மனைவி போன பின் கணவன் படும் துயர் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:49 | Best Blogger Tips

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர இருக்கிறதே,கொடுமை😴😴
*தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன்,*
*தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன்*
*மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லால் போகிறான்.*
*ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.*
*வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.*
*என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ*
*
கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.*
*ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.*
*தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.*
*இதெல்லாம் என் உறவுக்குள்ளே,*
*
நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.*
*
துளியும் அதிகப்படியில்லை.*
*என் கணவர் காலை எட்டரை மணிப் போல*
*
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.*
*காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.*
*இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்.*
*எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?*
*இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.*
*மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!*
*
சகோதரிகளே!!*
*யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!*
*உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!*
*முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!
ஒரு தடவ தான வாழப்போறீங்க...
கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்...
மனுசனா பாருங்க...
நன்றி :- வாட்ஸ் அப்