கறிவேப்பிலை பொடி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:27 | Best Blogger Tips

Photo: கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்:

· கறிவேப்பிலை - 2 கப் 
· உளுத்தம் பருப்பு - 50 மில்லி 
· மிளகு - 10 எண்ணம் 
· சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி 
· வரமிளகாய் - 10 எண்ணம் 
· பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி 
· புளி - நெல்லிகாய் அளவு 
· இஞ்சி - ஒரு துண்டு 
· உப்பு தேவையான அளவு 
· கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி. 

செய்முறை:

1. முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸ்யில் போட்டு, அதன்பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார். 

மருத்துவ குணங்கள்

சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
தேவையான பொருட்கள்:
· கறிவேப்பிலை - 2 கப்
· உளுத்தம் பருப்பு - 50 மில்லி
· மிளகு - 10 எண்ணம்
· சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி
· வரமிளகாய் - 10 எண்ணம்
· பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
· புளி - நெல்லிகாய் அளவு
· இஞ்சி - ஒரு துண்டு
· உப்பு தேவையான அளவு
· கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி.

செய்முறை:


1. முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸ்யில் போட்டு, அதன்பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார்.

மருத்துவ குணங்கள்

சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
Via ஆரோக்கியமான வாழ்வு