ஐரோப்பாவில் வேகமாக பரவிக்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:05 | Best Blogger Tips


ஐரோப்பாவில் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது #இந்துமதம்!

உலகம் எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் ஒரு சமநிலையினை பேணும்.

அது கடவுளின் விளையாட்டு.

ஒரு இடத்தின் கனமழை என்றால்
இன்னொரு இடத்தில் வறட்சி.

ஒரு இடத்தில் பனி என்றால்
இன்னொரு இடத்தில் வெயில்.

ஒரு இடத்தில் அறிவாளிகள் என்றால் இன்னொரு நாட்டில் முழு முட்டாள்கள்.

மனிதன் முதல் விலங்கு, பூச்சி, புழுக்கள் வரை இந்த சமநிலையினை உலகம் கவனமாய் காப்பாற்றும்.

ஓரிடத்தில் பெருகும் விஷயம்
இன்னொரு இடத்தில் குறையும்.

ஓரிடத்தில் குறைந்தால்
இன்னொரு இடத்தில் மிகும்.

அதில்தான் உலகின் இயக்கம் உண்டு.

இறைவன் அதில்தான் இருக்கின்றான்.

இதோ... #இந்தியவேதத்தை ஒழிக்க

இங்கு கிறிஸ்தவ வேதாகமங்கள் வழங்கபட்டு பெரும் ஞானஸ்நானமும் இன்னும் பல ஓலமும் நடந்த பொழுது....

ஓசை இல்லாமல் ஐரோப்பாவினை விழுங்கி கொண்டிருக்கின்றது #இந்துமதம்

இறைவன் நல்லவன், கருணை மிக்கவன், அதே நேரம் சமநிலையினை சரியாக நிறுத்துபவன்

இங்கே... #அல்லேலூயா ஒலிக்க தொடங்கி
#வேதஒலி 
குறைந்தபொழுது... அங்கே... அதை ஒலிக்க வைத்திருக்கின்றான் பார்த்தீர்களா?!!

அவன் கணக்கு எப்பொழுதும் மிக சரியாகவே இருக்கின்றது.

ஆக, #ஐரோப்பாவில் இந்துமதம் பரப்பவே
இங்கு வெள்ளையனின் ஆட்சி அந்த பரம்பொருளால் அனுமதிக்கபட்டிருப்பது...

மானிட மனதுக்கு, இப்பொழுதுதான் விளங்குகின்றது.
அதில் கீதை அருளிய கண்ணன் மாய சிரிப்பு சிரிக்கின்றான்.

நன்றி
-Stanley Rajan.