காக என்று எதுவும்
பதுக்கிவைத்ததில்லையே.
தலையணை கூட இவர்
தலைக்கு வைத்ததில்லை.
ஆட்சி அதிகாரம் வந்தபோதும்
காட்சி மாறவில்லையே.
பல அவமானம் கண்டபோதும்
கட்சி மாறவில்லையே.
ஆள் பிடித்துக் கால் பிடித்து
அடிமையான தில்லையே.
தோள்கொடுத்துத் தாங்கி
நிற்பார்
இவர் எவர் காலையும்
வாரவில்லையே.
வாழ்ந்து போகட்டும் விட்டுவிடு இவர் வாய்மொழியின்
மந்திரம்.
ஆகட்டும் பார்க்கலாம் -
இதுதான் இவர்அரசியலின் தந்திரம்.



🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷

யோகி பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர்.
அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார்.
தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர்.
வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார்.
மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது.
ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.
இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.
அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார்.
உடலில் தேவையான அளவிற்கு வியானப் பிராணா வை அவர் தக்கவைத்துச் சென்றதால், இத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும்.

அவர் உடல் (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்
இன்றும் அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது.
இவரது குரு யுக்தேஸ்வரகிரியும் இவரை போலவே தன் உடலை துறக்க போவதை முன்கூட்டியே அறிவித்தார். மேலும் அவர் உடலை துறந்த மறுநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.
ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைக்கப்படும்.
தன் உடலை ஒரு சட்டையை கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது மரணமல்ல-சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு*. அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை.
அவ்வளவுதான்.
கபீர் தாசர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன.
ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் மறைந்தது.
பட்டினத்தார் பிரம்பு கூடைக்குள் புகுந்து திருவொற்றியூர் கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டி அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார்.
தன் அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் மறைந்த இடத்தில ஒரு சிவலிங்கம் இருந்தது.
மாணிக்கவாசகர் சிதம்பரம் நடராஜர் சன்னதி கருவறையில் வெட்டவெளியில் ( வான் பொருள்-ஆகாயம் ) பலர் முன்னிலையில் கலந்து விட்டார்.
150 ஆண்டுகளுக்கு முன்பு இராமலிங்கசுவாமிகள் வடலூரில் ஒருதனி அறையில் ஒளிஉடலோடு மறைந்து விட்டார்.
பரமஹம்ஸயோகனந்தரின் யோகா உடல் 33 நாட்கள் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டது.
ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷