தலைவலி – காரணங்களும், தீர்வுகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:14 | Best Blogger Tips
 

        

இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில் லை. நாம் செய்யும் செயல்களால்தான் அந்த தலைவலியானது வரு கிறது.
இதற்காக நாம் நிறைய மாத்திரை கள், வீட்டு மருந்துகள் என்று பல வலி நிவாரணிகளை எடுத்துக் கொ ண்டாலும், அவை மீண்டும் மீண் டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்தி ரைகளும் உடலும் பெரும் கெடுத லைத்தான் ஏற்படுத்தும். ஆகவே அத் தகைய வலி நிவாரணிகளைப் பய ன் படுத்தி சரிசெய்வதைவிட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந் த தலைவலி ஏற்படுகின்ற தென்ற காரணத்தை தெரிந்துகொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

ஈரமான கூந்தலோடு உலாவருதல்:

 காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலி யை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலை யை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற் காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்த லை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும்போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வ து நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிக மான வெப் பம் ஸ்கால்ப்பில் படும்போது, தலை வலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென் றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண் டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலை க்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்துதல்

 உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிக மாக வாசனை திரவியங்களை உடலி ல் பூசிக்கொண்டு செல்கின்றனர். இத னால் அந்த செண்ட் வாசனை, அதிக தலை வலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

படுக்கையில் படுத்துக்கொண்டே படித்தால்

 படுக்கும்போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழு த்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண் டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந் து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக குளிர்ச்சி யான பானங்களை அருந்துதல்

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளி ர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல் லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பதுபோல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வை த்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொரு ளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பி ட்டால் நல்லது.

ஆல்கஹால் குடித்தல்

ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியா க சாப்பிடுவர். சாதாரணமாக ஆல் கல் சாப்பிட்டாலே, மூளை மிகவு ம் தளர்ந்து இருக்கும். அதில் குளிர் ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள்தான் உண் டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப் பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம் இல்லாமை

தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றிய மையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர் ச்சியுடன் இருக்கும்.

பைக்கிலேயே நீண்ட தூரம் செல்லும்போது

பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தி ல் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களி ல் செல்வதுதான் பெரும் பிரச்ச னையை உண்டாக்கும். அவ்வா று பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத் தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க


        

அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது. நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள்

. சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும். பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது.

சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது. எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா!!!