என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:32 | Best Blogger Tips

 

*நான் மிகவும் பாக்கியவான்..!*

நான் மிகவும் சந்தோஷமாக

இருக்கிறேன்..

நான் நல்ல செல்வத்தோடு

இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம்

என்ன உள்ளது ?

இதன் ரகசியம் சொல்லவா..!


என்னுடைய பணத்தேவைகளைக்

கவனித்துக்கொள்ள

குபேரனை நன்பராக ஏற்றுக்கொண்ட குபேர புரிஸ்வரர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என்னுடைய உடல் ஆரோக்கியத்தை

அற்புதமாக கவனிக்க

வைத்திஸ்வரன் கோவில் வைத்தியநாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என் மனதில் கவலைகள்

உண்டாகும்போது, 'கவலைப்படாதே'

என்று சொல்ல

சீர்காழி பிரம்மபுரிஸ்வரர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



எனக்கு குறைவில்லாமல்

அழகழகான, அற்புதமான

வஸ்திரங்கள் எப்பொழுதும் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



எனக்கு வேண்டிய

ருசியான,ஆகாரத்தை,

என் ஆயுள் முழுவதும் தர

அன்னபூரணியிடம் பிச்சை வாங்கிய விஸ்வேஸ்வரர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என் குடும்பத்தை என்றும்

சந்தோஷமாகக் காப்பாற்ற,

திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அம்மைஅப்பர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என்னை விரோதிகளிடமிருந்து

எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,

ஶ்ரீசைலம் மஞ்சுநாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என் வாழ்க்கையை

சரியான பாதையில் நடத்த

திருமயிலை கபாலிஸ்வரர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என்னை இரவில்

சுகமாக தூங்க வைக்க

இராமேஸ்வரம் இராமநாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என்னை காலையில்

அன்போடு அழகாக எழுப்ப

திருகைலாயநாதர் கௌரிசங்கர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என்னோடு ஆனந்தமாக

குள்ளக்குளிர குடைந்து நீராட

திருகேதார்நாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



இன்னும் யாரெல்லாம்

என்னோடு எனக்காக இருக்கிறார்கள்

தெரியுமா ?


சொல்கிறேன் . . .


நீயும் தெரிந்து கொள் !


கொஞ்சம் பொறுத்திரு . . .


நீ இவர்களை எல்லாம்

உன்னோடு வைத்துக்கொண்டாயா ?


இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .


அவர்களையும் சொல்கிறேன் கேள் !


நான் சொன்னபடி செய்யவும்,

என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,

மதுரை மீனாட்சி சொக்கநாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என்னை உரிமையோடு தொட்டுப்

பேசவும்,என்னோடு விளையாடவும்

திருஆணைக்காவல் ஜலகண்டேஸ்வரர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



எனக்கு பொழுது போகாத

சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச

திருபுவனம் புவனநாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .




எனக்கு வேண்டிய உபதேசங்களைச்

சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக

வைக்கவும் எப்பொழுதும்

ஆத்மநாத சுவாமி

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



எனக்கு எல்லா புண்ணிய ஸ்தலங்கள்

தரிசிக்கவைப்பதற்கும்,

புண்ணிய நதிகளில் தீர்த்த யாத்திரை செய்வதற்கும்,பூமியில் வாழ எல்லா வளங்களையும்

தருவதற்கும்,

காசி விஸ்வநாதன்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



நான் கொஞ்சிமகிழவும்,

எனக்கு அன்புத்தொல்லை தரவும்,என்னை சோதிக்கவும் திரு காளஹஸ்திஸ்வரர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .




என்னோடு கடற்கரையில்

காலார நடந்துகொண்டு,

வயிறு குலுங்க சிரிக்க வைக்க,

திருச்சூழிநாதர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



என்னிடம் தைரியமாகப் பொய்

சொல்ல,என்னை உரிமையோடு

அடித்துத் திருத்த,

அண்ணாமலையார்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



எனக்காக தூது செல்ல,

எனக்காக வாதாட,

திருவாரூர் தியாகராஜ சுவாமி

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .



இப்படியாக இன்னும் பலபேர்

என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !


அதனால் என் தேவைகளைப் பற்றி,


என் வாழ்க்கையைப் பற்றி,


என் எதிர்காலத்தைப் பற்றி,


என் மரணத்தைப் பற்றி,


என் குடும்பத்தைப் பற்றி,


என் கௌரவத்தைப் பற்றி


நான் யோசிப்பதேயில்லை . . .


ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .


எனக்கு மோக்ஷத்தைத் தர,


என் மனதிற்கு சாந்தி தர,


எனக்கு புகழைத் தர,


சிதம்பரம் ஆனந்த நடராஜர்

என்னோடு எனக்காக இருக்கிறார் . . .


இத்தனை பேர்

என்னோடு இருக்க,

நான் எதைப்பற்றி

கவலைப்படவேண்டும் ?


நான் ஆனந்தத்தில்

நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .


எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .


*நீயும் இவர்களை உன்னோடு வைத்துக்கொள்..!*


*உன் வாழ்க்கையும் நிச்சயம் ஆனந்தமாகவே இருக்கும்..*


*ஓம் நமச்சிவாய..!*

நன்றி இணையம்