*கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:43 AM | Best Blogger Tips

 No photo description available.

 

*கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?*

கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்து சென்று தான் பழக்கம். சிலரைப் பார்த்திருப்போம். அகலமான படியாக இருந்தாலும் அதைக் கஷ்டப்பட்டு தாண்டி தான் செல்வார்கள். இது பற்றி சாஸ்திரங்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்? ஏறிச் செல்வது சரியா தாண்டிச் செல்வது சரியா என்று பார்ப்போம்.

பெரியோர்களும் சரி, சாஸ்திரங்களும் சரி கோவில் நுழைவாயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்.

*கோவில்*

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கிற முதல் படிக்கட்டின் மேல் ஏறி நிற்கக் கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். அதாவது கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னால் ஆறோ குளமோ இருந்தாலும் சரி, அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும்.

கை மற்றும் கால்களைக் கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ளுங்கள்.

*துவார பாலகர்*

இப்போது தான் கடவுளை வணங்குவதற்கு நம்முடைய உடலைத் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக, கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, கோவில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், வாயிலில் காவலுக்கான நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும்.

*நுழைவாயில்*

அப்படி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுகிற போது, இருக்கின்ற நுழைவாயில் படியைக் கடக்க வேண்டும். அந்த படியை தாண்டிச் செல்கின்ற பொழுது, நாள் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதுக்குள் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோவிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போல தான் வருகின்றேன் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த படியைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

*நேர்மறை எண்ணங்கள்*

அதேசமயம் அந்த படிக்கட்டுக்களின் மேல் ஏறி, மிதித்து உள்ளே செல்கிறீர்கள் என்றால், மனதுக்குள் இருக்கும் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் மனதுக்குள் சுமந்து கொண்டே தான் கோவிலுக்குள் வருகிறேன் என்று அர்த்தம்.

இறைவன் குடியிருக்கும் கோவில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் ஐதீகம்.

 Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005

 நன்றி இணையம்

 

"இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை ........

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 PM | Best Blogger Tips

கமல தேவி – சொல்வனம் | இதழ் 319 | 26 மே 2024


சின்ன சின்ன யோசணைகள்
வாழ்வை வளமாக்க...

குழப்பமும், கவலையுமான நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்.
Artist K.Madhavan's Amazing Paintings - Part-01 - Great opportunity to see  the Master paintings - YouTube
திருமணம் ஆகிவிட்டால் மனைவியை நேசியுங்கள், திருமணம் ஆகவில்லை என்றால் பெண்களை மதியுங்கள்.

விரும்பியது கிடைக்க சில
தியாகங்கள் செய்ய நினைத்திடுங்க.

எந்த தொழிலையும் விருப்பத்துடன் செய்து பழக நினைத்திடுங்க.

உங்களை மதிக்காத இடத்தில் உங்களின் நிழலை கூட நிற்க அனுமதிக்காதீர்கள்.

உங்களை மதிக்கும் இடத்தில் உண்மையுடனும், நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.
Hard Work Painting | Laugee Oil Paintings
இவ்வுலகில் பணம்தான் எல்லாம் ஆகிவிட்டது, திருமணம் ஆகிவிட்டாலும் திருமணம் ஆகாவிட்டாலும், சேமிக்கும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

உதவி, மற்றும் தர்மம் செய்வதை மறவாதீர்கள்.  உதவியின் பலனையும், தர்மத்தின் சிறப்பையும் உங்களுக்கு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திடுங்க.

வருமானத்திற்கு மீறிய செலவை விரும்பாதீர்கள்.

இரண்டு வழியில் வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் அல்லது வேலையை செய்திடுங்கள்.

Premium Photo | A painting of a family having a picnic in a park.

உங்களுடைய ஆசையையும் உங்களின் மனைவி மக்களின் ஆசைகளையும் தேவைகளையும் அவ்வப்போது நிறைவேற்றுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களிடத்தில் மதிக்கப்படுவீர்கள்.

Pin on Art

கோபமும், பேராசையும், ஒரு கொடிய நோய், முடிந்தவரை அதை மனக்கட்டுக்குள் கொண்டு வர முயற்சியுங்கள்.

வேண்டாத பழக்கம் (புகைப்பிடித்தல், மது அருந்துதல்,) உங்களுக்கு இருந்தால் அது உங்களுடைய தனிப்பட்ட சுய உரிமையாகும், அளவுக்கு மீறாமல் பார்த்து கொள்ளுங்கள். முடிந்தால் தவிர்க்க பாருங்கள்.

உறவுகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏதேனும் வாக்குறுதி கொடுத்துவிட்டால் அதை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சியுங்கள்.

நாம் நாமாக இருக்கையில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.நாம் பிறருக்காக மாற நினைக்கையில்தான் பிரச்சினைகளை சந்திக்கிறோம்.

இவ்வுலகம் உயிருள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது,
நாம் அதில் ஒரு சிறிய துரும்பு அவ்வளவுதான்.
Today they are burning tomorrow we will -THE AMAZON Painting by ...
"இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் திருப்தியுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்."
நிகழ்காலத்தில் வாழ்வோம்! – வல்லினம்
நம் வாழ்வு நம் கையில்

நன்றி இணையம்