*தேங்காய் பற்றிய அதிசய ரகசிய உண்மைகளை பற்றி தெரிந்து கொள்வோமா?*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:34 | Best Blogger Tips
Image result for தேங்காய் பற்றிய அதிசய

தென்னை பூப்பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளை உள்ளடக்கியது தேங்காய். மேலும் நிலம், நீர், ஒளி, காற்று, விண் ஆகிய பஞ்ச பூத தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்சபூத சக்திகள் குவிக்கப்படுகிறது.
தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும். கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும்போது அது இறை சக்தியை வெளிக் கொண்டு வரும். ஒரே இடத்தில் தேங்காய் சிதறுகாய் இடும் போது அங்கே பஞ்ச பூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.
முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும் போது அங்கே துர்சக்திகள் விலகி ஓடுகிறது.
ராகு-கேது தோஷம் உடையவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், திங்கள்கிழமை முற்பகலில் முச்சந்தி விநாயகருக்கு வாரம்தோறும் சிதறுகாய் இடும் போது காலசர்ப்பதோஷம் கூட சரியாகிவிடும்.
வீட்டில் தினமும் ஒரு தேங்காயை உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்.
மாந்திரீகத்தில் செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமி வரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் முகர செய்தால் குணமாகிவிடும் இது சித்தர்கள் வாக்காகும்.
*வீட்டில் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால் நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துவிட்டால் சுபிக்ஷம் ஏற்படும் மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசுபிசுவென்று இருப்பதை காணலாம்.*
வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகமிட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்பட்ட தோஷத்தையும் கழித்துவிடும்.
வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் காரியம் சித்தியாகும்.


நன்றி இணையம்