சுவாமி விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:26 | Best Blogger Tips


உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத்
தன் சொற்பொழிவால் நிலை நிறுத்தியவர்
சுவாமி விவேகானந்தர்.
அன்று 1893 லே சிகாகோவில் சகோதர சகோதரிகளே என
பேச தொடங்கி உலக சமய தலைவர்களை தன்பால்
ஈர்த்தார்.
சொற்பொழிவு முடிந்த மறுநாள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இவர் உருவ படங்கள் ஆங்காங்கே வைக்கபட்டிருந்தன.அதை அமெரிக்க மக்கள் தலை சாய்த்து வணங்கி சென்ற படி இருந்தனர்.
இந்தியா முழுமைக்கும் சுற்றுபயணம்
செய்து நல்ல கருத்துக்களை இளைஞர்களிடம்
பரப்பினார்.
உலகம் முழுவதும்
சுற்றுபயணத்தை முடித்துவிட்டு 1897 ல் பாம்பன்
வந்தார்,அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
"ஆன்மீக சிந்தனைகளை முழுவதும்
அறிந்து அதன்படி நடக்க வேண்டும்,அவ்வாறு இல்லாதவர்
நாத்திகராக இருப்பதே மேல் "என்று கூறினார்,
மேலும்
நான் சிகாகோ செல்ல உதவிய ராமநாதபுரம் மன்னர்
சேதுபதி அவர்களுக்கு நானும் இந்து சமயமும்
கடமைபட்டுள்ளது என கூறி முடித்தார்.
நன்றி:::மறைக்கப்பட்ட உண்மைகள்'
சினிமா பைத்தியம் தலைக்கேறிய காலகட்டத்தில் இந்திய இளைஞா்களின் ஹீரோவை பற்றி இங்கே கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

 நன்றி இணையம்