உறவு முறைகள் பற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:24 | Best Blogger Tips

 


👪 உறவு_முறைகள்_பற்றி_மிகவும் சிந்திக்கவேண்டிய. 🤱🏻 🤱🏻

🧑‍🔧அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, சின்ன அண்ணன்,பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, 👲

🧑‍🏭மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தைபொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்,👲

🙋இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது,

🙋யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், 💁

🙆அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்🤷

🤦காரணம், . . .👼🏻🤱🏻

🙍ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!🙎

🧏அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?💆

🧕பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!


🧕திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப் போவதில்லை,🧕

🧑‍🔧மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,🙎

🤷குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?💁

🙆கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,🧕

🧏இனி யார் போவார்?

💇ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்💆

🙍ஒவ்வொரு ஆணும் தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.🙆

💆அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

🙎அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .🤦

🤷ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!💇

🧕உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !🙎🙎




🙍உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!🙍

🙍சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .🧑‍🏭🧑‍🏭

🧑‍🔧வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!👲👲

👪கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!👪👪

🙆ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து பாருங்கள்!🙍

🧕பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!🙍

👪ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்துவிடக்கூடது!👪👪

🙎கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,🙍

🤷வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . 🤷.

🙆ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்? 👪👪😀😀 *சொந்தங்கள் தழைக்க வேண்டும்!! *🙏