*"பக்குவம்" எப்போது வரும்?!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:38 | Best Blogger Tips



*"பக்குவம்எப்போது வரும்?!*

*கவியரசு கண்ணதாசன்:*

கல்லூரியில் படிக்கும்போதுஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.*

 கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு இருக்கும்போதுஒவ்வொரு வேடிக்கையிலும் வேதனை இருப்பது புரிகிறது.*


 இளமைக் கால ஆரவாரம்முதுமை அடைய குறைந்து நிதானம் வருகிறது.*

 இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாக தோன்றும்.*

 வாழ்வில் அடிபட்டு ஆண்டவனைச் சரணடைய வரும்போதுஅவனது மாபெரும் இயக்கம் பூமியில் நடப்பது புத்தியில் படும்.*

 பக்குவமற்றவனுக்கு நாத்திகம்அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.*

 பக்குவம் வர வரரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.*

 20 வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள். 40 வயதிற்கு மேலேதான்நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் 'தெளிவுஅவனுக்கு வரும்.*

 கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல்மர்மக் கதையை படிப்பதில்தான் கவனம் செலுத்துவான்.*

 காதலித்துத் தோற்றபின்தான்அவனுக்கு பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

 பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாதுஅங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.*

ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால்சிலையில் இருக்கும் ஜீவன் தெரியும்.*

 20 வயதில் உடல் எந்த உணவையும் ஜீரணிக்கிறதுநாற்பதிற்கு மேல் தானே 'இது வாய்வு’, பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.*

 பக்குவமற்ற நிலையில் 'எதையும் செய்யலாம்எப்படியும் செய்யலாம்’ என்கிற "துணிவுவரும்.*

நன்கு அனுபவப்பட்ட பிறகு, 'இதை செய்யலாம்’, 'இப்படித்தான் செய்யலாம்’ என்ற "தெளிவுவரும்.

 'ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்உள்ளம் உடலுக்குத் தாவிஉடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையேபக்குவப்பட்ட நிலை.*


தேளைப் பிடிக்கப் போகும் குழந்தைஅதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறதுஅதற்குப் பிறகுஅந்தத் தேளிடமே கூட 'அனுதாபம்காட்டும் "ஞானி"யாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.*

வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், 'நிதானம்அடிபட்டுப் போகிறதுஎனவே ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டுபின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.*

சரியாகக் கணக்கிட்டால்மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்முதற் கட்டம் ஒன்றுமே புரியாத 'உணர்ச்சிக் கூத்து'.*

இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாகஆனால் தெளிவாகத் தெரியாத, 'மயங்கிய நிலை'.*

மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியதுநமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்ற 'ஞானநிலை'.*

இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டுசுவாமி விவேகானந்தரைப் போல…*

அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.*

மற்றவர்கள்அனுபவத்தின் மூலமாகத் தானே பக்குவ நிலையை அடைய வேண்டி உள்ளது!*

எகிப்து மன்னன் பாரூக்பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதா பிமானம்’ என்றால் என்னஎன்பதை உணர முடிந்தது.*

ஆனால்அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன்கெளதம புத்தரான வரலாறும் உண்டு.*

தூக்கம்விழிப்பிற்கு நடுவே தடுமாறும் மனிதர்கள் அதிகம்தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.*

தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாதுவிழிப்பின் பலனும் கிட்டாது.*



'மனப்பக்குவம்’ என்பது "அனுபவங்கள்முற்றிப் பழுத்த நிலைஅந்த நிலையில் எதையுமே 'இல்லை’ என்று மறுக்கும் எண்ணம் வராது. 'இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.*

எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன்ஒரு கட்டுரையில் “நாத்திகன் கொள்கையில் தெளிவாக இருக்கிறான்ஆத்திகன் தான் தடுமாறுகிறான்.

கடவுள் இல்லை என்பதை நாத்திகன் உறுதியாகச் சொல்லுகிறான், “உண்டு என்பதற்கு ஆத்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லை” என்று எழுதியிருக்கிறார்நல்லது.*

'இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லைஎதைக் கேட்டாலும் 'இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்ஆனால் 'உண்டு’ என்று சொல்பவனுக்கு தான் அதை நிலைநாட்டப் போதிய அறிவு தேவைப்படும்.*

 “பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லைஎன்று குழந்தைகூட சொல்லி விடும்.*

ஆனால், “அடியிலே நீர்அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.*

பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலைபோட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.*

நாத்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்காரணம் எதைக் கேட்டாலும்எந்திரம் போல் 'இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.*

ஆனால்ஆத்திகனோவிபூதிக்கு ஒரு காரணம்குங்குமத்திற்கு ஒரு காரணம்திருமண்ணுக்கு ஒரு விளக்கம் சொல்லியாக வேண்டும்சொல்வது மட்டுமல்லஎதிரியையும் புரிய வைக்க வேண்டும்.*

ஒன்றை ஒப்புக்கொண்டுஅதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.*

ஆத்திகன்பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்ஜனனம்மரணத்தை ஆராய்கிறான்.*

அப்படி ஆராய்ந்துஇந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லைவேதங்களின் முடிவையேவிஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.*

ஆனால்விஞ்ஞானமும் அறியாமல்மெய்ஞ்ஞானமும் அறியாமல்அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாத்திகனுக்குஎல்லாம் இயற்கையாக நடக்கின்றன என்று சொல்லத் தெரிகிறதே தவிரஅந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.*

பக்குவ நிலைக்கும்பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.*

'கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் 'எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!*

'மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.*

எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாத்திகர் கூட அந்திம காலத்தில் விபூதிகளை பூசிக் கொண்டார்கள்.*

இப்போதெல்லாம், 'போலித்தனம் எதுபொய் எது?’ என்பதை கண்டுபிடிக்கும் தெளிவு எனக்கு வந்து விட்டதுகாரணம்வயது மட்டுமல்ல, 'பக்குவம்'.

 *பக்குவமாய் வாழுங்கள்வாழ்வதன் பயனை உணருங்கள்வாழ்வின் பலனை அனுபவியுங்கள் ...!*

*-கவியரசர் கண்ணதாசன்.*  

நன்றி இணையம்