நவராத்திரியில் எத்தனை வகைகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:55 | Best Blogger Tips

ஒரு அமாவாசைக்கு மறுநாள் வரும் திதியின் பெயர் பிரதமை! அன்று முதல் ஒன்பது நாட்களை நவராத்திரியாகக் கொண்டாட வேண்டும்;
ஒரு வருடத்திற்கு 12 நவராத்திரிகள் இருக்கின்றன;
தமிழ் வருடங்கள் 60 என்பதால்,60 X 12 =720 நவராத்திரிகள் இருக்கின்றன;இவைகளைத் தவிர, மேலும் பல விசேசமான நவராத்திரிகளும் இருக்கின்றன;ஆனால்,அவைகளை நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் கொண்டாடுவது மிகவும் கடினம்;
நாம் அறிய வேண்டிய நான்கு முக்கிய நவராத்திரிகளை மட்டும் பார்க்கலாம்;
பங்குனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு வசந்த நவராத்திரி என்று பெயர்;
ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு ஆஷாட நவராத்திரி என்று பெயர்;
ஐப்பசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு சரத் நவராத்திரி என்று பெயர்;
புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுக்கு சாரதா நவராத்திரி அல்லது மாத நவராத்திரி என்று பெயர்;
தற்காலத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவராத்திரி மட்டுமே!
இந்த சாரதா நவராத்திரியின் போது அம்பிகையை மூன்று விதங்களில் வழிபடலாம்;
துர்கையாகவும்;மகாலக்ஷ்மியாகவும்,கலைவாணியாகவும் அம்பாளை வழிபடவேண்டும்;
ஒரு நாள் நவராத்திரித் திருவிழாவை நடத்தினால் அன்னதானம் செய்த புண்ணியம் கிட்டும்;
ஐந்து நாள் நவராத்திரித் திருவிழா நடத்தினால், பஞ்சபூத கதி அடையும் திறன் கைகூடும்;பஞ்சபூதம் அறியாமல் நின்றால் சிவகதி கிடைக்காது என்பது அகத்தியர் வாக்கு!
ஆறு நாட்கள் நவராத்திரித் திருவிழா நடத்தினால்,12 ஆத்ம நண்பர்களைப் பெறும் பாக்கியம் பெறுவர்;(துரோகிகள் ஒருபோதும் நண்பர்களாக முடியாது;உறவினர்களாகவும் அமையாத கிரக அமைப்பில் அடுத்த பிறவியில் பிறப்போம்)
ஒன்பது நாட்கள் நவராத்திரித் திருவிழாவை நடத்தினால்,லலிதா பரமேஸ்வரியின் அநுக்கிரகம் கிட்டும்;
நவராத்திரித் திருவிழாவை எடுத்து நடத்துபவர்களுக்குக் கிடைக்கும் பலன் களை எழுத ஒரு கோடி பக்கங்கள் போதாது;அப்படி நடத்துபவர்கள் ஆயுள் முடிந்தப் பின்னர்,அருள் உலகிற்கு இந்தப் புண்ணியப் பலன் கூடவே செல்லும்;
நவராத்திரித் திருவிழா நடத்த ஆசைப்பட்டு,அதைச் செய்யமுடியாதவர்கள் ஒன்பது நாட்களும் உள்ளூரில் இருக்கும் அன்னையின் சன்னதிக்குச் சென்று வழிபட்டாலே போதும்;

 நன்றி இணையம்