சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:25 | Best Blogger Tips


*தாயம் விழுந்தால் தான் ஆடவே ஆரம்பிக்க முடியும்..!காயம் பட்டால் தான் வாழவே ஆரம்பிக்க முடியும்..!!*

*கண்ணீர் துளி விலைமதிப்பற்றது..!அதை பொய்யான உறவுக்காக வீணடிக்காதீர்கள்..!!*

*எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள்..!ஆனால், மனிதர்களிடம் மட்டும் விழிப்பாய் இருங்கள்..!!*

*மனசு சரியில்லை நான் அப்புறம் பேசுறேன் எனும் உறவை விட.. மனசு சரியில்லை அதான் உன்கிட்ட பேசுறேன் எனும் உறவே வலிமையானது..!!*

*வாய்ப்பை இழந்தோர்.. வருத்தப் படுகிறார்கள்..!வாய்ப்பை பெறாதோர்.. போராடுகிறார்கள்..!*

*வாய்ப்பை உருவாக்குவோர்.. வெற்றி பெறுகிறார்கள்..!!*



*தவறை மன்னித்துவிட்டேன் என்பதை விட.. மறந்து விட்டேன் என்பதே உறவை பலப்படுத்தும்..!!*

*உங்களை புரிந்தவர்களுக்கு மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால் போதும்..!புரியாதவர்களுக்குப் புதிராகவே இருந்துவிடுங்கள்..!!*

*கைதட்டுபவர்களுகும்கைதட்டல் வாங்குபவர்களுக்கும்பெரிய வித்தியாசமில்லை 'முயற்சியை' தவிர..!!*

*வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போல... குலுக்கி போடும் போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி..! வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி..!!*

*நமக்குள் வெறுமையான இடத்தில் முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம்..!*

*இல்லையெனில் அந்த இடங்களில் பிரச்சனைகள் தானாக நிரம்பிக் கொள்ளும்..!!*

*எண்ணங்களை 'உயரத்தில்' வைங்கள்..! சின்ன சந்தர்ப்பங்களும் தெளிவாக தெரியும்..!!*

*என்னை வெறுப்பவர்களுக்குநான் கொடுக்கும் உச்சபட்ச தண்டனை..*

*அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்..!!*

*சோதனைகள் மனிதனின் மன வளத்தை அதிகரிக்கும்..*



*வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்..*

*தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்..*

*சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!*

*சிந்தித்து செயலாற்றுங்கள்..!!*

*#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_     நட்பே.*

*#வாழ்க_வளமுடன்.*

  


நன்றி இணையம்