உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:01 | Best Blogger Tips




மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது இந்த ஆய்வு அமெரிக்க ரத்த அழுத்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது
கோடைகாலங்களில் வெப்பத்தை தணிக்க தர்பூசணியை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது கோடைக்கு மட்டுமல்ல எப்போது சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு ஏற்றது என்பதை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த தர்பூசணி பழச்சாற்றில் `சிட்ருல்லின்' என்ற மகத்துவம் மிக்க ரசாயன பொருள் அடங்கி இருக்கிறது என்றும், அது இருதய கோளாறு, எடை அதிகரிப்பு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆகவே இந்த தர்பூசணியை தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு வரலாம் என யோசனை தெரிவிக்கின்றார்கள்.
தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள்.
தோல், கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, கலந்து, முகத்தில் பூசி, 2 நிமிடம் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும்.
வயதாவதால் ஏற்படும் முகத் தொய்வை சீர் செய்கிறது தர்பூஸ்.
ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, பஞ்சால் முகத்தை ஒற்றி எடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். தினமும் இப்படிச் செய்து வர.. சருமத்தின் சுருக்கம் நீங்கும். இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவருக்குமே ஏற்ற சிகிச்சை இது!
வறண்ட சருமத்தினருக்கு வேறு சிகிச்சை சொல்கிறேன்.. வாழைப் பழத் துண்டுகள் இரண்டுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது கலந்து நன்றாகப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.
எண்ணெய்ப் பசை சருமத்தினர் 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது, ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை ஓடியே போகும்.
தர்பூசணி மட்டுமல்ல.. அதன் விதையும்கூட அருமையான மருந்து! கூந்தலை பராமரிப்பதில் அதற்குப் பெரும்பங்கு இருக்கிறது. அரை கிலோ நல்லெண்ணெயில் வெந்தய பவுடர் - 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் - 50 கிராம் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இருமுறை குளித்து வர, கண்டிஷனிங் செய்ததுபோல கூந்தல் பளபளக்கும்.
தர்பூசணி விதை எண்ணெயும் அற்புதமான மருந்துதான் (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தையை இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் துவங்கும்.
கூந்தலின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது தர்பூசணி விதை.
சீயக்காய் - 100 கிராம், தர்பூசணி விதை - 100 கிராம். வெட்டிவேர் - 20 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம்.. இவற்றை உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இந்த பவுடரால் தலையை அலசி வர, பட்டுப் போல மின்னும் கூந்தல்.
சிலருக்கு முகத்தில் பழுப்பு நிற மங்குகள் தோன்றி அழகை கெடுக்கும். இதற்கு நிரந்தரத் தீர்வைத் தருகிறது தர்பூஸ்.
ஒரு டீஸ்பூன் கடுகு பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால்.. மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று, செயல்பட்டு மங்குகளை மறையச் செய்யும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது தர்பூசணி.
2 டீஸ்பூன் கடலை மாவு () பயத்தமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதைக் கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலால் ஏற்படும் வேனல் கட்டிகள், கைகளின் கருமை, பருக்களைப் போக்கும் இந்த சிகிச்சை.
பித்தத்தைப் போக்கி பித்தப்பை கோளாறையும் நீக்கும். நல்ல பசியைத் தூண்டி விடும்.
இதில் இருக்கிற 'வைட்டமின் டி' சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்கும்.
ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு எரிச்சல், வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.
இதில் 'ஃபோலிக் ஆசிட்' நிறைந்திருக்கிற இந்தப் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
தர்பூசணி கொட்டையை காய வைத்து உடைத்து, அதில் உள்ள பருப்பை சமையலில் பயன்படுத்தி வந்தால், வயிற்றிலுள்ள பூச்சி, கிருமிகள் ஓடியே போகும்.
மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்து இந்த தர்பூஸ்.
இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி.
பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது. நாம் பழங்களை மட்டும் சாப்பிட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம்.விதைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மையும் கூட. இப்பழத்தின் விதை வெள்ளரி விதையின் சுவையில் இருக்கும்.
தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம்.
சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!
* தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். * தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம்.
* சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.
* இதில் உள்ள வைட்டமின் , சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.
* முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.
இவையே தர்பூசணியின் சருமத்திற்கான நன்மைகள். எனவே இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட்டு, உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே சருமத்தை பொலிவோடு வைப்பதற்கு, தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பவர்கள், தர்பூசணியின் சாற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவ வேண்டும். இதில் பழம் மாத்திரம் அல்ல, இப்பழத்தின் தோல்,விதை, காய் என அனைத்தும் பயன் தரக் கூடியவை. பழத்தை மட்டும் சாப்பிட்டு அதன் அடிபாகத்தை வீசி விடுகிறோம்.பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம்.
பழத்தை ஜூசாக செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.அதனுடன் சிறிது மிளகு-சீரகப் பொடி தூவியும் அருந்தினால் உடனேயே பசி எடுக்கும்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 3 எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சர்க்கரை - தேவையான அளவு ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு செய்முறை: முதலில் தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட வேண்டும். பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறினால், சூப்பரான தர்பூசணி ஜூஸ் ரெடி!!! குறிப்பு: இந்த ஜூஸில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக, 1 கப் காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும். - கார்பனேடட் வாட்டர் என்று சொல்லப்படும் சோடா(club soda/ sparkling water) கலந்தும் சாப்பிட நன்றாக இருக்கும்.
தர்பூசணி மாதுளை ஜூஸ்
சிவப்பு நிறமுடைய விதையில்லாத மாதுளை முத்துக்கள் - அரை கப், தோல் விதை நீக்கிய தர்பூசணி துண்டுகஷீமீ - 1 கப் ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன்.
பழங்கள் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அடித்து வடிகட்டி, ரோஸ் சிரப்,சர்க்கரை சேர்த்து கலக்கி குளிர வைத்து பரிமாறவும்.
மார்கெட்டில் வந்துவிட்டது. எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இத்தகைய பழம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது.

வாட்டர் மெலன் ஃபிஷ் தேவை
வாட்டர் மெலன் நறுக்கியது -4கப் எலுமிச்சம்பழம்-1 சீனி-தேவையான அளவு க்ளப் சோடா-1/2லிட்டர் ஐஸ் க்யூப்ஸ் -சிறிது
செய்முறை
வாட்டர் மெலனின் விதைகளை எடுத்து விட்டு, சீனியோடு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சேர்க்கவும். ஒரு கண்ணாடி ஜக்கில் இந்த ஜுஸை ஊற்றி க்ளப் சோடாவையும் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
தர்பூசணி ஸ்குவாஷ்
தேவை
தர்பூசணியின் சிவப்பு பகுதி-500கிராம் சர்க்கரை-500கிராம் எலுமிச்சம் சாறு-2டீஸ்பூன் சிவப்புக் கலர்-1சிட்டிகை தண்ணீர்-1/2லிட்டர்
செய்முறை
தர்பூசணியை மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிவப்புக் கலரை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். அரை லிட்டர் தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு கொதிக்க வைத்து, எலுமிச்சம் ஜுஸையும் சேர்த்து ஒரு கம்பிப் பதம் வரும் வரை வைக்கவும். பின்னர் இறக்கி ஆறியதும் வடிகட்டி தர்பூசணி ஜுஸ§டன் கலந்து ஸ்டெரிலைஸ் செய்த பாட்டிலில் ஊற்றி மூடவும். இந்த ஸ்குவாஷை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும்.
வாட்டர் மெலன் சர்பத் தேவை வாட்டர் மெலன்- 1/2 சீனி-தேவையான அளவு தண்ணீர்-தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்-தேவையான அளவு செய்முறை தர்பூசின் தோலை சீவி சிவப்பு கலர் பகுதியை மட்டும் விதைகளை எடுத்து விட்டு எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் வாட்டர் மெலன் துண்டுகள், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து பருகவும்.

தர்பூசணி சர்பத் தேவை
ஸ்ட்ரா பெர்ரி -1கப் தர்பூசணி-3கப் இஞ்சி விழுது-1/2டீஸ்பூன் சீனி-3டே.ஸ்பூன் செய்முறை தர்பூசணியின் விதைகளை எடுத்து விடவும். ஸ்ட்ராபெரியின் காம்புகளை எடுத்து விட்டு, தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் ஸ்ட்ரா பெர்ரி, தர்பூசணி, இஞ்சி, சீனி சேர்த்து அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
தர்பூசணி தக்காளி சாலட்
தேவை
தர்பூசணி சிறியது-1 தக்காளி-4 புதினா காம்புடன்-2
ட்ரஸ்ஸிங்
ஆலிவ் ஆயில்-2டே.ஸ்பூன் வினிகர்-2டீஸ்பூன் புதினா இலை-1டே.ஸ்பூன் மிளகுத்தூள்-தேவையான அளவு உப்பு-தேவையான அளவு சீனி-1டீஸ்பூன்
செய்முறை
ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனுடன் ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி வைக்கவும். தர்பூசணியின் தோலை நீக்கி, விதைகளை எடுத்து விட்டு அதன் சிவப்பு பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு சாலட் பவுலில் தர்பூசணி, தக்காளி, கலந்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறும் சமயம் காம்புடன் உள்ள புதினா இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

மெலன் சாலட்
தேவை
தர்பூசணி-1கப் கிர்ணிப்பழம் -1கப் தேன்-2டீஸ்பூன் வெல்லம்-தேவையான அளவு எலுமிச்சம் ஜுஸ்-2டீஸ்பூன்
செய்முறை
தர்பூசணியின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிர்ணிப் பழத்தின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும். ஒரு சாலட் பவுலில் பழங்களை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் தேன், வெல்லம், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறவும்.
தேவையென்றால் பரிமாறும் போது மிளகுத்தூளை தூவிக் கொள்ளவும்.

Via ஆரோக்கியமான வாழ்வு