ஸ்ரீநகரில் குடியரசு தின...!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:42 | Best Blogger Tips

 


1992 ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கர வாதிகள் ஒரு எச்சரிக்கை விடுத்தார்கள்..தாய்ப்பால் குடித்த இந்தியனாக இருந்தால் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை ஏற்றுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள் பயங்கர வாதிகள்.....

அன்று பாஜகவின் அகில இந்திய தலைவராக இருந்தவர் டாக்டர்.முரளி மனோகர் ஜோஷி. அந்த சவாலை ஏற்றார்.

நாடு முழுவதும் பாஜக வின் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஜனவரி 24 ஆம் தேதி ஜம்முவின் கூடினார்கள்...

கூடிய அத்தனை லட்சம் பேரும் அவரவர் மாவட்டத்திலேயே ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தான் வந்தார்கள்...அந்த படிவத்தின் வாசகங்கள் என்ன தெரியுமா ?

" எனக்கு காஷ்மீர் பிரச்சனை என்ன என்று நன்றாக தெரியும்.அங்கே பயங்கரவாதிகள் மூலம் என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று தெரிந்தே நான் ஸ்ரீநகருக்கு தேசிய கோடி ஏற்றும் உன்னதமான நிகழ்ச்சிக்கு செல்கிறேன்" என்று படிவத்தின் வாசகம்..

அதிலே கையெழுத்து இட்டுவிட்டு உயிருக்கு ஆபத்து என்ற போதும் கூடிய கூட்டம் பல லட்சம்..

26 ஜனவரி 1992 சொல்லிய படியே காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரின் லால் சோக் மைதானத்தில் பயங்கரவாதிகளின் ராக்கெட் லாஞ்சர்ஸ் பரந்த நிலையிலும் நம் பாரத நாட்டின் பெருமைக்குரிய தேசிய கொடியை ஏற்றி பயங்கரவாதிகளின் மிரட்டலை முறியடித்தார் திரு.முரளி மனோகர் ஜோஷி ஜி...

இந்த "ஒற்றுமை யாத்திரை" முழுவதையும் பொறுப்பாளராக இருந்து வெற்றிகரமாக நடத்தியவர் பாஜகவின் அன்றைய அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர்


"நரேந்திர மோடி"

கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி 1992 ஸ்ரீநகர் லால் சோக் மைதானத்தில் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கிடையே நமது பெருமை மிக்க தேசியக்கொடியை தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஏற்றிய பொது எடுத்தது...

பயங்கரவாதிகளுக்கு தண்ணி காட்டிய என்னுடைய தலைவனா காமிடி கட்டுமரங்களையும் கள்ள தோணிகளையும் பார்த்து கவலை படுவார்...?

 


நன்றி இணையம்