*யார் பலசாலி?*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:55 | Best Blogger Tips

 

*யார் பலசாலி?*

நான்தான் பலசாலி’ ‘நான்தான் பலசாலிஎன்று சொல்லி சிங்கம் எப்பொழுது பார்த்தாலும் காடு மேடெல்லாம் தற்பெறுமை அடித்துக் கொண்டிருந்தது.

இந்த செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அப்படியிருந்தும் சிங்கத்தின் தற்பெருமையை ஒருவரும் அடக்கமுடியாமல் அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அந்தக் காட்டில் ஒரு குளம் இருந்தது.

அதில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் குளத்தை ஒட்டி ஒரு நாவல் மரம் இருந்தது.

அதில் விச்சித்திரன் என்ற அணில் வாழ்ந்து வந்தது.

நட்சத்திர ஆமையும், விசித்திரனும் உயிர்த் தேழர்களாகப் பழகி வந்தனர்.

சிங்கம், அணிலைப் பார்த்துமூடனே நான் கீழே இருக்கிறேன்.

நீ மரியாதை இல்லாமல் மேலே இருப்பதா?

நீ என்னைவிட பெரியவனா?

கீழே வந்து என்னை வணங்கி நில்.

இல்லை தோலை உரித்து கழுகுக்குப் போட்டு விடுவேன்.’ என்று அதட்டியது.

அணில் பயந்து போய்ச் சிங்கம் சொன்னது போல் நடந்தது.

சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே வந்தது நட்சத்திர ஆமை.

தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, ‘வசித்திரா சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டுத் தலைகுனிந்து நிற்கறே?

உலகில் விலிமை உள்ளவர்கள் வலிமை அற்றவர்களை அடக்கி ஆள்வதுதானே வழக்கம்?

யானையிடம் இப்படி அதனால் சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.

நண்பா சிறியவர் பெரியவர் என்றாலும் தன்மானம் பொதுதானே?

தேவை இல்லாமல் இன்னொருவருக்கு அடங்கிசாலம்போடுவது கேவலம் இல்லையா?

அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள்தானே? என்று கொதித்தது.

நன்பா உன் ஆதங்கம் புரிகிறது.




இதன் கொட்டத்தை அடக்கத்தான் வேண்டும்.

என் அம்மா இதன் கெடுபிடிக்கு அடங்க மறுத்ததற்காக அதை கொன்றுவிட்டது,

எனக்கும் இதைப் பழிக்குப்பழி வாங்க தான் ஆசை.

அதை எப்படி செய்யலாம்?’

அப்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.

நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன்.

சிங்கத்தின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்.

அதோ அந்த ஆலமரத்தடியில் தானே சிங்கம் உறங்கும்.

நாளை அங்கே வந்துவிடுங்கள்.

யார் பலசாலிஎன்று நிரூபிக்கிறேன்என்று ஆலமரத்தில் சென்று தங்கியது.

வழக்கம்போல சிங்கம் ஆலமரத்தடியில் இளைப்பாறியது.

ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது.

அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.

எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாகச் சென்று நுழைந்து கொண்டு குடைந்தும் கடித்தும் இம்சைப்படுத்துயது.

சிங்கம் வலி தாங்க முடியாமல், ‘அய்யோ... அய்யோ... வலி உயிர்போகுதே.

காப்பாத்துங்க காப்பாத்துங்கஎன்று அலறியது.

நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும்

என்று சிறித்தது எறும்பு.

அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்து சிரித்துக் கூத்தாடியன.

ஒரு கட்டெறும்பிடம் தன்பலம் பலிக்காமல் போகவே, சிங்கம் தன் ஆணவத்தை கைவிட்டது.

ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி கூறவே, எறும்பு சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது.

அன்றில் இருந்து சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது.

 

நன்றி இணையம்