இந்தியாவின் கடைசி கிராமத்தில் இந்திய பிரதமர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:50 | Best Blogger Tips
Image result for modi visit deepavali
இன்று நாமெல்லாம் நம்முடைய குடும்பத்துடன் சந் தோசமாக தீபாவளி கொண்டாடி வருகிறோம் ஆனால்
நம்முடைய ராணுவ வீரர்கள் தங்களின் சுக துக்கங்களை
கண்டு கொள்ளாமல் இந்த தேசமே கோயில் இதை பாது
காப்பதே தங்களின் கடவுளுக்கு செய்யும் சேவை என்று
வாழ்ந்து வருகிறார்கள்.
எத்தனையோ தொலைவில் இருந்துக்கொண்டு இந்தியா வின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியை தங்க ளி ன் குடும்பத்துடன் கொண்டாடமுடியவில்லையே என்று ஏக்கத்துடன் இருக்கும் நம்முடைய ராணுவ வீரர்க ளுட ன் இந்த நாட்டையே தன்னுடை குடும்பமாக கருதி வாழ்ந் துவரும் நம்முடைய பிரதமர்மோடி கைகுலுக்கி அவர்க ளுடன் உறவாடி உணவருந்தி ஒவ்வொரு ஆண் டும் தீபா வளி கொண்டாடி வருகிறார்.
பிரதமரான பிறகு தனது முதல் தீபாவளியை 19000 அடி உயரத்தில் உள்ள உலகின் உயர்ந்த போர்க்களமான சியாச்சினில் ராணுவ வீரர் களுடன் கொண்டாடிய மோடி கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண் டாடி னார். இந்த ஆண் டு உத்தரகாண்ட் மாநில த்தில் சீன எல்லையை ஒட்டி உள்ள இந்தியாவின் கடைசி கிராமமா மாணாவில் இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் மோடி தீபாவளிக் கொண்டாடுகிறார்
மானா என்கிற இந்த கிராமம் தான் நம்ம இந்தியாவுடை கடை சி கிராமம்.இதன் முழுப்பெயர் மணிபத்ரபுரி என்ப தாகும்.இந்த மாணா கிராமம் மற்றவர்களுக்கு எப்படியோ தெரிய வில்லை.ஆனால் இந்துக்களுக்கு இது உணர்வு சம்பந்தப் பட்ட கிராமம்.ஆம் இங்குள்ள ஒரு குகையில் தான் வியாசர் உரைக் விநாயகர் பாரதத் தின் அடையா மான ரிக்,யஜுர், சாம, அதர்வண வேதங் களையும் மகா பாரதத்தையும் எழுதினார்
இந்த குகைபத்ரிநாத் போகும் வழியில் இன்றும் வியாசர் குகை என்கிற பெயரில் உள்ளது.இந்த குகையின் காலம் 5000 ஆண்டுகளு க்கு முற்பட்டது என்று ஆராய்ச்சி யாளர் கள் சொல்கிறார்கள் எனவே உலகின் உயர்ந்த தத்துவங் கள் உதயமான இந்த மாணா கிராமத்தை இந்தியாவின் கடைசி கிராமம் அல்ல முதல் கிராமம் என்றே நாம் சொல்ல வேண்டும்.
இந்த மாணா கிராமத்தில் ஒரு டீக்கடை உள்ளது.அது தான் இந்தியாவின் கடைசி டீக்கடை என்று அந்த டீக் கடையின் ஓனர் பெருமையாக நம்முடைய தமிழில் கூட எழுதி வைத்துள்ளார்.இறைவன் ஆசியிருந்தால் இந்த இந்தியாவின் கடைசி ஸாரி முதல் கிராமமான மாணா விற்கு சென்று அங்குள்ள வியாசர் குகையை தரிசித்து விட்டு அப்படியே அந்த இந்தியாவின் கடைசி டீக்கடை யில் என்னுடைய கடைசிடீயை குடிக்க வேண் டும் என்பதே என்னுடைய கடைசி ஆசையாகும்.
இந்த கிராமம், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்
பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவாக இருந்ததில்லை. இந்தோ சீன போரின் பொழுது இந்த கிராமத்தில் உள்ள
சிலரை சீன ராணுவம் பிடித்து கொன்றுள்ளது.ஆனால்
நம்முடைய மோடி அரசு வந்தவுடன் இங்கு இந்தோ தி பெத் எல்லை காவல் படையின் முழு பாதுகாப்பும் முழு நேர மும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1962 அக்டோபர் 24ம் தேதி அதாவது இந் தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை 1962 அக்டோபர் 20ம் தேதிஆரம்பித்து நான்கு நாட்கள் கழித்தே இந்த இந் திய திபெத் எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப் பட் டது. அதாவது சண்டை வந்த பிறகே இந்த நாட்டை காக்க வேண்டும் என்று நேருவுக்கு தோன்றியுள்ளது. இதன் வேலை காஸ்மீரின் லடா க் பகுதியிலுள்ள கர கோரம் கணவாய் முதல் அருணா ச் சலப் பிரதேச மாநி லத்தில் ஜசிப் லா என்ற இடம் வரையுள்ள 3488 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்தியசீன எல்லையை பாதுகாப்ப தே..
இங்குள்ள எல்லைப்பகுதிகள் 9000 முதல் 18000 அடி உயரம் வரை உள்ளது.அதனால் எப்பொழுதும் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள இந்த எல்லை பகுதி களை பாதுகாக்கும் நம்முடைய இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் அர்ப்பணிப்பு உணர்வு யாருக்கும் வராது.ஆரம்பத்தில் 4 பட்டாலியன் வீரர்க ளுடன் இருந்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை இன்று 54 பட்டாலியன்களுடன் சுமார் 90,000 வீரர்களை கொண்டு ள்ளது.
ஐநா சபையில் இருந்து இந்தியாவுக்கு போன் போட்டு இந்த சூடான் நாட்டுக்கு ஒரு அமைதிப்படையை அனுப்ப வேண்டும் எனவே உங்கள் நாட்டில் இருந்து ஒரு படைப்
பிரிவை அனுப்புங்கள் என்று உதவி கேட்கப்படும் பொழு து நம்முடைய ராணுவம் ஐநாவின் அமைதிப்படைக்கு
அனுப்பும் படைபிரிவு இந்த இந்தோ திபெத் எல்லை பாது
காப்பு படை பிரிவு எனப்படும் ITBP( Indo-Tibetan Border Police)படையைத்தான்.
அந்தளவிற்கு இயற்கைபேரழிவுக்கால மேலாண்மை, அணு ஆயுத தாக்குதலினால் உண்டாகும் சூழ்நிலை யை சமாளிக்கும் பயிற்சி மலையேறுவதில் வல்லமை பனிக் கட்டிகளில் பயணம் செய்வது என்று அனைத்தி லும் கில்லாடிகள் இந்த இந்தோ திபெத் எல்லை பாது காப்புபடையினர். இவர்களோடு சேர்ந்து இந்தியாவின் கில்லாடிகளான மோடியும்அஜித்தோவலும் இணைந்து இன்று தீபாவளிக் கொண்டாடுவது மிகச்சிறப்பானது..

 நன்றி இணையம்