முதலியார்கள் "ஆண்ட வம்சம்"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:30 | Best Blogger Tips
முதலியார்கள் க்கான பட முடிவு
முதலியார்கள் "ஆண்ட வம்சம்" என்று போஸ்டர் அடித்து பெருமை தேடும் இனமல்ல.இந்த தமிழினத்திற்காக எத்தனையோ நன்மைகளை செய்த மண்ணை நேசிக்கும் இனம். வெள்ளையனுக்கு போட்டியாக பச்சையப்பன் கல்லூரி நிறுவ காரணமானவர் வள்ளல் பச்சையப்ப முதலியார்(வெள்ளையனிடம் நிதி வாங்காத ஒரே கல்லூரி), பல மாநிலங்களுக்கு மின்சாரம் தரும் திட்டத்திற்காக(NLC) தனது ஐநூறு ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார் நெய்வேலி ஜம்புலிங்க முதலியார்.தமிழர் இரத்தத்தில் தமிழ் உணர்வை தரும் எழுச்சியான பாடல்களை தந்தவர் கனக.சுப்புரத்தின முதலியார்(பாரதிதாசன்).திரு.வி. அவர்களின் தமிழ்த்தொண்டு அளப்பரியது.வேலூர் எத்திராஜ் முதலியார் மகளிருக்காக எத்திராஜ் கல்லூரியை நிறுவினார். இன்று தமிழர்கள் அனைவரும் படிக்க காரணமான காமராசரின் மதிய உணவுடன்கூடிய கல்வி திட்டத்தை வடிவமைத்து, நடைமுறைப்படுத்தி கல்வி புரட்சி செய்தவர் அன்றைய கல்வித்துறை ஆலோசகர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் (இவரும் முதலியார் இனமே, தீண்டாமையை வெறுத்து கலப்பு திருமணம் செய்தார்). இன்றைக்கும் தமிழக கோவில்களுக்கு அதிக நன்கொடை,நிலம் மற்றும் அனைவருக்கும் பொதுவான பள்ளிகளை தந்த பட்டியலில் முதலியார் இனம் முன்னணியில் இருக்கும். தன்னை மட்டுமே மேலே கொண்டு வர நினைக்காமல்,தமிழர் எல்லோருக்கும் நன்மை செய்த இனம் இது. அதனால்தான் ..சி கடைசியில் வறுமையில் வீழ்ந்தார். இந்த தலைமுறை முதலியார் இளைஞர் பலர் தம் வரலாறு தெரியாமல் தமிழ் சினிமாவே கதியென உள்ளனர். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் அப்போதே படங்களை நிறுத்தியிருப்பார் ( இன்றைய சென்சார் போர்டுகளை விட நூறு மடங்கு கவனத்துடன் படங்களை கண்ணியமாக இருக்கும்படி தயாரித்தவர்) . பல உட்பிரிவுகள் இருந்தாலும் முதலியார்களாக வாழ்வோம். வீரத்திலும்,விவேகத்திலும்,மக்கள் தொண்டிலும் முதலில் இருப்போம்! 

நன்றி இணையம்