உலகின் முதல் சுயம்பு சிவலிங்கம் எங்கே தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips

May be an image of temple and text that says "ஜசுவாமி ஜசுவாமிதிருக்கே திருக்மே MIGU UTHIYAGARAJASWAMY THIYAGAR GARAJASWAMY THIF 3i86-" 

 

🚨 சென்னையில் இருக்கும் இந்த சிவஸ்தலத்தின் ரகசியம் 99% பேருக்கு தெரியாது! 😲🔱

🌊 பிரளயத்திற்குப் பின் தோன்றிய உலகின் முதல் சுயம்பு சிவலிங்கம் எங்கே தெரியுமா?
அது நம்ம சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்! 🙏✨
YouTube
🔱🌺 திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலின் மகிமை 🌺🔱
 
முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா வழிபட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார்.
அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.
 
✨ பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
 ஆதிபுரீஸ்வரர், திருவொற்றியூர், சென்னை – TN Temples Project
🐍 உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில் இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால் "படம்பக்கநாதர்" என்ற திருநாமத்தையும் பெற்றார்.
 
அப்பாம்பின் வடிவச் சுவடு இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
 
📜 ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து
 
"இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க"
என்று எழுதப்பட்டிருந்தது.
 
இதனால் அவ்வூருக்கு ஒற்றியூர் என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று.
 
⭐ 27 நட்சத்திரங்கள் இங்கு சிவபெருமானை வழிபட்டதால் 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன
 
💃 நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம்
 
💎 திருவொற்றியூரில் வசித்த ஏலேல சிங்கருக்கு சிவபெருமானே மாணிக்கம் தந்து அருள் செய்ததால் இவர் மாணிக்கத் தியாகர்
 Sakthi - திருவொற்றியூர் கோயில் ஆதிபுரீஸ்வரை நாளை வரை கவசம் இல்லாமல்  தரிசிக்கலாம்! பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ...
👁️ சுந்தரர் சங்கிலியாரிடம் சத்தியம் செய்து இத்தல எல்லையைத் தாண்டியதும் கண்பார்வையை இழந்தார்
 
🔥 வட்டப்பாறை அம்மன் (காளி) சந்நிதி
ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்ததாக வரலாறு கூறுகிறது
 
🌾 பட்டினத்தார் பேய்க் கரும்பு இனித்ததால் இவ்விடமே தமக்குரிய இடம் என்று முடிவு செய்து இங்கே சமாதியானார்
 
🎶 பட்டினத்தார், காளமேகம், அருணகிரிநாதர், தியாகய்யர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர்
 
🔱 இறைவர் திருப்பெயர்கள்:
ஆதிபுரீஸ்வரர்
புற்றிடங்கொண்டார்
படம்பக்கநாதர்
எழுத்தறியும் பெருமாள்
தியாகேசர்
ஆனந்தத்தியாகர்
 
🌺 இறைவியார் திருப்பெயர்கள்:
திரிபுரசுந்தரி
வடிவுடையம்மை
வடிவுடை மாணிக்கம்
 
🌳 தலமரம்: அத்தி மரம், மகிழமரம்
💧 தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், நந்தி தீர்த்தம்
🙏 இந்த கோயிலை தரிசித்தால்:
💰 செல்வ வளம்
📚 கல்வி முன்னேற்றம்
🏡 குடும்ப நலம்
🕊️ மன அமைதி
🚪 தடைகள் நீக்கம்
✨ சிவஅருள்
 
📿 இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் ஆதிபுரீஸ்வரர் & வடிவுடையம்மை அருள் கிடைக்கட்டும் 🙏
📲 "ஓம் நமசிவாய" என்று கமெண்ட் செய்து 11 பேருக்கு Share செய்யுங்கள். சிவனருள் உங்கள் வீட்டில் பொங்கட்டும் 🔱✨

🕉️✨ நற்பவி நம்பிராஜன் அவர்களின் ஆன்மீகப் பயணம் ✨🙏
 
நற்பவி நம்பிராஜன் அவர்கள் தொடர்ந்து ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
 
தமிழகத்தில் உள்ள சித்தர்கள் ஜீவசமாதிகள், பிரசித்தி பெற்ற சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், மறைந்து கிடக்கும் அரிய திருத்தலங்கள் ஆகியவற்றை நேரில் தரிசித்து, அவற்றின் வரலாறு, ஆன்மிக சிறப்பு, அங்கு பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை மக்களிடம் பகிர்ந்து வருகிறார். 🔱
 
அவருடைய பயணம் வெறும் ஆலய தரிசனமாக மட்டும் இல்லாமல்,
 
தமிழகம் ஆன்மீக பூமி என்பதை உலகறியச் செய்வது,
 
மறைந்து கிடக்கும் தலங்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவது,
 
சித்தர்களின் மகிமை மற்றும் ஜீவசமாதிகளின் அருமையை எடுத்துரைப்பது என்ற உயர்ந்த நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 🌺
 
தமிழ் மக்களின் நலனுக்காகவும்,
பாரத மக்களின் வளமான வாழ்விற்காகவும்,
உலக மக்கள் அமைதி, ஆரோக்கியம், ஆன்மிக முன்னேற்றம் பெறவும்
அவர் பல தலங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறார். 🙏🌍
 
அவரது ஆன்மிக வழிகாட்டுதலைப் பின்பற்றி பலர் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து, தங்களுக்கு மன அமைதி, தெளிவு, நம்பிக்கை போன்ற நல்ல மாற்றங்கள் கிடைத்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ✨
இது ஒரு மனிதரின் பயணம் மட்டுமல்ல;
 
சித்தர்கள் காட்டிய ஞான வழியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆன்மீக இயக்கம். 🕉️
 

🙏🌹 நன்றி 

நற்பவி பக்தி

இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

🥛 பால் பாக்கெட்டின் நிறம் சொல்லும் ரகசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips

 
🥛 பால் பாக்கெட்டின் நிறம் சொல்லும் ரகசியம்! 👀


நம்ம வீட்டுல தினமும் வாங்குற ஒரு சாதாரண பொருள் — பால். ஆனா அந்த பால் பாக்கெட்டில் இருக்கும் நீல, பச்சை, ஆரஞ்சு நிறங்கள் சும்மா design இல்லன்னு தெரியுமா? 🤔


அது உள்ளே இருக்கும் பாலை பற்றி ஒரு முக்கியமான தகவலை சொல்லுது!

---

🔍 நிறங்களின் அர்த்தம் என்ன?

🔵 நீல நிறம் (Blue)
👉 Toned Milk
👉 சுமார் 3% கொழுப்பு
👉 லைட் & ஹெல்தி
👉 டீ, காபி, தினசரி பயன்பாட்டுக்கு perfect

🟢 பச்சை நிறம் (Green)

பால் பாக்கெட் நிறங்களுக்குப் பின்னால் இப்படியொரு ரகசியமா...? எந்த நிறம்  யாருக்கு நல்லது..? - இனி குழப்பமே வராது! - Seithipunal
👉 Standardised Milk
👉 சுமார் 4.5% கொழுப்பு
👉 சுவை கொஞ்சம் ரிச்சா இருக்கும்
👉 குடிக்கவும், சாதாரண cooking க்கும் நல்லது

🟠 ஆரஞ்சு நிறம் (Orange)
👉 Full Cream Milk
👉 சுமார் 6% கொழுப்பு
👉 ரொம்ப ரிச்சான பால்
👉 பாயசம், ஸ்வீட்ஸ், தயிர், குழந்தைகளுக்கு நல்லது

🟣 மஜெண்டா / லைட் நிறங்கள் (சில brands)
👉 Double Toned Milk
👉 சுமார் 1.5% கொழுப்பு
👉 Diet / weight control க்கு பயன்படுத்தலாம்

---

⚠️ ஒரு பெரிய தவறான நம்பிக்கை!

பலர் நினைப்பது —
👉 “ஆரஞ்சு நிறம் தான் best quality பால்” ❌

ஆனா உண்மையில்:
👉 நிறம் qualityயை காட்டாது
👉 அது கொழுப்பு அளவையே (fat content) மட்டும் காட்டும்

✔️ லைட் பால் வேண்டுமா?
✔️ ரிச்சா பால் வேண்டுமா?
அதுக்குத்தான் இந்த Colour System!

---

💡 ஏன் இந்த Colour Coding Use பண்ணுறாங்க?

🛒 பால் ஒரு Daily Product — யாரும் லேபிள் படிக்க நேரம் எடுத்துக்கொள்ள மாட்டாங்க


👉 நிறம் பார்த்தாலே உடனே தேர்வு செய்ய முடியும்

👨‍👩‍👧‍👦 குடும்பத்துல கூட:


👉 “Blue Packet Vaanga”ன்னா போதும் — எல்லாருக்கும் புரியும்

📦 Brand Change ஆனாலும்:
👉 Colour Same இருந்தா confusion வராது

---

🧠 நம்ம வாழ்க்கையோட ஒரு பழக்கம்!

நம்மலால fat percentage நினைவில் வைக்க முடியாமல் இருக்கலாம்…
ஆனா “நீல பாக்கெட் தான் வாங்கணும்”ன்னு நாம நினைவில் வைத்திருப்போம் 😄

👉 இதுதான் இந்த system-oda Success!

---

✨ சின்ன Design… பெரிய உதவி!

இந்த Colour Coding:
✔️ வேகமான முடிவு எடுக்க உதவும்
✔️ குழப்பம் குறைக்கும்
✔️ நம்ம daily life-ஐ easy ஆக்கும்

---

“சின்ன சின்ன அறிவு விஷயங்கள் தான் நம்ம வாழ்க்கையை smart ஆக்குது!” 🌟

--- 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷
🌷 🌷

 

🌿"தெரியாததை தெரியாது என்று ஒத்து

மணக்கால் அய்யம்பேட்டை | 10:49 AM | Best Blogger Tips

 

🌿"தெரியாததை தெரியாது என்று ஒத்து கொள்வதற்கு பெயர் தான் அறிவு"...

☘️நம்மவர்களுக்கு, தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா... தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை.

☘️தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அசிங்கமாம், கேவலமாம், அவமானமாம், தர்மசங்கடமாம், மானக்கேடாம்! ஆனால், இப்படி இல்லவே இல்லை.

☘️எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாகக் கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்.

☘️அறியாமை, வெட்கப்பட வேண்டியதே அல்ல; அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்குத் தான் வெட்கப்பட வேண்டும்.

☘️மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு, வடக்காக ஓடுகிறது கொங்கண் ரயில் பாதை.

☘️இந்த ரயிலில் பயணிப்போர், மேற்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாகக் காணலாம்.

☘️கிழக்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காண முடியும்.

☘️மறுபுறம் பார்க்கத் தவற விட்ட இந்த ரயில் பயணிகளை குறை சொல்ல முடியுமா...

☘️இப்படித் தான், நம் அறியாமைகளும்! நாம் பயணிக்கிற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்குத் தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா?

☘️கடற்கரைப் பகுதியைப் பார்த்தவரும், மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தவரும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படித் தவறு இல்லையோ,,

☘️அதேபோல, நாம் அறியாத மறுபக்கங்களை பிறர் கூறுகிற போது, தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமலும்,

☘️'எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது என்று நடித்து, பாவ்லா காட்டாமலும், சொல்லுங்க... 'எனக்கு இதெல்லாம் புதுசு...' என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது;

இது, புத்திசாலித்தனமும் கூட!..

🍀ரொம்ப நாட்கள் கழித்து இரண்டு பள்ளி நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.. ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பவர். இன்னொருவர் வெளிநாட்டில் வசிப்பவர். தமிழ்நாடு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது...

☘️அவர்கள் உரையாடிக் கொண்டு இருந்த போது வெளிநாட்டு நண்பர் திடீரென, 'புராக்காஸ்டினேஷன்'' என்று ஒரு சொல்லைக் கூறினார்.,

☘️அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்னு ஒரு வார்த்தை பேசும் போது சொன்னாயே ; அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டார் நம்மவர்...

☘️அட இது கூடத் தெரியாதா. உனக்கு..' என்று இளக்காரப் புன்னகை சிந்தினார். அதற்கு நம்மவர் எனக்குத் தெரியாது என்றார்...

☘️நாம் இருவரும் படிச்சது எல்லாம் தமிழ்வழிக் கல்வியில் தான்.       அதில் ஏதாவது தெரியலன்னா தான் தவறு...'என்றார் நம்மவர்.

☘️புன்னகை மாறாமல், மன்னிக்க வேண்டும் நண்பா.,' என்று இறங்கி வந்து , 'புராக்காஸ்டினேஷன்னா,' தள்ளிப் போடுவது, தாமதப்படுத்துவது என்றார்.

🍀மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை...

🍀எல்லாம் தெரிந்த மேதாவி என்று காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை.

🌹அறிவுத் தேடலில் உள்ளவர்கள்,இந்தத் தவறை செய்வதே இல்லை...!👍

🌹🌹🌹🌹🌹🌹 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

*வாக்குறுதி* 😢கணவன் மேல் அதீதி பாசம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips

 May be an image of temple

 

*வாக்குறுதி* 😢
இது உண்மை கதை. பேரு மாத்தியிருக்கேன். ஆனா சம்பவம் நிஜம்.
 May be an image of one or more people
திருச்சி. ஸ்ரீரங்கம். காவிரி ஆத்தங்கரை.
ரெண்டு பேரு. ரங்கநாதன். வயசு 80. அலமேலு. வயசு 75. 
 
கல்யாணம் ஆகி 60 வருஷம். ஒரே பையன். ஆக்சிடென்ட். 25 வருஷம் முன்னாடி போய்ட்டான். மருமக ரெண்டாவது கல்யாணம். பேரன் கூட பேச்சு இல்ல. 😔
 
வீட்ல ரெண்டு பேர் மட்டும். ஏக்கம் இல்ல. விரக்தி இல்ல. ஏன்னா ரெண்டு பேருக்கும் ஒரு வேலை.
 
தினமும் காலைல 5 மணி. ரங்கநாதன் எழுவாரு. காவிரிக்கு போவாரு. குளிப்பாரு. 
 
அப்புறம் கோயில் வாசல். அங்க ஒரு பெரிய அண்டா. தண்ணி. 
 
வர்ற பக்தர்களுக்கு மோர். தண்ணி. கைல கொடுப்பாரு. இலவசம். "ரங்கநாதா"னு சொல்லி கொடுப்பாரு. 🙏
 
அலமேலு வீட்ல. 10 மணிக்கு சமையல். சாம்பார் சாதம். தயிர் சாதம்.
 
மதியம் 12 மணிக்கு வாசல்ல உட்காருவா. போறவங்க வர்றவங்க. சாமியார். பிச்சைக்காரன். யாரு வந்தாலும் "சாப்பிட்டு போப்பா"னு கூப்பிடுவா. 😊
 
ரெண்டு பேருக்கும் பென்ஷன். மாசம் 8000. அதுல 6000 இதுக்கே செலவு. மிச்சம் 2000. மருந்து. சாப்பாடு.
 
ஊர்காரங்க கேட்பாங்க. "தாத்தா. ஏன் இப்படி. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு. புள்ள இல்ல. யாருக்கு சேர்க்கிறீங்க."
 
ரங்கநாதன் சிரிப்பாரு. "தம்பி. 60 வருஷம் முன்னாடி நானும் அலமேலும் ஒரு வாக்குறுதி கொடுத்தோம். புள்ள இல்லனாலும் பாரம் இல்லனாலும், சாகுற வரைக்கும் யாருக்காவது சோறு போடணும். தண்ணி கொடுக்கணும். அதான்." 💧🍚
---
 
*ஒரு நாள். வைகாசி மாசம். உச்சி வெயில்.*
ரங்கநாதன் கோயில் வாசல்ல. மோர் கொடுத்துட்டு இருந்தாரு. 
 
திடீர்னு நெஞ்சு வலி. கீழ விழுந்தாரு.
ஜனங்க தூக்கினாங்க. ஆஸ்பத்திரி.
டாக்டர் சொன்னாரு. "ஹார்ட் அட்டாக். 80 வயசு. ஆபரேஷன் பண்ண முடியாது. 2 நாள். இல்ல 2 வாரம். அவ்வளவு தான்."
 
அலமேலு உடைஞ்சுட்டா. 75 வயசு. கதறினா. "என்ன விட்டுட்டு போகாதீங்க. நான் தனியா என்ன பண்ணுவேன்." 😭
 
ரங்கநாதன் கண்ணு திறந்தாரு. கைய பிடிச்சாரு.
"அலமேலு. அழாத. ஒரு விஷயம் கேட்குறேன். செய்வியா."
 
"சொல்லுங்க."
 
"நான் போய்ட்டா நீ இந்த மோர் கொடுக்குற வேலைய நிறுத்திடாத. நான் சாகுற வரைக்கும் தான் வாக்குறுதி இல்ல. நீ இருக்குற வரைக்கும் வாக்குறுதி. செய்வியா."
 
அலமேலு அழுதுட்டே தலை ஆட்டினா. "செய்வேன். சத்தியம்."
 
3 நாள். ரங்கநாதன் போய்ட்டாரு. கோயில் வாசல்ல மோர் கொடுத்துட்டே போகணும்னு ஆசை. வீட்லயே போய்ட்டாரு. 🙏
---
*மறுநாள் காலைல 5 மணி.*
 
அலமேலு எழுந்தா. குளிச்சா. 
 
ரங்கநாதன் வச்சிருந்த பெரிய அண்டாவ எடுத்தா. காவிரி தண்ணி. மோர் கலந்தா. 
 
தூக்க முடியல. 75 வயசு. இழுத்துட்டு போனா. கோயில் வாசல். 
 
அதே இடம். அதே நேரம். 
 
"மோர்... மோர் வேணுமா..."
🥛
ஜனங்க பார்த்தாங்க. 75 வயசு கிழவி. நேத்து புருஷன் செத்தான். இன்னைக்கு மோர் கொடுக்குறா.
 
ஒருத்தர் கேட்டாரு. "அம்மா. ஏம்மா. துக்கம் அனுசரிக்காம..."
 
அலமேலு கண்ண துடைச்சா. சிரிச்சா. "தம்பி. துக்கம் என் வீட்ல. வாக்குறுதி கோயில் வாசல்ல. அவரு இல்லனாலும் வாக்குறுதி இருக்கு. மோர் குடி தம்பி. ரங்கநாதா." 😊
 This is why you should drink more buttermilk everyday - The Times of India
அன்னைல இருந்து தினமும்.
காலைல 5 மணி. அலமேலு கோயில் வாசல். மோர் அண்டா. 
 
மதியம் 12 மணி. வீட்டு வாசல். சாம்பார் சாதம்.
ரெண்டு வேலை. 75 வயசு. தனி ஆள்.
---
 
*2 வருஷம் கழிச்சு.*
நியூஸ் பேப்பர்ல செய்தி. "ஸ்ரீரங்கம் மோர் பாட்டி. 77 வயசு. 2 வருஷமா தினமும் 200 பேருக்கு இலவச மோர். சாதம். கணவன் வாக்குறுதிய காப்பாத்துறா."
 
கலெக்டர் வந்தாரு. "அம்மா. உங்களுக்கு விருது."
அலமேலு கையெடுத்து கும்பிட்டா. "வேண்டாம் அய்யா. விருது வேண்டாம். அண்டா மட்டும் புதுசு வாங்கி கொடுங்க. ஓட்டை விழுந்துடுச்சு. நிறைய பேரு வர்றாங்க. பத்தல." 😢
கலெக்டர் கண்ணு கலங்கிடுச்சு. 
 
அன்னைக்கு ஈவ்னிங். வீடு.
அலமேலு திண்ணைல உட்கார்ந்திருக்கா. கையில ரங்கநாதன் போட்டோ. 
 
பேசுறா. "ஏங்க. கேட்குதா. இன்னைக்கும் 200 பேருக்கு மோர் கொடுத்தேன். சாதம் போட்டேன். 
 
நீங்க இல்லாம 2 வருஷம் ஓடிடுச்சு. ஆனா கஷ்டம் இல்ல. ஏன்னா வேலை இருக்கு. வாக்குறுதி இருக்கு."
 
"நீங்க எங்க இருக்கீங்க. கோயில் வாசல்ல தானே. 
 
தினமும் பார்க்குறேன். யாராவது 'ரங்கநாதா'னு சொல்லி மோர் குடிக்கும்போது, நீங்க குடிக்கிற மாதிரி இருக்கு."
🙏
"நிம்மதியா இருக்கேன். ஏன்னா தனியா இல்ல. வாக்குறுதி கூட இருக்கு. நீங்க கூட இருக்கீங்க."
---
*கடைசி.*
அலமேலு பாட்டி 85 வயசுல போய்ட்டாங்க. கோயில் வாசல்ல. மோர் கொடுத்துட்டே. 
 
கைல சொம்பு. உதட்டுல "ரங்கநாதா". 😇
 
இன்னைக்கும் ஸ்ரீரங்கம் கோயில் வாசல்ல ஒரு அண்டா இருக்கு. 
 
ஊர் பசங்க சேர்ந்து வைச்சிருக்காங்க. மேல எழுதியிருக்கு.
 
*_"ரங்கநாதன் - அலமேலு மோர் பந்தல்.
வாக்குறுதி சாகாது. 
 
மோர் இலவசம். ரங்கநாதா."__ 🥛❤️
 
__நண்பர்களே. இது கதை இல்ல. நிஜம். 2018ல திருச்சி பேப்பர்ல வந்துச்சு.
 
ஏக்கம் வரும். புள்ளைங்க இல்லனா. சொந்தம் இல்லனா.
 
விரக்தி வரும். 80 வயசுல தனியா நின்னா.
 
ஆனா நிம்மதி ஒரு வாக்குறுதில இருக்கு. ஒரு சொம்பு மோர்ல இருக்கு. ஒரு பிடி சாதத்துல இருக்கு.
 
உங்களுக்கு பிடித்ததா இந்த பதிவு தோழர்களே?