*"நிதானம்"*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:28 | Best Blogger Tips
Image result for நிதானம்

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,
அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.
குரு சொன்னார்,
*"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.*
*
உணவை, நீரை அருகில் வையுங்கள்*
*
ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம்.*
பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.
*
அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,*
*
நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.
அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.
சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.
அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,
ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், *"எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?"* என்று கேட்டான்.
*"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார்",*
*"மற்றவர் பார்க்கவில்லை என்றால்* *பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!*
தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே
தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்கு பட்டினி ..!!
*அமைதியாக இருங்கள் ..*
*
எல்லாம் சரியாகும் .*
*
ஒரு வேளை சரியாக வில்லை என்றாலும் பரவாயில்லை ..!!*
*நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..*
*நிதானம்*
*
நீளமானது ..!!*
*வாழ்க நிதானத்துடன் .*


நன்றி இணையம்