சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:01 | Best Blogger Tips
Image may contain: 1 person

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ...
1. “காபூலில் இருந்து காந்தஹார் வரை என் தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது ...
ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன ...
ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார் ...
என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை ...
Image may contain: 3 people, people smiling, text
அல்லாவே !
எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய் ... இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான் ...
அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு
என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்தநமாஸ்" பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப் படித்துள்ளார் ...
2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்; என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.
3. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் , பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.
4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “ உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்என்று சொன்னார்.
5. சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.
6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாதுஎன்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.
7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.
8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி; இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்என ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.
9. சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரைசூரியன்என்றே போற்றியிருப்போம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
10. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் , கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது. 30000 உஸ்பெக் வீரர் படையை,
1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது பட்டுமல்லாமல், எதிரிப் படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது. இது தான் உலக சாதனை.
11. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார். பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.
12. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான். இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.
13. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார். ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார்.
(
பிறந்தது: 19-2-1630; இறந்தது: 3-4-1680).
14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “மேலாண்மைக்கு குரு சிவாஜிஎன்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது ...
இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை ...
அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை வரும் ?
வாய் சவடால் அடித்துக் கொண்டு ...
அயோக்கிய அரசியல்வாதிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டு ...
டாஸ்மாக்குக்குப் போய்க் கொண்டு ...
வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு ...
இருக்கத்தான் நேரம் சரியாக இருக்கு ..!!

நன்றி இணையம்