நமது மூளை பாதிப்படைந்தால் . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:29 | Best Blogger Tips
 
        
மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகு  ம். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையு ம்.
1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண் ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக் கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத் துக்களையும் கொடுக்காமல் மூளை மெல்ல மெல்ல செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.

2. மிக அதிகமாகச்சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாள ங்கள் இறுகக்காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரண  மாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:இது புரோட்டின் நமது உடலில் சேர்வ தைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்ட காலம் தேவையான அளவு தூங்கா மலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற் படுத்தும்.
5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக் குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்பெறுவதில் இருந்து தடை செய் கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படை  யும்.
6. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் கார ணமாகிறது.

7.மூளைக்கு வேலைகொடுக்கும் சிந்த னைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உரு வாகின்றன. அதனால் மூளை வலிமை யான உறுப்பாகிறது.
8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இதுநீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜ  னை குறைக்கிறது. குறை வான ஆக்ஸிஜன் மூளை யைப் பாதிக்கி றது.

9.நோயுற்றகாலத்தில் மூ ளைக்கு வேலைகொடுப்பது:உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிர மாகப் படிப்பதும் மூளையை ப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொ டுப்பதே சிறந்தது.
10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற் கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
thanks to retham