தமிழகத்தில் மட்டும் ஏன் கடவுள் எதிர்ப்பு இருக்கிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips

No photo description available.

#தமிழகத்தில் மட்டும்  ஏன் கடவுள் எதிர்ப்பு இருக்கிறது?

 எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்
👇👇👇👇👇👇👇

 #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  
இந்தத் #தமிழ் மண்தான், 

இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. 

அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். 

அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்,
கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

👉  அப்போது 
வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது👈 

லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
தஞ்சைப் பெரியக் கோவில் கோபுரத்தின் நிழல் தென்படாதா ?
தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. 

இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம்  மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப் பட்டது.

500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
தமிழர் வாணிகம்- கடல் வாணிகம் - Tamil Heritage
எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.

 ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. 

ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது.

 அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. 

இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் 
தங்கம் கிடைத்தது.*
அதானி குழுமத்தால் இயக்கப்படும் ...
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.

 எங்கும் மூன்று போகம் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை 

 தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும்,
 மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.

பர்மாவிலிருந்து 
தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 
சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. * சுமார்  40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள் ...
ஏன் கோவிலை கட்டினார்கள்?

தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் ...

அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை,

 கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு 
பிரித்து கொடுக்காமல், 

அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது ...
வரி வசூல் என்ன, 
ஆலயம் – Page 16 – சரவணன் அன்பே சிவம்
அதில் அரசு நடத்த 
அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, 

மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு ...

வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், 

கட்டுமான பணிக்கு 
அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், 
சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள்,
Modi's Grand Hindu Temple Plan Creates Winners in Stock Market ...
 கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், 

அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, 
Top Temple Construction Services in Madurai near me - Justdial
வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, 
அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு

 அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், 
அதற்கு ஒரு சமூகம், 

இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். 

அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க ...
நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. 
அதற்கு ஒரு சமூகம். 
அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.
30 Decoration for ganpati सुझाव | गणेश, सजावट, उत्सव
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். 

கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை.

மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம்.

அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், 

கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை.
ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், 

கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம்,

 ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, 

தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம், 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு,

 மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

🔥  இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு. 🔥

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
👇👇👇👇👇👇👇
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. 
இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
👆👆👆👆👆👆👆👆

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும்,

 அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, 

அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக 

நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, 
உடை உடுத்தி கொள்வாரோ,

 தினமும் உணவு உண்பாரோ, 
நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, 

அப்படி  
அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக
ஒரு 
தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே,

 தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது. பைந்தமிழ் நாடு...

👇👇👇👇👇👇👇
இப்பொழுது புரியும் எதற்கு தமிழகத்தில் மட்டுமே 
#ஆரிய எதிர்ப்பு என்ற பெயரில் 
தமிழக கோவில்களில் இருந்த அனைத்து செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது..

இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே... 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

 May be an image of 1 person and text that says "NMLITUA NMI சும்மா வா.."

*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃
😃
*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. 
 
*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*
 
*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*
 
*"சும்மா"* ======
 
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*
 
*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
 
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.
 
*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
 
( *அமைதியாக/Quiet*)
 
*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)
 
*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
(அருமை/in fact)*
 
*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)
 
*5. *"சும்மா" கதை அளக்காதே?*
(பொய்/Lie)
 
*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* -
(உபயோகமற்று*/Without use)
 
*7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*
 
*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
(எப்போதும்/Always)
 
*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*-
(தற்செயலாக/Just)
 
*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது*
(காலி/Empty)
 
*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)
 
*12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)
 
*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*-
(சோம்பேறித் தனமாக/ Lazily)
 
*14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)
 
*15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)
 
*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* 
 
*என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!)
 
*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*.
 
*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்*
இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல😝😝😝😂😂😂

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் - விழிப்புணர்வை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:10 PM | Best Blogger Tips

 May be an image of brass and ring

ன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!
இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 கிராம்தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!
 
ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.
அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.
 
இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்.
ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.
 
ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். 
 
யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் 
 
ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
 
ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ?
 
நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
 
பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ?
 
கணக்கு போட்டு பாருங்கள்.
 
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்கவிலை-59540+7.2=59547.2/-
 
1 பவுனுக்கு தங்கத்தில் - 73280 - 59540
லாபம்= 13740
 
சேதாரம் 1.5 கிராம் = 13740/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 26000 மேல்
என்ன தலை சுத்துதா ? 
 
எனக்குள் இது ஆதங்கம். 
 
ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.
 

 

🌹🌹🌹🌹🌹மோடிக்கும்❤️💕💜💖💖❤️💜💖💕 அந்த பெரும் வரத்தை சிவன் ..🙏🙏🙏🙏🙏

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips

புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்: பிரதமர் நரேந்திர மோடி  நாளை திருச்சி வருகிறார் : ரூ. 19,850 கோடி திட்டங்களையும் தொடங்கி ...


விமான பயணம் என்பது உடலை கடுமையாக வருத்த கூடியது, புவிஈர்ப்பு விசையினை மீறி நடக்கும் அந்த இயக்கம் கடும் உளைச்சலில் அசதியில் உடலை தள்ளும்
 நீண்ட விமானம் என்றால் காகிதப்பணி: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, விமானப்  பயன்முறையில் இருக்கும் புகைப்படத்தை ட்வீட் செய்தார் ...
அதனால்தான் ஒரு விமானபயணம் முடிந்தபின் பைலட்டுகளுக்கே ஓய்வு வழங்கபடும் இன்னும் பல கட்டுபாடுகள் உண்டு
Make Holistic Health People-Led Movement By Promoting Yoga ...
ஆனால் 74 வயதில் அம்மனிதனால் இப்படி ஓயாமல் பறக்கமுடிகின்றது, ஓய்வு என்பதே அறியாமல் ஓடி ஓடி உழைக்கமுடிகின்றது என்றால் அதில்தான் இந்த மண்ணின் மேலும் மக்கள்மேலும் அவன் கொண்ட பெரும் அன்பு புரிகின்றது, நாடும் நாட்டு மக்களும் தவிர எதையுமே அம்மானிதன் சிந்திப்பதுமில்லை என்பது தெரிகின்றது
PM Modi To Lead Yoga Day Celebrations From Srinagar On June 21 | India News  - News18
இங்கிருந்து லண்டனுக்கு பலமணிநேர பயணம் பின் மாலதீவு அங்கிருந்து தூத்துகுடி என தொடர்ந்து களைப்பே இன்றி பயணிப்பது மானுடர்க்கு சாத்தியமில்லை , அம்மனிதனிடம் ஏதோ விஷேஷித்த சக்தி குடிகொண்டிருக்கின்றது
Narendra Modi 3.0 : A Detailed Overview Of His Political ...
அந்த அற்புத திருமகன், கற்பக தருவாய் தமிழகத்துக்கு பல நலதிட்டங்களை தூத்துகுடியில் அறிவித்திருக்கின்றார், தூத்துகுடியின் பாரம்பரிய பெருமைகளை சொல்லி பில்கேட்ஸ்க்கு தான் கொடுத்த தூத்துகுடி முத்துபற்றி சொல்லி,இந்நாட்டின் மிக முக்கியமான பாரம்பரியமான இடம் இந்த தூத்துகுடி கடல் என்பதை உலகறிய சொல்கின்றார்
வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: தூத்துக்குடியே சாட்சி: மோடி பேச்சு pm  narendra modi tuticorin
அப்படியே அந்த மண்ணின் மாவீரர்களை சுதந்திரபோராட்ட தியாகிகளையும் நினைவு கூர்ந்து 4,100 கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்திருக்கின்றார்
Draped in veshti and angavastram, PM visits iconic Cholapuram Temple in  Tamil Nadu
அதன்பின் இப்போது மாபெரும் இந்து மன்னன், சிவபக்தன் ராஜேந்திர சோழனின் பெருவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்
May be an image of text
இது முக்கியமான நேரம், ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியினை பாடியபடி ஒவ்வொருவரும் திருநீறும் ருத்திராட்சமும் வெண்ணாடையுமாக அவனை மோடியுடன் நன்றியுடன் நினைக்க வேண்டிய நேரம்
May be an image of 6 people, temple and text
ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் அங்கீகாரத்தை உலகவாழ் இந்துக்களிடமிருந்து தேசத்தின் மொத்த மக்களுக்கும் பெற்று தருகின்றார் மோடி
PM Modi in Tamil Nadu highlights: PM announces statues for Chola kings  Rajaraja, Rajendra at Gangaikonda Cholapuram function - The Hindu
அவனின் மாபெரும் சிவபக்திக்கு பெரும் சான்றாக அவன் கொண்டிருந்த பெரும் சிவபக்திக்கு அங்கீகாரமாக ஒவ்வொரு இந்துவிடமும் அவனை கொண்டு செல்கின்றார்
May be an image of 2 people and text that says "9 ங்கைகொண்டளேட்புரம் ழபுரம் கங்கைகொண்ட சோழ சோழபுரம் புதிய W தலைமுறை பிரம்மாண்ட சிலை... தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் -ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு www.puthiyathalaimurai.com 27)07/2025-03:00PM 03:00 PM 27|07/2025"
இந்து மன்னர்கள் என்றால் விகரமாதித்தன், சந்திரகுப்தன், சிவாஜி என சொல்லிகொடுத்து பிரிக்கபட்ட வடநாட்டு இந்துக்களிடம் இவன் நம் இந்து மன்னன், நம்மில் ஒருவன் நம் சிவனை வணங்கியவன் என எடுத்து செல்கின்றார்
May be an image of 1 person, monument and temple
அப்படியே தமிழன், தமிழ் பெருவீரன், தமிழரின் அடையாளம் என பிரித்து திணிக்கபட்ட அவன் அடையாளத்தை, தேசிய அடையாளமாக ,பாரத மன்னர்களில் ஒருவன், பாரத சிவபக்த மன்னர்களில் ஒருவன் என அவனை தேசியத்துக்குள் சரியாக பொருத்துகின்றார்
Tamil Nadu shows its love: 'Modi-Modi' chants echo through Gangaikonda  Cholapuram - YouTube
இன்னொரு விஷயம் முக்கியமானது, அது உலக அரசியல்

மேற்கே அரபிகடல் பக்கம் அந்நிய சதியெல்லாம் இந்தியா முடக்கியிருக்கின்றது ஈரான் முதல் இந்தியாவின் பம்பாய் கோவா லட்சதீவு மாலதீவு அது தொடங்கி ஆப்ரிக்கா என எல்லா பக்கமும் இந்திய கப்பல் தளமும் பாதுகாப்புகளும் சரியாக பின்னபட்டிருக்கின்றன‌
PM Modi in Tamil Nadu highlights: PM announces statues for Chola ...
இந்த மேற்கத்திய கடல் காவலுக்கு வீரசிவாஜி பெயரில் கப்பல்படை நகர்வுகள் செய்யபடுகின்றன, பாகிஸ்தான் இன்று இந்திய கடல் முற்றுகைக்குள்தான் இருக்கின்றது 

அதுபோக மிகபெரிய எதிரியான சீனாவின் முத்துமாலை திட்டம் என இந்தியாவினை சுற்றி அது கட்டிய கடல் சதி வலையின் மேற்கு பக்கம் வெட்டியாயிற்று

 May be an image of 3 people and temple


ஆனால் கிழக்கே நிலமை இன்னும் சரியாகவில்லை, வங்கதேசம் பர்மா தாய்லாந்தின் சில பக்கம் என சீனாவின் மிரட்டல் அதிகம்

இதனால் கிழக்கு கடற்கரையில் கவனம் செலுத்துகின்றது மோடி அரசு, மிக பிரமாண்டமான காரியங்களை அது செய்கின்றது
May be an image of 3 people, flute and temple
சுமார் 50 கப்பல்கள், கணக்கற்ற நீர்மூழ்கிகள், பிரத்யோக கடல் கலன்கள் என கிழக்கு கடலை கட்டுபடுத்தும் இந்தியாவின் திட்டம் மிக பெரிது

ஏற்கனவே கோவாவில் ஒரு கடற்படை தளத்துக்கு ராஜேந்திரசோழன் பெயர் உண்டு என்றாலும் இந்த கிழக்காசிய கடல்சார் பாதுகாப்புக்கு அவன் காட்டிய வழியில்தான் கடற்படை நகர்கின்றது, அவன் காட்டிய வழியில்தான் ஆயிரம் வருடம் கடந்து இந்தியா நகர முடிகின்றது என்பதால் அவனை முன்மாதிரியாக கொண்டே சீனாவுக்கு எதிராக வியூகம் வகுக்கின்றார்கள்
May be an image of 1 person and temple
அக்கால சீனா எந்த நாட்டையும் கடற்படையால் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் பவுத்தம் சம்பந்தமான மிரட்டல்கள் அவர்களிடமிருந்தும் பல வகையில் வந்தன, அவற்றை தன் பலமான கப்பல்படையால் முறியடித்து வணிகமும் மதமும் நாடும் காத்தான் சோழன்

இன்று அவன் செய்த அதே காரிய தேவைபடுவதால் அவன் வகுத்த வழியிலே தேசம் பயணிக்கின்றது, மோடி இங்கு வந்து அந்த சோழன் வணங்கிய சிவனுக்கு அபிஷேகம் செய்வது பெரும் கடல்பாய்ச்சலுக்கு முந்தைய வழிபாடு
May be an image of 3 people and temple
அந்தமான் வழியாக வரும் சீன மிரட்டல் , தாய்லாந்தை ஊடறுத்து அது கட்ட நினைக்கும் கால்வாய், பர்மா வங்கதேசம் வழியாக அது இடும் மிரட்டலை எல்லாம் வெட்டிபோட மாபெரும் கடல் பாதுகாப்பை கட்டுகின்றது மோடி அரசு

இந்த பிரமாண்ட கடல்திட்டத்துக்கு ராஜேந்திர்சோழன் பெயரை இடும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டு

ராஜேந்திர சோழனை இத்தேசம் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை, அவன் தமிழ்பேசிய இந்து இந்நாட்டின் பெரும் அடையாளம் இத்தேசத்தின் கவுரவம் இத்தேசத்தின் மிக முக்கிய பாரம்பரியம் என்றே கருதுகின்றது

அதனால் எந்த கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவிலில் வழிபட்டு கிழக்காசியா முழுக்க ராஜேந்திர சோழன் கட்டுபடுத்தினானோ அதே வழியில் அதே சிவனை வணங்கி அவன் பெயரில் பெரும் திட்டத்தை முன்னெடுக்கின்றார் மோடி

அவர் கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனிடம் தேசத்துக்காக கேட்கும் வரத்தை நாமும் கேட்போம்
PM Modi in Tamil Nadu highlights: PM announces statues for Chola kings  Rajaraja, Rajendra at Gangaikonda Cholapuram function - The Hindu
சோழி எனும் சொல்லுக்கு காவல் என பொருள், அந்த சோழர்கள் மதமும் மண்ணும் காப்பவர்களாக இருந்தார்கள், அந்த வரத்தைத்தான் கங்கை கொண்ட சோழீஸ்வரர் அவர்களுக்கு கொடுத்தார்

சோழம் சோழம் என அவர்கள் முழங்கியதில் சிவனை நோக்கி வரம்கேட்ட பக்திதான் இருந்தது

சோழம் சோழம் என முழங்கிய அந்த கோவில் முன் நாமும் தேசம் தேசம் என முழங்கி இந்நாட்டுக்க்கான வரத்தை கேட்போம், தென்னாட்டை தன்நாடாக கொண்ட அந்த சிவன் இத்தேசத்துக்கு எல்லா காவலையும் பெரும் வரத்தையும் அருளட்டும்

எக்காலமும் இங்கு மதமும் மண்ணும் காக்கும் பெரும் வரத்தை ராஜேந்திர சோழனுக்கு கொடுத்தது போல மோடிக்கும் அந்த பெரும் வரத்தை சிவன் வழங்கட்டும் 


    
 
 
 
 

*சண்டிகேஸ்வரரை வணங்கும் முன் இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!*

மணக்கால் அய்யம்பேட்டை | 5:02 PM | Best Blogger Tips

 May be an image of temple and text

*சண்டிகேஸ்வரரை வணங்கும் முன் இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!*
 Enga ooru Kanchipuram - #சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?  சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ...
சிவ பக்தியால் தெய்வப் பதவி அடைந்தவர் சண்டிகேஸ்வரர். பக்தியின் மேன்மையால் எம்பெருமானின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர், சிவாலயங்கள் அனைத்திலும் அதன் தனத்துக்கு அதிபதியாக விளங்குகிறார். 
 
சிவாலயங்களில் தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரர் முன்பு மூன்று முறை மெல்லக் கைதட்டி, சிவ தரிசன பலன் தருமாறு வேண்டிக்கொண்டு, கைகளை விரித்துக் காட்டி, கோயிலில் இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
 
ஏனென்றால், சண்டிகேஸ்வரர்தான் கோயில் சொத்துக்களின் காவலர். இவரை வலம் வராமல் சென்ற வழியே திரும்பி வர வேண்டும். அவரை தரிசித்தால்தான் சிவ தரிசன பலன் முழுமையாகக் கிட்டும்.
 சிறந்த பக்தியால் சிவனருள் பெற்ற சண்டிகேஸ்வரர் | tamil news Sandikeswarar
நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரிஷப வாகன சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சிவன் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் தொனிச் சண்டிகேஸ்வரர் என்றும் முருகன் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சுமித்ர சண்டிகேஸ்வரர் என்றும், விநாயகர் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் கும்ப சண்டிகேஸ்வரர் என்றும், சூரியனார் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் தேஜஸ் சண்டிகேஸ்வரர் என்றும், அம்பாள் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் யமுனா சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
 
 
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில், மகேஸ்வரன் உமா மகேஸ்வரியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஈசனின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் சண்டிகேஸ்வரர் அமர்ந்துள்ளார். 
 
அவரது திருமுடியில் சிவன் பூமாலை சூட்டுகிறார்.
திருப்பெருந்துறை சிவாலயத்தில் சிவன், மாணிக்கவாசகருக்கு சண்டிகேஸ்வரர் பதவியை தந்ததால், சண்டிகேஸ்வரருக்கு தனிச் சன்னிதி இல்லை.
 
திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோயிலில் இரட்டை சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு அருகருகே இரண்டு சண்டிகேஸ்வரர்களை தரிசிக்கலாம்.
 
திருச்செந்தூர் முருகன் கோயிலில், சண்டிகேஸ்வரருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்கு முருகனுக்குக் கட்டிய பூமாலையை, சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.
 
காவிரி வடகரையில் அமைந்துள்ளது 41வது திருமறைத்தலமான சேங்கனூர் சக்திகிரீஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலம் சண்டிகேஸ்வர நாயனார் அவதாரம் எடுத்த தலமாகக் கருதப்படுகிறது. 
 
குமரி முதல் இமயம் வரையில் உள்ள அனைத்து சிவத்தலங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்த புண்ணியப் பலனை சேங்கனூர் சண்டிகேஸ்வர நாயனாரை தரிசனம் செய்தால் மட்டுமே கிடைக்கும். சண்டிகேஸ்வர நாயனார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
 
சண்டிகேஸ்வரரை ஏன் வலம் வந்து வணங்கக் கூடாது?
 
நிர்மால்ய தீர்த்தம் (சிவனுக்கு அபிஷேகம் செய்த நீர்) கொட்டும் கோமுகி அருகில் இவருக்கு சன்னிதி அமைப்பர். இந்த கோமுகியைத் தாண்டக் கூடாது என்பதால் சண்டிகேஸ்வரரை வலம் வந்து வணங்குவதில்லை. சிவாகம புராணங்களின்படி, ஒவ்வொரு யுகத்திற்கும் தனித்தனி சண்டிகேஸ்வரர் நியமிக்கப்படுகிறார்.
 
கிருத யுகத்தில் நான்கு முகங்களைக் கொண்ட சண்டிகேஸ்வரரும், திரேதா யுகத்தில் மூன்று முகங்களைக் கொண்ட சண்டிகேஸ்வரரும், துவாபர யுகத்தில் இரண்டு முகங்களைக் கொண்ட சண்டிகேஸ்வரரும், கலி யுகத்தில் ஒரு முகத்தைக் கொண்ட சண்டிகேஸ்வரரும் இருப்பார்கள்.
 
சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்:
 
‘ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்’
 
சிவனின் அன்புக்குரிய பக்தரான 
ஸ்ரீ சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. 
 
பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும்போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல்போன பொருட்கள் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும்.