யார் இந்த Asuvathaman Allimuthu

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:53 | Best Blogger Tips

 


இவ்வளவு நாளாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும் , ஆலய நுழைவு பிரேவசத்திற்கும் ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தகர அடி அடித்திருக்கிறார் பாஜக #அஸ்வத்தாமன்.

#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா , உங்க ஈவேரா எதுவும் கிழிக்கலயா ?! என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சீப்பு செந்தில், சுப வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் ( டுபாக்கூர் விளக்கம் தான் ) சொல்லி அலையவிட்டுவிட்டார்.

இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஷ்வத்தாமன் .

இதெல்லாம் நம் எல்லோருக்கும் தெரியும்.

இதையெல்லாம் தாண்டி,

அவரின் முந்தைய சாதனைகளை தேடலாம் என்று போனால் , பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மனுஷன் சத்தமே இல்லாமல் பல விஷயங்களை செய்துள்ளார்.

#சுயமரியாதை திருமணச்சட்டம்" . பிராமணர்களை வைத்து திருமணம் செய்யும் முறையை ஒழித்து , கிருஸ்தவ முறையிலான 'மோதிரம் மாற்றிக் கொள்ளுவதை ' இந்து திருமணமாக அங்கீகரிக்கக்கூடிய இந்த கொடுமையான சட்டத்தை எதிர்த்து வழக்கு போடுகிறார். 1967 ல் வந்த இந்த கொடும் சட்டத்தை எதிர்த்து யாரும் எப்படி வழக்கு போடாமல் இருந்தார்கள் என தெரியவில்லை.



இவர் வழக்கு போட்ட உடனே கருணாநிதி ( அவர் ஆக்டிவாக இருந்த சமயம் ) அஸ்வத்தாமனை திட்டி முரசொலியில் அறிக்கை விடுகிறார். வீரமணி விடுதலை இதழில் ' நவீன மனுதர்ம வாரிசு ' என்று இவரை விமர்சிக்கிறார்.

#கடந்த எட்டு ஆண்டுகளாக #இந்துத்துவ இயக்கவாதிகள் அல்லது இந்துத்துவ பாதையில் பயணிக்கும் யார் மீது வழக்கு போடப்பட்டாலும், அவர்களுக்கு "இலவசமாக" வழக்கு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வரிசையில் பல சிக்கலான வழக்குகளிலிருந்து பலரை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.

#தமிழகத்தில் #நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தது இவர்தான்.

#இந்து கோவில்கள் #ஆங்கில #புத்தாண்டுகாக நள்ளிரவில் திறக்கப்படும் மோசமான வழக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாமல் போனதற்கு இவர்தான் காரணம் . அதை எதிர்த்து இவர் தொடர்ந்த வழக்கு தான் காரணம்.

#மெர்சல் திரைப்படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது இவர்தான் .

#காஞ்சிபுரம் அருகில் ஒரு கிருஸ்தவ மிஷினரி வயதானவர்களைக் கொண்டு சென்று அவர்கள் எலும்பை திருடி விற்கிறார்கள் என புகார் வந்ததே , நினைவு இருக்கிறதா ?!

அதை #சிபிஐ விசாரிக்கவேண்டும் என வழக்கு தொடர்ந்தவர் இவர்தான்.

#கிருஸ்தவ மிஷனரிகளைப் பற்றிய உண்மையை சொன்னதற்காக ஒரு நீதியரசர் மீது கம்முனீச கும்பல் புகார் அளித்திருந்த்து . அது நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு தொடர்ந்து அந்த 'கம்முனீச கும்பல் ' கூண்டோடு அலையவிட்டுக்கொண்டு இருக்கிறார்.

#2018 ல் விநாயகர் சதுர்த்தி தடுக்க வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளில் இவர் வழக்கும் ஒன்று.

#இப்போது CAA ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளில் இவர் போட்ட வழக்கும் ஒன்று.

#மழை நீர் சேகரிப்பு விதிமுறைகளை முறையாக அமல் படுத்த வேண்டும் என பொது நல வழக்கு தொடர்துள்ளார்.

#பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தடுக்க மாநில அரசு முயற்சித்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

#godman விவகாரத்தில் புகார் அளித்ததோடு , ZEE நிர்வாகத்தை வியாபார ரீதியில் பணிய வைக்க இவர் 5 விஷயங்களை ( uninstall zee5 உட்பட) முன்வைத்தார். அதனால் ZEE நிர்வாகமும் பணிந்தது.

#கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் புகார் அளித்ததோடு , அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்.

#68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என பொய் செய்தி வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக புகார் அளித்து , சில நிறவனங்களை அந்த செய்தியை வாபஸ் பெறவும் செய்துள்ளார்.

#மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கிருஸ்தவ பிரிவில் இந்து மதத்தை

விமர்சித்து நடக்க இருந்த கருத்தரங்கத்தை புகார் அளித்து தடுத்து நிறுத்தியதில் இவர் பங்கு அளப்பரியது.

பாரத தாய்க்கு இவர் ஆற்றி வரும் சேவைகள், மேலும் தொடர வாழ்த்துகள்.

 


நன்றி இணையம்