மஹாபாரதத்தின் விஞ்ஞான மகத்துவங்கள் பாகம் 6

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips


மஹாபாரதத்தின் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்று நாம் ஆராய்ந்தோமானால் அவை வெகு சிலர் மூலமாகமே பெறப்பட்டுள்ளது என்பதை அறியலாம். அதில் ஒன்று பரசுராமர், அவர் மூலமாக துரோனருக்கும், பின் பாண்டவ மற்றும் கவுரவ‌ர்களுக்கும் அவை செல்கின்றன. பீஷ்மரோ, வசிஷ்டரிடமிருந்து ஆயுதங்களை பெறுகிறார். அர்ஜுனனும், நான் சென்ற பாகத்தில் குறிப்பிட்டவாறு, தேவர்களிடமிருந்து, பரம சிவனிடமிருந்தும் ஆயுதங்களை பெறுகிறான்.
இப்படி ஆயுதங்களை வழங்கியவர்களும், ஆயுதங்களை பெற்றவர்களும் பிரபஞ்ச சக்திகளே. பீஷ்மர், துரோனர், க்ருபாச்சாரியர், அஸ்வத்தாமன், பாண்டவர்கள், கௌரவர்கள், திருதிராஷ்டிரன், பாண்டு, சகுனி, பாஞ்சாலி, விதுரர் என ஒவ்வொரு பாத்திரங்களும் பிரபஞ்ச சக்திகள்தான்.

தேவர்கள் மற்றும் அசுரர்கள் என இரு பெரும் பிரபஞ்ச சக்திகள், பூமியில் குடியேர தொடங்கியதும், பல்வேறு மனித உருவங்களில் வளரவும் தொடங்கினர். இந்த பிரபஞ்ச சக்திகளின், பிறப்பே பல வினோதங்க‌ளை கொண்டுள்ளதை நாம் பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள், மிக உயரிய அறிவியல் நுட்பத்தோடு உண்டாக்கப் பட்டனர். இன்றைய அறிவியல் நுட்பங்களான‌ க்ளோனிங், செயற்கை கருவுருதல், பரிசோதனை குழாய் குழந்தைகள், விட்ரோ ஃபெர்டிலைசேஷன், எம்ப்ரியோனிக் ஸ்டெம் செல்ஸ், விந்து பராமரித்தல் போன்ற அதி முன்னோடியான நுட்பங்களை இவர்களின் பிறப்பு ஒத்திருப்பதை நாம் மஹாபாரதத்தை படிக்கும் போது உணரலாம். இவற்றை குறித்து "மஹாபாரதத்தில் மருத்துவ அறிவியல்" பகுதியில் நாம் பின்னர் பார்ப்போம். இப்போது மஹாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரங்களை அவற்றின் மூலங்க‌ளையும் நாம் பார்ப்போம்.

கிருஷ்ணர் : பிரபஞ்ச வடிவமைப்பாளர், பிரபஞ்ச ஆதார சக்தி. இந்த பிரபஞ்சத்தை பராமரிப்பவர்.

பீஷ்மர் : உயரிய பிரபஞ்ச சக்தியான எட்டு வசுக்களில் ஒருவர். கங்கைக்கும், சந்தனுவுக்கு பிறந்தவர். கங்கை என்பது வெறும் நதி அல்ல. ஆகாய கங்கை என்று நம் பால்வெளியை (மில்கி வே) அழைப்பர். கங்கை ஒரு ஆற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்தி, பரம‌சிவன் எனும் பிரபஞ்ச ஆதார சக்தியினால் அதன் ஆற்றல் பூமிக்கு இறக்கப்படுகிறது.

த்ரோனர் : பாரத்வாஜர் எனும் பிரபஞ்ச சக்தியின் மரபினர். தாயில்லாமல் பிறந்தவர். பாரத்வாஜிரின் விந்து பராமரிக்கப்பட்டு உயிர்பிக்கப்பட்டது. (இதை குறித்து மருத்துவ பாகத்தில் எழுதுகிறேன்)

க்ருபாச்சாரியார் : வேள்வியில் பிறந்த ஆற்றலினால் தோன்றியவர். "சரத்வத்" எனும் அப்சரைக்கும், கௌதமர் எனும் பிரபஞ்ச சக்திக்கும் பிறந்தவர்.

திருதிராஷ்ட்ரன் : கந்தர்வர்கள் எனும் பிரபஞ்ச சக்தியின் அம்சம்.

விதுரன் : பிரபஞ்ச சக்தியான ரிஷி அத்ரியின் அம்சம்.

பாண்டவர்கள் : யமன், வாயு, இந்திரன், அஸ்வின் எனும் சக்திகள் ஆகியவற்றின் அம்சங்கள்.

கௌரவர்கள் : விழிப்புணர்வு குறைந்த‌ காலத்தை குறிக்கும் கலி புருஷனின் அம்சம்.

துச்சாசனன் மற்றும் ஏனைய‌ கௌரவர்கள் : புலஸ்த்யா எனும் ராக்ஷஸ்ர்களின் (விழிப்புணர்வு நிலை குறைந்த, ரஜோ, தாமஸ குணம் நிறைந்தவர்கள்) அம்சம்.

த்ருடத்யும்னா : அக்னி எனும் பிரபஞ்ச ஆற்றலின் அம்சம்.

கோபிகைகள் : இந்திரனின் அப்சரை எனும் மனதை வசீகரிக்கக்கூடிய ஆற்றல் நிறைந்த தன்மைகளின் குழுமம். இப்படி யாரையும் வசீகரிக்கக்கூடிய இந்த தன்மைகளை, பிரபஞ்சத்தேயே தன்பால் வசகரிக்கக்கூடிய கிருஷ்ணர் எனும் ஆதார சக்தி தன்பால ஆட்படுத்தி வைக்கிறது. (க்ருஷ்ண என்றால் வசகரிக்கக் கூடிய என்றும் அர்த்தம்)

இப்படி ஒவ்வொரு பாத்திரத்தை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். இவை எவையுமே நம் பூமியை சேர்ந்த சாமான்ய மனிதர்கள் அல்ல. எல்லோருமே ஆற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்திகள்தான்.

பிரபஞ்ச விதியான "தர்மத்தை" அசுரர்கள் மீறுவதால், தேவர்கள் எனும் ஆக்க‌ சக்திகள் அவர்களோடு மோதுகிறார்கள்.
பூமியில் பல்வேறு வகையில் பிறப்பெடுத்துள்ள இந்த அசுர சக்திகளை களைவதற்கு, பூமியில் தோன்றுகிறார்கள் தேவர்கள் எனும் ஆக்க சக்திகள். பேராற்றல் மிகுந்த பிரபஞ்ச சக்திகளான அசுரர்களும், தேவர்களும் இப்படி பூமியில் தோன்றி செய்த யுத்தம் தான் மஹாபாரதம்.


இது எப்படி நடந்தது ? என்ன விதமான ஆயுதங்கள், அறிவியல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன ? 


அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Via FB Enlightened Master

எந்தப் பெயரில் விழா எடுக்கலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:10 PM | Best Blogger Tips
வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா

2 ஆண்டு - பருத்தி விழா

3 ஆண்டு - தோல் விழா

4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா

5 ஆண்டு - மர விழா

6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா

7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா

8 ஆண்டு - வெண்கல விழா

9 ஆண்டு - மண் கலச விழா

10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா

11 ஆண்டு - எஃகு விழா

12 ஆண்டு - லினன் விழா

13 ஆண்டு - பின்னல் விழா

14 ஆண்டு - தந்த விழா

15 ஆண்டு - படிக விழா

20 ஆண்டு - பீங்கான் விழா

25 ஆண்டு - வெள்ளி விழா

30 ஆண்டு - முத்து விழா

40 ஆண்டு - மாணிக்க விழா

50 ஆண்டு - பொன் விழா

60 ஆண்டு - வைர விழா

75 ஆண்டு - பவள விழா

100 ஆண்டு - நூற்றாண்டு விழா

Via FB ♥, தமிழ் -கருத்துக்களம்-

உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான சில வித்தியாசமான வழிகள்!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:08 PM | Best Blogger Tips

பொதுவாக உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதற்கு கடுமையான உடற்பயிற்சிகளை செய்து, நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதையே வழக்கமாக்கி கொண்டிருப்போம். ஆனால் இது தேவையா? என்பதை அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும்.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவர். ஆரோக்கியம் என்பது உணவை மட்டும் பொறுத்து அமைவதில்லை, மனதையும் பொறுத்தே அமைகின்றது. அதிலும் நல்ல ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கம், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை கடுமையாக செய்யாமல், இயல்பாக செய்தாலே போதுமானது. ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிக்கும் போது கடினமான வழிகளை யோசிக்காமல், சில எளிமையான வழிகளையே யோசிக்க வேண்டும். அத்தகைய எளிமையான முயற்சிகள் என்னவென்று தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்

டென்ஷனை குறையுங்கள் தேவையற்ற டென்ஷனும், மனக் குழப்பமும், மன அழுத்தத்தை தான் கொண்டு வரும். ஆகவே மனதை எப்பொழுதும் இயல்பாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும். இது இதய நோய் வராமல் காக்கும். மேலும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.

நடனம் நடனம் ஆடுவதன் மூலம் உடலில் தேவையான அளவு கால்சியமானது உற்பத்தி செய்யப்படுவதால், எலும்புகள் வலுவோடு இருக்கும். மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காமலும் பாதுகாத்து கொள்ள முடியும்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மீன்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதை உணவில் சேர்த்து கொள்வதன் முலம் இதய நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து காத்து கொள்ள முடியும்.

கொக்கோ இனிப்பான அனைத்தும் பொருள்களும் கெடுதல் என்று அர்த்தம் இல்லை. கொக்கோவை சாப்பிடுவதன் மூலம், மூளை மற்றும் இதயம் ஆரோக்கியம் அடைகிறது. மேலும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்த முடியும் என்று கூறப்படுகின்றது.

சுத்தமான கார் கார் டாஷ்போர்டில் அழுக்கு சேர்ந்தால் கெடுதல் உங்களுக்கு தான். ஆகவே அதை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் டாஷ்போர்டின் குளிர்த்தன்மை கிருமிகளுக்கு மிகவும் பிடித்த இடம் என்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும்.

குளியல் குளிர்ந்த நீரில் குளித்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். இவ்வாறு குளிப்பதால் மூளையை வேகமாக இயங்க வைக்க முடியும். மேலும் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

முத்தம் சுமார் முப்பது நிமிடங்களுக்கு முத்தம் கொடுத்தால், அனைத்து விதமான அலர்ஜியில் இருந்தும் தப்பிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. ஆகவே முத்தம் தந்து ஆரோக்கியத்தை வளர்த்திடுங்கள்.

சிரிப்பு சிரிப்பானது, நல்ல ஹார்மோன்களை உருவாக்கி மன அழுத்தத்தை போக்குகின்றது. ஆகவே நன்றாக சிரித்து பேசி, வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்

தண்ணீர் இது பழைய கதை என்றாலும் உண்மை. தண்ணீர் அதிகம் பருகுவதால், அழகை பெறுவதோடு மலச்சிக்கல், நீர் கடுப்பு, சிறுநீரக பிரச்சனை போன்றவற்றையும் சரிசெய்ய முடியும்.

நேராக அமரவும் நேராக உட்காரவில்லை என்றால் கூன், நுரையீரல் செயலிழப்பு மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். ஆகையால் நேராக அமர்ந்து ஆரோக்கியத்தை பெறுங்கள்.
 
Via FB Aatika Ashreen
 

ஊதாமனை அல்லது ஊதுகுழல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:56 AM | Best Blogger Tips
ஊதாமனை அல்லது ஊதுகுழல்:

ஊதாமனை அடுப்பு ஊதுவதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும். மர விறகுகள் அல்லது குச்சிகள் அல்லது மரப்பொடிகள் இவைகளைக் கொண்டு நெருப்பு அல்லது அடுப்பு மூட்டப்படும்போது (எரிக்கப்படும் போது) எளிதில் தீப்பற்றிக் கொள்வதற்காக ஊதும் ஒரு கருவியாகும். இது இரும்பால் செய்யப்பட்ட நீளக்குழல் போன்ற அமைப்பில் காணப்படும். எனவே இது ஊதுகுழல் எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் ஒரு முனையில் விசையுடன் காற்றினை வாய்வழியாக லேசாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குள் பல முறை ஊதுவர். இதானல் லேசாக எரிந்து (கனன்று) கொண்டிருக்கும் தீயானது மேலும் நன்கு எரியவதற்கான காற்று அடுப்பிற்குள் செலுத்தப்பட்டு தீ நன்கு எரியும்.

விறகடுப்புக்கள் வேகமாக மறைந்து வரும் இக்காலச்சூழலில் இதன் பயன்பாடும் மிகவும் குறைவாகவே உள்ளது.

ரிலாக்ஸ் ப்ளீஸ்ஊதாமனை அடுப்பு ஊதுவதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும். மர விறகுகள் அல்லது குச்சிகள் அல்லது மரப்பொடிகள் இவைகளைக் கொண்டு நெருப்பு அல்லது அடுப்பு மூட்டப்படும்போது (எரிக்கப்படும் போது) எளிதில் தீப்பற்றிக் கொள்வதற்காக ஊதும் ஒரு கருவியாகும். இது இரும்பால் செய்யப்பட்ட நீளக்குழல் போன்ற அமைப்பில் காணப்படும். எனவே இது ஊதுகுழல் எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் ஒரு முனையில் விசையுடன் காற்றினை வாய்வழியாக லேசாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குள் பல முறை ஊதுவர். இதானல் லேசாக எரிந்து (கனன்று) கொண்டிருக்கும் தீயானது மேலும் நன்கு எரியவதற்கான காற்று அடுப்பிற்குள் செலுத்தப்பட்டு தீ நன்கு எரியும்.

விறகடுப்புக்கள் வேகமாக மறைந்து வரும் இக்காலச்சூழலில் இதன் பயன்பாடும் மிகவும் குறைவாகவே உள்ளது.

Via FB ரிலாக்ஸ் ப்ளீஸ்

அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:44 AM | Best Blogger Tips


மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. "இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே"! மேய்ப்பவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளின் தீவனத்தை ஆராய்ந்தார். ஏதோ சிறுகனிகளைக் கொட்டையோடு அசைபோடுவதைக் கண்டார்.

"ஞானப்பழம் நீயப்பா" என்று பாடாமல் அந்தக் கனியைத் தானும் பொறுக்கி உண்டார். சதைப்பற்று இனிப்பாக இருந்தது. சுடாத பழத்தின் கொட்டையைச் சுட்டு வறுத்துத் தின்றார். சுறுசுறுப்பு அடைந்த உணர்வு. இரவில் தூக்கம் போச்சு.


எப்படியோ, எத்தியோபியக் காபிக் கொட்டையை நினைத்தாலே இனிக்கும். இலந்தைப்பழம் மாதிரி ருசித்துச் சாப்பிடுவர். அங்கு கண்டறியப்பட்ட காப்பிப் பழத்திற்கு "காஃப்பா" (Kaffa) என்ற நகர்ப் பெயரே மூலச்சொல் என்பார் ஒரு சாரார். காபிக் கொட்டை, குதிரைக் குளம்பு வடிவம் கொண்டதாம். அதனால் குளம்பைக் குறிக்கும் "காப்" என்ற ஆங்கிலச்சொல் அடிப்படையில் அதனைக் குளம்பி என்பார் மறுபக்கம்.

ஏதானாலும் காபியில் அடங்கிய முக்கியப் பொருளுக்குச் செல்லப்பெயர் காஃபீன் (Caffein). ஆனால் "காஃபின்" (Caffein) என்பது வேறு. சவப்பெட்டியைக் குறிக்கும். "கோஃபினோஸ்" (Kophinos)) என்ற இதன் கிரேக்க அடிச்சொல்லுக்குக் "கூடை" என்று அர்த்தம்.

காபி என்றால் அதில் "காஃபீன்" (Caffein) மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. காபியில் கிட்டத்தட்ட 2000 வேதிமங்கள் அடக்கம். அனைத்திற்கும் வெவ்வேறு மருந்துக் குணங்கள் உண்டு. சொல்லப்போனால் காபியில் அடங்கிய பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுமாம். பென்சில்வேனியாவில் ஸ்க்ரான்டன் பல்கலைக் கழக ஆய்வு முடிவு.

உலகின் முதல் காப்பிக்கடை முதலாளி இஸ்தான்புல் நகரில் ஓட்டோமான் சுல்தான். 1554ம் ஆண்டு தொடங்கியது இந்தக் காபித் தூள் வியாபாரம். "கேஃப்" என்றால் பிரெஞ்சு மொழியில் காப்பி நிலையம் (Kophinos). "கஃபட்டேரியா" என்பது ஸ்பானிய மொழியில் "காப்பிக்கடை" (Coffee shop).

ஒருவழியாக, போப் கிளெமென்டைன் சம்மதத்துடன் காபி இத்தாலிக்கு அறிமுகம் ஆனது. கிறிஸ்தவர் அருந்தும் பானம் ஆக தேவாலய அங்கீகாரமும் பெற்றது. மத நல்லிணக்கத்தின் சின்னம் காபி என்றால் அது மிகையாகாது. இசுலாமியர், கிறிஸ்தவர் உணவோடு கலந்து காப்பியை இந்தியாவுக்குள் கள்ளச் சரக்காகக் கடத்தியது நம் ஊர் வியாபாரி. அரேபிய வர்த்தகத்தை முடித்துத் திரும்பும் வேளையில் மடியில் தங்கக் கட்டிகள் மாதிரி ஏழே ஏழு காபிக் கொட்டைகளை ஆசாமி ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாராம். தென் இந்தியாவில் சிக்மகளூர் தான் காபி காலடி பட்ட முதல் மண்.

1668 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் காபியைக் காப்பி அடித்தது அமெரிக்கா. நியூயார்க் நகரின் காலைச் சிற்றுண்டியில் காபி ஆவி பறந்தது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் கழித்து ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா காபி குளிர்பானம் ஆயிற்று. டாக்டர் ஜான் எஸ். பெம்பர்ட்டன் என்கிற மருந்தியர் நிபுணர் காஃபீன், கொக்கோ இலைகள், சர்க்கரை, காய்கறிச் சாறு போன்றவை கலந்து 1886 ஆம் ஆண்டு கொக்கோ கோலா என்னும் பானம் தயாரித்தார்.


ஆயின், 1911 ஆம் ஆண்டு கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிராக அமெரிக்கா ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அடங்கிய "காஃபீன்" உடலுக்குக் கேடு என்பது அரசுத் தரப்பு வாதம். குற்றம் சாட்டப்பட்டவர் உயிரோடு இருக்கும்போதே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது முதல் ஆச்சரியம். வழக்கில் அரசாங்கம் தோற்றதைத்தான் இந்தியர்கள் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. போகட்டும்.

1970 ஆம் ஆண்டுகளில் காபி உலகப் பிரசித்தம். காஃபீன் குறித்து ஏறத்தாழ 4000 5000 ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்து உள்ளதாக ஜேம்ஸ் காஃப்லீன் (James Coughlin)) கூறுகிறார். (இவர் பெயரில் வரும் "காஃப்" இருமல் தொடர்பானது?) தென் கலிஃபோர்னியாவில் நச்சியல் ஆய்வாளர். காபி குடித்தால் புற்றுநோய் வாய்ப்பு கால் பாகம் குறையும் என்பது இவர் கண்டுபிடிப்பு.

ஆனால் 1980 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தாமஸ் காலின்ஸ் நடத்திய ஆய்வு காபிப் பிரியர்களைச் சற்று அதிர வைத்தது. குறிப்பாக, கர்ப்பம் தரித்த அன்னையர் காபி குடித்தால் ஊனக்குழந்தை பிறக்குமாம்.

தம் பரிசோதனையில் இவர் சில எலிகளைத் தேர்ந்து எடுத்தார். எல்லாப் பிராணிகளைப் போலவே எலிகளுக்கும் தொண்டைக் குழிக்குள் சிறு குழாயைச் செருகி 200 காபிக்குச் சமமான அளவு பானத்தை ஊட்டினார். அடுத்த மூன்று வருடங்களாக மறுபரிசோதனை நடத்தினார். காபியைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்தார். முடிவில் எலிக் குஞ்சுகளில் பிறவிக் குறைபாடுகள் அவ்வளவாக இல்லையாம்.

ஒரு நாளைக்கு நாலு நேரம் காபி குடித்தால் பித்தப்பையில் கற்கள் படியும் வாய்ப்பு 40 சதவீதம் என்பது ஒரு கணிப்பு. சிறுநீரகக் கற்கள் வராது. கல்லீரல் புற்று வராது. நீரழிவு நோய் உபாதை எழாது. பார்க்கின்சன் நோய் அண்டாது. நினைவாற்றல் கூடும். மன அழுத்தமும் அகலும். இப்படிப் பல!

Via FB Aatika Ashreen -

அதிசயத்தின் உச்சம்!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:42 AM | Best Blogger Tips


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.


நன்றி: தமிழறிவோம்

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:40 AM | Best Blogger Tips

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - ப
கவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.


இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
 
Via FB Aatika Ashreen


மழைநீர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:36 AM | Best Blogger Tips
பொறியாளர் திரு.வரதராஜன்
------------------------------------------------------------------

''தண்ணீர் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லாத் தண்ணீரைக் கொடுத்திருக்கிறது. கொடுத்துக் கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை'' என்கிறார் வரதராஜன். மழை நீர் சேகரிப்புக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிற இவரின் வயது 69. இதற்காக, தான் பார்த்துக்கொண்டு இருந்த அரசு வேலையை உதறிவிட்டு, தன் வீட்டையே மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றிய மனிதர். தென்னிந்தியா முழுவதும் 2,014 வீடுகளில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து அளித் தவர். திருவாரூரில் இருக்கும் வரதராஜனின் வீட்டுக்குள் நுழைந்தால் எங்கெங்கும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள். விதவிதமான அளவு களில், விதவிதமான வடிவங்களில் நீரால்சூழ்ந்து இருக்கிறது வீடு.

''இந்தத் தண்ணீரைக் குடிங்க...'' என வீட்டு சமையல் அறையில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் பிடித்துத் தருகிறார். அமிர்தம்போல் இருக்கிறது. ''இது ஏழு வருடம் பழைய மழை நீர். இந்த வீட்டில் 1.5 லட்சம் லிட்டர் மழை நீரைச் சேமித்துவைத்து இருக்கிறேன். குடிக்க, சமையல் செய்ய, குளிக்க, துவைக்க... அனைத்துக்கும் இதைத்தான் பயன்படுத்துகிறோம். இதில் இருக்கும் தாது உப்புக்களின் விகிதம், நகரங்களில் விற்கப்படும் 'மினரல் வாட்டர்’ எதிலும் இல்லை. உலக சுகாதார நிறுவனம் 122 நாடுகளில் குடிநீரைப் பற்றி ஆய்வு செய்தது. அதில் இந்தியாவுக்குக் கிடைத்தது 120-வது இடம். அந்த அளவுக்கு நம் ஊர் தண்ணீர் கெட்டுப்போய்விட்டது. நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள தாது உப்புக்களின் கூட்டுத்தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம்தான் இருக்க வேண்டும். இந்தியாவில் இது 1,500 மில்லி கிராமுக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நான் மழை நீரைச் சேகரிக்க ஆரம்பித்த பிறகு, என் வீட்டு நிலத்தடி நீரில் தாது உப்புக்களின் அளவு 675 மில்லி கிராமாகக் குறைந்திருக்கிறது. இந்தியா 120-வது இடத்தில் இருந்தாலும் என் வீட்டுத் தண்ணீர் முதல் இடத்தில் இருக்கிறது'' எனச் சிரிக்கிறார் வரதராஜன். பொதுப்பணித் துறையில் 36 ஆண்டு கள் பொறியாளராகப் பணிபுரிந்தவர், முழு நேரமாக மழை நீர் பொறியாளராக மாறிய கதை சுவாரஸ்ய மானது.

''என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கீழப் பழுவூர். அங்கே 'திருக்குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. அதில் தேங்கும் மழை நீர்தான் மொத்தக் கிராமத்துக்கும் குடிநீர். அதைக் குடித்து தான் நான் வளர்ந்தேன். படித்து முடித்து பொதுப்பணித் துறையில் பொறியாளராக வேலைக் குச் சேர்ந்தேன். திருச்சிதான் எனக்கு தலைமை இடம். கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங் களில் வேலை. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு கிணற்றைத் தேர்வுசெய்து அதன் நீர் மட்டத்தையும் தரத்தையும் தொடர்ச்சியாகப் பரிசோதிப்போம். நாளுக்கு நாள் நீர் மட்டமும் நீரின் தரமும் மோசமாகிக்கொண்டு இருந்தது. அதைச் சரிசெய்வதற் குப் பதிலாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதுடன் எங்கள் வேலை முடிந்துவிடும். மனது கேட்காமல், அந்தந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர்களைச் சந்தித்து, 'உங்க ஊர் தண்ணீர் சரியில்லை. அதைப் பயன்படுத்த வேண்டாம்’ எனச் சொல்வேன். இதனால் எனக்கு எங்கள் அலுவல கத்தில் எதிர்ப்புகள் வந்தன. 'அது உங்கள் வேலை இல்லை. ஆய்வு செய்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்பார்கள். ஆனால் நான், பல்வேறு கிராமங்களுக்கும் சென்று விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்த ஆரம்பித்தேன். அப்படிச் செல்லும்போது என் சொந்தச் செலவில்தான் சென்றுவருவேன். யாரிடமும் காசு வாங்க மாட்டேன். எனது வாசிப்பு அனுபவம் மூலம் நிலத்தடி நீர் மாசு மற்றும் குடிநீர் பிரச்னைக்கு மழை நீர் சேகரிப்பே சிறந்த வழி என்று உணர்ந்தேன். இதற்கிடையே கரூர் வட்டம் வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தில் ஆய்வுசெய்த போது, சாயப்பட்டறைக் கழிவுகளால் நிலத்தடி நீர் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அதைப் பற்றி எடுத்துச் சொல்ல அந்த ஊருக்குப் போய்விட்டு அலுவலகம் திரும்பினால், அனுமதி இல்லாமல் சென்று வந்ததற்காக எனக்கு மெமோ கொடுத்தார்கள். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்தேன். தொடர்ந்தும் இடையூறுகள்.

இதற்கு மேலும் இந்த வேலை தேவை இல்லை என்று 2003-ம் ஆண்டில் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டேன். அதில் கிடைத்த 10 லட்ச ரூபாய் பணத்தைச் செலவழித்து என் வீட்டை மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றினேன். அதன் பிறகு, முழு மூச்சாக இதுதான் என் வேலை'' என்கிற வரதராஜன், மழை நீரைச் சேகரித்துவைக்கும் கொள்கலனுக்காக தமிழ்நாடு முழுக்க அலைந்திருக்கிறார். ''ராமநாதபுரத்தில் மழை நீரைச் சேகரித்துவைத்து, வருடக்கணக்கில் பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. நேரில் சென்றால், முதுமக்கள் தாழி போன்ற பெரிய பானையில் மழை நீரைச் சேமிக்கிறார்கள். அதில் தேத்தாங்கொட்டை என்ற ஒரு மரத்தின் கொட்டையை அரைத்து ஊற்றி, இறுக்கமாக மூடிவைத்துவிடுகின்றனர். காற்றோ, வெயிலோ உள்ளே செல்வது இல்லை. பிறகு, தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும்போது அதைப் பயன்படுத்துகின்றனர். கொஞ்சமும் அது கெட்டுப்போவது இல்லை. பிறகு, சென்னையில் 'ஐடியல் வாட்டர் ஸ்டோரேஜ் டேங்க்’ என்ற கன்டெய்னர் கிடைத்தது. அது மழை நீரை சேகரிக்கப் பொருத்தமாகவும் வசதியாகவும் இருந்தது. மழைத் தண்ணீரில் எல்லாவிதமான மினரல்களும் இருக்கின்றன. கூடுதலாக, பூமியில் உள்ள தண்ணீரில் கிடைக்காத பி 12 வைட்டமினும் ஓசோனும் மழை நீரில் இருக்கிறது. அதனால், மழை நீரை நம்முடைய அன்றாடப் பயன்பாடுகள் அனைத்துக்கும் பயன்படுத்தலாம். இதற்குப் பெரிய செலவு ஆகாது என்பதுடன், வீட்டில் எந்தவித மாற்றத்தையும் செய்ய வேண்டியது இல்லை.

மழை பெய்யும்போது மாடியில் பொழியும் மழை நீர், குழாய்களின் வழியே வந்து நாம் அமைத்துஇருக்கும் தொட்டியில் சேகரிக்கப்படும். அந்தத் தொட்டியின் அடியில் கரி, மணல், சிறு கருங்கல் ஜல்லி ஆகிய மூன்றும் வடிகட்டியாகச் செயல்படும். வடிகட்டி வரும் தண்ணீரை வீட்டின் கீழே ஒரு டேங்கில் சேகரித்துவைக்க வேண்டும். அதில் இருந்து குழாய் மூலம் எடுத்து சமையலுக்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். ஒரு மட்டத்துக்கு மேல் நீர் செல்லும்போது தானாகவே பூமிக்குள் சென்றுவிடும். இப்படித் தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீர் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. என் வீட்டில் 8 வருடங்கள் 10 மாதங்கள், 22 நாட்களாக மழை நீர் இருக்கிறது. தரமாக இருக்கிறது. அதேபோல இந்த நீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்பதும் இல்லை. அப்படியே பயன்படுத்தலாம்.

பொதுவாக, ஒரு கிரவுண்ட் நிலத்தில் 850 முதல் 1,000 சதுர அடி வரை வீடு கட்டுவார்கள். அதிகபட்சமாக 1,000 சதுர அடி மேற்பரப்புகொண்ட ஒரு வீட்டில் மழை நீர் சேகரிக்க வேண்டும் என்று வைத் துக்கொள்வோம். அந்த வீட்டில் மூன்று பேர் வசிப்பதாகக் கொண்டால், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் எனில், 9 லிட் டர் தேவை. விருந்தின ருக்கு 1 லிட்டர். மொத் தம் ஒரு நாளைக்கு 10 லிட்டர். நம் ஊருக்கு கோடைக் காலம்மூன்று மாதங்கள். மழை கிடைக் காத இந்த நாட்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமிப்பதுதாம் நம் இலக்கு. அப்படி எனில், 3 மாதங்கள் (90 நாட்கள்) என்பதை 100 நாட்களாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம் 1,000 லிட்டர் மழை நீர் சேகரிக்க வேண்டும். இதற்கான கன்டெய்னர் வாங்க 10 ஆயிரமும், இதர செலவுகளுக்கு 6 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 16 ஆயிரம் செலவாகும். இந்தச் செலவு ஒருமுறை முதலீடுதான். அதுவும் ஒரே வருடத்தில் மழை நீராகத் திரும்பி வந்துவிடும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்தச் செலவும் இல்லாமல் மழை நீரைப் பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வடிகட்டியை மாற்றுவதைத் தவிர, வேறு எந்தப் பராமரிப்புச் செலவும் இல்லை. மின்சார பில்லும் மிச்சமாகும்.

உண்மையில், தொட்டியில் சேகரிக்கும் தண்ணீரின் 10 சதவிகிதத்தைத்தான் நாம் பயன்படுத்துவோம். மீதம் பூமிக்குள்தான் போகும். என் நோக்கமும் கெட்டுப்போன நிலத்தடி நீரை மழை நீரால் சரிசெய்வதுதான். ஆனால், அதை மட்டும் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதுடன், குடிநீர் பிரச்னைக்கும் இது சரியான தீர்வு என்பதால் இரண்டையும் சேர்த்துச் சொல்கிறேன்'' என்கிற வரதராஜன், பயணிகளின் தாகம் போக்கத் தன் வீட்டு வாசலில் ஒரு மழை நீர் - குடிநீர் தொட்டி வைத்திருக்கிறார். அதுபோலவே திருமணங்கள் போன்ற விழாக்களுக்கும் மழை நீரைக் கொடுக்கிறார்.

''இன்று தண்ணீர், தனியார்மயமாகிவிட்டது. நகரங்களில் கேன் வாட்டரை விட்டால் வேறு வழி இல்லை. ஒவ்வொரு மாதமும் கணிசமான பணம் இதற்கே செலவாகிறது. அந்த கேன் தண்ணீர் சுத்தமாகவும் இருப்பது இல்லை. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்கள் முன்பு யாரேனும் நினைத்துப்பார்த்திருப்போமா? மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும். இந்த பூமியை நாசப்படுத்திய நாம்தான் இதைச் சரிசெய்ய வேண்டும். எத்தனை நாட்களுக்குத்தான் நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சிக்கொண்டே இருப்பது? வாருங்கள், இனிமேல் திருப்பிக் கொடுப்போம்!''


* * *
நன்றி : விகடன் 7-11-2012

கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று - ஜூலை 1

மணக்கால் அய்யம்பேட்டை | 11:27 AM | Best Blogger Tips
கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று - ஜூலை 1


இந்தியாவில் பிறந்து அமெரிக்க பிரஜையானவர் கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). கொலம்பியா விண்வெளி கலத்தில் ஏழு விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி எனும் பெருமைக்கு உரியவர். STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப் பட்டுள்ளது.

குழந்தைப் பருவம்:

இந்தியாவில் உள்ள ஹரியானாமாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.

இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான திரு. ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி:

கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப்பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கோலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா V/STOL இல்[2] CFD ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார். FCC KD5ESI என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் பிரிவு அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

கல்பனா 1983 ஆம் ஆண்டு ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்தார். அதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்கரானார். ஹாரிசன் ஆகாய விமான ஓட்டும் கலையைப் பற்றி எழுதும் ஒரு வல்லுனரும் ஆவார்.

கல்பனாவும் நாசாவும்:

கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.

STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் நடந்து ஸ்பார்டன் என்று செயல் குறைப்பாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத சோதனைக்கு பிறகு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.

STS-87க்கு பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் செயலாற்றினார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதும் வழங்கினர்.

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் கொலம்பியாவிலிருந்து கொலம்பிய விண்கல விபரீதம் STS-107 இல் விண்வெளி திரும்பினார். இந்தப்பயணத்தில் சாவ்லாவின் பொறுப்புகள் SPACEHAB/BALLE-BALLE/FREESTAR மைகிரோ கிராவிட்டி சோதனைகளாக இருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

இதில் விண்வெளி வீரர்களின் உடல்நிலைப் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும், விண்வெளி தொழில் நுட்ப மேம்பட்டு வளரவும் பல சோதனைகள் புரிந்தனர்.


விருதுகள்:

மறைவுக்கு பின் அளித்த விருதுகள்

    காங்கிரேசினல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர்
    நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்
    நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்
    டிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்


கல்பனாவின் நினைவில்:


    பாராட்டுக்குரிய பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றை 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது.[16]
    ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.[17]
    விண்வெளிக்கு செலுத்தி எரிமீங்களை ஆராயும் மெட்சாட் எனும் செயற்கைக் கோள் வரிசைக்கு இந்திய பிரதமர் பிப்ரவரி 5, 2003 அன்று கல்பனா வரிசை என்று பெயர் மாற்றுவதாக அறிவித்தார். 2002 ஆம் ஆண்டு, செப்டம்பர் 12 ஆம் நாள் அனுப்பப்பட்ட மெட்சாட்-1 கல்பனா-1 என்று அழைக்கப்படுகிறது. "கல்பனா-2" 2007 ல் விண்வெளிக்கு அனுப்பப் படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது [18]
    நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது
    ஆர்லிங்க்டனில் இருக்கும் டெஷஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் என்ற விடுதியை 2004 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.[19]
    இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 ல் கல்பனா சாவ்லா விருது தருகிறது.[20]
    பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறை தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரம், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழை வழங்குகிறது.[21]
    நாசா கலபனாவின் நினைவாக ஒரு அதிநவீன கணினியை அர்ப்பணித்துள்ளது.[22]
    புளோரிடாவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் கொலம்பிய வில்லெஜு சுஈட்ஸ் என்ற அடுக்கு மாடி கட்டிடங்களை தனது மாணவர்கள் தங்குவதற்கு கட்டிதந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்கு கொலம்பிய குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களை சூட்டி உள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.
    நாசா மார்ஸ் எக்ச்பிலோரேசன் ரொவ் மிசன் தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைக் சிகரங்களுக்கு கொலம்பிய குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரை சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
    டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப்பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை பநானாஸ் என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.[23]
    கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா " எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம்? அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான நட்சத்திரம் .அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்க இடம் பிடித்திருப்பார்" என்றார்.[24]
    நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.[25]
    குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.[26]
    இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் ஸ்தாபித்துள்ளது.[27][28]
    மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது ராணுவ வீட்டு வசதி வாரியத்திற்கு கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது.அங்கு சாவ்லா வே எனும் தெருவும் உள்ளது.

Thanks Wiki.
இந்தியாவில் பிறந்து அமெரிக்க பிரஜையானவர் கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003). கொலம்பியா விண்வெளி கலத்தில் ஏழு விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி எனும் பெருமைக்கு உரியவர். STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப் பட்டுள்ளது.

குழந்தைப் பருவம்:

இந்தியாவில் உள்ள ஹரியானாமாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.

இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான திரு. ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி:

கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப்பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கோலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா V/STOL இல்[2] CFD ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார். FCC KD5ESI என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் பிரிவு அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

கல்பனா 1983 ஆம் ஆண்டு ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்தார். அதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்கரானார். ஹாரிசன் ஆகாய விமான ஓட்டும் கலையைப் பற்றி எழுதும் ஒரு வல்லுனரும் ஆவார்.

கல்பனாவும் நாசாவும்:

கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.

STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் நடந்து ஸ்பார்டன் என்று செயல் குறைப்பாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத சோதனைக்கு பிறகு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.

STS-87க்கு பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் செயலாற்றினார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதும் வழங்கினர்.

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் கொலம்பியாவிலிருந்து கொலம்பிய விண்கல விபரீதம் STS-107 இல் விண்வெளி திரும்பினார். இந்தப்பயணத்தில் சாவ்லாவின் பொறுப்புகள் SPACEHAB/BALLE-BALLE/FREESTAR மைகிரோ கிராவிட்டி சோதனைகளாக இருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

இதில் விண்வெளி வீரர்களின் உடல்நிலைப் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும், விண்வெளி தொழில் நுட்ப மேம்பட்டு வளரவும் பல சோதனைகள் புரிந்தனர்.


விருதுகள்:

மறைவுக்கு பின் அளித்த விருதுகள்

காங்கிரேசினல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர்
நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்
நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்
டிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்


கல்பனாவின் நினைவில்:


பாராட்டுக்குரிய பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றை 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது.[16]
ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.[17]
விண்வெளிக்கு செலுத்தி எரிமீங்களை ஆராயும் மெட்சாட் எனும் செயற்கைக் கோள் வரிசைக்கு இந்திய பிரதமர் பிப்ரவரி 5, 2003 அன்று கல்பனா வரிசை என்று பெயர் மாற்றுவதாக அறிவித்தார். 2002 ஆம் ஆண்டு, செப்டம்பர் 12 ஆம் நாள் அனுப்பப்பட்ட மெட்சாட்-1 கல்பனா-1 என்று அழைக்கப்படுகிறது. "கல்பனா-2" 2007 ல் விண்வெளிக்கு அனுப்பப் படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது [18]
நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது
ஆர்லிங்க்டனில் இருக்கும் டெஷஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் என்ற விடுதியை 2004 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.[19]
இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 ல் கல்பனா சாவ்லா விருது தருகிறது.[20]
பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறை தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரம், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழை வழங்குகிறது.[21]
நாசா கலபனாவின் நினைவாக ஒரு அதிநவீன கணினியை அர்ப்பணித்துள்ளது.[22]
புளோரிடாவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் கொலம்பிய வில்லெஜு சுஈட்ஸ் என்ற அடுக்கு மாடி கட்டிடங்களை தனது மாணவர்கள் தங்குவதற்கு கட்டிதந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்கு கொலம்பிய குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களை சூட்டி உள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.
நாசா மார்ஸ் எக்ச்பிலோரேசன் ரொவ் மிசன் தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைக் சிகரங்களுக்கு கொலம்பிய குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரை சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப்பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை பநானாஸ் என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.[23]
கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா " எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம்? அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான நட்சத்திரம் .அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்க இடம் பிடித்திருப்பார்" என்றார்.[24]
நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.[25]
குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.[26]
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் ஸ்தாபித்துள்ளது.[27][28]
மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது ராணுவ வீட்டு வசதி வாரியத்திற்கு கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது.அங்கு சாவ்லா வே எனும் தெருவும் உள்ளது.


Thanks Wiki.
Via FB ரிலாக்ஸ் ப்ளீஸ்
 

நாம் வாழும் பூமியை பற்றிய சில உண்மைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு என்பார்கள். நமக்கு இந்த உலகை பற்றி எவ்வளவு தெரியும்? நாம் வாழும் பூமியை பற்றிய சில உண்மைகளை இதோ உங்களுக்காக
* விண்வெளியிலிருந்து பார்த்தால் வெள்ளி கிரகமே அதிக பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் சூரியனிலிருந்து 5-ஆவது கிரகமாக இருக்கும் பூமியும் வெள்ளிக்கு நிகராக பிரகாசமாகவே தெரியும், நீரினால் சூழப்பட்டு இருப்பதால்தான் அத்தனை பிரகாசம் பூமிக்கு கிடைக்கிறது என்கிறது ஆராய்ச்சிகள்.

* சுமார் 3,700 மைல்கள் பூமிக்கு அடியில் இருக்கும் மைய பகுதியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தமும், டெக்டானிக் ப்ளேட்ஸ் (Tectonic plates) எனப்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் நகர்தலினாலும் ஓராண்டிற்கு சுமார் 1 மில்லியன் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகவும், இதில் பல பதிவு செய்யப்படமலேயே போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

* எர்த் ஆக்சிஸ் எனப்படும் புவி இருசையை பொருத்தே பருவ காலங்கள் உருவாகின்றன. தற்போது புவி இருசு 23.4 டிகிரியில் இருக்கிறது. ஆனால் இது ஆண்டுகள் போகப் போக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

* புவியீர்ப்பு விசை பூமி முழுவதும் ஒரு சீராக அமைவதில்லை. பூமியின் மைய பகுதியிலிருந்து நாம் வசிக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில்தான் புவியீர்ப்பு விசை உணரப்படுகிறது. கனடா-வின் ஹட்சன் பே (Hudson Bay)-யில் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. இதற்கு இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரவில்லை.

* 97 சதவீத நீரானது கடலாகவும், 3 சதவீதம் நன்னீராகவும் பூமியில் நிறைந்திருக்கிறது.

* சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியுடன் மற்றொரு கிரகமும் ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது என்றும், தியா (Theia) எனப்படும் அந்த கிரகத்தோடு மோதிக்கொண்டதில் நிலவு போன்ற கோள் உருவானது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. நிலவை விட சிறிய அளவில் மற்றொரு கோளும் பூமியை சுற்றி வந்ததாக தெரிகிறது. தற்போது தினமும் பூமியை நிலவோடு சேர்ந்து எரிகற்களும் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* பூமிக்கு வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது.

* பூமியில் 2 ஆண்டுகள் என்பது செவ்வாய் கிரகத்தில் 1 ஆண்டு காலமாக இருக்கிறது.

* லிபியாவின் எல் அசிஸியா (El Azizia)-வில் 136 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலையை அடைவதால், பூமியில் அதிக வெப்பம் கொண்ட இடமாக இது கருதப்படுகிறது. -129 டிகிரி ஃபாரன்ஹீட் (degree farenheit) வெப்பநிலை அண்டார்டிகா (Antartica)-வின் வோஸ்டாக் (Vostok) என்ற இடத்தில் பதிவானதே பூமியில் மிகுந்த குளிர்ச்சியான பகுதியாக அறியப்பட்டுள்ளது.

* கொலம்பியாவின் ல்லோரோ (Lloro)-வில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 40 அங்குலத்திற்கு மேலாக மழை பதிவானது. சிலி (Chile)-யின் அரிகா (Arica)-வில் ஒரு ஆண்டுக்கு 1 அங்குலத்திற்கும் குறைவாகவே மழை பதிவாகிறது.

* 200,000 அல்லது 300,000 வருடங்களுக்கு ஒரு முறை மாக்னெடிக் போலாரிடி (Magnetic polarity) எனப்படும் புவியின் காந்த முனைவுத்தன்மை மாற்றம் அடைவதாக கூறப்படுகிறது. அதாவது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வட துருவமாக இருந்தது தற்போது தென் துருவமாக மாற்றம் பெற்றுள்ளது என விஞ்ஞான குறிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த மாற்றத்தை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் எதிர்ப்பார்க்கலாம் என கூறும் விஞ்ஞானிகள், அது நேர்ந்தால் வாழும் உயிர்களுக்கு அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

* ஆண்டிற்கு சுமார் 30,000 விண்வெளி துகள்களும், தூசுகளும் பூமியினுள் நுழைகின்றன. அதில் பெரும்பாலானவை பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போதே எரிந்துவிடுகின்றன.

* 25 மில்லியன் ஆண்டுகளில் ஒரு பிரம்மாண்ட கண்டம் உருவாகும் என்றும், தொடர்ந்து நகர்ந்து வரும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால் இது சாத்தியமாகும் என அறிவியல் தகவல்கள் கூறுகின்றன. பெசிஃபிக் தட்டுகள் ஆண்டுக்கு 4 செ.மீ வேகத்திலும், அட்லாண்டிக் தட்டுகள் ஆண்டுக்கு 1 செ.மீ என்ற வேகத்திலும் நகர்ந்துக்கொண்டிருக்கின்றன.

பூமியில் உள்ள சாதாரணங்களையும், அசாதாரணங்களையும் அத்தனை எளிதில் புரிந்துக்கொள்ளவோ, கூறிவிடவோ இயலுவதில்லை. மிகப்பெரிய ஆச்சர்யங்களும், அதிசயங்களும் கொண்ட ஒரு ஆபூர்வ பெட்டகமாகவே பூமி திகழ்கிறது.
 
Via Durai Varrathan

Nicknames of Famous People

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 AM | Best Blogger Tips

--------------------------------------------
1. Bapu...................Mahatma Gandhi
2. Man of Peace...........Lal Bahadur Shastri
3. Punjab Kesari..........Lala Lajpat Rai
4. Iron Man of India......Sardar Vallabhbhai Patel
5. Gurudev................Rabindranath Tagore
6. Chacha.................Jawaharlal Nehru
7. Magician of Hockey.....Dhyanchand
8. Quaid-i-Azam...........Md. Ali Jinnah
9. Sher-e-Kashmir.........Sheikh Abdullah
10. Lokmanya..............Bal Gangadhar Tilak
11. Desh Ratna............Dr. Rajendra Prasad
12. Netaji................Subhash Chandra Bose
13. Sparrow...............Major General Rajinder Singh
14. Sahid-e-Azam..........Bhagat Singh
15. Nightingale of India..Sarojini Naidu
16. Udanpari..............P.T. Usha
17. Tota-e-Hind...........Amir Khushro
18. Napoleon of India.....Samudra Gupta
19. Bangabandhu...........Sheikh Mujibut Rahman
20. Deshbandhu............Chitta Ranjan Das
21. Deenbandhu............C.F. Andrews
22. Shakespeare of India..Mahakavi Kalidas
23. Machiavelli of India..Chanakya
24. Loknayak..............Jayaprakash Narayan
25. Jana Nayak............Karpuri Thakur
26. Akbar of Kashmir......Jainul Abdin
27. Father of Gujarat.....Ravi Shankar Maharaj
28. Grandfather of Indian Films..Dhundiraj Govind Phalke
29. Morning Star of India Renaissance..Raja Ram Mohan Roy
30. King Maker of Indian History..Sayyed Bandhu
31. Bengal Kesari.........Ashutosh Mukherji
32. Bihar Kesari..........Dr. Srikrishna Singh
33. Andhra Kesari.........T. Prakasam
34. Badshah Khan..........Khan Abdul Ghaffar Khan
35. Grand Old man of India..Dadabhai Naoroji
36. Young Turk............Chandra Shekhar
37. Tau...................Chaudhury Devi Lal
38. Rajarshee.............Purushottam Das Tandon
39. Ajatshatru............Dr. Rajendra Prasad
40. Mahamana..............Pt. Madan Mohan Malaviya
41. Swar Kokila...........Lata Mangeshkar
42. Mother................Mother Teresa
43. Little Master.........Sunil Gavaskar
44. Haryana Hurricane.....Kapil Dev
45. Man of Destiny......Napoleon Bonaparte
46. Fuehrer.............Adolf Hitler
47. Uncle Ho............Ho Chi Minh
48. Man of Blood and Iron..Otto Van Bismark
49. Desert Fox..........Gen Ervin Rommel
50. Lal, Bal, Pal.......Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak and Bipin Chandra Pal

Via FB Indian Police Service [IPS]