நடுநிலை ஹிந்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:31 | Best Blogger Tips

 


ஒரு சாமியார் ஏன் மெடிக்கல் காலேஜ் கட்டணும்,

ஒரு சாமியார் ஏன் ஷாம்ப்பு விக்கணும்.. அப்படின்னு

மூக்குத்தி அம்மன்படத்தில் கேக்குறாங்க...

RJ பாலாஜிக்கு பதில் தெரியலை.

நாம் சொல்வோம்.

இந்தியாவின் மதத்தையும் கலாச்சார அடையாளங்களையும் காக்க பணம் தேவை.

ஹிந்து அறநிலையத்துறை என்பது

வேத பாடசாலைகள்,

கோ சாலைகள்,

ஹிந்து கலாச்சாரத்தை போதிக்கும் பள்ளிகள் எதுவும் நடத்தவில்லை!

அது ஹிந்து மதத்தின் வருவாய் எல்லாம் சுரண்டி ஹிந்து மதத்தை அழிக்க மட்டும் பயன்படுத்துகிறது.

நொடித்துப் போன ஆயிரம் வருடம் பழமையான கோவில்களில் ஒரு வேளை பூஜை கூட நடத்துவதில்லை.

நொடிந்த நிலையில் இருக்கும் பூசாரிகளையும் காக்கவில்லை அரசு.

ஆனால், மற்ற மதங்கள் வெளிநாட்டில் இருந்து வரும் பல ஆயிரம் கோடி உதவியுடன் இங்கே பள்ளி முதல் மருத்துவ கல்லூரிவரை நடத்தி மதம் மாற்றுகிறார்கள்.

மதம் மாறினால் அவர்களின் நெட்வொர்க் மூலம் வேலை கிடைக்கிறது.

இதையெல்லாம் எதிர்கொள்ள ஹிந்துக்களுக்கு மதரீதியான அமைப்போ வருமானமோ இல்லை.

அதனால்..

சத்குரு ஜக்கிவாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பாபா ரம்தேவ், பங்காரு அடிகளார் போன்றோர்கள் பல வேலைகளை செய்கிறார்கள்.

அதை தாங்க முடியாத அந்நிய சக்திகள் தங்கள் வளர்ப்பு பிராணிகளான

சினிமா & ஊடகங்களை ஏவி அவர்கள் மீது அவதூறு பரப்புகிறது.

எண்ணற்ற வைணவ மடாலயங்கள்... ஆதிசங்கரர், திருஞான சம்பந்தர், சங்கரர், விவேகானந்தர், யோகானந்த பரமஹம்ஸர், தயானந்த சரஸ்வதி,

ஸ்ரீ பிரபு பாதா எல்லாம் மடங்களை நிறுவி தங்கள் சம்பிரதாயத்தை பரப்பி மதமாற்றத்தை தடுத்தார்கள்.

இன்றைக்கு அவர்கள் இருந்திருந்தால் அவர்களையும் ஊடகங்கள் கேவலப்படுத்த முயன்றிருக்கும்.

நடுநிலை ஹிந்துக்கள் அதையும் ஆதரித்து இருப்பார்கள்.

Sivakumar MC பதிவு

நன்றி இணையம்