



இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.








👆🏽10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் ...
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு???*
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு...
சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்...
அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்...
அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.
மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
ஏன் கோவிலை கட்டினார்கள்?
ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???
பாரதத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.
இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.
ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.
வாழ்க தமிழ்
வெல்க பாரதம்
வந்தேமாதரம் 🚩🙏
இதுதான் உண்மையான வரலாறு...
🙏🙏🙏🙏
பகிர்வோம் குறைந்தது
1000 பேருக்காவது" 🌹🌹🌹🌹🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷
. அருமையாக கூறி உள்ள தகவல்;-
ஒரு தளிகையில்
🥥🍅🫛🍅🧅🫒🌶️ ஒரு திவ்ய தேசம்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
ஸ்ரீவைஷ்ணவரே!
இன்று உமக்கான தளிகை
எங்கள் திருமாளிகையில்தான்!
மறுக்காமல், மறக்காமல்
ஆத்துக்காரியும் அழைச்சுண்டு
இன்று மதியம் எங்கள்
அகத்திற்கு வாரும்!!🌷
பாகவத பிரசாதம்!
மறுக்கத்தான் முடியுமா?🌷
தன்னவளையும்
தன்னுடன் அழைத்துக் கொண்டு
அழைத்தவர் வீட்டிற்கு
விருந்துண்ணச் சென்றார்
அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!🌷
நல்ல மரியாதை செய்து
இருவரையும் அமர வைத்து
விருந்துண்ணச் செய்தார்
அழைத்த வைஷ்ணவர்!!🌷
வயிறு நிரம்பியதா?
ஸ்ரீவைஷ்ணவரே!🌷
மனதும் நிரம்பியது!
வைஷ்ணவரே!
விழுந்து விழுந்து கவனித்த
உம் பேரன்பிலே
நாங்கள் விழுந்தே போனோம்!!🌷
எங்காத்து
தளிகை எப்படி?🌷
பகவானின் பிரசாதம் அது!
வார்த்தைகளுக்குள் அடங்காதது!
அருமை என்ற
ஒற்றைச் சொல்லில்
அதன் சுவையை நான்
உணர்த்திவிட முடியாது!
கவியாகப் பாடட்டுமா?🌷
அத்தனைச் சிறப்பாய்
இருந்ததா தளிகை?
ஓய்! பொய்யொன்றும் இல்லையே?
கவிதைக்கு பொய் அழகு!
அதனை நானும் அறிந்துள்ளேன்!
உம் கவியும் பொய்தானோ?🌷
அதில் பொய்யே இருக்காது!
கேட்டுத்தான் பாருமே!🌷
"கண்ணமுது கோவில்!
கறியமுது விண்ணகர்!
அன்னமுது
வில்லிப்புத்தூர் ஆனதே!
எண்ணும் சாற்றமுது மல்லை!
குழம்புமது குருகூர்!
பருப்பதனில்
திருமலையே பார்!!🌷"
அவரது திருவடிகளில்
விழுந்து சேவித்தார்
விருந்து கொடுத்தவர்!🌷
எங்காத்து தளிகையில்
இத்தனைத் திவ்யதேசமா?🌷
கண்களில் நீர் பனிக்க
வந்தவர்களை
வழியனுப்பி வைத்தார்!🌷
ஸ்ரீ வைஷ்ணவரின் அகத்துக்காரம்மா கேட்டார்,
கோபிச்சுக்காதீங்கோ!
கவி பாடும் அளவிற்கா
அவாத்து தளிகை இருந்தது?
நானும்தான் தினமும்
எத்தனையோ செய்கிறேன்!
ஒரு திவ்யதேசமும் காணோமே?🌷
அதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்
அடியே மண்டு!
நமக்கு நாமே
பாராட்டிக் கொள்வதற்கு
பெயரா தாம்பத்யம்?
என் சுவை நீயறிவாய்!
உன் குறை நானறியேன்!
அந்தப் பாட்டுக்கு உனக்கு
அர்த்தம் புரியலையா?🌷
அகத்துக்காரம்மா:-
அந்த அளவுக்கு
ஞானம் இருந்தால்
உங்காத்துக்கு நான் ஏன்
வாக்கப்பட போகிறேன்?
நான் மண்டுதான்!
நீங்களே சொல்லுங்கோ!!🌷
கண்ணமுது கோவில்!
கண்ணமுது என்றால் பாயசம்!
கோவில் என்றால் ஸ்ரீரங்கம்!
அரங்கன் கோயிலில் பாயசம்
மண் சட்டியில்தான் வைப்பார்கள்!
அதனால் பாயசம்
சற்று அடிபிடிப்பது என்பது
அங்கே தவிர்க்க முடியாத ஒன்று!
இங்கேயும் பாயசம்
அடிப்பிடித்து இருந்ததால்
கண்ணமுது கோவில்!!🌷
அப்படியா
அடுத்தது! அடுத்தது!!!!!🌷
கறியமுது விண்ணகர்!
கறியமுது என்றால்
காய்கறி வகைகள்!
விண்ணகர் இருக்கும்
ஒப்பில்லாத பெருமானுக்கு
நைவேத்தியம் எதுவிலும்
உப்பே சேர்க்க மாட்டார்கள்!
இவாத்து கறியமுதிலும்
இன்று உப்பில்லை!
அதனால் கறியமுது விண்ணகர்!!🌷
அருமை
அப்புறம்... அப்புறம்...🌷
அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே!
ரங்கமன்னாரின் கோயிலிலே
அன்னம் குழைந்தே இருக்குமாம்!
இங்கேயும் சாதம்
குழைந்தே இருந்ததனால்
அன்னமது வில்லிபுத்தூர்!!🌷
இப்படியும் உண்டா?
அடுத்தது... அடுத்தது.....🌷
சாற்றமுது மல்லை!
சாற்றமுது என்றால் இரசம்!
மல்லை என்றாலோ கடல்!
கடல் நீரைப் போல
அவாத்து சாற்றமுதிலும்
உப்பே அதிகம்!!🌷
கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க!
அடுத்தது என்ன?🌷
குழம்பது குருகூர்!
குருகூரிலே எது பிரசித்தம்?
நம் ஆழ்வான் இருந்த
புளியமரம்தானே!
குருகூர் என்றாலே புளிதான்!
அவாத்து குழம்பிலும்
வெறும் புளிதான்!!🌷
கடைசியையும்
சொல்லிவிடுங்கள்!!🌷
பருப்பதில் திருமலை!
திருமலை முழுவதும் கல்தான்!
அவாத்து பருப்பு
முழுதும் கல்லும் இருந்ததே?🌷
இப்படியா பாடிவிட்டு வருவீர்?
அர்த்தம் புரிந்தால்
அவர்கள் தவறாக உம்மை
எண்ண மாட்டாரோ?🌷
அடியே!
கட்டாயம் எண்ண மாட்டார்!
பாகவத சேஷம் என்று
அந்த உணவினை
அவர்கள் குடும்பம் முழுதும்
இந்நேரம் உண்டிருப்பர்!
அந்த உணவினில் அவர்கள்
சுவைகளைக் கட்டாயம்
கண்டிருக்க மாட்டார்கள்!
நான் சொல்லி வந்த
திவ்ய தேசங்கள் மட்டுமே
அவர்கள் எண்ணத்தில் இருக்கும்!🌷
வெறும் சாதமல்ல அது!
இந்நேரம் அது
பிரசாதமாய் மாறியிருக்கும்!!🌷
என்னை மன்னித்து விடுங்கள்!
ஒன்று கேட்கிறேன்!
கட்டாயம் செய்வீர்களா?🌷
கட்டாயம் செய்கிறேன்!
என்ன வேண்டும் உனக்கு?🌷
நல்ல தமிழ்
சொல்லித் தருகின்ற
ஒரு ஆசான் வேண்டும்!
நான் தமிழ் கற்க வேண்டும்!
நாளை என் சமையலில்
எந்தத் திவ்யதேசம்
மறைந்து வருகிறது என
நானும் அறிய வேணடும்!!🌷
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷