மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:37 | Best Blogger Tips

 


🌺🌹 " “ *நான் தான் எல்லாம், எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும். நம் உரிமையாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை கண்ணின் இமை போல் காக்கிறார் என்று விளக்கும் எளிய கதை* 🌺

🌺ஒரு மாடு மேய்ச்சலுக்காக வழி தவறி ஒரு காட்டுக்குள் சென்று விட்டது.

🌺மாலை நேரம் நெருங்கியது. ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது. மாடு பயத்தில் ஓட ஆரம்பித்தது . அந்த புலியும் அதன் பின்னால் ஓட ஆரம்பித்தது. ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது. பயந்துபோன மாடு குளத்துக்குள் நுழைந்தது.

🌺புலியும் அதனை பின்தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது. அந்த குளம் மிகவும் ஆழமாக இல்லை, அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது மற்றும் சேறு நிரம்பியிருந்தது.

🌺அவற்றின் இடையிலான தூரம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது புலி சேற்றில் சிக்கியதால் எதுவும் செய்ய முடியவில்லை.

🌺மாடு மெதுவாக சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது. புலியின் அருகில் மாடு இருந்தபோதும் புலி அதனை பிடிக்க முடியவில்லை. அவர்கள் மெதுவாக சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தனர். இருவரும் சேற்றுக்குள் கிட்டத்தட்ட கழுத்து வரை மூழ்கிவிட்டனர்.

🌺சிறிது நேரம் கழித்து, மாடு புலியைக் கேட்டது,

🌺 *மாடு* : உனக்கு உரிமையாளர் இருக்கிறாரா?

🌺 *புலி* : நானே காட்டின் ராஜா. நான் யாருக்கும் சொந்தமில்லை. நானே இந்த காட்டின் உரிமையாளன். என்றது ஆணவமாக.....

🌺 *மாடு* : ராஜாவா இருந்து என்ன பலன்? நீயும் என்னைப் போல மாட்டிக்கிட்டு இருக்க.

🌺 *புலி* : நீயும் தான் என்ன போல சாகப்போற. உங்கிட்ட உரிமையாளர் இருந்தாலும் உன் நிலை என்னுடையது போலவே தான் இருக்கு.

🌺 *மாடு* : இல்லவே இல்லை. என் எஜமானர் மாலையில் வீட்டிற்கு வந்து என்னை தேடி பார்ப்பர், அவர் நிச்சயமாக என்னைத் தேடி இங்கு வந்து என்னை இந்த மண்ணிலிருந்து வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உன்னை யார் வந்து அழைத்துச் செல்வார்கள்?

🌺சிறிது நேரத்தில், ஒரு மனிதன் அங்கு வந்து மாட்டை சேற்றிலிருந்து வெளியே எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

🌺செல்லும்முன், மாடு மற்றும் அதன் உரிமையாளர் இருவரும் நன்றியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் விரும்பினாலும் புலியை சேற்றில் இருந்து வெளியே எடுக்க முடியாது, ஏனெனில் அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவே அமையலாம்.

🌹மாடு - மனத்தாழ்மையுள்ள நம் இதயத்தின் சின்னம்.

🌹புலி - இறுமாப்புள்ள நம் மனம்.

🌹உரிமையாளர் - கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்

🌹குளம் - இந்த உலகம்.

🌺 நான் தான் எல்லாம், எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும். நம் உரிமையாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை கண்ணின் இமை போல் காக்கிறார் என்று நம்பிக்கை கொள்வோம்.. நம்மை அவருடன் அழைத்து செல்ல....

--------------------------------------------------------------------------
💐🌹 *சர்வம் கிருஷ்ணார்ப்பணம்* 🏵️💐🌹

நன்றி இணையம்