மனக்கவலை போக்க ஒரே வழி இதோ உங்களுக்காக..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:20 | Best Blogger Tips


பொதுவாக ஒருவருக்கு மனக்கவலை எப்படி எப்பொழுது வரும்? அது நோயாகவும், வருமையாகவும், நினைத்தது நடக்காமல் போவதாலும் மற்றும் பல்வேறு பிரச்சனையாக இருக்கும். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் அற்புதக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கண்டுப்பிடித்தவனுக்கும் மனக்கவலை, அதை பயன்படுத்துபவனுக்கும் மனக்கவலை.
ஆக... சிகிரெட் பிடித்தாலும் சரி, மது அருந்தினாலும் சரி, யோகா செய்தாலும் சரி, மேலும் தற்கொலை செய்துகொண்டாலும் சரி.... அது அடுத்த ஜென்மத்திர்க்கு தள்ளிவைக்கப்படும் அவ்வளவுதான். ஏனென்றால் இயற்கை கடவுள் முட்டாள் அல்ல. ஆக நோயாகவும், வருமையாகவும், பல்வேறு பிரச்சனையாகவும் உள்ள மனக்கவலை தீர்க்க வழி ஒன்றே ஒன்றுதான்... அதுதான் பக்தி.
அதுவும் உண்மைக் கடவுளாக இருக்கவேண்டும். ஏதோ நாமாக இதுதான் கடவுள் என்று, பொங்க புளியோதரை வைத்து வழிபாடு செய்துவிட்டு, பிறகு இன்னும் என் துன்பம் தீரவில்லையே; என் மனக்கவலை தீரவில்லையே என்றால் அது எப்படி சாத்தியம் ஆகும்..? ***கடவுள் என்பது ஞானிகளின் திருவடி***தான். இதையே திருக்குறளில்...
தனக்குஉவமை இல்லாதான் ***தாள்*** சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
கடவுள் வாழ்த்துகுறள் எண்: 7.
தாள்என்றால்ஞானிகள் திருவடிஎன்று பொருள். சொல்லியது யார் தெரியுமா? ஆசான் முருகப்பெருமானையும்... ஆசான் அகத்தியரையும்... ஞானியாக வணங்கி ஞானியானவர்... முருகப் பெருமானுடன் ஒன்றிணைந்தவர்... உண்மைக் கடவுளானவர்.. வணங்கிப் பாருங்கள் உண்மை தானே புரியும்.
ஆக ஒருவருக்கு மனக்கவலை தீர... தினமும் காலைஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி”.. “ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றிஎன ஞானிகள் திருநாமத்தை சொல்லி அழைத்தாலே போதும்.. மனக்கவலை என்ன மரண பயத்தையே உடைத்தெறிவார்கள். ஏனெனில் ஞானிகளே விநாயகப் பெருமான்; ஞானிகளே வெங்கடேச பெருமாள்; ஞானிகளே ஈசனும் ஆவர்.
ஆக போற்றுவோம் ஞானிகளை. ....ஞானிகளிடம் பெறுவோம் அருள் மழையை!!
Happy Tuesday Morning my Dear Guru,GOD,
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran