தலைகீழ் மாற்றத்தை யாரும் எதிர்பார்த்து

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:18 | Best Blogger Tips

 


இப்படி ஓர் தலைகீழ் மாற்றத்தை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

லடாக் எல்லையில் பிரச்சினைக்குரிய பகுதியில் இருந்து தங்கள் படைகளை முற்று முழுதாக கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்ப உத்திரவிட்டு சுமார் 73%படைகளை இன்று காலை வரை அப்புறப்படுத்திவிட்டது‌. பின் நகர்வு தொடர்ந்து நடந்து வருகிறது.


எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கே இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இது பற்றி அறிவிப்பு ஒன்று வெளிவந்த போதும் இது ஏதோ தந்திரமான காரியத்தை செய்து இருக்கிறார்கள் என்று தான் ஊடகங்கள் வாயிலாக பலர் கதறியிருந்தார்கள்.


அவ்வளவு ஏன் இங்கு உள்ள கோமாளி குப்பன் ராகுல் வின்சி கூட இந்த அறிவிப்பு வெளியான போது, கொஞ்சமும் யோசிக்காமல் இந்தியா தனது பகுதிகளை சீனாவிற்கு விட்டு கொடுக்க சம்மதித்து பிங்கர் நான்கு எனும் நான்காவது மலை முகடுகளுக்கு பின்னாக இந்திய ராணுவ வீரர்கள் நகர்ந்தது ஏன் என்று கேட்டிருந்தது.

நன்கு கவனியுங்கள் அந்த சமயத்தில் இது போன்ற எந்த ஒரு காரியத்தையும் செய்திருக்க வில்லை இந்திய ராணுவத்தினர். ஆனால் சீனா தரப்பில் இது நாள் அடை காத்து வைத்திருந்த பகுதியை, ஏராளமான படை வீரர்களை, பனியில் சிக்கி இறந்து போன பின்னர் அந்த பகுதியில் இருந்து பின்வாங்க முடிவு செய்து இருக்கிறது. இஃது பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது சீனாவின் கிழங்கு பிராந்தியத்தில்.


ஏனெனில் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுயிருந்த பலரும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்களே. கிட்டத்தட்ட 11,895 பேர் வரை இறந்ததாக ஓர் அறிக்கை செய்தி வாசித்திருக்கிறது பெய்ஜிங்கில்...... அதாவது சண்டை செய்யாமல் எல்லையில் பனியில் சிக்கி இந்த மூன்று மாத காலத்தில் இறந்து போயிருக்கிறார்கள்.


சந்தேகமில்லாமல் இந்தியா தனது நிலைப்பாட்டில், எல்லையில் தனது செயல்பாட்டில் வெற்றி பெற்று இருக்கிறது என்று இதற்கு பொருள்.


இதனால் தற்போது சீனாவில் ஏக குளறுபடிகள்,


இத்தனை நாளும் படையணியினை நிலை நிறுத்தி செய்து செலவுகள் எல்லாம் வீண்.


கடைசி வரைக்கும் இந்தியாவை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை., குறைந்த பட்சம் ஒரு ஒப்பந்தம் அளவிலும் அதன் வழிக்கு கொண்டு வர முடியுவில்லை.


இதனால் சீனா இழந்தது ஏராளம்.


இந்திய சந்தையில் இருந்து முற்றாக 16% பங்குகளை முன்பு வைத்திருந்ததில் இருந்து இழந்திருக்கிறது என்று ஒர் புள்ளி விபர கணக்கு சொல்கிறது.


அது போலவே லடாக் பகுதியில் இருந்து இனி ரோந்து நடவடிக்கைகளில் இறங்க முடியாத சூழ்நிலை உருவாகும்.


1963ஆண்டுக்கு முன்னர் இருந்த பகுதிகளில் தான் இனி சீனா தற்போது இருக்கும் படி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்.


இதனை நுட்பமாக ஆராய்ந்தோமானால், சீனா வெளி உலகிற்கு தெரியாத வண்ணம் தங்கள் படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதனை இந்திய அரசு நிர்வாகம் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் இந்த களை முனை செயல்பாட்டில் பெற்றது அதிகம். வெகு நாட்களாக சீனா வசம் இருந்த கைலாஷ் மானசரோவர் பகுதிகளை முற்று முழுதாக இந்திய வசம் வந்துவிட்டது.


இனி சீனாவின் ஆட்டம் ஓர் எல்லைக்கு இருக்காது வண்ணம் செயல் வடிவம் கொண்டுவரப்பட்டுள்ளது.


நிச்சயமாக இது மிகவும் முக்கியமான ஒரு தருணம் தான் இந்தியாவிற்கு. 

 

நன்றி Shri Ram