நர்மதா நதியும் நரேந்திர மோடியும் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

வடமேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகள் வறட்சியில் திண்டாடின. பல லட்சம் ஹெக்டேர் விவசாய பூமி போதிய நீர்இல்லாமல் வறட்சியில் இருந்தது. அங்கிருந்த விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தனர். இந்நிலையில் இதற்கு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கருதி குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி அவர்கள், சர்தார் சரோவர் அனையில் இருந்து தொடங்கி, குஜரத்தில் 460 கிலோமீட்டர் நீளமும்ள்ள, அதன் பின் ராஜஸ்தானில் மேலும் ஒரு 74 கிலோமீட்டருக்கும், ஒரு கால்வாயை உருவாக்கி விவசாய பகுதிகளுக்கு பாசனம் செய்ய திட்டமிட்டார்.
விட்டுவிடுவார்களா தேச துரோகிகள் ? எதிர்ப்பு என்றால் அத்தனை எதிர்ப்பு !! சமூக போராளி என்கிற பெயரில் 'மேதா பட்கர்' போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவருக்கு ஆதரவாக புரட்சி எழுத்தாளர்கள் எனும் பெயரில் 'அருந்ததி ராய்' போன்றவர்கள் மோடியை வாய்க்கு வந்தபடி எல்லாம் சாடினார்கள். காடுகள் அழிகின்றன, சுற்று சூழல் நாசமாகிறது என்றார்கள். இந்த ஆர்பாட்டங்களை ஆவனப்படமாக எடுத்து மேற்கத்திய ஊடகங்கள் பெரும் பரப்புரையை செய்தது. அணுகுண்டை விட இந்த திட்டம் மிக ஆபத்தானது என்று பேசினார்கள். தேச துரோக கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இதை முழு சக்தியோடு எதிர்த்தார்கள். ஆனால் "செயலின் செல்வன்" ஆகிய மோடி தன் திட்டங்களில் இருந்து துளியும் பின்வாங்கவில்லை.
விளைவு !! 1,477 சதுர கிலோமிட்டர்கள் பாசன வசதியை பெற்றது. 236 கிராமங்கள் பயன் பெற்றது. 6,10,000 ஏக்கர் விவசாய நிலம் பஞ்சத்தில் இருந்து பசுமைக்கு மாறியது. 1336 கிராமங்களில் குடி தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது. இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் உலகின் முதல் முன்னோடி திட்டமாக, "கால்வாய் மீது சோலார் தகடுகளை பொறுத்தி", நீர் ஆவியாவதை தடுத்து, மின்சார ஆற்றலையும் ஏற்படுத்தினார் மோடி !! இந்த திட்டத்தால் குஜராத் மட்டும் இல்லாமல் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசமும் பயனடைந்தது.
ஒரு நல்ல தலைவன் நாடாண்டால் எதுவும் சாத்தியமே !! மாநிலத்தை ஆளுகின்ற தலைவர்கள் இனைந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, எத்தனையோ சாதிக்க இயலும். கர்நாடகத்தில் ஓடும் நதிகளை இனைத்து அதை காவேரியோடு இனைத்து பல திட்டங்களை உருவாக்க இயலும். தமிழகத்தில் மழைகாலத்தில் கடலில் கலந்து வீணக்கும் பல நூறு 'டி எம் சி' நீரை பல தடுப்பனைகளை ஏற்படுத்தி, குளங்களை தூர்வாரி, ஆறுகளில் மனல் அள்ளுவதை தடுத்து, நிலத்தடி நீரை உயர்த்த இயலும். கடலோர பகுதிகளில் "கடல் நீரை குடிநீராக்கும்" திட்டத்தை அமல்படுத்தி, குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க இயலும். ஆனால் இவை எதையுமே செய்ய முனைப்பு காட்டாத தமிழக மற்றும் கர்நாடக அரசுகள், ஓட்டு வங்கி அரசியலுக்கு மட்டுமே தண்ணீர் பிரச்னையை பயன்படுத்துகின்றன.
தமிழகம் கர்நாடகத்தில் உள்ள துக்கடா கட்சிகளோ இதை வைத்து மக்களின் உணர்வுகளை தூண்டி எப்படி தங்களை உயர்த்தி கொள்ள இயலும் என்பதை மட்டுமே சிந்திக்கின்றன.
மாநிலம் தோறும் நரேந்திர மோடியின் ஆட்சியை நிலைநிறுத்தினால் மட்டுமே காவேரி போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை நாம் எட்ட இயலும். அதுவரை அடுக்கு மொழி வசனங்கள், ரயில் மறியல், போராட்டம், கொடும்பாவி எரிப்பு என்று குப்பையைதான் மாற்றி மாற்றி நாம் கிளற இயலும்.
நன்றி- மாஸ்டர் Prakash P


*மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips

https://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.pnghttps://www.facebook.com/images/emoji.php/v5/u2d/1/16/2666.png
*https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺 மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது !!!*
பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.
இப்படியாக துவங்கியதுதான் கல்திரை.
கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.
இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.
தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.
சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள்.
வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.
வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான்.
பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.
அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே,
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது.
கோவிலே பாழாக இருந்தது.
அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது.
முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள்.
அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள்.
அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.
அப்போது தள்ளாத வயதான ஒருசிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார்.
என்ன சொல்கிறீர்கள்.
இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர்.
இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.
சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார்.
உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.....
உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!
48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது.
திளைத்தனர் பக்தியில் அனைவரும்.
அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.
இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக துர்க்கை அம்மன் எதிரில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை
சம்போ மகாதேவா!!https://www.facebook.com/images/emoji.php/v5/u87/1/16/1f340.png🍀
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran