*"மகாபாரதம்* *உணர்த்தும்*, *உண்மைகள்.”*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:46 | Best Blogger Tips





*"மகாபாரதம்*

*உணர்த்தும்*,

*உண்மைகள்.”*

மோகத்தில்

வீழ்ந்துவிட்டால்

மொத்தமாய்

வீழ்ந்திடுவாய்!

*சாந்தனுவாய்.!*

சத்தியம்

செய்துவிட்டால்

சங்கடத்தில்

மாட்டிடுவாய்

*கங்கை மைந்தானாய்.!*

முற்பகல்

செய்யின்

பிற்பகல்

விளையும்.

*பாண்டுவாய்.!*

வஞ்சனை

நெஞ்சில்

கொண்டால்

வாழ்வனைத்தும்

வீணாகும்.

*சகுனியாய்.!*

ஒவ்வொரு

வினைக்கும்

எதிர்வினை

உண்டு.

*குந்தியாய்.!*

குரோதம்

கொண்டால்,

விரோதம்

பிறக்கும்.

*திருதராஷ்டிரனாய்.!*

பெற்றோர்கள்

செய்யும்

பாவங்கள்,

பிள்ளைகளை

பாதிக்கும்.

*கௌரவர்களாய்.!*

பேராசை

உண்டாக்கும்,

பெரும்

அழிவினையே.

*துரியோதனனாய்.!*

கூடா நட்பு,

கேடாய்

முடியும்.

*கர்ணனாய்.!*

சொல்லும்

வார்த்தை,

கொல்லும்

ஓர்நாள் .

*பாஞ்சாலியாய்.!*

தலைக்கணம்

கொண்டால்,

தர்மமும்

தோற்கும்.

*யுதிஷ்டிரனாய்.!*

பலம் மட்டுமே,

பலன் தராது .

*பீமனாய்.!*

இருப்பவர்

இருந்தால்,

கிடைப்பதெல்லாம்

வெற்றியே.

*அர்ஜூனனாய்.!*

சாஸ்திரம்

அறிந்தாலும்,

சமயத்தில்

உதவாது.

*சகாதேவனாய்.!*

விவேகமில்லா

வேகம்,

வெற்றியை

ஈட்டாது.

*அபிமன்யூவாய்.!*

அண்ணனாலும்

அரசனாலும்

நீதி தவறாத

*விதுரனாய்.!*

தவமும்

அவமாய் போன

*காந்தாரியாய்.!*

பிறருக்கு வழிகாட்டி

தன் மகனின்

தரம் உயர்த்தா

*துரோணராய் .!*

சிரஞ்சீவி

வரம் பெற்றும்

சின்னாபின்னமான

*அஸ்வத்தாமனாய்.!*

நிதர்சனம்

உணர்ந்தவன்,

நெஞ்சம்

கலங்கிடான்.

*கண்ணனாய்.!.*

*_வாழ்க்கையும்_*

*_ஒரு பாரதம்தான்.!_*

*_வாழ்ந்திடலாம்_*

*_பகுத்தறிந்து.!_*

*வாழ்க வளமுடன்!*

நன்றி இணையம்