*நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:34 | Best Blogger Tips

 



தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். *நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களில் முக்கியமானவை* பதினொன்று ஆகும்.

🚩எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.



🚩 *திருவான்மியூர் மருந்தீஸ்வரர்* கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.


🚩 *திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்* கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.


🚩 *ஸ்ரீவாஞ்சியம்* அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.


🚩நான்காவது ஸ்தலம் *திருவாவடுதுறை.* இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.



🚩 *திருப்பைஞ்சீலி*, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.


🚩 *திருக்கடையூரில் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்*


🚩 *காளஹஸ்தி* ஆறாவது ஸ்தலம் . பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்கஏணியில் (golden ladder) ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தைக் குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதைத் தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.


🚩 *திருமழபாடி*. திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.

🚩 *திருக்கடையூர்* இதன் தலபுராணம் வித்தியாசமானது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.

🚩ஒன்பதாவது ஸ்தலம் *திருமழபாடி* திருவையாறு அருகில் இருக்கிறது.

🚩பின் பத்தாவது ஸ்தலம் *திருவெங்காடு*. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர்.


🚩அடுத்து *திருப்புரம்பியம்* பதினோராவது ஸ்தலம். இங்கும் நவக்கிரகம் கிடையாது

சிவாய நம 🙏🏻
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயமே

🙏இறைபணியில்🙏🏻

நன்றி இணையம்