இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள்.!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:25 | Best Blogger Tips
Image result for இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள்Image result for இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள்
காலத்தால் அழியாத, இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள்.!
1) "ஒன்று,... நான், நம் மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டு வருவேன். அல்லது,.. மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு வருவேன். ஆனால், நிச்சயம் திரும்ப வருவேன்." : கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம் வீர சக்ர (விருது பெற்றவர்).
2) "உங்களுக்கு வாழ்க்கையின் சாதனையாக இருப்பது, எங்களுக்கு தினசரி (சாதாரண) வேலை..." : உலகின் மிக உயரமான லடாக் - லே நெடுஞ்சாலையில், ராணுவ அறிவிப்புப் பலகை.
3) "என் வீரத்தை காட்டும் முன்னர் மரணம் என்னைத் தாக்கினால்,... நான் நிச்சயம், அந்த மரணத்தை,... கொன்று விடுவேன்!" : கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம் வீர் சக்ரா, 1/11 கூர்க்கா ரைபிள்ஸ்.
4) "நம் மூவர்ணக் கோடி பறப்பது, காற்று அடிப்பதால் அல்ல! அது, அக்கொடியை காப்பாற்றும் கடமையில் உயிரிழந்த ஒவ்வொரு ராணுவ வீரனின் கடைசி மூச்சுக் காற்றினாலும் மட்டுமே பறக்கிறது!" : இந்திய ராணுவம்.
5) "எங்களைக் கண்டு பிடிக்க,.. நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டும்."
"
எங்களைப் பிடிக்க,.. நீங்கள் மிகவும் வேகமாக நகர்பவராக இருக்க வேண்டும்."
"
எங்களை வெல்ல,... சே,.. சும்மா காமெடி பண்ணாதீங்க!"
:
இந்திய ராணுவம்.
6) "கடவுள் எங்கள் பகைவருக்கு கருணை காட்டுவாராக! ஏனெனில்,...
நாங்கள் அவர்களுக்கு, கருணை காட்ட மாட்டோம்.!" : இந்திய ராணுவம்.!
7) "நாங்கள், சந்தர்ப்ப வசமாக வாழ்கிறோம்."
"
நாங்கள், தேர்ந்தெடுத்து காதலிக்கிறோம்"
"
நாங்கள், தொழில் முறையாக, (எதிரிகளை) கொல்கிறோம்!"
:
ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமி, சென்னை.
8) "சாவுக்கு பயப்படவில்லை" என்று சொல்பவன்,.. ஒன்று பொய் சொல்கிறான்... அல்லது, அவன் கூர்க்கா (ராணுவ) வீரனாக இருக்க வேண்டும்." : பீல்ட் மார்ஷல் மானெக் ஷா.
9) "தீவிரவாதிகளை மன்னிப்பது, கடவுளின் கடமை. ஆனால், அந்தத் தீவிரவாதிகளை கடவுளை சந்திக்க அனுப்புவது, எங்கள் கடமை."! : இந்திய ராணுவம்.
10) "என் உச்ச பட்ச வருத்தமே,.. நாட்டுக்காக தியாகம் செய்ய எனக்கு ஒரு உயிர் மட்டுமே இருப்பது தான்!" : பிரேம் ராமச்சந்திரன், ராணுவ அதிகாரி.
ஜெய்ஜவான்! ஜெய்ஹிந்த்!


நன்றி இணையம்