*வாழ்க்கை என்பது ஒரு வட்டம். . .*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:53 AM | Best Blogger Tips
Image result for வாழ்க்கை என்பது ஒரு வட்டம்

#வாழ்க்கை_என்பது_ஒரு #வட்டம். . .

1 − வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது . . .

4 − வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .

8 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . . .

12 − வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது . . .

18 − வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . .

23 − வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . .

25 − வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது . .

30 − வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது . . 

35 − வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது . . .
Image result for வாழ்க்கை என்பது ஒரு வட்டம்
45 − வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது . . .

50 − வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . .

55 − வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . .

60 − வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . .

65 − வயதில் வெற்றி என்பது நோயில்லாமல் இருப்பது . . .

70 − வயதில் வெற்றி என்பது யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . .

75 − வயதில் வெற்றி என்பது பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . .

81 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . .

86 − வயதில் வெற்றி என்பது மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .

90 − வயதில் வெற்றி என்பது யார் துணையும் இல்லாமல் நடப்பது . . .
*வாழ்க்கை என்பது ஒரு வட்டம். . .*


நிரந்தரமானது பேரின்பம் எது?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips
Image result for நிரந்தரமானது பேரின்பம்

*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*
*படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.*
*படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.*
*படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.*
*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*
*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.*
*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*
*என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.*
*இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*
*நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.*
*நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*
*அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.*
*அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*
*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.*
*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*
*செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.*
*செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*
*புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.*
*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*
*இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.*
*வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*
*நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.*
*நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*
*உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.*
*உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.*
*இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.*
*துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*
*எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.*
*எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*
*பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.*
*மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*
*பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.*
*பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.*
*சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.*
*எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*
*பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.*
*தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*
*அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.*
*அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.*
*அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.*
*அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*
*அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.*
*அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.*
*பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.*
*பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.*
*முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.*
*முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.*
*இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.*
*கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.*
*உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.*
*உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.*
*புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.*
*புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.*
*மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.*
*மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.*
*மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.*
*மரணத்தையும் வெல்வது பேரின்பம்.*
*மனமாய் இருந்தால் சிற்றின்பம்.*
*மனதைக் கடந்தால் பேரின்பம்.*
*வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.*
*எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.*
*பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.*
*மொத்தமாய் கண்டால் பேரின்பம்.*
*அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.*
*அகங்காரம் துறந்தால் பேரின்பம்.*
*தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.*
*அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.*
*ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.*
*ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.*
*துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.*
*துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.*
*ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.*
*இறைவனால் தரப்படுவது பேரின்பம்.*
*உலகைப் பற்றினால் சிற்றின்பம்.*
*இறைவனைப் பற்றினால் பேரின்பம்.*
*பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.*
*தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.*
*இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.*
*இன்பமான இன்பமே பேரின்பம்.*
*அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.*
*ஞானம் விரும்புவது பேரின்பம்*
*பெற்று மகிழ்வது சிற்றின்பம்.*
*கொடுத்து மகிழ்வது பேரின்பம்.*
*சக்தியை இழப்பது சிற்றின்பம்.*
*சக்தியாய் மாறுவது பேரின்பம்.*
*பற்றுக் கொள்வது சிற்றின்பம்.*
*பற்றற்று இருப்பது பேரின்பம்.*
*மாறுவது, தாவுவது சிற்றின்பம்.*
*மாறாதது நிலைத்தது பேரின்பம்.*
*நிலையற்றது சிற்றின்பம்.*
*நிரந்தரமானது பேரின்பம்.*


நன்றி இணையம்