ராம ஜபத்தின் மகிமை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:07 | Best Blogger Tips

ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார்.அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்குவழிதவறிப் போனது. கொடும் வனம், அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது.ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒருபெரியமரத்தின் கீழ் அமர்ந்துராம ராமஎன்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத்தொடங்கினார்.அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி, ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டுவாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற,பீர்பாலோ, அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்குஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில்இல்லை என்று பதிலளித்தார்.
இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக்கொண்டு போனார். அவர்எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்திஅக்பரை மனம் மகிழ்ந்து வரவேற்று, அறுசுவை உணவளித்துஉபசரித்தனர் அவ்வீட்டினர்
அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில்மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவரை அணுகி அதை கொடுத்துவிட்டுஏளனத்தோடு கேட்டார். “பீர்பால், இப்போதாவது தெரிந்ததா, நான் எடுத்த சரியானமுடிவால் தான் இன்று உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக்கொண்டிருக்கிறீர்களே இந்த ராமஜபம், அதுவா உங்களை பசியாற்றியது?
இதற்குஉணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால், ‘அரசே ! உணவிற்காகமகாபெரிய சக்கரவர்த்தியானதாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது.ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில்கொடுத்தனுப்பியுள்ளார். இதுதான் ராம ஜபத்தின் மகிமைஎன்று கூற, அக்பர்வாயடைத்துப் போய் நின்றார்

Good Evening my dear Guru,God,brothers,Sisters and friends!!!
இறைவன் நினைவே இனிய வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்

-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran