மனமே பிரச்சின*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:41 | Best Blogger Tips

 


தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.


*காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..


முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்..


முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர்.


இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன.


அரசரால் *தூங்கவே*

முடியவில்லை.


அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்..

மறுநாளும் அலைச்சல்

இருக்கிறது.


அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*.


நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன.


ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார்.


அவரை எழுப்பிய அரசர்,


''என்ன மனிதர் நீங்கள்...

இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார்.

முனிவரோ, தனது வழக்கமான *நிதானத்துடன்* கூறினார்:

''அந்த நாய்கள், உங்களுக்கு *ஆதரவாகவோ அல்லது எதிராகவோ* இங்கு கூடவில்லை;

கோஷமிடவில்லை

அந்த நாய்களுக்கு

இங்கு ஒரு *அரசர்* தங்கி இருப்பது *தெரியாது.*

அவைகள் படிப்பதில்லை.

அவற்றுக்கு *அறிவும்* கிடையாது.

அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த *சம்பந்தமும்* இல்லை.

அவை, தங்களுக்கே உரிய *குரைக்கும் வேலையைப்* பார்க்கின்றன.

நீங்கள், *தூங்குகிற வேலையைப்* பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் *குரைத்தால்*, நான் எப்படி *தூங்க* முடியும்...???'' என்றார் அரசர்.

உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை *எதிர்த்துப்* போராடுகிறீர்கள்.

அப்படிப் *போராடாதீர்கள்*

.

பிரச்னை *குரைப்பொலி*

அல்ல, உங்கள் *எதிர்ப்பு*

உணர்வு.

நீங்கள், *சத்தத்துக்கு எதிராக* இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று *ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள்*. நாய்கள் உங்களது நிபந்தனையைக் *கவனிக்கப் போவது* இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை *விலக்கப் போவது* இல்லை.

ஆனால், *நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும்.* நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்.

நாய்களின் குரைப்பை *ஏற்றுக் கொள்ளுங்கள்*. இந்த இரவிலும் எவ்வளவு *சக்தியுடன்* அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....???

*ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால்,* குரைப்புச் சத்தமும் ஒருவகை *மந்திரம்தான்*...!!!'' என்றார் முனிவர்.

*'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க* போனார் அரசர்.

ஆனால் காலையில், மிகுந்த *மகிழ்ச்சியுடன்* எழுந்து முனிவரைச் சந்தித்தார் *அரசர்*...!!!

''ஆச்சரியம்தான்....!!! எனது *எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு*, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன்.

ஆழ்ந்து *ரசிக்கவும்* தொடங்கினேன். அப்படியே *உறங்கிப்* போனேன்'' என்றார் அரசர்.

முனிவர் *நமக்குச்* சொல்கிறார்:

"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். *உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால்*, உன் கவனத்தை *உள்முகமாகத்* திருப்பு.

எரிச்சலுக்கான காரணம் *நீயாகத்தான்* இருப்பாய்.

உனது *எதிர்பார்ப்பு* அல்லது *ஆசை* வேறாக இருந்திருக்கும்;

அல்லது ஏதோ ஒரு *நிபந்தனையை* உனக்குள் நீ விதித்திருப்பாய்.

அதுதான் உனது *எரிச்சலுக்குக்* காரணம்..

*உலகத்தை* நமக்கேற்ப *நிர்ப்பந்தப்படுத்த முடியாது..*

அதை எதிர்த்துப் *போராடும்போது* நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

*யாரையும் நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.*

🤝🤝🤝🤝🤝🤝🤝

*வாழ்க நிபந்தனையற்று*

🌹🌹🌹🌹🌹🌹🌹

*வளர்க எதிர்ப்பு உணர்வின்றி*

 

 நன்றி இணையம்