அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:25 | Best Blogger Tips

 






இன்றிலிருந்து சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு கல்வெட்டு கிடைக்கிறது. இது முதலாம் இராஜேந்திரச் சோழன் காலத்தில் விழுப்புரத்திலுள்ள எண்ணாயிரம் எனும் ஊரிலிருந்த பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டு ஒருசில முக்கியமான தகவல்களை தருகிறது. இதன் அடிப்படையிலேயே இன்றைய பதிவு தொடரும். பொதுவாக இங்கு ஒரு திரிபுவாதம் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது ஆங்கிலேயர்கள் மற்றும் திராவிட ஆட்சிக்கு முன் நம் முன்னோர்கள் யாரும் படிக்கவில்லை என்றும், நமது தலைமுறைதான் முதல்நிலை பட்டதாரிகள் என்றுமாக அந்த வாதங்கள் தொடர்கின்றன...!

காந்தியடிகள் ஒருமுறை ஒரு மாநாட்டில் பேசியபோது ஆங்கிலேயர் வருகைக்கு பின் நமது பாரம்பரிய கல்விமுறை அழிந்து வருகிறது என்றார். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்கிலேயர்களால் தொகுத்து எழுதப்பட்ட நூலான அழகிய மரம் எனும் நூலில் தாமஸ் மன்றோ என்பவர் இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாக பதிவு செய்துள்ளார். மிக முக்கியமாக ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாக இருந்த பள்ளிக்கூடங்களில் பிராமணர்களை விட மற்ற சமூகத்தவரே அதுவும் இரண்டு, மூன்று பங்கு அதிகமாக படித்தனர் என்பதற்கு தகுந்த சான்றுகளை பதிவு செய்துள்ளனர்....!

இராமாயணமும், மகாபாரதமும் அந்த கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டதோடு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் பயிற்றுவிக்கப்பட்டது என்பதற்கு தகுந்த ஆவணங்கள் உள்ளன. இதை மெய்ப்பிக்கும் வகையில் முதலாம் இராஜேந்திரச்சோழன் காலத்தில் கிடைந்த நான் மேற்கூறிய கல்வெட்டு கூடுதல் தகவல்களை தருகிறது. 11 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட இந்த கல்வெட்டில் பிரம்மசாரியம் என்று அழைக்கப்பட்ட #இளங்கலை மாணவர்கள் 270 பேர் படித்ததாகவும், சாத்திரம் என்று அழைக்கப்பட்ட #முதுகலை மாணவர்கள் 70 பேரும் படித்துள்ளனர்.


முக்கியமாக இங்கு ரிக் யஜுர் சாம அதர்வணம் போன்ற வேதங்களும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. அதோடு மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதை இன்றைய விடுதிகளுக்கு நிகராக கொள்ளலாம். அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களை வக்காணி, நம்பி, ஓதுவிக்கும் உபாத்யார் என்ற பெயர்களால் அழைத்துள்ளதோடு, நெல் மற்றும் பொன் அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பெருமாள் கோவிலில் திருவாய்மொழி விண்ணப்பம் செய்ய நிவந்தங்களும், விண்ணப்பம் செய்யும் நால்வர்க்கு நெல்லும், நிலமும் கொடுக்கப்பட்டது முதல் நெடுநீடிய விளக்கம் இக்கல்வெட்டில் உள்ளது....!

(கல்வெட்டு தகவல்கள் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்.)

சோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. திருவள்ளுவர் இளங்கோவடிகள் என்று பத்து புலவர்களின் பெயர்களை வைத்து நம் முன்னோர்கள் படித்தார்கள் என்று நாம் பீத்திக்கொள்வதாக கூறி கதைத்திருந்த ஒரு காணொளியை பார்த்தேன். வேண்டுமானால் அதை பின்னூட்டத்தில் இணைக்கிறேன். ஆனால் சங்ககாலத்திலேயே

அகம்பன் மாலாதனார்,


அஞ்சியத்தை மகள் நாகையார்,

அஞ்சில் அஞ்சியார்

அஞ்சில் ஆந்தையார்

அடைநெடுங்கல்வியார்

அணிலாடு முன்றிலார்

அண்டர் மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

அதி இளங்கீரனார்

அம்மூவனார்

அம்மெய்நாகனார்

அரிசில் கிழார்

அல்லங்கீரனார்

அழிசி நச்சாத்தனார்

அள்ளூர் நன்முல்லையார்

அறிவுடைநம்பி

ஆரியன் பெருங்கண்ணன்

ஆடுதுறை மாசாத்தனார்

ஆதிமந்தி

ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

ஆலங்குடி வங்கனார்

ஆலத்தூர் கிழார்

ஆலம்பேரி சாத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

ஆவூர் காவிதிகள் சகாதேவனார்

ஆவூர்கிழார்

ஆலியார்

ஆவூர் மூலங்கீரனார்

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

இடைக்காடனார்

இடைக்குன்றூர்கிழார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இம்மென்கீரனார்

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

இரும்பிடர்தலையார்

இளங்கீரந்தையார்

இளங்கீரனார்

இளநாகனார்

இளந்திரையன்

இளந்தேவனார்

இளம்புல்லூர்க் காவிதி

இளம்பூதனார்

இளம்பெருவழுதி


இளம்போதியார்

இளவெயினனார்

இறங்குடிக் குன்றநாடன்

இறையனார்

இனிசந்த நாகனார்

ஈழத்துப் பூதந்தேவனார்

உகாய்க் குடிகிழார்

உக்கிரப் பெருவழுதி

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

உம்பற்காட்டு இளங்கண்ணனார்

உருத்திரனார்

உலோச்சனார்

உவர்கண்ணூர் புல்லங்கீரனார்

உழுந்தினைம் புலவர்

உறையனார்

உறையூர் இளம்பொன் வாணிகனார்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

உறையூர்ச் சல்லியங் குமரனார்

உறையூர்ச் சிறுகந்தனார்

உறையூர்ப் பல்காயனார்

உறையூர் மருத்துவன் தாமோதரனார்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

ஊட்டியார்

ஊண்பித்தை

ஊண்பொதி பசுங்குடையார்

எயிற்றியனார்

எயினந்தையார்

எருமை வெளியனார்

எருமை வெளியனார் மகனார் கடலனார்

எழூப்பன்றி நாகன் குமரனார்

ஐயாதி சிறு வெண்ரையார்

ஐயூர் முடவனார்

ஐயூர் மூலங்கீரனார்

ஒக்கூர் மாசாத்தனார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஒருசிறைப் பெரியனார்

ஒரூத்தனார்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

ஓதஞானி

ஓதலாந்தையார்

ஓரம்போகியார்

ஓரிற்பிச்சையார்

ஓரேர் உழவர்

ஔவையார்

கங்குல் வெள்ளத்தார்

கச்சிப்பேடு இளந்தச்சன்

கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்

கச்சிப்பேடு பெருந்தச்சனார்

கடம்பனூர்ச் சாண்டில்யன்

கடலூர்ப் பல்கண்ணனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடுந்தொடைக் காவினார்

கோவர்த்தனர்

கோவூர்க் கிழார்

கோவேங்கைப் பெருங்கதவனார்

கோழிக் கொற்றனார்

கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்

சங்கவருணர் என்னும் நாகரியர்

சத்திநாதனார்

சல்லியங்குமரனார்

சாகலாசனார்

சாத்தந்தந்தையார்

சாத்தனார்

சிறுமோலிகனார்

சிறுவெண்டேரையார்

சிறைக்குடி ஆந்தையார்

சீத்தலைச் சாத்தனார்

செங்கண்ணனார்

செம்பியனார்

செம்புலப்பெயல்நீரார்

செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்

செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்

செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்

செல்லூர்க்கோசிகன் கண்ணனார்

சேந்தங்கண்ணனார்

சேந்தம்பூதனார்

சேந்தங்கீரனார்

சேரமானெந்தை

சேரமான் இளங்குட்டுவன்

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் நலங்கிள்ளி

சோழன் நல்லுருத்திரன்

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

தனிமகனார்

தாமாப்பல் கண்ணனார்

தாமோதரனார்

தாயங்கண்ணனார்

தாயங்கண்ணியார்

திப்புத்தோளார்

திருத்தாமனார்

தீன்மதிநாகனார்

தும்பிசேர்கீரனார்

துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்

துறையூர்ஓடைக்கிழார்

தூங்கலோரியார்

தேய்புரி பழங்கயிற்றினார்

தேரதரன்

தேவகுலத்தார்

தேவனார்

தொடித்தலை விழுத்தண்டினர்

தொண்டி ஆமூர்ச்சாத்தனார்

தொல்கபிலர்

நக்கண்ணையார்

நக்கீரர்

நப்பசலையார்

நப்பண்ணனார்

நப்பாலத்தனார்

நம்பிகுட்டுவன்

நரிவெரூத்தலையார்

நரைமுடி நெட்டையார்

நல்லச்சுதனார்

நல்லந்துவனார்

நல்லழிசியார்

நல்லாவூர்க் கிழார்

நல்லிறையனார்

நல்லுருத்திரனார்

நல்லூர்ச் சிறுமேதாவியார்

நல்லெழுநியார்

நல்வழுதியார்

நல்விளக்கனார்

நல்வெள்ளியார்

நல்வேட்டனார்

நற்சேந்தனார்

நற்றங்கொற்றனார்

நற்றமனார்

நன்பலூர்ச் சிறுமேதாவியார்

நன்னாகனார்

நன்னாகையார்

நாகம்போத்தன்

நாமலார் மகன் இளங்கண்ணன்

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்

நெடுங்கழுத்துப் பரணர்

நெடும்பல்லியத்தனார்

நெடும்பல்லியத்தை

நெடுவெண்ணிலவினார்

நெட்டிமையார்

நெய்தற் கார்க்கியார்

நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்

நெய்தற்றத்தனார்

நொச்சி நியமங்கிழார்

நோய்பாடியார்

பக்குடுக்கை நன்கணியார்

படுமரத்து மோசிகீரனார்

படுமரத்து மோசிக்கொற்றனார்

பதடிவைகலார்

பதுமனார்

பரணர்

கடுந்தொடைக் கரவீரன்

கடுவன் இளமள்ளனார்

கடுவன் இளவெயினனார்

கடுவன் மள்ளனார்

கணக்காயன் தத்தனார்

கணியன் பூங்குன்றனார்

கண்ணகனார்

கண்ணகாரன் கொற்றனார்

கண்ணங்கொற்றனார்

கண்ணம் புல்லனார்

கண்ணனார்

கதக்கண்ணனார்

கதப்பிள்ளையார்

கந்தரத்தனார்

கபிலர்

கயத்தூர்கிழார்

கயமனார்

கருங்குழலாதனார்

கரும்பிள்ளைப் பூதனார்

கருவூர்க்கிழார்

கருவூர் கண்ணம்பாளனார்

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்

கருவூர் கலிங்கத்தார்

கருவூர் கோசனார்

கருவூர் சேரமான் சாத்தன்

கருவூர் நன்மார்பனார்

கருவூர் பவுத்திரனார்

கருவூர் பூதஞ்சாத்தனார்

கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்

கல்பொருசிறுநுரையார்

கல்லாடனார்

கவைமகன்

கழாத்தலையார்

கழார்க் கீரனெயிற்றியனார்

கழார்க் கீரனெயிற்றியார்

கழைதின் யானையார்

கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்

கள்ளில் ஆத்திரையனார்

காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்

காசிபன் கீரன்

காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்

காப்பியஞ்சேந்தனார்

காப்பியாற்றுக் காப்பியனார்

காமஞ்சேர் குளத்தார்

காரிக்கிழார்

காலெறி கடிகையார்

காவட்டனார்

காவற்பெண்டு

காவன்முல்லையார்

காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்

கிடங்கில் குலபதி நக்கண்ணனார்

கிள்ளிமங்கலங்கிழார்

கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்

கீரங்கீரனார்

கீரந்தையார்

குடபுலவியனார்

குடவாயிற் கீரத்தனார்

குட்டுவன் கண்ணனார்

குட்டுவன் கீரனார்

குண்டுகட் பாலியாதனார்

குதிரைத் தறியனார்

குப்பைக் கோழியார்

குமட்டூர் கண்ணனார்

குமுழிஞாழலார் நப்பசலையார்

குழற்றத்தனார்

குளம்பனார்

குளம்பாதாயனார்

குறமகள் இளவெயினி

குறமகள் குறியெயினி

குறியிறையார்

குறுங்கீரனார்

குறுங்குடி மருதனார்

குறுங்கோழியூர் கிழார்

குன்றம் பூதனார்

குன்றியனார்

குன்றூர்க் கிழார் மகனார்

கூகைக் கோழியார்

கூடலூர்க் கிழார்

கூடலூர்ப பல்கண்ணனார்

கூவன்மைந்தன்

கூற்றங்குமரனார்

கேசவனார்

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

கொட்டம்பலவனார்

கொல்லன் அழிசி

கொல்லிக் கண்ணன்

கொள்ளம்பக்கனார்

கொற்றங்கொற்றனார்

கோக்குளமுற்றனார்

கோடைபாடிய பெரும்பூதன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

கோட்டியூர் நல்லந்தையார்

கோண்மா நெடுங்கோட்டனார்

கோப்பெருஞ்சோழன்

பராயனார்

பரூஉமோவாய்ப் பதுமனார்

பறநாட்டுப் பெருங்கொற்றனார்

பனம்பாரனார்

பாண்டரங்கண்ணனார்

பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாண்டியன் பன்னாடு தந்தான்

பாண்டியன் மாறன் வழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

பாரிமகளிர்

பார்காப்பான்

பாலைக் கௌதமனார்

பாலை பாடிய பெருங்கடுங்கோ

பாவைக் கொட்டிலார்

பிசிராந்தையார்

பிரமசாரி

பிரமனார்

பிரான் சாத்தனார்

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்

புல்லாற்றூர் எயிற்றியனார்

பூங்கணுத் திரையார்

பூங்கண்ணன்

பூதங்கண்ணனார்

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

பூதம்புல்லனார்

பூதனார்

பூதந்தேவனார்

பெருங்கண்ணனார்

பெருங்குன்றூர்க் கிழார்

பெருங்கௌசிகனார்

பெருஞ்சாத்தனார்

பெருஞ்சித்திரனார்

பெருந்தலைச்சாத்தனார்

பெருந்தேவனார்

பெருந்தோட் குறுஞ்சாத்தன்

பெரும் பதுமனார்

பெரும்பாக்கன்

பெருவழுதி

பேயனார்

பேய்மகள் இளவெயினி

பேராலவாயர்

பேரிசாத்தனார்

பேரெயின்முறுவலார்

பொதுக்கயத்துக் கீரந்தை

பொதும்பில் கிழார்

பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி

பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்

பொத்தியார்

பொய்கையார்

பொருந்தில் இளங்கீரனார்

பொன்மணியார்

பொன்முடியார்

பொன்னாகன்

போதனார்

போந்தைப் பசலையார்

மடல் பாடிய மாதங்கீரனார்

மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

மதுரை இனங்கௌசிகனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கண்டராதித்தனார்

மதுரைக் கண்ணத்தனார்

மதுரைக் கவுணியன் பூதத்தனார்

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

மதுரைக் காருலவியங் கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைக் கொல்லன் புல்லன்

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

மதுரைச் சுள்ளம் போதனார்

மதுரைத் தத்தங்கண்ணனார்

மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்

மதுரைத் தமிழக் கூத்தனார்

மதுரைப் படைமங்க மன்னியார்

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

மதுரைப் புல்லங்கண்ணனார்

மதுரைப் பூதனிள நாகனார்

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

மதுரைப் பெருங்கொல்லன்

மதுரைப் பெருமருதனார்

மதுரைப் பெருமருதிளநாகனார்

மதுரைப் போத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்

மதுரை வேளாசன்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதனிளநாகனார்

மலையனார்

மள்ளனார்

மாங்குடிமருதனார்

மாடலூர் கிழார்

மாதீர்த்தன்

மாமிலாடன்

மாமூலனார்

மாயேண்டன்

மார்க்கண்டேயனார்

மாலைமாறன்

மாவளத்தன்

மாறோக்கத்துக் காமக்கண்ணியார்

மாறோக்கத்து நப்பசலையார்

மாற்பித்தியார்

மிளைக் கந்தன்

மிளைப் பெருங்கந்தன்

மிளைவேள் பித்தன்

மீனெறி தூண்டிலார்

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

முடத்தாமக்கண்ணியார்

முடத்திருமாறன்

முதுகூத்தனார்

முதுவெங்கண்ணனார்

முப்பேர் நாகனார்

முரஞ்சியயூர் முடிநாகராயர்

முள்ளியூர்ப் பூதியார்

முலங்கீரனார்

மையோடக் கோவனார்

மோசிக்கண்ணத்தனார்

மோசிக்கீரனார்

மோசிக்கொற்றன்

மோசிக்கரையனார்

மோசிசாத்தனார்

மோசிதாசனார்

வடநெடுந்தத்தனார்

வடவண்ணக்கன் தாமோதரன்

வடமோதங்கிழார்

வருமுலையாரித்தி

வன்பரணர்

வண்ணக்கன் சோருமருங்குமரனார்

வண்ணப்புறக் கந்தரத்தனார்

வாடாப்பிராந்தன்

வாயிலான் தேவன்

வாயிலிலங்கண்ணன்

வான்மீகியார்

விட்டகுதிரையார்

விரிச்சியூர் நன்னாகனார்

விரியூர் நன்னாகனார்

வில்லக விரலினார்

விழிகட்பேதை பெருங்கண்ணனார்

விற்றூற்று மூதெயினனார்

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

வினைத் தொழில் சோகீரனார்

வீரை வெளியனார்

வீரை வெளியன் தித்தனார்

வெண்கண்ணனார்

வெண்கொற்றன்

வெண்ணிக் குயத்தியார்

வெண்பூதன்

வெண்பூதியார்

வெண்மணிப்பூதி

வெள்ளாடியனார்

வெள்ளியந்தின்னனார்

வெள்ளிவீதியார்

வெள்வெருக்கிலையார்

வெள்ளைக்குடி நாகனார்

வெள்ளைமாளர்

வெறிபாடிய காமக்கண்ணியார்

வேட்டகண்ணன்

வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்

வேம்பற்றுக் குமரன்

என்று 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள். இவர்களில் 30க்கும் மேற்பட்ட பெண்புலவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த 450 புலவர்களுடன் பயின்றவர்கள் மற்றும் இவர்களின் ஆசிரியர்கள், இதுபோன்று அங்கீகாரம் கிடைக்காத புலவர்கள் என்று கணக்கிட்டால் சங்ககாலத்திலேயே 1000 த்திற்கும் மேற்பட்ட படித்த மகான்களை காட்டலாம். இது தவிர்த்து காப்பிய காலத்திலிருந்த புலவர்கள் முதல் 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்களோடு சேர்த்து அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடன் பயின்றவர்கள் என்று புலவர்களின் பெயர்களை எழுத ஆரம்பித்தால் முகநூல் தாங்காது. நமது முன்னோர்கள் படிக்கவில்லை என்று கூறி மட்டம் தட்டுவதில் இவர்களுக்கு அப்படி என்ன நன்மையோ தெரியவில்லை. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது...!

எங்கள் நாடார் சமூகத்தில் எனது தாத்தா மிகுந்த செல்வாக்குடனும் கல்வியிலும் (தற்காப்புக்கலை மற்றும் சித்த மருத்துவம்) சிறந்துதான் விளங்கினார். அவருக்கு செல்வமணி ஆசான் என்ற பெயர் உண்டு. அவரின் காலத்தில் வீட்டில் பத்து பேருக்குமேலான மாணவர்கள் அவரிடம் சிலம்பம், சிரமம் போன்ற விளையாட்டு முறைகளையும், மருத்துவம் சார்ந்த குறிப்புகளையும் பயில்வதற்கு வருவார்கள் என்றும் இதை ஆரம்பகாலத்தில் எனது தந்தையும் செய்தார் என்பதையும் அறிவேன். அதற்கு முன்பான தலைமுறைகளும் அவரவர் துறைகளில் சிறந்துதான் விளங்கினார்கள் என்பதை தந்தை மூலம் அறிந்திருக்கிறேன். எனது குடும்பத்தில் நான் தான் படித்தேன் என்றும் எனது முன்னோர்கள் படிக்கவில்லை என்று பொய் கூறுவதை நான் விரும்பவில்லை. இன்றுபோல் Degree Certificate வாங்கினால்தான் படிப்பு என்ற புரிதலுடையவர்களிடம் இதுபற்றி பேசி புரியவைப்பது என்பது அரிது. இவர்களிடம் வீண் விவாதம் செய்வதைவிட கடந்துசெல்வதே மேல்.....!

-பா இந்துவன்

நன்றி இணையம்