நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்குபவரா? அப்படியானால் அவசியம் படியுங்கள் .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:07 | Best Blogger Tips

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்குபவரா? அப்படியானால் அவசியம் படியுங்கள் .

இணையம் வழியாக பொருள்கள் அல்லது சாதனங்களை வாங்குவதையே ஆன்லைன் ஷாப்பிங் என்கிறார்கள். இந்த இணைய வர்த்தகத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது எனலாம்.
பணம் விளையாடும் இந்த துறையில் நமது பணத்தையும் தகவல்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதைப்பற்றி விவரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்! தகவல் தரவுகள் பின்வருமாறு!

இணைய வழி விற்பனைக்கென 100 கணக்கில் தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதும் நமது கடமையே. சில தளங்கள் போலியாக நடத்தப்படும். அம்மாதிரி தளங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்!

கடவுச்சொற்களை வலுவானதாக வைக்கவேண்டும். எண்கள் மற்றும் எழுத்துக்கள் கொண்டு குறைந்தது 8 உருக்களைக்கொண்ட கடவுச்சொள் பயன்படுத்துவது சிறந்தது. அடிக்கடி பாஸ்வர்ட் மாற்றுவதும் நல்லதே!

ஆன்லைன் ஷாப்பிங் பாதுகாப்பானதாக மாற்ற அதிகப்படியான பாதுகாப்பு முறைமைகளைக் கொண்ட தளங்களை பயன்படுத்தவேண்டும். அதாவது https:// போன்ற URL கூறுகளை கொண்டிருத்தல் அவசியம்.

சமூக வலைத்தளங்கள் வழியாகவும் பல்வேறு வைரஸ் மென்பொருட்கள் உங்களுடைய கணினிகளில் பதியப்படுகிறது. எனவே ஜாக்கிரதை தேவை.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவைகளை பாதுகாப்பாக பயன்படுத்தவேண்டும். ஏதாவது தவறு நடந்ததாக தெரிந்தால் உடனே உங்களுடைய வங்கியை தொடர்புகொள்ளவும்.

இதில் டெலிவரி டேட் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. சேவை வழங்கும் தளமானது சொன்ன தேதியில் பொருட்களை வாடிக்கயாளர்களுக்கு வழங்குகிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.

குறிப்பிட்ட தளத்தில் பொருள் வாங்குகிறீர்கள் என்பதுடன் உங்களது கடமை முடிவதில்லை சரியான முகவரியை தருவதே உத்தமம். இல்லையென்றால் அந்நிறுவனத்தால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களிடம் சேர்க்கமுடியாத சூழலும் ஏற்படும்

வெளியிடங்களில் அல்லது வீடுகளில் கூட இம்மாதிரி ஷாப்பிங் தளங்களை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் 'லாக்அவுட்' செய்யவேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் வைரஸ்கள் வராமல் தடுப்பதற்கான மென்பொருள்களை அவசியம் பயன்படுத்தவேண்டும். அதை அப்டேட் செய்தலும் அவசியம்.

இணையம் வழியாக பொருள்கள் அல்லது சாதனங்களை வாங்குவதையே ஆன்லைன் ஷாப்பிங் என்கிறார்கள். இந்த இணைய வர்த்தகத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது எனலாம்.
பணம் விளையாடும் இந்த துறையில் நமது பணத்தையும் தகவல்களையும் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதைப்பற்றி விவரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்! தகவல் தரவுகள் பின்வருமாறு!

இணைய வழி விற்பனைக்கென 100 கணக்கில் தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதும் நமது கடமையே. சில தளங்கள் போலியாக நடத்தப்படும். அம்மாதிரி தளங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்!

கடவுச்சொற்களை வலுவானதாக வைக்கவேண்டும். எண்கள் மற்றும் எழுத்துக்கள் கொண்டு குறைந்தது 8 உருக்களைக்கொண்ட கடவுச்சொள் பயன்படுத்துவது சிறந்தது. அடிக்கடி பாஸ்வர்ட் மாற்றுவதும் நல்லதே!

ஆன்லைன் ஷாப்பிங் பாதுகாப்பானதாக மாற்ற அதிகப்படியான பாதுகாப்பு முறைமைகளைக் கொண்ட தளங்களை பயன்படுத்தவேண்டும். அதாவது https:// போன்ற URL கூறுகளை கொண்டிருத்தல் அவசியம்.

சமூக வலைத்தளங்கள் வழியாகவும் பல்வேறு வைரஸ் மென்பொருட்கள் உங்களுடைய கணினிகளில் பதியப்படுகிறது. எனவே ஜாக்கிரதை தேவை.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவைகளை பாதுகாப்பாக பயன்படுத்தவேண்டும். ஏதாவது தவறு நடந்ததாக தெரிந்தால் உடனே உங்களுடைய வங்கியை தொடர்புகொள்ளவும்.

இதில் டெலிவரி டேட் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. சேவை வழங்கும் தளமானது சொன்ன தேதியில் பொருட்களை வாடிக்கயாளர்களுக்கு வழங்குகிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.

குறிப்பிட்ட தளத்தில் பொருள் வாங்குகிறீர்கள் என்பதுடன் உங்களது கடமை முடிவதில்லை சரியான முகவரியை தருவதே உத்தமம். இல்லையென்றால் அந்நிறுவனத்தால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களிடம் சேர்க்கமுடியாத சூழலும் ஏற்படும்

வெளியிடங்களில் அல்லது வீடுகளில் கூட இம்மாதிரி ஷாப்பிங் தளங்களை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் 'லாக்அவுட்' செய்யவேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் வைரஸ்கள் வராமல் தடுப்பதற்கான மென்பொருள்களை அவசியம் பயன்படுத்தவேண்டும். அதை அப்டேட் செய்தலும் அவசியம்.


via  
 பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்