வரகு தம் பிரியாணி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:57 | Best Blogger Tips
Photo: வரகு தம் பிரியாணி

வரகரிசி - 2 கப், கேரட், 
பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு (பொடியாக நறுக்கியது) - ஒன்றரை கப், 
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப், 
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப், 
எலுமிச்சம்பழ ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன், 
எண்ணெயும் நெய்யுமாகச் சேர்த்து - கால் கப், 
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் அல்லது காரத்துக்கேற்ப, 
உப்பு - தேவையான அளவு, 
தண்ணீர் - மூன்றரை கப், 
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்.
அரைப்பதற்கு...
பட்டை -  ஒரு பெரிய துண்டு, 
கிராம்பு - 3, புதினா, 
கொத்தமல்லித் தழை - சிறிது, 
இஞ்சி - பெரிய துண்டு, 
பூண்டு - 7 (தோலுடன்).
தாளிப்பதற்கு...
பிரியாணி இலை - 1, 
பட்டை - ஒரு சிறிய துண்டு, 
கிராம்பு - 2.

எப்படிச் செய்வது?

வரகரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயும் நெய்யுமாக உள்ளதில் பாதி  ஊற்றி தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, காய்கறிகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும். தக்காளி உடையாமல் கிளறி தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து  எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 

நன்கு வதங்கிய காய்களில் தண்ணீர் சேர்த்து, கொதி வந்ததும் உப்பும் எலுமிச்சம்பழச் சாறும் சேர்த்து பிறகு அரிசியைப் போடவும். பெரிய தீயில் 5  நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை குறைத்து சிம்மில் 15 நிமிடங்கள் வைக்கவும். இடையில் இரு முறை மீதமிருக்கும் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  அரிசி உடையாமல் கலந்துவிட வேண்டும். இப்போது முக்கால் பதம் வெந்திருக்கும். இனி தம் போடும் முறை... 

தம் போடும் முறை

பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரிதணல் போடலாம். எரிதணல் கிடைக்காதவர்கள் நன்றாகக் கொதிக்கும்  தண்ணீரை பாத்திரத்துடன் அந்தத் தட்டின் மேல் வைக்கலாம் அல்லது சூடான குக்கரை கூட வைக்கலாம். அதிகபட்சம் 10 நிமிடங்கள் போதும்.இறுதியாக பிரியாணியை சிறிது நெய்விட்டு ஒரு முறை கிளறி தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.

பிரியாணி செய்முறையில் இது எளிய முறை. குக்கரில் வைத்தால் குழைந்து கட்டியாகி விடும். அதே அளவு நேரத்தில் தம் பிரியாணி  செய்துவிடலாம். 

தண்ணீரின் அளவு என்பது பொதுவாக ஒன்றுக்கு இரண்டு இருக்கும். ஆனால், உதிராக பிரியாணி வரவேண்டும் எனில் மொத்த  அளவில் அரை கப் குறைத்தால் போதும். 

புதினா, கொத்தமல்லி அரைத்து விடுவதால் குழந்தைகள் அதை ஒதுக்குவதைத் தவிர்க்கலாம்.

அதிக மசாலா வாசனை பிடித்தமானவர்கள் ஏலக்காயைக் கூட தாளிப்பில் சேர்க்கலாம்.

வரகரிசி - 2 கப், கேரட்,
பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு (பொடியாக நறுக்கியது) - ஒன்றரை கப்,
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்,
எலுமிச்சம்பழ ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெயும் நெய்யுமாகச் சேர்த்து - கால் கப்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் அல்லது காரத்துக்கேற்ப,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - மூன்றரை கப்,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்.
அரைப்பதற்கு...
பட்டை - ஒரு பெரிய துண்டு,
கிராம்பு - 3, புதினா,
கொத்தமல்லித் தழை - சிறிது,
இஞ்சி - பெரிய துண்டு,
பூண்டு - 7 (தோலுடன்).
தாளிப்பதற்கு...
பிரியாணி இலை - 1,
பட்டை - ஒரு சிறிய துண்டு,
கிராம்பு - 2.

எப்படிச் செய்வது?

வரகரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயும் நெய்யுமாக உள்ளதில் பாதி ஊற்றி தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, காய்கறிகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும். தக்காளி உடையாமல் கிளறி தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

நன்கு வதங்கிய காய்களில் தண்ணீர் சேர்த்து, கொதி வந்ததும் உப்பும் எலுமிச்சம்பழச் சாறும் சேர்த்து பிறகு அரிசியைப் போடவும். பெரிய தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை குறைத்து சிம்மில் 15 நிமிடங்கள் வைக்கவும். இடையில் இரு முறை மீதமிருக்கும் நெய்யும் எண்ணெயும் சேர்த்து அரிசி உடையாமல் கலந்துவிட வேண்டும். இப்போது முக்கால் பதம் வெந்திருக்கும். இனி தம் போடும் முறை...

தம் போடும் முறை

பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரிதணல் போடலாம். எரிதணல் கிடைக்காதவர்கள் நன்றாகக் கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்தத் தட்டின் மேல் வைக்கலாம் அல்லது சூடான குக்கரை கூட வைக்கலாம். அதிகபட்சம் 10 நிமிடங்கள் போதும்.இறுதியாக பிரியாணியை சிறிது நெய்விட்டு ஒரு முறை கிளறி தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.

பிரியாணி செய்முறையில் இது எளிய முறை. குக்கரில் வைத்தால் குழைந்து கட்டியாகி விடும். அதே அளவு நேரத்தில் தம் பிரியாணி செய்துவிடலாம்.

தண்ணீரின் அளவு என்பது பொதுவாக ஒன்றுக்கு இரண்டு இருக்கும். ஆனால், உதிராக பிரியாணி வரவேண்டும் எனில் மொத்த அளவில் அரை கப் குறைத்தால் போதும்.

புதினா, கொத்தமல்லி அரைத்து விடுவதால் குழந்தைகள் அதை ஒதுக்குவதைத் தவிர்க்கலாம்.

அதிக மசாலா வாசனை பிடித்தமானவர்கள் ஏலக்காயைக் கூட தாளிப்பில் சேர்க்கலாம்.
                                                                                                                                                         நன்றி ஆரோக்கியமான வாழ்வு