காயத்திரி மந்திரம் உருவான விதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

காயத்ரி மந்திரம் விஷ்வாமித்திரர் தான் படைத்தார் மேலும் அவர் சத்திரிய குலத்தை சேர்ந்தவர்.
கௌசிகன் என்ற மன்னனுடைய நாட்டில் பஞ்சம் வந்தது. இதை போக்க கௌசிக மன்னன் வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனுவின் தங்கையான நந்தினி பசுவை கேட்கிறான், வசிஷ்டர் தர மறுக்கிறார். இதனால் கோபம் அடைந்த கௌசிகன் போர்தொடுத்து தோல்வி அடைகிறான். மேலும் பிரம்மரிஷிக்கு மட்டுமே காமதேனு ,நந்தினி போன்றவை கட்டுப்படும் என்பதால் தவம் இயற்றுகிறான்.சத்திரியானால் பிரம்மரிஷி பட்டம் வாங்கமுடியாது என்று வசிஷிடர் கூறுகிறார். இதை வாங்கி காட்டுவதாக சவால் விடுகிறார்.இதனால் கள்ளி செடியின் மேல் தவம் புரிகிறார் இதை கண்ட அன்னை பார்வதி கௌசிகன் முன் தோன்றி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள பஞ்சமுக விளக்கை ஏற்றினால் உன் கவலைகள் தீரும் என்று கூறி மறைந்து விடுகிறார். பின் அங்கிருந்து ஏகாம்பரேஸ்வரர் கோவில் வந்து பஞ்சமுக விளக்கேற்ற திரி கேட்கிறார் ஆனால் திரி தர மறுத்து விட்டன பூதகனங்கள்.உடனே அங்கிருந்த விளக்கில் ஏறி தனது உடலை தலை ,கை ,கால் என ஐந்து முகத்திலும் ஏற்றி விளக்கு எரிய வைக்கிறான் இதை கண்ட அப்பனும் அம்மையும் அவன் முன்தோன்றி பிரம்மரிஷி பட்டத்தை கொடுகிறார்கள்.இதன் மகிழ்ச்சியின் விளைவாக கௌசிகன் புது மந்திரம் ஓதுகிறான்.அந்த மந்திரத்துக்கு, உடம்பை (காயத்தை )திரியாக்கி கூறியதால் அது காயத்திரி மந்திரம் என்ற பட்டமும் அன்னை கொடுக்கிறாள், மேலும் சத்திரியன் கூறிய இந்த மந்திரத்தை இனி வேதியர்கள் கூறட்டும் என்று வரமும் அளிக்கிறார்கள்.
பிரம்மரிஷி பட்டம் வென்ற கௌசிகன் யாருக்கும் தலை வணங்குவதில்லை என்று கூறுகிறார். இதனால் வசிட்டர் கோபம்கொண்டு நீ ப்ரம்மரிஷி அல்ல என்று ஒதுக்குகிறார்.இதனால் மறுபடியும் கோபம் அடைந்து தவம் இயற்ற செல்கிறார் அவர் போகும் வழியில் ஒரு குழந்தையையும் பெண்ணையும் பார்க்கிறார். பின் அது தன் மகள் சகுந்தலா என்று உணர்ந்து, அவள் அரசனிடம் மோசம் போயிருப்பதை உணர்ந்து அவரிடம் பெண் கேட்க செல்கிறார்.அங்கு பல சோதனைகள் நடக்கிறது இறுதியாக யாருக்கும் தலை வணங்காத கௌசிகன் அங்கு சிரம் தாழ்த்தி, தன் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அங்கு அவர் ஆணவமும் தலை வணங்கியதால் அவர் ரிஷிகளுக்கெல்லாம் ரிஷியான ராஜரிஷி பட்டமும் பெறுகிறார்.அவர்தான் விஸ்வமித்திரர், மக்களுக்காக தவம் இயற்றியதால் விஸ்வமித்திரர் என்று அழைக்கப்பட்டார் விஸ்வம் என்றால் உலகம் என்றும் மித்திரர் என்றால் நண்பர் என்றும் பொருள் படும்.
நன்றி இணையம்


புத்திரதோஷம் நீங்கி மழலைச் செல்வம் உண்டாக பரிகார வழிபாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

செல்வத்திலே சிறந்த செல்வம் மழலைச் செல்வம் என்று குறிப்பிடுவார்கள். மழலைச் செல்வத்தின் அருமை குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கே புரியும். பல திருமணமான தம்பதிகளும் புத்திர பாக்கியம் வேண்டி கோவில் கோவிலாகச் செல்வதை காணமுடியும். புத்திர தோஷம் எதனால் ஏற்பட்டது என்பதனை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். குருவிற்கு, புத்திரபாக்கியம் தருவதில் முக்கிய பங்குண்டு. குரு, புத்திரகாரகன். புத்திரயோகத்தைத் தரக்கூடிய அதிகாரம் பெற்றவன். எனவே குருவாலும், சந்திரனாலும் புத்திரதோஷம் உண்டானால், குருவிற்கு உரிய தலத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். சந்தான கோபாலரும் சந்தான பாக்கியம் தரவல்லவர். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன் கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும். புதன், சுக்கிரனால் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் சிவனை வழிபடலாம்.
செவ்வாய், சனியால் ஏற்படும் புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்யலாம். குரு பகவானுக்கு வியாழன்று அர்ச்சனை செய்வது சிறப்பு. பொதுவாக எந்தக் கிரகத்தினால் தோஷம் ஏற்பட்டதோ, அந்தக் கிரகத்தின் தசை அல்லது புத்திக்கு உரிய காலத்தில் அந்தக் கிரகத்திற்கு உரிய அதிதேவதைக்கு அர்ச்சனை செய்ய தோஷம் நிவர்த்தி ஆகும். குலதெய்வம் கோயிலில் அவரவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் புத்திரத்தடை நீங்கும். முக்கியமான சிறப்பு நாட்களில், பௌர்ணமி, தமிழ் மாதம் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும்.


பொட்டு வைப்பதும் திலகம் இடுவதும் எதற்காக?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 AM | Best Blogger Tips

கண்டிப்பாக படியுங்கள் ,பகிருங்கள்
பொட்டு வைப்பதும் திலகம் இடுவதும் எதற்காக?
நம்முடைய பாரம்பரியத்தில் ஆண்கள் திலகமிடுதலும், பெண்கள் பொட்டு வைத்தலும் மரபாகும். பெண்கள் வட்டமாக வைத்தல் பொட்டு என்றும், ஆண்கள் நேர்கோடாக வைத்தல் திலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. பெண்கள் தான் பொட்டு வைக்கவேண்டும்; ஆண்கள் தான் திலகம் வைக்கவேண்டும் என்ற வரையறை கிடையாது. ஆனால், இந்துக்களின் புருவமத்தியில் கண்டிப்பாக திலகம் அல்லது பொட்டு இருக்கும்.
திலகம் அல்லது பொட்டு மூன்றாவது கண்ணை குறிக்கின்றது. மூன்றாவது கண் ஐயம் தெளிந்த தூய அறிவு, பகுத்தறிவு, விவேகம், மதிநலம் மற்றும் தெளிவுபெற்ற நிலையை உணர்த்துகின்றது. இந்த மூன்றாவது கண் அனைவரிடத்தும் அமைந்திருந்தாலும், புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தை அடக்கி, ஆன்மிக பாதையில் பயணித்து இறைவனின் பேரறிவைப் பெற்று ஆத்மஞானம் எய்தியவனுக்கே முழுமையாக திறக்கும்.
ஏழு சக்கரங்களுள் ஒன்றான ஆக்ஞா எனும் சக்கரம் புருவ மத்தியில் தான் அமைந்துள்ளது. இது ஞாபகசக்தி மற்றும் சிந்தனை ஆற்றலின் இருப்பிடமாகும். வழிபாட்டிற்குப் பின் புருவமத்தியில் திலகமிடும் போது, “ஈஸ்வரா, உன்னை என்றும் மறவாத வரம் கொடு. நான் ஆற்றும் ஒவ்வொரு செயலிலும் நான் நன்கு சிந்தித்து செயல்பட துணைபுரிவாயாக. என்னுடைய செயல்கள் அனைத்தும் தருமநெறிகளில் இருந்து நழுவாதபடி அருள்புரிவாயாக.” என்று மனத்தில் நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை நாம் இறைவனின் முன்னிலையில் செய்த பிரார்த்தனையை மறந்து போனாலும், நம்முடைய புருவமத்தியில் நிலைக்கொண்டிருக்கும் திலகம் நமக்கு அதனை நினைவுபடுத்தும். தவறான செயல்களிலோ அல்லது எண்ணங்களிலோ நாம் தவறுதலாக ஈடுபட முனைந்தால், நம்மைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தும். ஆகவே, புருவமத்தியில் இடும் திலகம் குற்றமானவற்றில் இருந்து நம்மை தற்காக்கும் காப்பு.
நம்முடைய உடல் எப்போதும் சக்தியை வெளிபடுத்திக் கொண்டே இருக்கும் ஒரு சாதனமாகும். இந்த சக்தியை நாம் எங்கு அதிகமாக செயல்படுத்துகிறோம் என்பதே மிகமுக்கியம். ஆதலால் தான், நாம் துக்கப்பட்டாலோ அல்லது எதையாவது எண்ணி வருந்தினாலோ அது நமக்கு தலைவலியைக் கொடுக்கின்றது. எதிர்மறையான எண்ணங்கள் (சக்திகள்) புருவமத்தியில் குவிகையில், அது வெப்பமாகி தலைவலியை உண்டாக்கின்றது. திலகமிட பயன்படும் மஞ்சள், கும்குமம், சந்தனம், நீறு போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவை எதிர்மறையான சக்திகள் உட்புகாமலும் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக்கவும் துணைபுரிகின்றன. இதனால் நெற்றியில் திலகம் இருக்கும்வரை நாம் புத்துணர்ச்சியுடனும் நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்படலாம்.
மூன்று கோடுகளைக் கொண்டு நெற்றியில் திலகமிடுவர். திருநீற்றுப் பட்டையும், திருநாமம் சாத்தலும் மூன்று கோடுகளை உடையது. மூன்று கோடுகள், (++ம்) ஓம் எனும் பிரணவ மந்திரத்தைக் குறிக்கின்றன. இவை மூன்றுவகையான உணர்வுநிலைகளாக விழிப்பு, கனவு, கனவற்ற உறக்கம் ஆகியவையும் குறிக்கின்றன. முக்குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் மற்றும் ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், கரண சரீரம் எனும் மூன்றுவகை சரீரங்களையும் குறிக்கின்றது.
பாரம்பரிய முறைபடி, மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களிலே திலகங்கள் அமைந்துள்ளன. கும்குமம் சிவப்பு நிறத்தையும், சந்தனம் மஞ்சள் நிறத்தையும், திருநீறு வெள்ளை நிறத்தையும் காட்டும். திருநீற்றின் தத்துவங்களை நிறைய பதிவுகளில் பார்த்தோம். அதேபோல தான் சந்தனமும் நிறைய மருத்துவ குணம் நிறைந்தது. மஞ்சளால் தயாரிக்கப்படும் கும்குமமும் மருத்துவ குணமுடையது. இவை மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது ஆழமான ஆன்மிக தத்துவங்களையும் கொண்டுள்ளன.
வெள்ளைநிறம் தூய்மை, அமைதி, பொறுமை ஆகியவற்றைக் குறிக்கும். சிவப்புநிறம் பேராற்றல், வலிமை, உறுதி ஆகியவற்றைக் குறிக்கும். மஞ்சள்நிறம் செல்வம், செழுமை, வளமை போன்றவற்றைக் குறிக்கும்.
மேலும், வீரதிலகம் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளமாக ஆண்களும் பெண்களும் அணிவர். இது சிவப்புநிறத்தில் நேர்க்கோடாக அமைந்திருக்கும். போர்களில் வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு மக்கள் நெற்றியில் வீர திலகமிட்டு போற்றுவர். திருமணமான பெண்கள் புருவமத்திக்கு மேலே தலை உச்சியில் செந்நிற சிந்தூரம் இடுவர். இதுநான் திருமணமான பெண். நான் உறுதியுடனும் வலிமையுடனும், பேராற்றலோடு என் குடும்பத்தை வழிநடத்துவேன்என்பதைக் குறிக்கும். திருமணமான ஆண்களும் நெற்றியில் செந்நிற திலகமிடுவர். ஆனால், இன்று திருமணத்தின் போது மட்டும் தான் அணிகின்றனர்.
வெளிநாட்டினர் நம்முடைய திலகமிடும் மரபு வெறும் அழகுப்படுத்த மட்டுமல்ல, இது ஆழ்ந்த தத்துவமும் அறிவியலும் அடங்கியது என உணர்ந்து வியக்கின்றனர். நம்முடைய வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் இவர்கள் புருவமத்தியில் திலகமிட்டுக் கொள்வதையும் நாம் காணலாம். ஆனால் நம்மவர்கள் திலகமிடுவதின் அருமை புரியாமல் அதைப் புறக்கணித்து வருகின்றனர். ”சந்தனக்கட்டையை சுமந்திருப்பவனுக்கு அது பாரமாக தான் தெரியுமே தவிர, அதன் உண்மையான மதிப்பு தெரியாதுஎனும் பழமொழிக்கு நம்மவரில் சிலருக்கு நன்றாகப் பொருந்தும்.
தற்போது திலகங்கள்/பொட்டுகள் பல வண்ணங்களில், பல வடிவங்களில், செயற்கையான முறையில், நெகிழியால் செய்யப்பட்டஸ்டிக்கர்களில் அழகுக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை அணிபவர்கள் வெறும் அழகுக்காக தான் அணிகிறார்கள். தங்களை அழகாக வைத்துக் கொள்ள அவர்கள் விருப்பப்படுவதில் குற்றமில்லை. ஆனால், இதுபோன்ற செயற்கையான திலகங்களும் பொட்டுகளும் வைப்பதால் எந்தவொரு பலனும் இல்லை. உண்மையில் மேற்கூறிய பலன்களை அடைய விரும்புவோர், பாரம்பரிய முறையில் திலகம்/பொட்டு வைத்தலே சாலச் சிறப்பு.
ஹரி ஓம் நமோ நாராயணா

 நன்றி இணையம்