எது தானம் ? எது தர்மம் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips
Image result for எது தானம் ? எது தர்மம் ?
~~~~~~~~~~~~~~~~~~~
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.
Image result for எது தானம் ? எது தர்மம் ?
இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.
சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.
பரம்பொருளே.. 
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? 
இது அநீதி அல்லவா? என
கேட்டார் சூரியத் தேவன்.
இறை சிரித்தது.
சூரியனே... 
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. 
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?
கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.
கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !

 நன்றி இணையம்

எல்லா_நாளும் பிரதோஷம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips
Related imageRelated image
# வருடத்தின்_எல்லா_நாளும் பிரதோஷம்! அதிசய கோயில்.
பொதுவாக ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும். லிங்கத்திற்கு எதிரில் நந்தி இருக்கும். ஆனால் இந்த கோயிலில், ஆவுடையார் மீது நந்தி, நந்தியின் மீது சிறிய லிங்கமாக ஈசன். வீற்றிருக்கும் இது போன்ற அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. அதனால் இந்த கோயிலில் உள்ள நந்தியையும் சிவனையும் தரிசிக்கும் எல்லா நாளுமே பிரதோஷ நாளாக கருதப்படும். மேலும் இந்த கோயில் மலை மீது உள்ள குகையில் அமைந்திருக்கிறது. கோயிலை கட்டியது சித்தர் பெருமக்கள் என்கிறார்கள்.
இன்றும் இங்கு சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மிக பிரமாண்டமான ஏழு கற் பாறைகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு இசை என ஏழு ஸ்வரங்களை தரும் அதிசய கல்லாக இருக்கிறது. ஆயிரம் அடி உயர மலையில் பிணிகளை போக்கும் அரிய சுணைகள் இருக்கிறது.
நந்தி இருக்கும் குகைக்கு மேலே உள்ள இன்னொரு குகையில் கிருஷ்ணரின் சிலை இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இத்தனை பெருமைகளை கொண்ட இந்த மலை வாலாஜா அருகே இருக்கிறது. இதன் பெயர் அனந்தலை மலை. ஆனால் இங்கு இயங்கி வரும் கல்குவாரிகள் இந்த அற்புத மலை மற்றும் சிவன் கோயில் உள்ள குகையை வெடி வைத்து தகர்க்க திட்டமிட்டு அது சிவ பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம். அதை தடுப்பதற்கு ஒரே வழி நாம் அணி அணியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலமே தடுக்க முடியும். சித்தர்கள் உருவாக்கிய இந்த அரிய சிவாலயத்தை காப்போம், நந்தியின் அருளை பெறுவோம். நன்றி!
ஓம் நமச்சிவாய.