கேப்டன் விக்ரம் பத்ரா.....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 May be an image of 4 people

நான் இந்திய கொடியை ஏற்றிவிட்டு வருவேன் அல்லது அதே கொடியால் சுற்றப்பட்டு வருவேன்", "என் மனம் இன்னும் அதிக வெற்றிகளை கேட்கிறது" இவையெல்லாம் மறைந்த இந்திய இராணுவ வீரர் கேப்டன் விக்ரம் பத்ரா தனது குடும்பத்தினரிடமும், நாட்டு மக்களிடமும் விட்டுச் சென்ற பொன்மொழிகள்.
 
யார் இந்த விக்ரம் பத்ரா! ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் நிஜ ஹீரோவின் உன்மை வரலாறு தெரியுமா? 
 
கேப்டன் விக்ரம் பத்ரா 09 செப்டம்பர் 1979-ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் பிறந்தார். இரட்டையரான இவர்களில் விக்ரம் மூத்தவர் ஆவார். விக்ரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான கிர்தாரி லால் பாத்ரா, பள்ளி ஆசிரியையான கமல் காந்திற்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். விக்ரமுக்கு சீமா மற்றும் நூதன் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
 
விக்ரம் தனது ஆரம்ப கால கல்வி முழுவதையும் ஆசிரியையான தனது தாயிடமிருந்தே கற்றார். பின் மேற்படிப்பிற்காக பாலம்பூரில் உள்ள டி.ஏ.வி பப்ளிக் பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, பாலம்பூரில் உள்ள மத்திய பள்ளியில் தனது இடைநிலை கல்வியை முடித்தார். சிறுவயது முதலே பல்வேறு திறன்களைக் கொண்டிருந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கராத்தே, டேபிள் டென்னிஸ் மற்றும் பல விளையாட்டுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
 
சிறு வயதிலிருந்தே விக்ரம் பத்ராவிற்கு தேசபக்தி அதிகமாக இருந்தது. தனது 12-ஆம் வகுப்பில் 82 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற இவர் அதன் பிறகு சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் பி.எஸ்.சி மருத்துவ அறிவியல் படிப்பை முடித்தார்.
தேச பக்திமிக்க கேப்டன்
அவர் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே என்.சி.சி (நேஷனல் கேடட் கார்பஸ்) ஏர் விங்கில் சேர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விக்ரம் என்.சி,சியின் கேப்டனாக உருவெடுத்தார். என்.சி,சியின் சி சான்றிதழுக்குத் தகுதி பெற்ற இவர் என்.சி.சியில் மூத்த அதிகாரிக்குக் கீழ் இயங்கும் பதவியையும் பெற்றார். தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க விக்ரம், அந்த நிகழ்விற்கு பிறகு தான் இந்திய இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதாகத் தனது பெற்றோரிடம் கூறினார்.
 
விக்ரம் இந்திய இராணுவத்தில் சேர தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த நேரம் 1995 ஆம் ஆண்டு பட்ட படிப்பை முடித்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (சி.டி.எஸ்) தேர்வுக்கு தயாரானார். அதே சமயம் அவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் எம்.ஏ ஆங்கிலம் படிப்பிற்காகச் சேர்ந்திருந்தார். 
 
மேலும், பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க விரும்பாத அவர் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே பல்கலைக்கழகத்தில் மாலை வகுப்புகளில் பயின்று வந்தார்.
.
​விக்ரம் பத்ராவின் இராணுவ வாழ்க்கை
விக்ரம் பத்ரா 1996-ஆம் ஆண்டு டேராடூனில் மனேகஷா பட்டாலியனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து அங்கு இராணுவ பயிற்சியை முடித்தார். அதில் அவரது திறமையைக் கண்ட அதிகாரிகள் 13-வது லெப்டினென்டாக ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸில் நியமித்தனர். அவரது முதல் வேலையே ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சபூர் நகரில் இருந்தது.
 
இந்திய கொடியை உயர்த்தி வருவேன்
ஒவ்வொரு முறை விக்ரமிற்கு விடுப்பு கிடைக்கும் போதும் அவரது சொந்த ஊரான பாலம்பூருக்கு வருவார். அவ்வாறு அவர் 1999 ஆம் ஆண்டு ஹோலி விழாவின் போது தனது வீட்டிற்கு வந்திருந்த போது அவரது காதலியான டிம்பிள் சீமாவையும் சந்தித்தார். அப்போது 'நான் இந்திய கொடியை வெற்றிகரமாக உயர்த்திய பின் வீட்டிற்கு திரும்ப வருவேன்' என்று கூறிச் சென்றார்.
 
கார்கில் போர் வெடிப்பு
அந்த சிறிய விடுப்பிற்கு பிறகு விக்ரம் தனது இராணுவ குழுவோடு இணைந்தார். ஜூன் 5 ஆம் தேதி கார்கில் போரும் வெடித்தது. அதன் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீர் என அந்த தேசங்கள் பெயர் மாற்றப்பட்டன. போர் சமயங்களில் வாரம் ஒரு முறை தனது பெற்றோரிடம் விக்ரம் பேசி வந்தார். அவ்வாறு 29 ஜூன் 1999 அன்று அவர் பெற்றோருடன் பேசியதே கடையாகும்.
 
கேப்டன் பதவி பெற்ற விக்ரம்
1999 ஜூன் 19ம் தேதியன்று கார்கில் போர் நடந்து கொண்டிருந்தபோது லெப்டினெண்ட் விக்ரம் பத்ராவின் தலைமையிலான குழு 5140 புள்ளிகளை பெற்றது. இதனால் அவர் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின், ஜூன் 30 அன்று அவரது குழு முஷ்கோ பள்ளத்தாக்கிற்கு சென்றது. தொடர்ந்து, ஜூலை 7 அன்று அதிகாலையில் இந்திய இராணுவம் எதிரிகளோடு தாக்குதல் நடத்தியது.
 
விக்ரமின் மார்பைத் துளைத்த குண்டு
எதிரிகளோடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சமயம் காயமடைந்த அதிகாரியை மீட்க விக்ரம் அங்கு சென்றார். அப்போது, காயமடைந்த அதிகாரியிடம் உங்களுக்கு குடும்பம் உள்ளது, குழந்தைகளும் உள்ளன. நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்றார். தொடர்ந்து யதிகளைத் தாக்க முயன்ற போது எதிரி ஒருவனின் துப்பாக்கி குண்டுகள் விக்ரமின் மார்பைத் துளைத்தது. விக்ரம் கொல்லப்பட்டார்.
 
கேப்டன் விக்ரம் பத்ராவின் வீர மரணத்திற்கு பிறகு இராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது நினைவாக இந்திய இராணுவம் பல்வேறு இராணுவக் கட்டிடங்களுக்கும் கேப்டன் பத்ரா என்ற பெயரை சூட்டியது. அவரது நினைவாக அவர் சென்ற மலைக்கும் கூட பத்ரா டாப் என பெயரிடப்பட்டது.
 

 

🚩வியர்க்கும் முருகன் சிலை 🚩

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips

 No photo description available.


🔯திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
 
🚩வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.
 
🔯இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன். அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார்.
 
🚩அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்..” என்று கூறி, முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.
 
🔯வீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில். ஆம்…
அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால் துடித்தார். சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும். முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்துகொண்டார்.
 
உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் ? என்று கேட்டார்.
 
🚩அவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்கமுடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக்கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனிபெருங்கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது.
 
🔯முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப்பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் ‘லூசிங்டன் 1803′ என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803′ என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.
 
ஓம் சரவண பவ 🌹🙏
முருகா சரணம் 🌹🙇

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling, glasses and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

‘சசபிந்து:’ என்றால் அறவ ழியிலிருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 10:18 AM | Best Blogger Tips

 Lord Ram, Sita, Laxman and Hanuman | Ram sita photo, Hanuman wallpaper,  Hanuman

ராம பாணத்தால் தாக்கப்பட்டு, வெட்டுண் ட மரம் போல் கீழே விழுந்தான் வாலி ராமன் தான் தன்னை மறைந்திருந்து தாக்கியுள்ளான் என்பதை உணர்ந்த வாலி, ராமனைப் பலவாறு ஏசினான்.
Sugriva tested Lord Rama's power | ராமரை பரிசோதித்த சுக்ரீவன்
அத்துடன் ராமனிடம் ஆறு கேள்விகளைக் கேட்டான் வாலி:
1. உனது நாட்டுக்குள் வந்து நான் என்ன தவறு செய்தேன்?
2. உனக்கும் எனக்கும் ஏதாவது முன் விரோதம் உண்டா:?
3. உனக்கும் எனக்கும் முன் அறிமுகம் உண்டா?
4. காட்டில் வாழும் மிருகத்தை நாட்டில் வாழும் மனிதன் எதற்காகத் தேடி வந்து தாக்க வேண்டும்?
5. ஒருவேளை நீ வேட்டையாட நினைத்திருந்தாலும், எதற்காக ஒரு குரங்கை வேட்டையாட வேண்டும்?
6. ஏன் மறைந்திருந்து என்னைத் தாக்க வேண்டும்?
ராமாயணத்தில் 'வாலி வதம்' எதனால், எப்படி நடந்தது என்பது பற்றி விரிவாக  அறிந்து கொள்ள முடியுமா? - Quora
இவற்றுள் முதல் ஐந்து கேள்விகளுக்கு ராமன் விடையளித்தான்:

1. மலை, காடு, சிறுகாடு, குறுநிலங்கள் ஆகிய அனைத்தும் அயோத்தி பேரரசுக்கு உட்பட்டவையே. எனவே உன்னைத் தண்டிக்க எனக்கு அதிகாரம் உண்டு.

2. நான் எப்போது சுக்ரீவனோடு அக்னி சாட்சியாக நட்பு பூண்டேனோ, அப்போதே அவனது சுக துக்கங்கள்,.சொத்துக்கள் அனைத்திலும் எனக்கும் பங்கு உண்டு.
என் நண்பனது ராஜ்ஜியத்தையும் மனைவி யையும் அபகரித்த நீ எனக்கும் விரோதியே ஆவாய்.

மைக் மன்னாரு - #வாலி_மோட்சம் -------------------- யாரைக் கேட்டாலும் 'வாலி  வதம், வாலி வதம்' என்றுதான் சொல்வார்கள். அது தவறானது. மேலான, உயர்வான ...

3. சுக்ரீவனிடமிருந்து ராஜ்ஜியத்தையும் அவனது மனைவியையும் தட்டிப் பறித்துப் பெருங்குற்றம் செய்திருக்கிறாய். அக்குற் றத்துக்குத் தண்டனையாகவே இப்போது நான் உன்னைத் தாக்கினேன். தவறிழை த்தவனைத் தண்டிக்கும் போது, முன்பின் அறிமுகம் இருக்க வேண்டிய அவசியமி ல்லை.

4. நீ நாட்டில் இருந்தாலும் சரி, காட்டில் இருந்தாலும் சரி, நீ மனிதனாக இருந்தா லும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி,
அயோத்திப் பேரரசுக்கு உட்பட்ட எந்தப் பகுதியில் வாழும் யார் தவறு செய்தாலும்,
அவரைத் தேடிச் சென்று தண்டித்தல் என் கடமையாகும்.

5. குரங்கை வேட்டையாடுவதால் எனக்குப் பயனில்லை என்றாலும், மன்னர்களான நாங்கள் பொழுது போக்குக்காக வேட்டை யாடுவது உண்டு. அதற்குப் பயன் இருக்க வேண்டிய அவசியமில்லை.

இப்படி ஐந்து கேள்விகளுக்கு விடையளி த்த ராமன், ஆறாவது கேள்விக்குப் பதில ளிக்கவில்லை. ஆனால் ராமனின் மனக் கருத்தை நன்கு அறிந்த லட்சுமணன் அந்தக் கேள்விக்கு விடையளித்தான்:

முன்பு நின் தம்பி வந்து சரண் புக,
“முறையிலோயைத் தென்புலத்து உய்ப்பன்!” என்று செப்பினன் செருவில் நீயும் அன்பினை உயிருக்காகி “அடைக்கலம் யானும்!” என்று என்பது கருதி அண்ணன் மறைந்து நின்று எய்தது என்றான்

6. “வாலி! அன்று உனது தம்பியான சுக்ரீவன் உன் கால்களில் விழுந்து சரணா கதி செய்த போது, அவனை நீ மன்னித்தா யா? இல்லையே! கொல்லப் பார்த்தாய்! காலில் விழுந்து சரணடைந்தவனைக்
காக்கத் தெரியாத உனக்கு, தன்னிடம் சரணாகதி செய்யும் வாய்ப்பைக் கூடத் தரக்கூடாது என நினைத்தான் ராமன்.

எங்கே ராமன் உன் எதிரில் வந்து உன்னை த் தாக்க முயன்றால் நீ சரணாகதி செய்து விடுவாயோ என்று கருதியே மறைந்திரு ந்து உன்னைத் தாக்கினான்!” என்றான் லட்சுமணன்.

இறைவன் தன்மீது கருணை காட்ட வேண் டும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு மனி தனும், தனது சக மனிதர்களிடம் கருணை காட்ட வேண்டும். அப்படி சக மனிதன் மேல் கருணை காட்டாத ஒருவனுக்கு
இறைவனிடம் கருணையை எதிர்பார்க்க அருகதை இல்லை.

இந்த உயர்ந்த கருத்து லட்சுமணனின் பதிலில் பொதிந்திருப்பதைக் காணலாம்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மெர்ச ண்ட் ஆஃப்வெனிஸ்’ என்னும் நாடகத்தில்,

“We do pray for mercy,
And that same prayer doth teach us all,
To render the deeds of mercy!”

என்று போர்ஷியா சொல்லும் வசனத்திலு ம் இக்கருத்து இடம் பெற்றிருப்பதைக் காணலாம். சரணடைந்தவனைக் காக்க வேண்டும் என்ற தருமத்திலிருந்து விலகிய தனக்கு ராமன் தந்த தண்டனை சரி என்று வாலியும் ஏற்றுக்கொண்டான்.
வாலியைப் போல் தரும நெறியிலிருந்து விலகினோரை ‘சச’ என்று குறிப்பிடுவா ர்கள்.

‘பிந்து’ என்றால் விரும்பாதவன் என்று பொருள். தரும நெறியிலிருந்து விலகிய வர்களை (சச) விரும்பாதவராகத் (பிந்து) திருமால் திகழ்வதால் ‘சசபிந்து:’ என்றழை க்கப்படுகிறார். ‘சசபிந்து:’ என்றால் அறவ ழியிலிருந்து விலகியவர்களை விரும்பா தவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 286-வது திருநாமம். “சசபிந்தவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தருமத்திலிருந்து விலகாதபடி திருமால் காத்தருள்வார்.

(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)
Thank you.

Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005

 
🙏
🙏 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

#சிதம்பர_ரகசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips

 No photo description available.No photo description available.

No photo description available.
 
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
 No photo description available.
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
 
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
 
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
 
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
 
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
 
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
 
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
 
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
 
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
 
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
 
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
 
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிறூபித்து காட்டிவிட்டது.

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, smiling and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

தன்மானத்தில் கைவைத்துவிட்டால் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips

 May be an image of 7 people and text

அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார். 
 
‘‘மனசு_சரியில்லை’’ என்றாள் மகள்.
‘‘உனக்கு
அன்பான_குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா. 
 
‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள். 
 
‘‘என்னவென்று சொல்... நானும் தெரிந்துகொள்கிறேன்’’ என்றார் அப்பா. 
 
மகள் சொல்ல ஆரம்பித்தாள்...
 
‘‘என் அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி துடைத்து சுத்தம் செய்யும் பெண் ஒருத்திக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி இருக்கிறது. அவளிடம் நட்புடனும் உரிமையுடனும் பழகுவேன். 
 
தன் குழந்தையின் முதலாம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட அவள் ஆசைப்பட்டாள். அதற்காக அலுலவகத்தில் ஒரு சில ஊழியர்களிடம் பண உதவி கேட்டாள். 
 
அவர்கள் மறுத்துவிட்டார்கள். நான் அதைக் கேள்விப்பட்டு, அவள் கேட்காமலேயே முன்வந்து பணம் கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டு எனக்குத் திரும்ப திரும்ப நன்றி சொன்னாள்.
 
அதன்பிறகு பிறந்த நாள் நெருங்க நெருங்க அவள் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது. 
என்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். 
 
பிறந்த நாளுக்குக்கூட என்னை பெயருக்கு அழைத்தாளே தவிர, மனமார அழைக்கவில்லை.
 
 ஆனால் அவளுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்களை எல்லாம் திரும்பத் திரும்ப அன்போடு அழைத்தாள். என்னை வேண்டுமென்றே ஒதுக்கியதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. 
 
நான் அவளிடம், ‘பிறந்த நாள் அன்று எனக்கு வேறு வேலை இருக்கிறது, வர முடியாது’ என்று சொல்லிப் பார்த்தேன். அவள் உடனே, ‘சரிங்க மேடம், உங்க இஷ்டம்’ என்று சொல்லிவிட்டாள்.
 
 விழாவுக்கு வரச்சொல்லி என்னை வற்புறுத்துவாள் என்று எதிர்பார்த்தேன்.’’
‘‘பிறந்த நாள் முடிந்து விட்டதா? நீ போகவில்லையா?’’ என்று கேட்டார் அப்பா.
‘‘நேற்று பிறந்த நாளுக்குப் போகவில்லை.
 
 அந்தக் குழந்தைக்காக இந்த பொம்மையெல்லாம் வாங்கி வைத்தேன். அவள் அழைக்காத அலட்சியமும், ஒரு குழந்தைக்கு பொம்மை வாங்கி வைத்து கொடுக்க முடியாத குற்ற உணர்ச்சியும் என்னை துன்புறுத்துகிறது அப்பா. என்னால் தூங்கவே முடியவில்லை’’ என்றாள் மகள்.
 
அப்பா உடனே, ‘‘நீ அவளுக்கு பண உதவி செய்தபிறகு அப்பெண்ணை பொதுவில் அனைவர் முன்னாலும் எதற்காகவாவது உரிமையுடன் கிண்டல் செய்தாயா?’’ என்று கேட்டார்.
 
‘‘நினைவில்லை அப்பா.”
‘‘யோசித்து வை. நிச்சயம் அப்படி ஒன்று நடந்திருக்கும். அப்பா உனக்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்து வருகிறேன்.’’
 
அப்பா வந்ததும் மகள் ஆர்வத்துடன் சொன்னாள். ‘‘ஆமாம் அப்பா, நான் பண உதவி செய்து ஒருவாரத்தில் அவள் ஒரு மஞ்சள் கலர் புடவை அணிந்து வந்திருந்தாள். அது அவள் கணவன் அன்போடு எடுத்துக் கொடுத்ததாம். 
 
நான் அதைப் பார்த்த உடனே, ‘என்னப்பா மஞ்ச கலரு ஜிங்குசாண். இதை எல்லாம் கட்டினா கூலிங்கிளாஸ் போட்டுதான் பாக்கணும் போல கண்ணு கூசுது’ என்றேன். அதற்கு சுற்றி இருந்த அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அவளும் சிரித்தாளே!’’
 
‘‘நீ அவள் குழந்தையின் பிறந்த நாளுக்கு உதவி செய்துவிட்டு அவளை அவமானப்படுத்தினால் பதிலுக்கு உன்னிடம் எப்படி அவள் கோபத்தை, இயலாமையை காட்ட முடியும். வேறு வழியில்லை, சிரித்துதானே ஆகவேண்டும். 
 
நான் சொல்வது மாதிரி செய்’’ என்று அப்பா ஒரு யோசனை சொன்னார்.
 
அதன்படி மறுநாள் காலை ஒரு மணி நேரம் முன்பாகவே மகள் கிளம்பி அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றாள். தொட்டிலில் கிடந்த மகனை தூக்கிக் கொஞ்சி, ‘‘பிறந்த நாளுக்கு வரமுடியலடா கண்ணா! இந்தா ஆன்ட்டி உனக்கு பொம்மை வாங்கி இருக்கேன் பாரு’’ என்று பொம்மையை அருகில் வைத்தாள்.
 
அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘‘நேத்து எங்க குடும்ப வாட்ஸ்அப் குரூப்ல என் சொந்தக்கார பையன் ஒருத்தன், என் பத்தாம் வகுப்பு மார்க் குறைவானது என்று பொதுவில் சொல்லி கிண்டல் செய்தான். 
 
அவன் அதை ஜாலிக்காக செய்தாலும் பொதுவில் அப்படி கிண்டல் செய்ததை என்னால் தாங்கமுடியவில்லை. அப்போதுதான் நான் உன்னை ‘மஞ்சள் கலர் ஜிங்குசாண்’ என்று கிண்டல் செய்தபோது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. என்னை மன்னித்துக் கொள்’’ என்றாள்.
வேலை செய்யும் பெண் கண்ணீர் மல்க இவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
 
அங்கிருந்து பைக்கை எடுத்து அலுவலகத்தை நோக்கி வரும்போது, ‘ஒரு மனிதனுக்கு நீ கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவன் தன்மானத்தில் கைவைத்துவிட்டால் அவன் உன்னை எதிர்க்கவே செய்வான்’ என்று அப்பா சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது. 
 
புரிதலுடன் சிரித்துக் கொண்டாள்.
படித்ததில் பிடித்தது